Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடம் - உன் பயணம், என் பயணம், நம் பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். 

தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽

“நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” 

அவர்களின் நோக்கம்👇🏽

//'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபமாக்கி உதவி தேவைப்படுவோர்க்கு உதவிகள் செய்து ஓர் சிறந்த மாற்றத்தை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.//  

இந்த தடத்தில் உங்களோடு, உங்களுக்கு உதவியாக பயணிப்பவர்களில் அனேகர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர் யுவதிகள். அவர்களுக்கு எங்களுடைய சமூகத்தைப் பற்றி எங்களது வேர்களைப் பற்றி தெரிந்துள்ளமை குறிப்பிடதக்கது. 

நான் இதனை இங்கே இணைத்தமைக்கு காரணம், இன்று எங்களது சமுதாயம் அதிலும் பாடசாலை மாணவர்கள் 
எதிர் கொள்ளும் மனவள நெருக்கடிகளில் இருந்து வெளியேற, மன நலனை பாதுகாக்க உதவும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஆகும்.. 

இவர்களது கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியிருந்தேன், அவர்களுக்கு எங்களது சமூகத்தைப் பற்றி நன்கு தெரிந்துள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டேன். இவர்கள் Facebook, Instagram போன்றவற்றிலும் இருப்பதால் இவர்களைப் பற்றி மேலும் அறிய உதவும்.. இவர்களது தளத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் உளவளம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழிகாட்டல்கள், கட்டுரைகள் என பல தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு. வாசித்து பயன் பெறவும்.

 

https://thadam.com.au/


நன்றி.. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு.
இணைப்புக்கு நன்றி சகோதரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு பதிவு.
 

நன்றி அங்கிள்.. கடந்த சில மாதங்களாக பதின்ம வயதினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. பதின்ம வயதினருக்கு ஏற்படும் சில சிக்கல்களை பெற்றோரிடம் வந்து கூறுவதில்லை, அதற்கான சூழலையும் பெற்றோர்கள் கொடுப்பதில்லை (விதிவிலக்கான பெற்றோரும் உள்ளனர்). இந்த பிள்ளைகள் போக்கிடம் தெரியாமல் தவறான நட்புடன் சேரல் இல்லாவிடில் முழுமையாக ஒதுங்குதல் போன்ற நிலைகளை அவதானிக்க முடிகிறது. அதனால்தான் இதனை இணைத்தேன்.
 

எங்களது சமூகத்தில் மனவள சம்பந்தமான பிரச்சனைகளை வெளியே கதைக்க இன்னமும் தயங்குகிறார்கள். இது சம்பந்தமான வேலைகளில் ஈடுபடுவோரை சுட்டிகாட்டி அந்த psychologistற்கு தான் பிரச்சனை, இந்த பிரச்சனைகளை பெரிது படுத்த தேவையில்லை, வெளியே சொன்னால் அவமானம் என blackmail செய்வது etc என ஏதாவது காரணங்களை கூறி தட்டிக் கழித்து விடுவார்கள். பிறகு ஏதாவது நடந்த பின் வேதனைப்படுவார்கள். இந்த நிலை மாறவேண்டும். எங்களுக்கு இருக்கும் வசதிகளை நாங்கள் பயன்படுத்தவேண்டும். அவ்வளவுதான்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி அங்கிள்.. கடந்த சில மாதங்களாக பதின்ம வயதினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. பதின்ம வயதினருக்கு ஏற்படும் சில சிக்கல்களை பெற்றோரிடம் வந்து கூறுவதில்லை, அதற்கான சூழலையும் பெற்றோர்கள் கொடுப்பதில்லை (விதிவிலக்கான பெற்றோரும் உள்ளனர்). இந்த பிள்ளைகள் போக்கிடம் தெரியாமல் தவறான நட்புடன் சேரல் இல்லாவிடில் முழுமையாக ஒதுங்குதல் போன்ற நிலைகளை அவதானிக்க முடிகிறது. அதனால்தான் இதனை இணைத்தேன்.

பிள்ளைகள் பிறந்து 3-4 மாதங்களிலேயே தனியறைக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் பிறந்து 3-4 மாதங்களிலேயே தனியறைக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்.

நான் நினைக்கவில்லை, பிள்ளைகள் பிறந்து 3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விடுவது ஒரு காரணம் என்று. அதிலும் எங்களது சமூகத்தில் இதற்கான சாத்தியங்கள் குறைவு என்றே நினைக்கின்றேன். தரவுகளும் என்னிடம் இல்லை.

சரி அப்படி பிறந்து  3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விட்டாலும் கூட வளரும் பெற்றோர் பிள்ளைகளின் உறவு, இவர்களுக்கிடையேயான தொடர்பாடல் நெருக்கம், பிள்ளைகளின் தன்மைக்கு ஏற்ப, அவர்களின் செயல்திறனிற்கு ஏற்ப வழி நடத்துவது போன்றனவும் தாக்கம் செலுத்தும் என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் பேச விரும்பாத தலைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை, உங்கள் துணிச்சலைப் பாராட்டவே வேண்டும். உங்கள் தலைப்பிற்கு என்னால் முடிந்த சிறு உதவி.

தாயகத்தில் இருக்கும்வரை சிறுவர்களின் அல்லது இளவயதினரின் உளவியல் பிரச்சினைகள் குறித்து எம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? அல்லது எத்தனைபேர் இதுகுறித்து உதவிகள் கோரியிருக்கிறோம்? "விசர்" என்று நாம் பொதுப்படையாக விளிக்கும் சொல்லுக்கு அப்பால், இதற்கான தேவை குறித்தோ, அல்லது இதன் உண்மையான அர்த்தம் குறித்தோ சிந்தித்திருக்கிறோமா? இல்லையே? 

அப்படியான பின்புலத்திலிருந்து இன்று புலம்பெயர்ந்திருக்கும் எமது சந்ததி, அதே மனோநிலையில் இருக்கும் என்பது முற்றிலும் சாத்தியமே.

மிக அண்மைக் காலம்வரை, அவுஸ்த்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தகமை மூலமே குடிபெயர்ந்திருக்கிறார்கள்( இப்படிச் சொல்வதால், இங்கே இருக்கும் அனைவருமே அப்படி வந்தவர்கள் என்றோ அல்லது வேறு வழிகளில் வந்தோர் தகமையற்றவர்கள் என்றோ நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல). இப்படி வந்தவர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வரவேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். இவ்வேலைகளால் தம்மையொத்த காலத்தில் இங்கே குடியேறிய ஏனைய "படித்த" தமிழர்கள் மத்தியில் தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்து மற்றும் இவ்வேலைகள் மூலம் தமது பிள்ளைகள் ஈட்டப்போகும் பெருமளவு வருமானம் ஆகிய இரண்டையும் குறியாக வைத்தே எப்படியாவது தமது பிள்ளைகள் இவற்றுள் ஒன்றிற்காவது செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வெளிப்படையாகப் பார்த்தால், எந்தவொரு அக்கறையுள்ள பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் என்று இவற்றைப் பார்க்கும்போது தோன்றும். ஆனால், அங்கேதான் பிரச்சினையும் இருக்கிறது. 

சிட்னியில் குறைந்தது மூன்று முறையாவது பிள்ளைகள் தமது கல்விகற்கும் காலத்தில் கடுமையான பரீட்சைகளுக்கு தயாராவதில் தமது பள்ளிப்பருவத்தை கழிக்கிறார்கள். நான்காம் வகுப்பில் நடக்கும் ஒப்பர்சுனிட்டி பரீட்சை, 6 ஆம் வகுப்பில் நடக்கு செலெக்டிவ் பரீட்சை மற்றும் 12 ஆம் ஆண்டில் நடக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை . இவை மூன்றுமே மாணவர்கள் மேல் மிகக் கடுமையான கற்றல்ப் பழுவையும், உடல் உள ரீதியான சுமையினை ஏற்றிவிடுகின்றன. 

இவற்றுள் முதலிரு பரீட்சைகளும் இந்நாட்டில் இயல்பாகவே கெட்டித்தனம் உள்ள பிள்ளைகளை இனம்கண்டு அவர்களுக்கான சிறப்புப் பாடநெறியினை பெற்றுக்கொடுப்பதற்காக என்று அரசாங்கம் சில பாடசாலைகளை நடத்திவரும் வேளையில், தமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கடுமையாக உழைக்கப் பண்ணி எப்படியாவது இப்பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளையும் சேர்ப்பதில் எம்மில் பல பெற்றோர்கள் வெற்றியும் கண்டுவிடுகின்றனர். 

இவ்விசேட வகுப்புகள் அனுமதிக்கப்படும் பிள்ளைகள் பாடசாலையிலும், தனியார் வகுப்புகளிலும் கொடுக்கப்படும் சிறப்புப் பாடங்கள் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளில் தமது விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோடு, பெற்றோர், பாடசாலை ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தங்களையும், சுமையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

பணம் கட்டி ஓடவிடும் குதிரைகள் போல் இக் கல்விப் பந்தயத்தில் ஓடவிடப்படும் பிள்ளைகளில் ஒரு சிலர் இலக்கினை அடைந்தபோதும், பலர் பாதிவழியில் சோர்வடைந்து, மன உளைச்சலாலும், விரக்தியினாலும் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.

வைத்தியர் , கணக்காளர் ஆகிய துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மறுக்கும் பெற்றோர், தமது பிள்ளைகளைத் தாம் கட்டாயப்படுத்தி இவற்றுள் ஒன்றில் அமுக்கிவிடுவதை தாம் தமது பிள்ளைக்குச் செய்யும் ஒரு நற்காரியமாகவே பார்க்கத் தலைப்படுகின்றனர். இதனால், இந்த நோக்கினை அடைவதற்கு எந்த எல்லைவரைக்கும் சென்றுவர பெரும்பாலான பெற்றோர் ஆயத்தமாகவே இருக்கின்றனர். அந்த இலக்கினை அடைவதற்கு பிள்ளைகள் கூறும் காரணங்கள, சங்கடங்கள் குறித்த முறைப்பாடுகள் இவர்களைப்பொறுத்தவரையில் முட்டுக்கட்டைகளாக இருப்பதால், அவற்றை முற்றாக உதாசீனம் செய்வதோடு, தமது பிள்ளைகள் மீதான அழுத்தத்தினை இன்னொரு மடங்கு அதிகரிக்கவும் இதன்போது இவர்கள் தவறுவதில்லை. 

ஈற்றில் வீட்டிலும் பாடசாலையிலும் தனது பிரச்சினைகள் குறித்து எவரும் அக்கறைப்படாத நிலையில் பிள்ளை ஒன்றில் தவறான நட்பு வட்டத்தில் சிக்கிக் கொள்கிறது அல்லது தன வாழ்வினை முடித்துக்கொள்ள எத்தனிக்கிறது.

இவற்றுக்குப் பல உதாரணங்கள் எமது ஈழத் தமிழ்ச் சமூகத்திலேயே இங்கு இருக்கின்றன. 

ஈற்றில், ஏதோ ஒருவகையில் பிள்ளையின் மனநிலை புரிந்தோர் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி மனோதத்துவ நிபுணர்களை அணுக வைக்கும்போது, தவறு எங்கே இருக்கின்றது என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள முடிந்துவிடுகிறது. ஆனால், அந்தக் கட்டத்தில் பிள்ளையின் மனதில் மாற்றமுடியாத காயமோ அல்லது நிலையான தக்கமோ ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. 

தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் செல்வச் செழிப்புடனும், அந்தஸ்த்துடனும்  வாழவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, இயலாத பந்தயத்தில் ஓடவிடும் பெற்றோர் இன்னமும் எம்மில் இருக்கின்றனர். தமது பிள்ளை தாம் விரும்பும் துறைக்குச் செல்வதை உறுதிப்படுத்த எந்த எல்லைவரைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். இதனை அடைவதற்காக பிள்ளை எந்தவிதமான உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டாலும் கூட, அதனை விலையாகக் கொடுத்து இலக்கை அடைவதில் இவர்களுக்குப் பிரச்சினை இருக்கப்போவதில்லை. 

இப்படியான பெற்றோருக்கு இவ்வகையான விளக்கங்கள் நிச்சயம் தேவை. ஆனால், அவர்களை இந்த புரிதலுக்கு எப்படி வரப்பண்ணப்போகிறோம் என்பதே சவால்தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

பலரும் பேச விரும்பாத தலைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை, உங்கள் துணிச்சலைப் பாராட்டவே வேண்டும்

 

துணிச்சலா???

எனது தந்தை அடிக்கடி கூறுவார் “பிள்ளை நீயொரு பயந்தாங்கொள்ளி, உன்னை நினைத்துதான் எனக்கு கவலை என்று” 

நீங்கள் என்னவென்றால் நான் துணிச்சல் உடையவள் என்கிறீர்கள்.. நல்ல பகிடிதான்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

மிக அண்மைக் காலம்வரை, அவுஸ்த்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தகமை மூலமே குடிபெயர்ந்திருக்கிறார்கள்( இப்படிச் சொல்வதால், இங்கே இருக்கும் அனைவருமே அப்படி வந்தவர்கள் என்றோ அல்லது வேறு வழிகளில் வந்தோர் தகமையற்றவர்கள் என்றோ நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல). இப்படி வந்தவர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வரவேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். இவ்வேலைகளால் தம்மையொத்த காலத்தில் இங்கே குடியேறிய ஏனைய "படித்த" தமிழர்கள் மத்தியில் தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்து மற்றும் இவ்வேலைகள் மூலம் தமது பிள்ளைகள் ஈட்டப்போகும் பெருமளவு வருமானம் ஆகிய இரண்டையும் குறியாக வைத்தே எப்படியாவது தமது பிள்ளைகள் இவற்றுள் ஒன்றிற்காவது செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வெளிப்படையாகப் பார்த்தால், எந்தவொரு அக்கறையுள்ள பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் என்று இவற்றைப் பார்க்கும்போது தோன்றும். ஆனால், அங்கேதான் பிரச்சினையும் இருக்கிறது. 

சிட்னியில் குறைந்தது மூன்று முறையாவது பிள்ளைகள் தமது கல்விகற்கும் காலத்தில் கடுமையான பரீட்சைகளுக்கு தயாராவதில் தமது பள்ளிப்பருவத்தை கழிக்கிறார்கள். நான்காம் வகுப்பில் நடக்கும் ஒப்பர்சுனிட்டி பரீட்சை, 6 ஆம் வகுப்பில் நடக்கு செலெக்டிவ் பரீட்சை மற்றும் 12 ஆம் ஆண்டில் நடக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை . இவை மூன்றுமே மாணவர்கள் மேல் மிகக் கடுமையான கற்றல்ப் பழுவையும், உடல் உள ரீதியான சுமையினை ஏற்றிவிடுகின்றன. 

இவற்றுள் முதலிரு பரீட்சைகளும் இந்நாட்டில் இயல்பாகவே கெட்டித்தனம் உள்ள பிள்ளைகளை இனம்கண்டு அவர்களுக்கான சிறப்புப் பாடநெறியினை பெற்றுக்கொடுப்பதற்காக என்று அரசாங்கம் சில பாடசாலைகளை நடத்திவரும் வேளையில், தமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கடுமையாக உழைக்கப் பண்ணி எப்படியாவது இப்பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளையும் சேர்ப்பதில் எம்மில் பல பெற்றோர்கள் வெற்றியும் கண்டுவிடுகின்றனர். 

இவ்விசேட வகுப்புகள் அனுமதிக்கப்படும் பிள்ளைகள் பாடசாலையிலும், தனியார் வகுப்புகளிலும் கொடுக்கப்படும் சிறப்புப் பாடங்கள் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளில் தமது விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோடு, பெற்றோர், பாடசாலை ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தங்களையும், சுமையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

பணம் கட்டி ஓடவிடும் குதிரைகள் போல் இக் கல்விப் பந்தயத்தில் ஓடவிடப்படும் பிள்ளைகளில் ஒரு சிலர் இலக்கினை அடைந்தபோதும், பலர் பாதிவழியில் சோர்வடைந்து, மன உளைச்சலாலும், விரக்தியினாலும் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.

வைத்தியர் , கணக்காளர் ஆகிய துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மறுக்கும் பெற்றோர், தமது பிள்ளைகளைத் தாம் கட்டாயப்படுத்தி இவற்றுள் ஒன்றில் அமுக்கிவிடுவதை தாம் தமது பிள்ளைக்குச் செய்யும் ஒரு நற்காரியமாகவே பார்க்கத் தலைப்படுகின்றனர். இதனால், இந்த நோக்கினை அடைவதற்கு எந்த எல்லைவரைக்கும் சென்றுவர பெரும்பாலான பெற்றோர் ஆயத்தமாகவே இருக்கின்றனர். அந்த இலக்கினை அடைவதற்கு பிள்ளைகள் கூறும் காரணங்கள, சங்கடங்கள் குறித்த முறைப்பாடுகள் இவர்களைப்பொறுத்தவரையில் முட்டுக்கட்டைகளாக இருப்பதால், அவற்றை முற்றாக உதாசீனம் செய்வதோடு, தமது பிள்ளைகள் மீதான அழுத்தத்தினை இன்னொரு மடங்கு அதிகரிக்கவும் இதன்போது இவர்கள் தவறுவதில்லை. 

ஈற்றில் வீட்டிலும் பாடசாலையிலும் தனது பிரச்சினைகள் குறித்து எவரும் அக்கறைப்படாத நிலையில் பிள்ளை ஒன்றில் தவறான நட்பு வட்டத்தில் சிக்கிக் கொள்கிறது அல்லது தன வாழ்வினை முடித்துக்கொள்ள எத்தனிக்கிறது.

இவற்றுக்குப் பல உதாரணங்கள் எமது ஈழத் தமிழ்ச் சமூகத்திலேயே இங்கு இருக்கின்றன. 

ஈற்றில், ஏதோ ஒருவகையில் பிள்ளையின் மனநிலை புரிந்தோர் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி மனோதத்துவ நிபுணர்களை அணுக வைக்கும்போது, தவறு எங்கே இருக்கின்றது என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள முடிந்துவிடுகிறது. ஆனால், அந்தக் கட்டத்தில் பிள்ளையின் மனதில் மாற்றமுடியாத காயமோ அல்லது நிலையான தக்கமோ ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. 

தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் செல்வச் செழிப்புடனும், அந்தஸ்த்துடனும்  வாழவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, இயலாத பந்தயத்தில் ஓடவிடும் பெற்றோர் இன்னமும் எம்மில் இருக்கின்றனர். தமது பிள்ளை தாம் விரும்பும் துறைக்குச் செல்வதை உறுதிப்படுத்த எந்த எல்லைவரைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். இதனை அடைவதற்காக பிள்ளை எந்தவிதமான உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டாலும் கூட, அதனை விலையாகக் கொடுத்து இலக்கை அடைவதில் இவர்களுக்குப் பிரச்சினை இருக்கப்போவதில்லை. 

இப்படியான பெற்றோருக்கு இவ்வகையான விளக்கங்கள் நிச்சயம் தேவை. ஆனால், அவர்களை இந்த புரிதலுக்கு எப்படி வரப்பண்ணப்போகிறோம் என்பதே சவால்தான். 

எங்களது அவுஸ்ரேலிய தமிழ் சமூகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள்.. அது மட்டுமல்ல இங்கே உங்களது கருத்தினை பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

நீங்கள் கூறியபடி பெற்றோருக்கு விளங்க வைப்பது ஒரு சவால்தான். அதனால்தான் இந்த தடம் உறுப்பினர்கள கூட பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பிழையென ஒரு போதும் கூறவில்லை, ஆனால் அவர்கள் கூற வருவது பெற்றோரது அனுகுமுறை, இளையோரின் எதிர்பார்ப்பினை விளங்கிக் கொள்ளல், பிரச்சனைகள் வருமிடத்து எப்படி உதவிகளை நாடி ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முயல்வதே.. 

 

1 hour ago, ரஞ்சித் said:

தாயகத்தில் இருக்கும்வரை சிறுவர்களின் அல்லது இளவயதினரின் உளவியல் பிரச்சினைகள் குறித்து எம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? அல்லது எத்தனைபேர் இதுகுறித்து உதவிகள் கோரியிருக்கிறோம்? "விசர்" என்று நாம் பொதுப்படையாக விளிக்கும் சொல்லுக்கு அப்பால், இதற்கான தேவை குறித்தோ, அல்லது இதன் உண்மையான அர்த்தம் குறித்தோ சிந்தித்திருக்கிறோமா? இல்லையே? 

இல்லை.. அதனால்தான் அங்கே உருவாகிக்கொண்டிருக்கும் பல உளவள சம்பந்தமான பிரச்சனைகளை இலகுவில் விட்டுவிட முடியாது என நம்புகிறேன். அவர்களுக்கும் ஏதோவொரு வகையில் இந்த மாதிரியான உதவிகள் கிடைக்கவேண்டும் என விரும்புவதாலேயே தடம் பற்றி இங்கே பதிந்துள்ளேன். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

துணிச்சலா???

எனது தந்தை அடிக்கடி கூறுவார் “பிள்ளை நீயொரு பயந்தாங்கொள்ளி, உன்னை நினைத்துதான் எனக்கு கவலை என்று” 

நீங்கள் என்னவென்றால் நான் துணிச்சல் உடையவள் என்கிறீர்கள்.. நல்ல பகிடிதான்

பலரும் பேசத் துணியாத விடயம் பற்றிப் பேசத் துணிந்ததால் அப்படிக் கூறினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

பலரும் பேசத் துணியாத விடயம் பற்றிப் பேசத் துணிந்ததால் அப்படிக் கூறினேன்.

அப்படி நான் நினைக்கவில்லை. வெவ்வேறு விதமாக, வெவ்வேறு காலங்களில் இது பற்றி பலரும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். 

சிலவற்றை அடிக்கடி நினைவூட்ட வேண்டும் என்பதால் எனக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தினேன். அவ்வளவுதான். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

 இணைப்பிற்கு நன்றி பிரபா ...நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை ...எனது கருத்தை ஆறுதலாய் எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

தடம் நல்லதொரு பதிவு.
ரஞ்சித் அண்ணாவின் விளக்க பதிவு சிறப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 இணைப்பிற்கு நன்றி பிரபா ...நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை ...எனது கருத்தை ஆறுதலாய் எழுதுகிறேன்

அந்த வீடியோ அவர்களைப் பற்றிய அறிமுகம் மட்டுமே. ஆனால் அவர்களது இணையத்தளத்தில் மனநலம் பற்றிய கட்டுரைகள், அனுபவ பகிர்வுகள் எல்லாம் உண்டு. நேரமும் விருப்பமும் இருந்தால் வாசியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களை ஆற்றுப்படுத்தக் கூடியதொரு இன்றியமையாத அமைப்பு "தடம்" ......!  🙏

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.