Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி- ஹிருணிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி- ஹிருணிகா

By RAJEEBAN

30 SEP, 2022 | 04:48 PM
image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி  அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை தெரிவிப்பதற்காக என்னை சிஐடியினர் விசாரணைக்கு அழைக்கலாம் ஆனால் ஒக்டோபர் மாத இறுதியில்  நிச்சயம் இந்த  புரட்சி நிச்சயமாக வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சுனாமி தாக்கும்போது முன்னைய ஜனாதிபதியின் நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ள ஹிருணிகா எந்த புரட்சியும் முன் அறிவிப்புடன் நிகழ்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரகலயவில் பெண்களே முக்கிய பங்களிப்பை செய்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தடவையும் நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே கடந்த தடவை வீதியில் இறங்கினார்கள் ஆனால் இம்முறை வறிய மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/136756

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்- ராஜபக்ஷ உடலில் ஒரே வகையான இரத்தம் - ஹிருணிக்கா பிரேமசந்திர

By T. SARANYA

01 OCT, 2022 | 10:44 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

அரசாங்கத்தின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மற்றொரு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். மேலும் ரணில் - ராஜபக்ஷ இருவரின் உடலிலும் ஒரே வகையான இரத்தமே காணப்படுகிறது என்றும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே பொருத்தமானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் இதற்கு முன்னர் பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகின. இருப்பினும் இன்று உணவுப் பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களை திருடுவதற்கு தூண்டிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதை விடுத்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள், தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்த முயற்சி செய்து மேலும் அவர்களுக்கு புனர்வாழ்வு மையங்கள் அமைத்து அவர்களை அங்கு கொண்டு  செல்வதற்கு  முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணிலின்  வில்லத்தனம் மற்றும் சர்வாதிகார போக்கினை இன்று முழு நாடும் புரிந்துள்ளது. கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது அதனை இன்று ரணில் முற்றாக மாற்றியிருக்கிறார்.

மொட்டு கட்சியில் இருந்த பிரதான  செயற்பாட்டாளர்களுக்கு தலை காட்ட முடியாமல் இருந்தது. அவர்கள் தொடர்பில் மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால்  அவர்கள் பயணிப்பதற்கு பாதை அமைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜனாதிபதி   இன்று மொட்டு கட்சியினருடன் அரசியல் நாடகம் ஒன்றினை அரங்கேற்றுகிறார். ஆனால் தற்போது  அரசியலில் பொருத்தமான இடத்திற்கே அவர்  வருகை தந்து இருக்கிறார் இதற்கு முன்னர் தவறான கட்சி ஒன்றில் தலைவராக செயல்பட்டு கொண்டு இருந்தார். இருப்பினும் இன்று இந்த மொட்டுக் கட்சியின் தலைமைத்துவம் ரணிலுக்கே பொருத்தமானதாக காணப்படுகிறது.

இனிவரும் காலங்களில் மொட்டு கட்சியின் பிரதான அரசியல்வாதிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ராஜபக்ச மற்றும் ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்பது ஒன்று தான்.  மேலும் அவர்கள் இருவருக்கும் ஒரே வகையான இரத்தமே உடலில் காணப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி  தனது இறுதி அரசியல் வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கிறார்  எதிர்வரும் மார்ச் மாதமளவில் ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது உறுதி.

நாட்டில் நிச்சயம் அரசியல் மாற்றம் நிகழும் அப்போது  மொட்டுக் கட்சி வங்குரோத்து நிலையை அடைந்து பாதாளத்திற்குள் தள்ளப்படும்.

எதிர்வரும் நாட்களில் சுனாமி போன்ற மக்கள் எழுச்சி போராட்டம் உருவாகும். அதில் அரசாங்கத்தினர் அள்ளுண்டு செல்வார்கள் என்பது உறுதி என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Hirunika & several others arrested for protesting outside President's House

  Hirunika and 8 others arrested during protest  I am proud of my breasts says Hirunika | Colombo Gazette

 

Hirunika launches protest near President's house - Ceylon Today

 

Hirunika Premachandra arrested - Lankan.org

Protest near PM's residence…

@Maruthankerny
ஹிருணிகாவிற்கு நல்ல கைராசி.
இவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எல்லாம்,  
வெற்றியையே பெற்று கொடுத்திருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகை உள்நுழைவு போராட்டம், ரணில் வீடு கூட...  முதல்நாள் இவர்தான், 
மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு 
உள்ளே பிரதான வாசல் வரை  சென்று, ஒத்திகை பார்த்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு 
உள்ளே பிரதான வாசல் வரை  சென்று, ஒத்திகை பார்த்தவர்.

அது தான் சுனாமி என்று சொல்லிவிட்டாவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.