Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை

By VISHNU

22 SEP, 2022 | 09:10 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

 இந்தியாவுடன் கலந்துரையாடி பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் 

பலாலி விமான நிலையத்திற்கு  பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம். 

விரைவில் அதனை  திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை.விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம்.  என்றார்.

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள்.

பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள். முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/136223

  • கருத்துக்கள உறவுகள்

நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் பதவியை சிறிதரனிடம்  கொடுத்து விடலாமே?&
சிறுபான்மை கட்சி பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து விமானத்தை கொண்டு வா என உலகத்தில் யாரும் கேட்டதுண்டா?’
இப்படியான வித்துவானை தான் சிங்களம்  ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு அனுப்பி இருந்தது நினவிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பரமஇரகசியம்...அய்யாமாரே...இந்த சில்வா ..சொன்னதில் மறைக்கப்  ப்ட்டது இதுதான்.....பெற்றோல் கடன் ..காஸ் கடன்...உரம் கடன் ..அரிசிக் கடன்...சாப்பாடுகடன்...இத்தியாதி...எல்லாம் கடன்பட்ட பிறகு...பிளேனையும் கடனில் ஓடச்  சொன்னால்  எம்மை மதிப்பார்களா... அதுதான் சொல்கிறேன்..சம்பந்தர் அய்யாவின் செல்வாக்கைப் பாவித்து பிளேனை ஓடச் செய்யுங்கோ...மிச்ச வேலைகள் .. கழுவித் துடைத்து..சாமான் இறக்கிற வேலையை நாங்கள் பார்க்கிறம் என்கிறார்...🙃

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

கெஞ்சி கூத்தாடிப் பாத்து எதுவும் நடக்கவில்லை இனி சவால் விட்டு சாதிக்கப்பாக்கிறார்கள். இன்றொரு அறிவிப்பு, நாளை வேறோர் அறிவிப்பு எந்த மடையன் இவர்களை நம்பி காரியத்தில் இறங்குவார்கள்? இந்தியாவிடம் வகை தொகையின்றி கடன் வாங்க இவர்களால் முடியுமென்றால், இது ஏன் முடியாது? நம் புலம்பெயர்ந்தவர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு, அபிவிருத்திகளுக்கு தடை போடும் இவர்கள், இதை செய்யும்படி எப்படி கேட்க முடியும்? இது வெளிநாட்டமைச்சர் வேலையல்லவா? எங்கள் உரிமையை, அதிகாரத்தை எங்களிடம் தாருங்கள், எங்களுக்கு வேண்டியதை நாங்கள் பாத்துக்கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை

மத்தியின் அனுமதியில்லாமல் ஒரு குண்டூசி கூட வடகிழக்கிற்கு கொண்டு போக முடியாமல் இருக்கும் போது எப்படி விமானத்தைக் கொண்டுவருவது?

  • கருத்துக்கள உறவுகள்

கறையானை புத்தெடுக்க தூண்டுவது, கருநாகங்கள் குடிகொள்வதற்கே. பாவம் கறையான்கள்! தங்கள் சிறிய வாயால் மண்ணைசேகரித்து, சிறுதுளி உமிழ்நீரால் குழைத்து, பலகாலமாக இரவு பகலாக உழைத்து, உருவாக்கிய புற்றில் நோகாமல் வந்து குடியிருந்துகொண்டு, கஸ்ரப்பட்டு கட்டிய கறையானை விரட்டிய கதையை நல்லாய் அறிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை அனுபவம். சிங்களவன் துரத்திப்போட்டான் என்று சும்மா இருப்பதில்லை, ஏதாவது எறும்புபோல உழைச்சு, சேகரிச்சு கொண்டே இருப்போம், அதை சுரண்ட அவனும் திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பான். இது இந்த நாட்டின் நியதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.