Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்கியமை வேடிக்கைக்குரியது- வரதராஜன் பார்த்தீபன்

யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன்.

வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்குமாறு கோரியுள்ளமை தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தின்ம கழிவகற்ற ஜப்பான் நாட்டில் பாவிக்கப்பட்ட நவீன ரக கழிவகற்றல் வாகனத்தை வழங்க கடந்த 2019.03.19 ஆம் திகதி அப்போதைய யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுடன் ஒப்பந்தம் கைச்சாட்டு இடப்பட்டது.

அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2019.06.12 ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.

அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை. மீண்டும் 18 ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.

நீண்ட இழுபறியில் பின்னர் 2019.11.14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால், இறக்குமதி சான்றிதழ் 2020.02.17ஆம் திகதியுடன் காலாவதியானது.

அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது.
பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம். ஆனால் பயன் கிடைக்கவில்லை.

இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.

இந்நிலையிலையே, ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது.

மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம்.

நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம்.

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ குற்றம் சாட்டவோ முடியாது முடியாது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது.

தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.

ஏனெனில் ஜப்பான் நாட்டினால் வழங்கப்பட்ட உதவிகள் தமிழர் தேசத்திற்கு கிடைக்க கூடாது என சிந்திப்பவர்கள் எவ்வாறு புலம் பெயர் தேசத்தவர்கள் தமிழர் தேசத்தில் முதலீடு செய்ய அனுமதிப்பார்கள்?

யாழ்.மாநகர முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பல்வேறு தரப்புக்களை சந்தித்த போது பலரும் தமிழர் தேசத்திற்கு உதவ, தேசத்தில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் அரசாங்கம் தமிழர் தேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வோ, உதவிகளை செய்யவோ குறுகிய அரசியல் சிந்தனையுடன் தடைகளை ஏற்படுத்துவார்களாக இருந்தால் , நாம் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் – என்றார்.

https://athavannews.com/2022/1296812

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரி தடிபோட்டுக் கொண்டு மத்தி நல்ல பிள்ளைக்கு நடிக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குப்பை லொறியைக்கூடி கொண்டுவர முடியாத நிலையில்தான் வடக்கு கிழக்கின் நிலை இருக்கிறது. 

அதற்குள் புலம்பெயர் தமிழரே இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்கின்ற பரப்புரை வேற... 😏

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் விக்கி ஐயா இருக்கும்போதும் செய்தார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் விக்கி ஐயா இருக்கும்போதும் செய்தார்கள்!!

காலம் காலமாகவே இதுதான் எங்கள் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

என்ன மாதிரி தடிபோட்டுக் கொண்டு மத்தி நல்ல பிள்ளைக்கு நடிக்குது!

ஆனால் சில அரசியல்வாதிகள் நோகாத மாதிரியே நடிக்கிறாங்களேயப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

மாநகரசபை பணத்தை திறைசேரியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. மாநகரசபையின் செயல்பாடுகளுக்கு  அரசாங்கம் தடை போடுகிறது எனவே ஜப்பான் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி  செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை விளக்கி அவர்களின் பணத்தை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையளித்திருக்கலாம். இறுதியில் பணத்தை  திறைசேரியில் சேர்த்தமைக்கு எவரிடமும் உரிய அத்தாட்சி இல்லையென்றால் மாநகரசபையில் அங்கத்தவர்களுக்கிடையில் புடுங்குபாடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vanangaamudi said:

மாநகரசபை பணத்தை திறைசேரியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. மாநகரசபையின் செயல்பாடுகளுக்கு  அரசாங்கம் தடை போடுகிறது எனவே ஜப்பான் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி  செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை விளக்கி அவர்களின் பணத்தை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையளித்திருக்கலாம். இறுதியில் பணத்தை  திறைசேரியில் சேர்த்தமைக்கு எவரிடமும் உரிய அத்தாட்சி இல்லையென்றால் மாநகரசபையில் அங்கத்தவர்களுக்கிடையில் புடுங்குபாடுதான்.

திறைசேரியிடம் பணம் வழங்கவில்லை என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.