Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி!

போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போரால் அடையமுடியாத இலக்கை, வேறு வழியில் அடைய முடியும் என அந்த குழுக்கள் கருதுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுங்கள், ஆனால் உங்களுடன் இருப்பவர்கள் யாரென்பதையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதையும் அடையாளம் கண்டு கொள்ள விழிப்பாகவே இருக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு கிடைத்த தகவலொன்றால் தான் அச்சம் அடைந்துள்ளதாகவும், கனடாவில் உள்ள நபரொருவரே தனக்கு இந்த தகவலை வழங்கியுள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பதிவொன்றை இட்ட கையோடு, சர்வதேச அமைப்பொன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.

பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நிதி உதவி வழங்க தயார் என அவரிடம் கூறப்பட்டுள்ளது எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல சூழ்ச்சிகளுக்கு மத்தியிலேயே அரசை முன்னெடுக்கின்றோம். நாட்டு பணத்தை எவரும் கொள்ளையடிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்திய செலாவணி இருப்பை கொள்ளை அடிக்கவும் முடியாது. எனவே, போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1293239

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

போரால் அடையமுடியாத இலக்கை, வேறு வழியில் அடைய முடியும் என அந்த குழுக்கள் கருதுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலே என்ன அனர்த்தம் நடந்தாலும் அவற்றுக்கு காரணமும் இந்தக் குழுக்களே. மக்களுக்கு பசி எழும்பினால் அதற்கு காரணமும் இந்த குழுக்களே. பொருளாதார நெருக்கடிக்கு காரணமும் இவர்களே.  அப்போ இவர்கள் ஏன் தப்பி ஓட வேண்டும்? இவ்வளவுகாலமும் தமிழரை எதிர்த்த தென்னிலங்கை ஏன் இவர்களை தெரிந்தெடுத்து,  ஆட்சியிலமர்த்தி அழகு  பார்த்து இப்போ   விரட்ட காரணம் என்ன?  எப்போதும் மற்றவரை சாடி இன்னொருவரில் வாழ்ந்து பழகிவிட்டது. இவர்களில் ஒரு தவறுமேயில்லை. இவரின் நகைச்சுவையை இவர்தான் ரசிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மாதனமுத்தாக்களை திருத்தவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, satan said:

நாட்டிலே என்ன அனர்த்தம் நடந்தாலும் அவற்றுக்கு காரணமும் இந்தக் குழுக்களே. மக்களுக்கு பசி எழும்பினால் அதற்கு காரணமும் இந்த குழுக்களே. பொருளாதார நெருக்கடிக்கு காரணமும் இவர்களே.  அப்போ இவர்கள் ஏன் தப்பி ஓட வேண்டும்? இவ்வளவுகாலமும் தமிழரை எதிர்த்த தென்னிலங்கை ஏன் இவர்களை தெரிந்தெடுத்து,  ஆட்சியிலமர்த்தி அழகு  பார்த்து இப்போ   விரட்ட காரணம் என்ன?  எப்போதும் மற்றவரை சாடி இன்னொருவரில் வாழ்ந்து பழகிவிட்டது. இவர்களில் ஒரு தவறுமேயில்லை. இவரின் நகைச்சுவையை இவர்தான் ரசிக்க வேண்டும்

இவர்கள்… திருந்த சந்தர்ப்பமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதமும் போர்வெறியும் தான் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முதலீடு. இப்பவும் அதை தான் மொட்டுக்கட்சிக்கூடாக செய்ய விளைகின்றனர்.

ஆனால் இப்ப சிங்கள மக்களிடம் இது அவ்வளவு இலகுவாக எடுபடாது. ஏன்னா அவங்க பாணுக்கும் பருப்புக்குமே அல்லாடுறாங்க.. இவைட கடந்த கால இனவாத போர் வெறி அணுகுமுறைகளால். இதைப் பேசி மொட்டுக் கட்சி கல்லடி வாங்காட்டில் சரி.

எனி இனவாதமும் பிரிவினைவாதமும் கூட இவையை காப்பாற்ற முடியாது. ஏன் புலி வருகுது கோசம் கூட செல்லுபடியாகாது. முயன்று தான் பார்க்கட்டுமேன். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேணும்.

 

20 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் உங்களுடன் இருப்பவர்கள் யாரென்பதையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதையும் அடையாளம் கண்டு கொள்ள விழிப்பாகவே இருக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்

 

20 hours ago, தமிழ் சிறி said:

தனக்கு கிடைத்த தகவலொன்றால் தான் அச்சம் அடைந்துள்ளதாகவும்,

போராட்டக்காரரை சடலங்களாக எறிந்துவிட்டு  இந்தக்குழுக்கள் மேல் பழியைப்போட ஆயத்தம் என்று சொல்லுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.