Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழிசை

பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்தோடு ஆனித் திருமஞ்சனம் தொடங்கியது.

இந்நிலையில் ஆனித் திருமஞ்சனம் மஹாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள இன்று அதிகாலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்துமுடித்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கோயில் வளாகத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அவரிடத்தில் தீட்சிதர்கள் அங்கே அமரக்கூடாது என்று கூறியதாக தகவல்கள் அதிகமாக பரவின.

மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் பரவ தொடங்கியது.

இதனிடையே புதுச்சேரிக்குச் சென்ற அவர் அங்கு அம்மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம், சிதம்பரம் கோயில் வளாகத்தில் உள்ள படியில் அமர்ந்தபோது, அங்கே அமரக்கூடாது என்று தீட்சிதர்கள் கூறி உங்களை அவமதித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு சிரித்தபடி மறுப்பு தெரிவித்தார்.

'நடந்தது உண்மைத்தான் ஆனால் அவமதிக்கவில்லை'

அது குறித்துப் பேசிய அவர், "என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, அந்த பக்கம் நிறைய இடம் உள்ளது என்றும் அங்கே சென்று அமரும்படியும் கூறினார். அதற்கு நான் இறைவனைப் பார்க்கவந்தேன் இங்கே தான் உட்காருவேன் என்று கூறினேன்.‌ அதைக்கேட்டு அவரும் சென்றுவிட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. இறைவனை‌ பார்க்க போனேன். அதை யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

தமிழிசை

பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER

மற்ற எல்லா தீட்சிதர்களும் இறைவனுக்கு படைத்த மாலை, பிரசாதம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்தனர் என்றார்.

சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னாள் பிரச்னை வருவதாக கூறிய தமிழிசை ஆனால் தனது விஷயத்தில் எந்த பிரச்னையில்லை என்று கூறினார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் தரப்பில் கூறுவது என்ன?

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், "அவர்களை எந்த விதத்திலும் அவமரியாதை படுத்தியோ, அலட்சியப் படுத்தியோ அவர்களை நிராகரிக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த இடத்தில் பிரம்மோற்சவம் என்ற தேரோட்டத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது என்பதால், சில இடங்கள் உபயம் செய்பவர்களுக்காகவும், கோயில் முக்கிய நிகழ்விற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கோயில்

அங்கே இருப்பவர், இல்லாதவர் என்று பாரபட்சமின்றி பரம்பரை பரம்பரையாக உபயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் ஆளுநரிடத்தில் கொஞ்சம் இப்படி அமரும்படி வேண்டுகோள் வைத்தோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டு, நின்று சாமி தரிசனம் செய்து சந்தோஷமாகத் தான் சென்றுள்ளார்," என்று கோயில் தரப்பில் ஐயப்ப தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62063308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசை சௌந்தரராஜன்: சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை தொடர்பாக விளக்கம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம்,FACEBOOK/DRTAMILISAIGUV

"காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் தரிசனம் செய்துவிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்," என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தேரோட்ட விழாவிற்கு நேற்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார். அவர் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது தீட்சிதர்கள் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை என்னை வேறு இடத்தில் அமரும்படி கூறியது உண்மை தான் ஆனால் அவமதிப்பு செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.

சிதம்பரம் கோயில் தொடர்பாக ஆளுநரின் விளக்கத்திற்கு பிறகும் அந்த விவகாரம் தமிழிசை சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டார் என்ற கோணத்தில் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது.

இதனிடையே இந்த நிகழ்வு குறித்து தமிழிசை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நடராஜரும் நானும், இடையில் நாரதர்கள் வேண்டாம்," என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கோயில் நடந்த நடந்த சுவையான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

"நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன்.

திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோயிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள்.

பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொது மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

 

தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER

மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை.

தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார்.

நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது, நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன்.

அதற்கு பின்பு அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன்.

நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார்.

லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாளாக இருந்தது.

கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் தான் கேட்டதாகவும் அவர் கொடுத்த காகிதத்தில் என்னுடைய படம் இருந்ததாகவும் அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார்.

ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன் என்றும் இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றும் அவர் என்னிடம் கூறினார். இது ஒரு சுவையான அனுபவம்," என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

https://www.bbc.com/tamil/india-62075680

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தனான், ஆனாலும் மீசையில் மண்படவில்ல. 

தமிழிச அவர்கள்  தரும்  பெரும் விளக்கம் மட்டுமே போதும் அவர் முகம் குப்பற விழுந்தது உண்மை என்பதற்கு. 

உடம்பு முழுவதும் வியாதி, ஆனால் பெயரோ ஆரோக்கியசாமி.

பெயர் இசைச் செல்வி. குரலோ கறள் பேணிக்குள் கல்லைப் போட்டுக் குலுக்கும் ரகம். 

எந்தநேரமும் எரிந்து விழுந்துகொண்டே இருப்பான். பெயரோ அன்புராசா. 

ஆளோ கன்னங்கரியன். பெயர் வெள்ளைச்சாமி.

அந்த வரிசையில் ...பெயர் தமிழிசை, ஆனால் வாசிப்பதோ பக்கவாத்தியம். (🤣)

😏

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாழ 46 வருடங்களுக்கு முன் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்கி வந்துள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாதிரியே சிதம்பரம் நடராசர் கோயிலும் பழக்கம்.

இங்கே தீட்சதர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருநீறு வழங்கும் கலையே தனி..! 😛🤭

மதுரையில் அப்படி பார்க்க இயலாது..! 😎

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ராசவன்னியன் said:

ஏறத்தாழ 46 வருடங்களுக்கு முன் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்கி வந்துள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாதிரியே சிதம்பரம் நடராசர் கோயிலும் பழக்கம்.

இங்கே தீட்சதர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருநீறு வழங்கும் கலையே தனி..! 😛🤭

மதுரையில் அப்படி பார்க்க இயலாது..! 😎

அது எப்படி என்று கொஞ்சம் சொல்லுறதுதானே வன்னியர்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

அது எப்படி என்று கொஞ்சம் சொல்லுறதுதானே வன்னியர்......!   😁

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்(நளினமாக) திருநீறை வழங்குவார்களோ .. 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்(நளினமாக) திருநீறை வழங்குவார்களோ .. 😀

நளினமா வழங்கினால் பரவாயில்லை, கடனேயென தூக்கிப் போட்டால்..? 🤗

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

நளினமா வழங்கினால் பரவாயில்லை, கடனேயென தூக்கிப் போட்டால்..? 🤗

பிச்சை என்கிறீர்கள்..ம்ம்ம்ம்ம்ம். 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.