Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

அருமையான கட்டுரை, ரஞ்சித்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்  சுமந்திரனே தேவதையில்லாத ஆணி.
அதற்குள்...  அம்பிகா சற்குணநாதனை கொண்டு வந்து சேர்க்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்+
58 minutes ago, ரஞ்சித் said:

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

நல்ல பதிவு. 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீலன் கொல்லப்பட்டதற்கு இன்றுவரை யாருக்கும் காரணம் தெரியாது

☹️

தற்போது நமது நிலைமைக்கும், அப்போதைய நிலையில் நீலன் திருச்செல்வம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. 

இதே நேரம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்... சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ரஞ்சித் said:

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

அவர்களது மரணங்கள் பற்றி நான் சிந்திப்பதுமில்லை.கவலைப்படுவதுமில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன்.

தமிழ்த் தேசியம் என்பது கிள்ளுக் கீரையா வாறவன் போறவன் எல்லாம் கிள்ளி வாயில் போட்டு முடிப்பதற்கு? 

தேசிய உணர்வை ஓரிரு  தனி நபர்களால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்று எவ்வளவு இலகுவாக எடைபோடுகிறீர்கள்? 

அப்படி ஒருவர் இருவரால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்றால் அது உண்மையான தமிழ்த் தேசிய உணர்வே அல்ல. 

 

## எங்கள் அறிவின்மைதான் தமிழ்த் தேசியத்தின் எதிரி ##

😏

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.