Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்குமோ நெஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்குமோ நெஞ்சம்?

ஈழத் தமிழர் ஏட்டில் இன்னுமோர்

வரலாற்றுப் பதிவு!

நேருக்கு நேர் நின்று போர்

செய்ய முடியா கோழைகளின்!

வெறியாட்ட அரங்கேற்றம்!

செஞ்சோலை!! செங்குருதியில்

குளித்த ஓராண்டு நிறைவு!

பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள்

நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர்

நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு!

எங்களின் மலர் முகங்களை

மறக்க இயலவில்லை!மனங்களில்

கண்ணீரோடு கதறிய கதறல்

உலுக்குகிறது ஈழத் தமிழனை!

பொறுப்பதில்லை எதற்கும் இனி!.

"ஏன்" என்று எந்த அரசும்

கேட்கவில்லை! போனது "தமிழ்"

உயிர் தானே! "அலட்சியத்தில்"

உயர்ந்து நிற்கின்றது எங்கள்

வேங்கைகளின் இலட்சியம்!

இனி!!....வெல்லும் காலம்!

"ஓயும் அகதி எனும் ஓலம்!

சிங்களத்தினை செங்களமாடும்!

சிறுத்தைகள் கூட்டம்! ஈழக்கொடி!

பறக்கும் எம் தலைநகரில்!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!!

புத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான்

எத்தனை நாளாக நம்பி யிருப்பது?

அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்!

பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்!

பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை

நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக்

காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப்

பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள்

இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில்,

அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்!

சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப்

பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்!

புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்!

அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா,

இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில்

உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை!

தோன்றும் வரை,போர்!போர்! போர்!போர்!போர்! குண்டுமழையில்

தோன்றிட வேண்டும் தனித்தமிழ் ஈழம்!

பரணிபாடு, பாவல! உன்பாட்டுச் சந்த

அரணில் எழுகு கொடி.

எழுதியவர் .பரணி பாவலன்-நன்றி இரவா கபிலன்***********************************************

புத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்!

வித்தகக் கவிஞர் பா.விஜய்

இந்தியா வித்தியாசமான நாடு!

உள்நாட்டுத் தொழிலாளர்களைப்

பிச்சைக் காரர்களாக்கும்!

வெளிநாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!

வெளிநாட்டு தொழிலாளர்களை

பிச்சைக் காரர்களாக்குகிறது!

உள்நாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!

சவப்பெட்டிகளை தயாரித்து

சமாதானம் பேசும்!

சமாதானம் பேசிக் கொண்டே

ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று

செஞ்சோலை சிறுமிகளின்

உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்

குண்டு வீசிப் பறந்தது

விமானம் அல்ல

சிங்கள ராணுவத்தின்

மானம்!

ஒரு ராணுவம்

எதிரி ராணுவத்தை தாக்கும்!

என்றும் வேவு பார்க்கும்.

ஆனால் அறுபது சிறுமிகளை

அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது

ஈழத்துச் சிறுமிகளுக்கு

பூக்கோலமும் போடத் தெரியும்

போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்

பல்லாங்குழியும் ஆடத் தெரியும்

பகைவர் தலைகளுக்கு

பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு

தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்

எதிரிகளின்

தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்

சிலபேர் சிலிர்க்கலாம்

இது ஒப்பாரி அல்ல

இழந்த வீராங்கனைகளுக்கொரு

வீரத்தாலாட்டு!

நம்தமிழ் இளைஞர்கள்

வீறு கொண்டவர்கள்

செஞ்சோலையில் விழுந்த ஏவுகனை

நமீதா வீட்டில் விழுந்திருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை

இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

நாம்

குண்டுதுளைக்காத கூண்டில்

தயங்கியபடி நிற்கிறோம்

தேசக் கொடியேற்ற

அவர்கள்

குண்டு துளைப்பதற்காகவே

தயாராக நிற்கிறார்கள்

தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்

விளையாடுவதற்காக

பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்

விடுதலை ஆவதற்காக

உண்மை துப்பாக்கிகள்

நமக்கு

குளிர்பானத்தில் விஷமிருக்கிறது

அவர்களுக்கு

விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை

நாம் வாசிக்கிறோம்

அவர்கள்தான்

எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை

நாம் படிக்கிறோம்

அவர்கள்தான்

நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

தமிழனை

உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!

தமிழனுக்கு

உணர்ச்சி இருக்கிறது என்று

உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை

இந்த உண்ணாவிரதம் செய்கிறது!

உணர்ச்சி வரும் - ஒரு நாள்

புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன் தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

வணக்கம்!

நான் ஒரு வருடத்திற்கு முன்னர் செஞ்சோலையில் இறந்த சிறுமிகளின் நினைவாக ஒருபாடல் செய்தேன். பாடலின் ஒலிப்பதிவு எனக்கு திருப்திகரமாக இல்லாததால் அதை வெளியில் பெரிதாகவிடவில்லை. பிறகு இந்தவருடம் சிறுமிகளின் நினைவுதினம் வரும்போது பாடலை மற்றவர்களும் கேட்பதற்கு எங்காவது இணையத்தில் இணைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால், துர் அதிஸ்டவசமாக பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்து அதில் முன்பு இருந்த பிழைகளை திருத்த எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், இன்று தமிழ் தங்கையின் கவிதையை பார்த்துவிட்டு இங்கு இதை நீங்கள் கேட்பதற்காக இணைத்துள்ளேன். பாடல் வரிகள், ஒலிப்பதிவு, மற்றும் உச்சரிப்புக்களில் பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். சரியாக எடிட்செய்யப்படாத பாடலை இங்கு இணைக்கின்றேன்.

செஞ்சோலை சிறுமிகளின் நினைவுப் பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்..

பெண்குழந்தைகளே செஞ்சோலையிலே

உங்கள் அழகியவாழ்வு பறிபோனதோ?

பெண்குழந்தைகளே செஞ்சோலையிலே

உங்கள் அழகியவாழ்வு பறிபோனதோ?

துன்புற்றோர் துயர்துடைக்க விளைந்தவேளை

கொடியவன் ஆகாயத்தில் பறந்துவந்தானோ?

உங்கள் அழகியவாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகியவாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகியவாழ்வு பறிபோனதோ?

எங்கள் மாணவிகளே வகுப்பறையினிலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

எங்கள் மாணவிகளே வகுப்பறையினிலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

கல்விகற்றிட சென்ற காலையில்

பள்ளிமுற்றம் போர்க்களம் ஆனதோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

பூஞ்சிட்டுக்களே தமிழீழத்திலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

பூஞ்சிட்டுக்களே தமிழீழத்திலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

அல்லா யேசு கீதை புத்தன்வழி ஒழுகிய

சிறுமிகளின் கனவுகள் கலைந்தனவோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

அன்புச் செல்வங்களே தாய்மடியினிலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

அன்புச் செல்வங்களே தாய்மடியினிலே

உங்கள் அழகிய வாழ்வு பறிபோனதோ?

பிறர் உயிர்காக்கும் முதலுதவி

பயிலும் நேரத்தில் இன்னுயிர் பிரிந்ததோ?

எங்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்திடுவீர்!

எங்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்திடுவீர்!

எங்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்திடுவீர்!

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஓராண்டு.அன்றைய தினத்தை நினைத்து பார்க்கிறேன்.பார்ப்பவர் மனமெல்லாம் சோகம்.இப்போது கூட முடியவில்லை.

வெஞ்சமர் ஆடி

சிங்களம் தோற்றதால்

எம்மினப் பிஞ்சுகளை

தின்று தீர்த்த்துவோ ?

நிஸ்டையில் உறங்கும்

புத்தனின் காதில்

கத்திய பிஞ்சுகள்

குரலும் கேட்கலையோ ?

கதறக்கதற நீர்

கிழித்துப்போட்ட

பூந்தோட்டங்கள்

அவர்கள்

எம் ஆலயமெங்கும்

ஆண்டவனாய் வாழ்ந்திட்ட

காவல் தெய்வங்கள்

தமிழினத்தின்

கனவுப்பொக்கிசங்கள்

கல்விப்பெட்டகங்கள்

களவறியா மழலைகள்

கதறக்கதற கொன்று தின்றாயே ?

ஆண்டுகள் ஓன்று

அகன்று சென்றாலும்

மாண்டவர் எம்முன்னே

வந்து நிற்பாரோ ?

பூக்களை அழிக்க

புஸ்பகவிமானம்

ஏதடா உனக்கு புத்தி

பிஞ்சு மனதில் நீ

நஞ்சு விதைத்தாயே ?

பொறுத்துக்கொண்டோம் - இன்று

பிஞ்சையே நீ நஞ்சாக்கிச்சென்றாயே ?

நாம்

இலையொடித்தாலும்

தலையொடித்ததாய் எண்ணி

எகிறிக்குதிக்கும் வல்லரசு - இன்று

கண்மூடி மௌனம் கொள்வதேன்

ஒராண்டு ஆகிய அந்த கோரசம்பவத்தை நினைக்கவே வேதனையாகா இருகிறது உயிர் நீத்த சகோதரிகளிற்கு கண்ணீர் அஞ்சலிகள்...................அதை கவியாக வடித்த தமிழ்தங்கை அக்கா,குரு மற்றும் பரணி அண்ணாவின் கவிதைகள் அருமையாக இருகின்றன...........அத்தோடு தமிழ்தங்கை அக்கா இணைத்த சு.ப வீரபாணியன் பாடிய பாடலும் நன்றாக இருகிறது........... :lol:

மற்றும் குருவே உங்கள் வாயிஸ் இந்த பாடலில் எனக்கு நல்லா பிடித்து கொண்டது அதிலும் அன்பு சகோதரிகளே என்று பாடுவது மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள் குருவே............. :D

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை!! செங்குருதியில்

குளித்த ஓராண்டு நிறைவு!

பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள்

நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர்

நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு!

வார்த்தைகளால் விபரிக்க முடியாத, மீண்டும் நடக்கக்கூடாத நிகழ்வு....

எங்களின் மனதை விட்டு நீங்காத அந்த பிஞ்சுகளுக்கு எனது நினைவஞ்சலியை செலுத்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.