Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வகட்சி அரசாங்கத்தை, அமைக்கவே... கோட்டா, பதவி விலகினார் – நாமல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

சர்வகட்சி அரசாங்கத்தை, அமைக்கவே... கோட்டா, பதவி விலகினார் – நாமல்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் கிளர்ச்சி உருவாகும் பட்சத்தில், அதை அடக்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2022/1293838

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

தம்பி நாமல் புளுகுறதுக்கும் ஒரு அளவிருக்கு....🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

தம்பி நாமல் புளுகுறதுக்கும் ஒரு அளவிருக்கு....🤪

கோத்தா... எவ்வளவு, அல்லோல கல்லோலப்  பட்டு, நாட்டை  விட்டு ஓடி...
ஒரு மாதம் ஆகிறத்துக்கிடையில்... சனம் அதை மறந்திருக்கும் என்று,
நாமல்  நினைத்திருக்கிறார். 

நீங்கள் நேற்று ஒரு தலைப்பில்... கோத்தாவை, தியாகி ஆக காட்டுவார்கள் 
என்று சொன்னது, உடனே பலித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தம்பி நாமல் புளுகுறதுக்கும் ஒரு அளவிருக்கு....🤪

அப்ப நாட்டை விட்டு தப்பியோடியது .....? 

 

2 hours ago, தமிழ் சிறி said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏன் அந்தபதவி விலகலை நாட்டில இருந்து செய்தால் செல்லுபடியாகாதோ?

2 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் கிளர்ச்சி உருவாகும் பட்சத்தில், அதை அடக்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொடிமாத்தையாவுக்கு இளம் இரத்தம் முறுகுது, பாத்து! நாளைக்கு அது உங்களை அடக்கபோகுது. தப்பிப்போகட்டும் என்று விட்டார்கள் பாருங்கள் ..... அது இப்பிடி கதைக்குது. பட்டுத்தெளியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மேலும் நாட்டில் கிளர்ச்சி உருவாகும் பட்சத்தில், அதை அடக்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கிளர்ச்சிக்காரர்களை பிறகு அடக்கலாம் முதலில் நாட்டின் திறைசேரியில் இருந்து திருடப்பட்ட  பணத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் நாட்டை ஒட்டுமொத்தமாக சூறையாடியவர்களை எப்படி தண்டிக்கலாம் என்றும் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vanangaamudi said:

கிளர்ச்சிக்காரர்களை பிறகு அடக்கலாம் முதலில் நாட்டின் திறைசேரியில் இருந்து திருடப்பட்ட  பணத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் நாட்டை ஒட்டுமொத்தமாக சூறையாடியவர்களை எப்படி தண்டிக்கலாம் என்றும் சொல்லுங்க.

அதை  இவர் கடைசி மட்டும் சொல்லமாட்டார். சொன்னால்; இவர்கள் அடக்குமுறையாளர்கள் அல்ல  வாழ்நாள் முழுவதும் அடைக்கப்படவேண்டியவர்கள்! 

அதனாலேயே கேள்வி கேட்பவர்களை கிளர்ச்சியாளர்கள் என்று சித்திரித்து அடக்கத் துடிக்கிறார் இவர்! அடக்குமுறையிலிருந்து விடுதலை கேட்டவர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து அடக்கி வெற்றி கண்டவர்களல்லவா இவர்கள்? அப்படித்தான் பேசுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எங்கை சர்வகட்சி அமைக்க பதவி விலகினவர் ......? சிங்கப்பூரிலேயோ ....? தப்பி ஓடிப்போய் .......? ஹஹ்ஹா ரொம்பத்தான் பகிடி விடுகிறார் நாமல் மாத்தையா. நாளைக்கு இதின்ர கையில அரசியல் தலைமை  போனால்; இது என்னென்ன செய்யும் என்று இப்பவே கட்டியம் சொல்லுது பாத்துகொள்ளுங்கோ! கொஞ்ச மாதங்களுக்கு முன்னால, கொரோனா காலத்தில  இது வடக்கில மினக்கெடேக்கை எங்கட கொஞ்ச ஆக்கள் நாமலை புகழ்ந்து தள்ளிச்சின்னம், அதுதான் சொல்லுறேன். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்சி ஆட்சியும் தேவையில்லை. நாடாளுமன்றத்தை கலைத்து.. சனாதிபதி பதவியையும் இல்லாமல் செய்து.. புதிய நாடாளுமன்றத்தை அமைப்பதோடு.. கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படுவதோடு சட்டவாக்கம்.. எம் பிக்களின் கைகளுக்கு அளிக்கப்படுவதோடு.. பிரித்தானிய முறையில்.. அல்லாமல்.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும்பான்மை பெறுபவர் பிரதமராகலாம். அவருக்கு மட்டுப்படுத்திய அதிகாரம் மட்டும் வழங்கப்படுவதோடு அவர் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்படுபவராக இருப்பது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nedukkalapoovan said:

ஒரு கட்சி ஆட்சியும் தேவையில்லை. நாடாளுமன்றத்தை கலைத்து.. சனாதிபதி பதவியையும் இல்லாமல் செய்து.. புதிய நாடாளுமன்றத்தை அமைப்பதோடு.. கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படுவதோடு சட்டவாக்கம்.. எம் பிக்களின் கைகளுக்கு அளிக்கப்படுவதோடு.. பிரித்தானிய முறையில்.. அல்லாமல்.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும்பான்மை பெறுபவர் பிரதமராகலாம். அவருக்கு மட்டுப்படுத்திய அதிகாரம் மட்டும் வழங்கப்படுவதோடு அவர் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்படுபவராக இருப்பது அவசியம்.

தலையே போனாலும் ஒருத்தனும் செய்ய மாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.