Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் திறப்பு : மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்த திறந்த பல்கலைக்கழகங்களில் ( சொந்த காசில் படிக்கும் மாணவர்கள்) படிப்பவர்களது கல்விக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

பலகலைகழக மாணவர் ஒன்றியம் இதனால்தான் திறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

யாரையும் புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை, எனது சகோதரர்களும் கூட அவ்வாறானவர்களே எனபதை ஒத்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

ஓம் ஏற்று கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, vasee said:

பொதுவாக இந்த திறந்த பல்கலைக்கழகங்களில் ( சொந்த காசில் படிக்கும் மாணவர்கள்) படிப்பவர்களது கல்விக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

பலகலைகழக மாணவர் ஒன்றியம் இதனால்தான் திறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

 

சில அவதானிப்புகள்:

1. இலங்கையில் திறந்த பல்கலைகழகம் என்பதும் பல்கலை கழக மானிய ஆணைகுழுவின் கீழ் வரும் அரை-சுயாதீன (semiautonomous) அமைப்பென்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வருவது தனியார் பல்கலை கழகங்களையா?

2.  இந்த பிரச்சனை அரச, தனியார் பல்கலைகழக பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். ஏனென்றால் கிளிநொச்சி வளாகம் யாழ் பல்கலைக்குரியது, இங்கே தனியார் பல்கலைகழக கட்டிடம் அமைய வாய்ப்பில்லை. 

48 minutes ago, vasee said:

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

சில வருடங்கள் முன் யூகேயில் மெடிசின் படித்து விட்டு உடனேயே வெளிநாட்டில் வேலை தேடிபோவதை தடை செய்ய அல்லது அபராதம் விதிக்க வேண்டும்/கூடாது என்று யாழில் ஒரு திரி வெகுவாக பற்றி ஏரிந்தது.

உங்கள் நிலைப்பாடுதான் எனதும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சில அவதானிப்புகள்:

1. இலங்கையில் திறந்த பல்கலைகழகம் என்பதும் பல்கலை கழக மானிய ஆணைகுழுவின் கீழ் வரும் அரை-சுயாதீன (semiautonomous) அமைப்பென்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வருவது தனியார் பல்கலை கழகங்களையா?

2.  இந்த பிரச்சனை அரச, தனியார் பல்கலைகழக பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். ஏனென்றால் கிளிநொச்சி வளாகம் யாழ் பல்கலைக்குரியது, இங்கே தனியார் பல்கலைகழக கட்டிடம் அமைய வாய்ப்பில்லை. 

 

நன்றி தவறினை சுட்டிக்காட்டினமைக்கு, இரும்படிக்கிற இடத்தில் இலையானுக்கு என்ன வேலை எனும் பழமொழி, கல்வி விடயத்தில் எனக்கு பொருந்தும் 😄.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

நன்றி தவறினை சுட்டிக்காட்டினமைக்கு, இரும்படிக்கிற இடத்தில் இலையானுக்கு என்ன வேலை எனும் பழமொழி, கல்வி விடயத்தில் எனக்கு பொருந்தும் 😄.

இலையானும் இல்லை, இரும்பும் இல்லை வசி. எல்லாம் குறித்த ஒரு காலப்பகுதியில் எம்   வாழ்க்கையில் சந்தர்ப சூழ்நிலைகள் எப்படி வாய்கிறன என்பது தீர்மானிப்பதே.

நானும் இலங்கையில் பல்கலைகழகம் போனவனில்லை. தேவையில்லாத விடயங்களை எல்லாம் பொறுக்கி வைத்திருக்கும் பழக்கத்தால் இதை ஏனையோரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

தேசியகீதம் சிங்களத்தில் தான். 

அடுத்த தேசிய தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடுவார்கள். இதுதான் தமிழர் பிரச்சனை என நினைக்கிறன், அது தேசிய தினத்தில் அனுஷ்ட்டிக்கப்படும், மற்றபடி தமிழர் பிரதேசங்களில், எந்த நிகழ்வாயிருந்தாலும்  தேசிய கீதம் சிங்களத்தில் தான். இந்த லட்ஷணத்தில நாடு முன்னேற தமிழர் கைகொடுக்க வேண்டுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.