Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்?

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது.

குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இணையும் இந்த குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மாத்திரமின்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய அரசாங்கம் அடுத்த சில தினங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் இவர்களுக்கான அமைச்சு பதவிகள் பகிரப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டால் அந்த கட்சி நாடாளுமன்றத்தில் சிறிய கட்சியாக மாற்றம் பெரும்.

இதன்காரணமாக தற்போது சஜித் பிரேமதாச வகித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எதிர்க்கட்சியில் பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்டிருக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2022/1295243

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்?

ரணில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.

நாடு நல்லா வருகுதோ இல்லையோ உள்ள கட்சிகளை உடைத்துவிடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ரணில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.

நாடு நல்லா வருகுதோ இல்லையோ உள்ள கட்சிகளை உடைத்துவிடுவார்.

சஜித்தும்… நெடுக, சகுனம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
கிடைக்கும்  பதவியில் இருக்காவிடில்… தனது கட்சிக்காரரே,
கை விட்டு விடுவார்கள் என்பதை, கணிக்கத் தவறி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சஜித்தும்… நெடுக, சகுனம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
கிடைக்கும்  பதவியில் இருக்காவிடில்… தனது கட்சிக்காரரே,
கை விட்டு விடுவார்கள் என்பதை, கணிக்கத் தவறி விட்டார்.

உண்மை தான்.

முதலில் சயித்தைத் தான் ஜனாதிபதியாக்க கோட்டா கேட்டார்.

அமெரிக்காவும் இந்தியாவும் இவரைத் தான் விரும்பியதாக சொல்கிறார்கள்.

ஆனாலும் தாழும் கப்பலில் ஏற பயத்தில் பின்வாங்கிவிட்டார்.

ரணில் இழப்பதற்கு எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சியும் நானே, எதிர்கட்சியும் நானே🤣.

அறகளைக்கு முன்பு எதிர்கட்சியாவது ராஜாக்களின் கட்டுபாட்டை விட்டு விலகி இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஆளும் கட்சியும் நானே, எதிர்கட்சியும் நானே🤣.

அறகளைக்கு முன்பு எதிர்கட்சியாவது ராஜாக்களின் கட்டுபாட்டை விட்டு விலகி இருந்தது.

 

May be an illustration of one or more people

 

May be a cartoon

 

நீங்கள் கூறியதைத்தான் இந்தக் கருத்துப் படங்களும்,
பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன்.
சிங்களத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

 

May be an illustration of one or more people

 

May be a cartoon

 

நீங்கள் கூறியதைத்தான் இந்தக் கருத்துப் படங்களும்,
பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன்.
சிங்களத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா.

எனக்கு அடிதட்டு பேச்சு சிங்களம் ஓரளவு சரளமாக வரும் ஆனால் திணிப்பவை எதையும் ஏற்பதில்லை என்ற திமிரில் எழுத, வாசிக்க படிக்கவில்லை.

மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எனக்கு அடிதட்டு பேச்சு சிங்களம் ஓரளவு சரளமாக வரும் ஆனால் திணிப்பவை எதையும் ஏற்பதில்லை என்ற திமிரில் எழுத, வாசிக்க படிக்கவில்லை.

மன்னிக்கவும்.

@Nathamuni யருக்கு தெரிந்து இருக்கலாம். அவரை… கண்டா, வரச் சொல்லுங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

@Nathamuni யருக்கு தெரிந்து இருக்கலாம். அவரை… கண்டா, வரச் சொல்லுங்க. 🤣

🤣 இதுக்கு வர்ணத்தார் தான் சரியான ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வந்து ஐ. தே. கட்சியை உடைத்தார், இப்போ நரி தன் பங்குக்கு கூறு போடுது. இப்படியே பதவி விலகுவதும் தாவுவதும், சட்டங்களை மாற்றுவதும் இயற்றுவதும் நடக்கிறதேயொழிய மக்களின் நலன், பொருளாதாரம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. இனிமேல் தேர்தலில் மக்கள் வாக்களிக்க தேவையில்லை என்று சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.   நாட்டின் இந்த இழிநிலையிலும் பதவிக்கு அலைகிறார்கள், நாடு உருப்படுமா? அவ்வளவும் கொள்ளைகூட்டம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.