Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி!

மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.

மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்

-தற்ஸ் தமிழ்

அடபாவிகளா அம்மை வந்தால் பிள்ளையை எரிப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா அம்மை வந்தால் பிள்ளையை எரிப்பார்களா??

அதுதானே ?

அநியாயம் நடக்குது .

அதுவும் பெண்பிள்ளையாக இருக்குமோ

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே ?

அநியாயம் நடக்குது .

அதுவும் பெண்பிள்ளையாக இருக்குமோ

அதாலதான் எரிச்சதே...! அம்மை சாட்டு.

இந்தியா ஒன்றை முறையாகச் செய்ய வேண்டும். அதுதான் எழுத்தில் உள்ள சட்டங்களை உள்ளபடிக்கு கடுமையா அமுலாக்குதல். இல்ல அந்த நாட்டை திருத்தவே முடியாது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்
.

திருச்சியில் எரித்த குழந்தை மதுரையில் நள்ளிரவில் வீட்டுக்கதவு தட்டி சோறு கேட்கின்றதா?

இது எப்படிங்க சாத்தியப்படும்?

அப்போ அம்மக்கள் அக்குழந்தையை அம்மன் என நினைச்சு பயப்படுகிறார்களா? இல்லை பேய் என நினைச்சு பயப்படுறார்களா? அக்குழந்தை நள்ளிரவில் மட்டும் தான் வருமா? பகலில் எங்கு போகின்றது? இவற்றை ஆராயலாமே. அதை விடுட் இரவிரவாக மின்குமிழ் பற்ற வைச்சு துயட்டர் போகாமல் .......................மூட நம்பிக்கையுள்ள மக்கள் போல

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது.

இருட்டில் நாம்மால் பார்க்கக் கூடிய ஒன்று பேய் மட்டுமே. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனைக்குரிய செய்தி! 'அம்மை"க்கு இப்படியும் ஓர் வைத்தியமா?!

பாரத மாதா!. !! என்ன கொடுமை இது?! 'திருச்சியில் எரித்த குழந்தை மதுரையில் அதுவும் நள்ளிரவில் வந்து கதவு தட்டுவது" கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்!.

இந்தியா என்னவோ புண்ணிய பூமிதான் ஆனால் பாவம் செய்யும் மக்கள் மலிந்து போய் இருக்கும் நாடு!

அம்மை நோய்க்கு இப்படி ஒரு வைத்தியம்?? மிகவும் வேதனையான செய்தி.

மதுரையில் குழந்தையின் உறவினர்கள் இருந்திருக்கலாம். செய்தி சில உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.

---------------------------------------------------------------

1984 ல் ஒரு சம்பவம் எனக்கு நினைவில் நிற்கின்றது. எமது உறவு ஒருவர் இலங்கை இராணுவம் பிடிக்க வரும் போது ஓடினார். கிட்டத்தட்ட ஊர்மனையில் இருந்து இரண்டு மைல் தூரம் வயல்வெளிக்கு ஓடினார். இராணுவம் சுட்ட போது காலில் காயம் பட்டு விட்டது. அதனுடன் ஓட முடியாமல் வயலில் நெற் சூடு ஓன்றினுள் ஒளிந்து விட்டார். தொடர்ந்து வந்த ராணுவம் இரத்தம் படிந்த தடத்தை தொடர்ந்து அவர் அதற்குள் ஒளிந்திருப்பதை கண்டு கொண்டனர். நெற்சூட்டை கொழுத்தி விட்டு சென்று விட்டனர். பின்நேரம் பாதி எரிந்த நிலையில் அவர் சடலம் எடுத்து சடங்குகள் செய்யப்பட்டது.

கொஞ்சக்காலம் அவரின் தாயார் சாமத்தில் மகன் தண்ணி கேட்பதாக கூறி தண்ணீரை எடுத்துக்கொண்டு தெருவுக்கு ஓடிவருவார். இப்படி பல நாட்கள் நடந்தது. அந்த நாட்களின் இரவுகள் மிக பீதியானவை. அதிலும் பார்க்க வேதனையானவை.

நெருப்பிலிருந்து தப்ப முயற்சித்த வேளையில் அவரால் ஒட முடியாத சூழ்நிலையில் அம்மா தண்ணி தண்ணி என்று கத்தியதை தூரத்தில் வேலை செய்த சனங்கள் கேட்டதாக அவரின் இறுதிச்சடங்கில் கதைத்திருக்கின்றனர். அவரின் தாய்அதை கேட்டிருக்கின்றார். அதை சொல்லி சொல்லி நிறைய பெண்கள் ஒப்பாரி வைத்தனார். அதன் நிமிர்த்தம் அந்த தாய் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படி இன்று நான் நினைத்தாலும் அன்று உண்மை என்றே நம்பினேன். அதன் பின் கொஞ்ச காலத்தில் தாய் தந்தை இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர்.

சுகன் சொல்வது போல நானும் சில சம்பவங்களை கேட்டறிந்திருக்கின்றேன். ஆனால் இது திருச்சியில் நடந்த சம்பவத்திற்கு மதுரை வீடுகளிள் கதவை தட்டி சோறு கேட்பது திடுக்கிட கூடியதாக இருக்கின்றதலல்வா? இறந்த அச்சிறுமி தன் வீட்டில் சோறு கேட்டிருப்பின் நமபலாம். ஆனால் இது ....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன்,

இப்படி எத்தனை எத்தனை அவலங்களோ? நெஞ்சைப்பிழிகின்றது !! நீங்கள் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கின்றீர்கள், இருக்கலாம் மதுரையில் உள்ள குழந்தையின் வயதை ஒத்த குழந்தைகள் மனதினால் பாதிப்படைந்திருக்கலாம்! என்ன சொல்லி என்ன!! வேதனையில் வெம்முகிறது நெஞ்சம்?!

இப்ப பேய் என்று சொல்ல வாறீங்களா எனக்கு பயமா இருக்கு இன்றைக்கு நித்தா கொண்ட மாதிரி தான் இப்பவே எனக்கு அழுகை வருது........... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.