Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (21) இவர்களை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடுகட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் சகோதரரும் அவர்களிடம் இந்த காணி போலி உறுதி என அனுமதி வழங்காது முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதிவழங்க முடியாது என குறித்த நபர்களால் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் அமைச்சரின் சகோதரரிடம் குறித்த காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை கூறு போட்டு குடியிருப்புக்காக விற்பனை செய்துவருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபை அனுமதிவழங்க 20 இலச்சம் ரூபா இலஞ்சமாக தருமாறு அவரிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான நேற்று மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் 15 இலச்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹொட்டலில் சென்று 15 இலச்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவழைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

http://www.samakalam.com/வியாழேந்திரனின்-சகோதரர்/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அட... வீடியோ எடுத்து, பிடித்திருக்கிறார்கள்.

 

வியாழேந்திரனின் சகோதரருக்கு... அனுபவம் காணாது.  😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அட... வீடியோ எடுத்து, பிடித்திருக்கிறார்கள்.

 

வியாழேந்திரனின் சகோதரருக்கு... அனுபவம் காணாது.  😂

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

அட பாவிகளா!
இவங்களுக்கு உடம்பெல்லாம் கிரிமினல் மூளை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்குமாகாண அபிவிருத்தி அபிவிருத்தி எண்டானுவள்....அது  இதுதானோ?????

வியாளேந்திரன் செய்த கனடாக்காசு சுத்துமாத்தும் இப்ப ஞாபகத்துக்கு வருது 😁

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

 ஆமா! கடன் வாங்குபவனெல்லாம் இப்படிதான் ஹோட்டலில் றூம் போட்டு வாங்கவானோ மட்டக்களப்பில்?அதுசரி பதினைந்து லட்ஷம் எந்த பிணையுமில்லாமல் கொடுத்தவராமோ? கடன் கொடுக்கிறவன் இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு அறிவித்துவிட்டுத்தான் கொடுப்பானோ? வியாழேந்திரன் மஹிந்தவிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி, மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் கட்சியை விட்டு வெளியேறினேன் என்று கதை விட்டவர் கண்டியளோ! இது பரம்பரை குணமாயிருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 ஆமா! கடன் வாங்குபவனெல்லாம் இப்படிதான் ஹோட்டலில் றூம் போட்டு வாங்கவானோ மட்டக்களப்பில்?அதுசரி பதினைந்து லட்ஷம் எந்த பிணையுமில்லாமல் கொடுத்தவராமோ? கடன் கொடுக்கிறவன் இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு அறிவித்துவிட்டுத்தான் கொடுப்பானோ? வியாழேந்திரன் மஹிந்தவிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி, மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் கட்சியை விட்டு வெளியேறினேன் என்று கதை விட்டவர் கண்டியளோ! இது பரம்பரை குணமாயிருக்கும்!

பரம்பரை குணம் என்பதை விட தமிழருக்கு இருக்கும் குணம் என்று சொல்லுங்கோ😛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.