Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாராளுமன்றத்திற்குத் தீவைக்கப்பட்டால் எம்மை சாடவேண்டாம் - மக்கள் தன்னெழுச்சிப்போராட்டக்காரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர், நா. தனுஜா)

 

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பாராளுமன்றம் தெரிவுசெய்துள்ள ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென மக்கள் தன்னெழுச்சிப்போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

 

Images coming in as protests go on into the night at Galle Face! -  Newscutter.lk - Sri Lanka's Leading News Site | Breaking News Updates |  Latest News Headlines

அதன்படி ரணில் விக்ரமசிங்வைத் துரத்தும் வரை தொடர்ச்சியாகப் போராடப்போவதாகவும், அடக்குமுறைகளைமீறி அப்போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம'வில் விசேட செய்தியாளர் சந்திப்பினை நடாத்தி போராட்டக்காரர்கள் இன்று அறிவித்தனர்.

இன்று 102 ஆவது நாளாகவும் காலிமுக்ததிடலில் மக்களின் தன்னெழுச்சிப்போராட்டம் தொடர்ந்த நிலையில் பாராளுமன்றம் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவுசெய்ததுடன் தன்னெழுச்சிப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடாத்தினர்.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த முதலிகே கூறியதாவது:

69 இலட்சம் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாலை 3 மணிக்கு இரகசியமாக மாலைதீவுக்குத் தப்பியோட இந்தத் தன்னெழுச்சிப்போராட்டம் காரணமாக அமைந்தது.

இது நடக்கும்போது மக்களாணை பொதுஜன பெரமுனவிற்கே இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் நிராகரித்ததுடன் மஹிந்த ராஜபக்ஷவையும் பதவியிலிருந்து நீக்க இந்தப் போராட்டம் காரணமானது.

இந்த இரு சம்பவங்களுடனும் பொதுஜன பெரமுனவிற்கு இருந்த மக்களாணை காலாவதியாகிவிட்டது.

அவ்வாறிருக்கையில் காலாவதியான பொதுஜன பெரமுனவின் வாக்குகளைப் பயன்படுத்திப் பாராளுமன்றத்திற்குள் நடந்த சதிகளுடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவொரு மக்களாணையும் இல்லை. 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தவராவார்.

தேசிய பட்டியல் ஊடாகப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அவரை கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் நலனுக்காகப் பிரதமராக்கவில்லை.

ராஜபக்ஷ குடும்பத்தின் நலனுக்காகவே அவர் பிரதமராக்கப்பட்டார். அவ்வாறிருக்கையில் மக்களாணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவை நாம் ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம்.

அவரை விரட்டியடிக்கும் வரை இந்தத் தன்னெழுச்சிப்போராட்டத்தை மக்கள் நிறுத்தப்போவதில்லை. எம்மை அடித்துவிரட்டி, கைதுசெய்து, சுட்டுப்பொசுக்கி இந்தப் போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவரலாமென ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது.

ரணிலால் தற்போதைய பிரச்சினைக்கு எந்தத் தீர்வினையும் வழங்கமுடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே 6 முறை பிரதமராக இருந்தவராவார். 

மத்திய வங்கி கொள்ளை , பட்டலந்த வதை முகாம் போன்ற சம்பவங்களுடன் அவருக்கு உள்ள தொடர்பு ஒன்றும் இரகசியமல்ல.

தற்போதைய பாராளுமன்றம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. இப்படியே மக்களாணையை மீறி செயற்பட்டால் பாராளுமன்றத்தை மக்கள் தீவைத்து எரிக்கும் நிலையேற்படும். அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதனை எம்மீது சுமத்தி, எங்களைத்தேடி வரவேண்டாம்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவாகும். எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குத் தீவைக்கப்பட்டால் எம்மை சாடவேண்டாம் - மக்கள் தன்னெழுச்சிப்போராட்டக்காரர்கள்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 இன்னும் ஆட்டம் முடிவடைந்தது என்று முடிவு அறிவிக்கவில்லை, எனவே ஆட்டம் தொடரும்! தட்டிக்கொண்டு கிளம்பி விடாதீங்கோ விசுகர்! இருந்து மிகுதி ஆட்டத்தையும் ரசித்து, முடிவையும் அறிந்து ஆறுதலாய் கிளம்புவோம்.  அவர்கள் சொல்வதிலும் ஒரு நிஞாயம் தெரியுதெல்லோ! ஆனா நம்ம சம்பந்தர் ஐயா, ரணில் வந்தது சரியென்பார். இது வெளிநாடுகளின் கைகளையும் மீறிப்போய்விட்டது போலுள்ளதே! 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறியள்....🙃

  • கருத்துக்கள உறவுகள்

இவனுகள் ஏதோ செய்யப் போறானுகள் போல கிடக்கு!👀

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா சொல்லிக்கொண்டிருக்கிற விசயமா..? விசர்ப் பயல்கள். ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

எம்மை அடித்துவிரட்டி, கைதுசெய்து, சுட்டுப்பொசுக்கி இந்தப் போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவரலாமென ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது.

 

5 hours ago, பிழம்பு said:

மக்களாணையை மீறி செயற்பட்டால் பாராளுமன்றத்தை மக்கள் தீவைத்து எரிக்கும் நிலையேற்படும். அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதனை எம்மீது சுமத்தி, எங்களைத்தேடி வரவேண்டாம்.

இனிமேல் ஒன்றும் செய்ய முடியாதென்று துணிந்துதான் களத்தில் நிக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே   அவர்களை கைது செய்வார் நரியார்.

5 hours ago, பிழம்பு said:

மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவாகும். எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.

காலக்கெடு வேறை கொடுத்திருக்கிறார்கள். இதைத்தான் சொல்லியடி எண்டு சொல்லுறதோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.