Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

நாடு இல்லாத தமிழ் இனம்

தமிழ் மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு! | Sri Lanka Political Crisis Shanakiyan Rasamanickam

 

இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று சொன்னால் அது எங்களுடைய தமிழ் இனம்தான். அது எங்களுடைய ஒரு துரதிஷ்டவசம். உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் நாங்கள் வாழுகின்றோம். அனைத்து நாடுகளிலும் எங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருகின்றது.

மேலும், அனைத்து மாகாணங்கள், மாநிலங்களிலும் எங்களுடைய பிரதிநிதிகள் இருகின்றனர். ஆனால் இன்று வரை எங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் நாங்கள் இருகின்றோம்.

உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் யுத்தத்தினால் விரட்டியடிக்கப்பட்ட எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் இருந்து அகதிகளாக அனுப்பப்பட்ட மக்கள் இன்று உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் சிறந்த இடத்தில் இருக்கின்றனர்.

எல்லாம் விதி...

தமிழ் மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு! | Sri Lanka Political Crisis Shanakiyan Rasamanickam

இன்று இலங்கை அரசு தமிழர்களின் முதலீடுகளையே நம்பியிருக்கின்றது என சொன்னால் அது எங்கள் அனைவருக்கும் பெருமையான ஒரு விடயம்.

இலங்கையை பொறுத்தவரையில் நான் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம். எல்லாம் விதி. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பது விதி. இன்று நான் கனடாவிலிருந்து பேசுகின்றது விதி. அதைப்போல இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக கிடைக்கும். அது கிடைக்கும் வரை நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.

நான் விதியில் நம்பிக்கை இருக்கு என்று சொல்வது, எங்களுடைய நாட்டை விட்டு, எங்களுடைய பிரதேசங்களை விட்டு எங்களை விரட்டியடித்த கோட்டாபய ராஜபக்ச, அதே நாட்டினை விட்டு அகதியாக இன்னுமொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இன்று கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்த அதே மக்கள் நாட்டை விட்டு அவரை விரட்டியடித்திருக்கின்றார்கள். அதுதான் விதி.

நிரந்தரமான அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு! | Sri Lanka Political Crisis Shanakiyan Rasamanickam

 

நாங்கள் எங்களுடைய நாட்டிலே ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த கௌரவமான அரசியல் தீர்வின் ஊடாக எங்களுடைய நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்களுக்கான நிரந்தரமான, சமாதானமான, ஒரு அமைதியான ஒரு சிறந்த எதிர்காலத்தினை அமைக்கும் வரை எங்களுடைய அரசியல் பயணம் தொடரும் என்பதனை இந்த இடத்திலே பகிரங்கமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இலங்கையில் எங்களுடைய அரசியல் தீர்வினை பெறுவதற்கு கடந்த காலங்களில் எவ்வாறு ஒன்றாக செயற்பட்டு சாதித்தோமோ அதேபோன்று மீண்டும் ஒன்றுபட்டு சாதிக்க வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பியிருக்கின்றார்கள். உங்களுடைய ஆதரவினைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். உங்களுடைய ஆதரவின் ஊடாகத்தான் நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும். அதுவரைக்கும் நாங்கள் அனைவரும் ஒன்றாக போராடுவோம்.”என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-political-crisis-shanakiyan-rasamanickam-1661694700?itm_source=parsely-detail

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் புலம்பெயர் தமிழருக்கு வகுப்பு எடுக்க வந்து விட்டார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் புலம்பெயர் தமிழருக்கு வகுப்பு எடுக்க வந்து விட்டார் .

ஏவல்களுக்கு வேலை செய்பவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் புலம்பெயர் தமிழருக்கு வகுப்பு எடுக்க வந்து விட்டார் .

 

13 hours ago, குமாரசாமி said:

ஏவல்களுக்கு வேலை செய்பவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும்?

இவர்கள் ஏன் முதலில் உள்ளூரில் நடைபெறும் தமிழரது போராட்டங்களை முதலில் மக்கள் மயப்டுத்த முயற்சிக்காது புலத்தை நோக்கி நிற்பதன் நோக்கம் என்ன?  தாயகத்தில் ஒரு உறுதியான தாக்கத்தைத் தரவல்லதொரு மக்கள் போராட்டத்தைக் கட்டமைத்து அதனை முன்னகர்த்தும்போது, புலத்திலும் அது சரியாக முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே ஒரு சில அடைவுகள் சாத்தியமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

 

இவர்கள் ஏன் முதலில் உள்ளூரில் நடைபெறும் தமிழரது போராட்டங்களை முதலில் மக்கள் மயப்டுத்த முயற்சிக்காது புலத்தை நோக்கி நிற்பதன் நோக்கம் என்ன?  தாயகத்தில் ஒரு உறுதியான தாக்கத்தைத் தரவல்லதொரு மக்கள் போராட்டத்தைக் கட்டமைத்து அதனை முன்னகர்த்தும்போது, புலத்திலும் அது சரியாக முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே ஒரு சில அடைவுகள் சாத்தியமாகும். 

மிகவும் சரியான கருத்து.
காணாமல் போனவர்களின் போராட்டத்தை கூட, கூட்டமைப்பு கவனிப்பதிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

 

இவர்கள் ஏன் முதலில் உள்ளூரில் நடைபெறும் தமிழரது போராட்டங்களை முதலில் மக்கள் மயப்டுத்த முயற்சிக்காது புலத்தை நோக்கி நிற்பதன் நோக்கம் என்ன?  தாயகத்தில் ஒரு உறுதியான தாக்கத்தைத் தரவல்லதொரு மக்கள் போராட்டத்தைக் கட்டமைத்து அதனை முன்னகர்த்தும்போது, புலத்திலும் அது சரியாக முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே ஒரு சில அடைவுகள் சாத்தியமாகும். 

வந்த சனத்தையும் மேடையையும் மைக்கையும் கண்டவுடன் தமிழீழம் என்பது வந்து விட்டது

இவர்கள் இங்கும் உண்மையை தரிசிக்கவில்லை. ஏதோ இங்கிருப்பவரெல்லாம் கோடீஸ்வரர்கள் போலவும் அனைவரும் கேட்டவுடன் கூரைகளில் காயவிடப்பட்டிருக்கும் பணத்தை கொண்டு வந்து கொட்டி விட்டு தான் மற்ற வேலை பார்ப்பார்கள் என்பது போலவும். 

நாலு கதவை தட்டி காசு பற்றி கதைத்துபார்த்தால் இந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வந்த சனத்தையும் மேடையையும் மைக்கையும் கண்டவுடன் தமிழீழம் என்பது வந்து விட்டது

இவர்கள் இங்கும் உண்மையை தரிசிக்கவில்லை. ஏதோ இங்கிருப்பவரெல்லாம் கோடீஸ்வரர்கள் போலவும் அனைவரும் கேட்டவுடன் கூரைகளில் காயவிடப்பட்டிருக்கும் பணத்தை கொண்டு வந்து கொட்டி விட்டு தான் மற்ற வேலை பார்ப்பார்கள் என்பது போலவும். 

நாலு கதவை தட்டி காசு பற்றி கதைத்துபார்த்தால் இந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள் 

 


உண்மை. இவர்களை அழைத்து ஆலவட்டம் பிடிப்பவர்கள் ஒருமுறை தமது நகரத்துக்குள்ளேயே ஒருமுறை தமிழ்கதவுகளைத் தட்டிக்காட்டினால் அடுத்தமுறை வருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  தாயக மக்கள்  தங்கள் சொந்த நிலங்களில் குடியிருக்க வழிஏற்படுத்துங்கள், பரம்பரை வழிபாட்டிடங்களில் எழும் விகாரைகளை தடுத்து நிறுத்துங்கள், சும்மா எமது நிலங்களை  அடைத்துக்கொண்டிருக்கும்  இராணுவத்தை வெளியேற்றுங்கள், கொலைகாரரெல்லாம் விடுதலை அடைகிறார்கள், நமது அரசியல் கைதிகளை வெளியே கொண்டுவாருங்கள், வீதியில் போராடும் உறவுகளுக்கு உரிய பதிலை பெற்றுக்கொடுங்கள்.  நமது மக்களுக்கு அத்தியாவசியமானது அதுவே. அது நிகழாதவிடத்து புலம்பெயர் ஆதரவினால் ஒன்றும் ஆகாது. ரணிலுக்கு பொருளாதாரத்தில் கைகொடுத்து உயர்த்த  கொக்கரிக்கிறார். இதுவரை தமிழருக்கு நடந்த கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவிக்காதவர் ஆதரவுக்கரம் நீட்டாதவர் ரணில்  இவையள் தொங்கிக்கொண்டு திரியினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.