Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

 

பொதுச் சொத்துக்கள் மற்றும் உயிர்கள் சேதங்களை தடுக்க இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதற்காக வன்முறையை அதிகரிக்கும் அனைவரும் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இல்லையெனில், தற்போதுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படையினரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

Breaking news: ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு – வர்த்தமானி வெளியானது!

வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது அதியுயர் அதிகாரம்!

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291186

  • கருத்துக்கள உறவுகள்

படையினருக்கு முழுமையான அதிகாரம் - சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

அறிவிக்கப்பட்டுள்ள அவசரகாலநிலையில் படையினர் பலப்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான முழுமையான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புசபை மக்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்குகு படையினரை பயன்படுத்தவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆயுதப்படையினரை பயன்படுத்துவது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வது ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான அளவுக்கதிகமான கண்ணீர்புகை பிரயோகம் போன்றவற்றின்  மூலம்  அதிகாரிகள் தங்கள் பதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளமை கவலையளிக்கின்றது என  சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

special_forces.jpg

அவசரகாலநிலையின் போதுகூட பலத்தை பயன்படுத்துவதற்கான முழுமையான அதிகாரத்தை வழங்குவது ஆபத்தானது இராணுவத்தினர் எதிரிகளுடன் போரிடுவதற்கே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை என்பதால்  பொதுமக்கள் அணிதிரளும் பகுதிகளில் ஒழுங்கை நிலைநாட்ட  இராணுவத்தை பயன்படுத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் காயங்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும்,மிகவும் அவசியமாக பலத்தை பயன்படுத்தவேண்டிய சூழ்நிலைகளில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஆகக்குறைந்தளவு பலத்தை அளவுக்கதிகமாகாமல் பயன்படுத்தவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை  ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் தனித்தனி சம்பவங்களாக ஆராய்ந்து மிகவும் அவசியமான சூழ்நிலைகளிற்கும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கும் பலத்தை பயன்படுத்தவேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலத்தை பயன்படுத்துவது சட்டஅமுலாக்க பிரிவினர் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு சமமானதாகயிருக்கவேண்டும்,அதிகாரிகள் வன்முறைகளை தடுக்க முயலவேண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ள  ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடையும் நிலையி;ல்  அதிகாரிகள் நிலைமையை கட்டு;ப்படுத்த தணிப்பதற்கு தீவிரநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்,பொதுமக்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/131499

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரரும் பொல்லுகள், தடிகளுடன் வரக்கடவது. மனிதநேய இராணுவத்தினரின் நாடகம் வெளிவரணும். உலகம் முழுக்க இவர்களின் கொடூர முகத்தை காணவேணும்! இவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி இலங்கை இராணுவத்தை உலக நாடுகள் தடை செய்யவேணும். நாடு இரண்டு படப்போகிறது. நரியாரை வளமாக சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடி  விட்டது சிங்கம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.