Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உங்கள் கடைசி நடவடிக்கையாக ரணிலை பதவி நீக்குங்கள் இல்லையேல் இதை விட பாரிய போராட்டம் வெடிக்கும். கோட்டவிடம் கோரினார் - ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க.

கோத்தபையன் ஓடுவதென்று முடிவெடுத்த பின் போராட்டம் நடந்தா அவருக்கென்ன பிரச்சனை?

  • Replies 59
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கோத்தபையன் ஓடுவதென்று முடிவெடுத்த பின் போராட்டம் நடந்தா அவருக்கென்ன பிரச்சனை?

அவர் ஜனாதிபதியாக ஒட்டியிருந்தால் பிரச்சினை இல்லை......பதவியை விவாகரத்து செய்து போட்டு ஓடுவதால்தான் பிரச்சினை........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் பதவி விலகாமல் கமுக்கமாக இரப்பதைப் பார்த்தால் ஒருநாளாவது ஜனாதிபதி ஆக வேண்டும் என்று பிளான் போடுகிறார்.ராஜபக்ச குடும்பத்திற்கும் ரணில்ஜனாதிபதியாக வருவதே அனுகூலமாகும்.ஆனால் போராட்டக்காரர்கள் ரணில் ஊரு நரி என்பதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.(தமழர்கள் சிலர் இன்னமுமு; ரணில்தான் மீட்பர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்).இதுவே அரபு நாடுகளென்றால் இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அந்த அளவுக்கு இராணுவம் சிறிலங்காவில் இறங்கவில்லை. அவர்கள்தமிழர்களுக்கு எதிராகத்தான் மூர்க்கமாக இருப்பார்கள். சிங்களவர்களுக்கு அவர்கள் வெறும் இராணுவம் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

கோத்தபையன் ஓடுவதென்று முடிவெடுத்த பின் போராட்டம் நடந்தா அவருக்கென்ன பிரச்சனை?

அவர் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஓட முடியாமல் உள்ளது. பதவியை துறக்கும் கையெழுத்து அவர் வைக்கும் போது - ஓடுவது இன்னும் கஸ்டமாகும் அல்லவா?

இங்கே அனுர சொல்லாமல் சொல்லுவது.

ரணிலை நீக்குங்கள். யாப்பாவை போடுங்கள். ஓடவிடப்படுவீர்கள்.

கோட்டவுக்கும் ரணில் மீது நம்பிக்கை இல்லை. பதில் ஜனாதிபதியாக வந்தவுடன் ரணில் கோட்டவை கைது செய்யவும் கூடும்.

அதனால்தான் தனது செய்திகள் எல்லாம் யாப்பா மூலமாக மட்டுமே வரும் என அறிவித்தார்.

47 minutes ago, புலவர் said:

சிங்களவர்களுக்கு அவர்கள் வெறும் இராணுவம் மட்டும்தான்.

👆👌

ஒவ்வொரு சிங்களவரும், சிறிலங்கன் என உணருபவரும் இதையொட்டி உண்மையில் பெருமை அடையலாம்.

தளபதிகள் அமெரிக்காவின் கட்டுபாட்டில் என்றாலும், ஒரு மேஜர் ஜெனரல் - 500 பேருடன் களத்தில் இறங்கினாலே நிலைமை தலைகீழாகும்.

எல்லா அரசியல்வாதியும் ஓட வேண்டி வரும்.

ஆனால் இராணுவம் இதே பொறுமையுடன் கனகாலம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

அதற்குள் அரசியல்வாதிகள் விரைந்து முடிவெடுத்தால் தப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.bbc.co.uk/news/world-asia-62132271

பிபிசி - கோட்ட இராணுவ விமானம் மூலம், பசிலுடன் தப்பி ஓட்டம். (நன்றி நிழலி).

போக முன்னம் ரணிலுக்கு ஆப்பு வைத்திட்டு போயிருப்பாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

கோட்டாபய, பஷிலுக்கு நாம் உதவவில்லை
அறிக்கை வநத வேகத்தைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருக்குமோ?
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைக்குள் விலகல் கடிதத்தை அனுப்புவேன் என ஜனாதிபதி எனக்கு தொலைபேசியில் அறிவித்தார் -சபாநாயகர்-

 

  • கருத்துக்கள உறவுகள்

பாசிஸ்ட் நாட்டை கையில் எடுக்க முயற்சிப்பதால் அவசரகால நிலை பிரகடனம் செய்தேன். முப்படைகளுக்கும், பொலிசுக்கும் உதவுங்கள் என்கிறார் ரணில்.

இதை அவர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டாரா என தெரியவில்லை. பிரதமர் அலுவலகம் இப்போ போராட்டகாரர் கையில்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

மேல்மாகாணத்தில் ஊர் அடங்கியது – நாடுபூராகவும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதமர் பணித்துள்ளதோடு,  கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவற்றை கையகப்படுத்த  பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.