Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் 4 பேர் கொண்ட குடும்பத்தின் நாளொன்றுக்கு உணவு தேவைக்கு 2,500 ரூபா !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 4 பேர் கொண்ட குடும்பத்தின் நாளொன்றுக்கு உணவு தேவைக்கு 2,500 ரூபா !

 

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, குறைந்து 2,500 ரூபா செலவாவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, உணவு தேவைக்காக நாளாந்தம் 4,000 ரூபா செலவாவதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 27,000 பேர் கடும் போசாக்கு குறைப்பாட்டுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 27,000 சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் 5 வயதுக்கும் குறைந்த சிறார்கள் உணவு பாதுகாப்பு வீழ்ச்சி காரணமாக போசாக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

பலர் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கூட்டுப் பிரார்த்தனைகளின் போது மயங்கி விழும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/208556

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பார்க்கப் போனால் வடபகுதி மக்களைப்பாதிக்க வில்லைப் போல் தெரிகிறது ...கோவில் திருவிழாக்களும் ...அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் ...ஆடம்பர திருமண, சாமத்திய சடங்குகழும்,ஒன்று கூடல்கள், விளையாட்டு நிகழ்வுகள் ...எதிலும்  இந்த தாக்கம் பிரதிபலிக்கவில்லை.. பத்தாயிரம் போனால்கூட யாழ்ப்பாணத்தன் அசையமாட்டான் போல..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

உண்மையில் பார்க்கப் போனால் வடபகுதி மக்களைப்பாதிக்க வில்லைப் போல் தெரிகிறது ...கோவில் திருவிழாக்களும் ...அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் ...ஆடம்பர திருமண, சாமத்திய சடங்குகழும்,ஒன்று கூடல்கள், விளையாட்டு நிகழ்வுகள் ...எதிலும்  இந்த தாக்கம் பிரதிபலிக்கவில்லை.. பத்தாயிரம் போனால்கூட யாழ்ப்பாணத்தன் அசையமாட்டான் போல..

நம்ம புலம்பெயர் கூட்டம் சம்மர் லீவுக்கு போய் வந்த பின் உள்ள நிலை பணபுழக்கம் வடகிழக்கில் அதிகம் அதனால் அதோடு இதுபோல் பல நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் அவர்கள் சமாளித்து கொள்வார்கள் என்று நினைக்கிறன் .

மறுபக்கம் சிங்களவர்களுக்கு ஆகா டொலர் வருகிறது அமெரிக்கா உதவி  அப்படி இப்படி வாழைபழம் வித்து என்று மஜா ஜாலம் உடகங்கள் மூலம்காட்டபடுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 3 வேளை உணவிற்காக 4 ஆயிரம் ரூபா தேவை - சமல் சஞ்ஜீவ

By T. SARANYA

16 SEP, 2022 | 09:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச தலைவரின் தூரநோக்கமற்ற, முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவை நடுத்தர மக்கள் எதிர்கொள்கிறார்கள். 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பம் மூன்று வேளை உணவிற்காக குறைந்தப்பட்சம் 4,000 ஆயிரம் ரூபா செலவு செய்யும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என வைத்திய,சிவில் உரிமைகள் தொடர்பான தொழிற்துறையின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடு இன்று உணவிற்காக பிற நாடுகளிடம் கையேந்தியுள்ளமை உண்மையில் கவலைக்குரியதாகும். யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு அவல நிலையை நாட்டு மக்கள் எதிர்கொள்ளவில்லை. தமது பிள்ளைகள் விரும்பும் உணவு பொருட்களை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இயற்கை காரணிகளினால் நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்பட்வில்லை.முன்னாள் அரச தலைவரின் தூரநோக்கமற்ற,முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயத்துறையின் வீழ்ச்சி நாட்டின் முழு பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. மொத்த சனதொகையில் 86 சதவீதமானோர் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வறுமை காரணமாக புறக்கணிக்கிறார்கள். 5 உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளுக்கான உணவிற்காக 4,000 ஆயிரம் ரூபாவை செலவிடும் நிலை காணப்படுகிறது.

யுனிசெப் அறிக்கைக்கமைய ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் 27000ஆயிரம் பேர் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் மந்த போசணையால் பாதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை 5 இலட்சமாக அதிகரிக்க கூடும்.

மந்தபோசணை பாதிப்பினால் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை என அரசியல் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். மந்த போசணையின் பெறுபேற்றை இன்னும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்தில் பெரும்பாலான பின்தங்கிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத பிள்ளைகள் நாடு தழுவிய ரீதியில் இருக்க கூடும்.

http://fe.virakesari.lk/article/135793

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே புரியல்ல இலங்கைல 🥲🤔

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு அவல நிலையை நாட்டு மக்கள் எதிர்கொள்ளவில்லை.

யுத்தம் தென்பகுதியிலா நடந்தது? யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தென்னிலங்கையா? கதை அப்படித்தான் போகப்போகிறது போல் தெரிகிறது.  என்ன கதைக்கிறோம் என்று தெரியாமலேயே கதை விடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

உண்மையில் பார்க்கப் போனால் வடபகுதி மக்களைப்பாதிக்க வில்லைப் போல் தெரிகிறது ...கோவில் திருவிழாக்களும் ...அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் ...ஆடம்பர திருமண, சாமத்திய சடங்குகழும்,ஒன்று கூடல்கள், விளையாட்டு நிகழ்வுகள் ...எதிலும்  இந்த தாக்கம் பிரதிபலிக்கவில்லை.. பத்தாயிரம் போனால்கூட யாழ்ப்பாணத்தன் அசையமாட்டான் போல..

அதுதான் சரத் வீரசேகர வயத்தெரிச்சலிலை இன்னொரு கலவரத்தை தமிழ் மக்கள்மேல் திணித்து ஏதிலிகளாக்கிப் பாக்க கூவுகிறார். முட்டாளுக்கு தெரியேலை, இனி இனக்கலவரத்தை தமிழர்மேல் திணித்தால் அது தமிழருக்கு சாதகமாகவே முடியும் என்பது தெரியாமலே பிதற்றுது. நரியாருக்கு ஆப்பு இறுக்க நாமல், இந்த லூசு இப்பிடி கொஞ்சபேர் நரியாரை புகழ்ந்தும், வலிந்தும் முயற்சி நடக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.