Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்! (UPDATE)

உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்!

ரஷ்யா 83 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 43க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வான் பாதுகாப்பு மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார்.

இதில், காஸ்பியன் மற்றும் கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட கலிப்ர், இஸ்கந்தர் மற்றும் கேஹெச்-101 ஏவுகணைகளில் அடங்கும்.

எட்டு வெவ்வேறு உக்ரைனிய பிராந்தியங்களில் உள்ள பதினொரு முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தலைநகரான கீவ் இன்று காலை ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.

2019 இல் திறக்கப்பட்ட கிளிட்ச்கோ பாலம் என்று அழைக்கப்படும் கிய்வில் புதிதாக கட்டப்பட்ட பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாலத்தை ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியது.

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து ஜி7 அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாகவும், அதில் உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ஜி7 தலைவர் பதவியில் இருக்கும் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் தான் பேசியதாகவும், குழுவின் அவசரக் கூட்டத்தை நடத்த ஷோல்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த தாக்குதலில் இதுவரை 75 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஸலுஷ்னி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரின் சில பகுதிகளில் முக்கிய உட்கட்டமைப்பு வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக நகர மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார்.

கார்கிவில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் எரிசக்தி உட்கட்டமைப்பு தளத்தைத் தாக்கியுள்ளன. இதனால் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்ட்டுள்ளது என்று கார்கிவ் மேயர் இஹோர் தெரெகோவ் கூறினார்.

இதற்கிடையே தலைநகர் கீவ் மீது ஏவுகணைத் தாக்குதல்களால் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சரின் உதவியாளர் ரோஸ்டிஸ்லாவ் ஸ்மிர்னோவ் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு ஆறு கார்கள் தீப்பிடித்து எரிந்தன மற்றும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

மத்திய கிவ்வில் உள்ள ஹ்ருஷெவ்ஸ்கி நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள வோலோடிமிர்ஸ்கா வீதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்கள் உள்ளன மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரத்தையும் உள்ளடக்கியது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் ஒரே பாலம் குண்டுவெடிப்பில் சேதமடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு நகரத்தின் மீது வெளிப்படையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனிய உளவுத்துறையை பயங்கரவாத செயல் என்று குற்றம் சாட்டினார்.

குண்டுவெடிப்பு குறித்து விவாதிக்க அவர் இன்று தனது பாதுகாப்பு சபையில் கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார்.

https://athavannews.com/2022/1303825

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா Vs யுக்ரேன்: கிரைமியாவை இணைக்கும் பாலத்தை தகர்த்தது யார்?

  • பால் ஆடம்ஸ்
  • பிபிசி நியூஸ், கியவ் (யுக்ரேன்)
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வெடிப்புக்கு சற்று முன்பு பாலத்தின் படம்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

வெடிப்புக்கு சற்று முன்பு பாலத்தின் படம்

ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைக்கும் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அது எப்படி நடந்தது? பின்னணியில் இருந்தவர்கள் யார்?

இந்த குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வகையான குழப்பமான தகவல்கள் உலா வருகின்றன. அதில் பெரும்பாலானவை நம்பகத்தன்மையற்றவை.

லாரி ஒன்றின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்று சுட்டிக்காட்டுவதற்கு ரஷ்யாவுக்கு நீண்டநேரம் ஆகாது. ஆனால், யார் அதை நிகழ்த்தினர் என்பதை ரஷ்யா சொல்லவில்லை. பாலத்தை இலக்கு வைத்து தாக்கியது யுக்ரேன்தான் என குற்றம்சாட்டியுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அதை தீவிரவாத சம்பவம் என்று அழைத்துள்ளார்.

பாலம் வழியாக லாரி செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த லாரி, மேம்பாலத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கராஸ்நோடார் என்ற ரஷ்ய நகரத்தில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றது.

 

கராஸ்நோடார் நகரை சேர்ந்த 25 வயதான சமிர் யுஸ்பவ் என்பவர் இந்த லாரியின் உரிமையாளர் என ரஷ்ய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். லாரி உரிமையாளரின் உறவினரான மக்கிர் யுஸ்பவ் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

வீடியோ காட்சிகளை நீங்கள் இன்னும் உன்னிப்பாக பார்த்தால், வெடிப்புக்கும் லாரிக்கும் ஒரு தொடர்பு இல்லை என்பது போல தெரிகிறது.

எந்த அளவுக்கு உண்மை?

 

வெற்றியை கொண்டாடும் இரு பெண்கள்

பட மூலாதாரம்,EPA

வீடியோவில் உள்ள காட்சியின்படி, இந்த லாரி மேம்பாலத்தில் ஏறும்போது, அதன் பின்னால் ஒரு பகுதியில் பெரிய தீபந்து வடிவம் தோன்றுவது போல காணப்படுகிறது.

ரஷ்யர்கள் மத்தியில் மிக விரைவாகப் பரவிய லாரி குண்டு என்ற செய்தி முற்றிலும் சந்தேகத்துக்கு உரியது. இது யுக்ரேனின் துணிச்சலான தாக்குதல் என்று மக்கள் கருதுவதை விடவும், இதனை தீவிரவாத சம்பவம் என்று குறிப்பிடுவதே நல்லது என ரஷ்யா கருதியதாக நம்பப்படுகிறது.

"என்னுடைய அனுபவத்தில் வாகனங்களில் இருந்து வெடிக்க வைக்கப்படும் பல்வேறு ஐஇடி குண்டுவெடிப்புகளை பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு இது அதனைப்போன்ற ஒன்றல்ல," என்கிறார் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய வெடிகுண்டு நிபுணர் ஒருவர்.

இந்த குண்டு வெடிப்புக்கான சாத்தியமுள்ள இன்னொரு காரணத்தையும் அவர் முன் வைக்கிறார்.

மேம்பாலத்துக்கு கீழே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்க சாத்தியமிருக்கிறது. அதிநவீன தொலை உணர்வு ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு இந்த குண்டு வெடிக்க செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்.

இருபுறம் இருந்தும் அடிக்கும் காற்றின் அழுத்தம் மற்றும் சுமையை தாங்கும் வகையில்தான் பொதுவாக பாலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை இது போன்று வடிவமைக்கப்படவில்லை. அவை மேல் நோக்கிய அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை சாதகமாக கொண்டுதான் யுக்ரேன் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக நான் கருதுகின்றேன்," அந்த வெடிகுண்டு நிபுணர்.

குண்டுவெடிப்புக்கு முன்பாக கண்காணிப்பு கேமராக்களில் ஒரு நொடி மட்டும் பதிவான ஒரு வீடியோவில் மேம்பாலத்துக்கு அருகே தாங்கி நிற்கும் மேம்பாலத்துக்கு அருகே ஒரு படகு ஒன்றை சிலர் பார்த்திருக்கின்றனர்.

இது என்ன மாதிரியான படகாக இருக்கலாம்?

 

செயற்கைக்கோள் படம்

பட மூலாதாரம்,SATELLITE IMAGE ©2022 MAXAR TECHNOLOGIES

ரஷ்யாவின் கிரைமியா நகரின் செவஸ்டோபோல் கடற்படை தளத்தின் அருகே ஓட்டுநர் இல்லாத ஒரு மர்ம படகு காணப்பட்டதாக கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சில ரஷ்ய சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது.

கருப்பு பொருளால் ஆன, படகின் முன்பு தொலை உணர்வு கருவிகள், பெரிஸ்கோப் போன்ற கருவிகள் கொண்டதாக அந்த படகு காணப்பட்டது.

உள்ளூர் செய்திகளின்படி, எந்த பகுதியில் வெடித்ததோ அதை நோக்கி அந்த படகு சென்றதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செவஸ்டோபோல் ஆளுநர், "ஓட்டுநர் இல்லாத படகின் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுக்குப் பின்னர் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு குண்டு வைத்து அழிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை," என்றார்.

தொலையுணர்வு (உளவு)ஆயுதங்களை யுக்ரேன் வைத்திருக்கிறது என்பது போன்ற செய்திகள் வெளிவருவது இது முதன்முறை அல்ல.

கடற்பகுதியில் ரிமோர்ட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படும் படகுகள் உள்ளிட்ட போர் தந்திர அம்சங்களை யுக்ரேன் கொண்டிருக்கிறது என்ற வலுவான தகவல்களும் உள்ளன. மேலும், இதுபோன்ற திட்டங்கள் குறித்த யோசனை வெறுமனே சில மாதங்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக பரிமாணம் பெற்றுள்ளன," என்று பிரிட்டிஷ் வெடிகுண்டு நிபுணர் விவரிக்கிறார்.

தன் கட்டுப்பாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள கெர்ஜ் பாலத்தில் தாக்குதல் நடத்தும் திறனை யுக்ரேன் கொண்டிருந்தால், அது யுக்ரேனின் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக அமையும்.

ஆனால், யுக்ரேன் தலைநகரில் கேட்கும் சில சத்தங்களைத் தவிர, இ குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.

யுக்ரேன் குறித்து?

இது மட்டுமின்றி, யுக்ரேனின் குடியரசு தலைவர் அலுவலகத்தின் தலைவர் மிகைலோ போடோலியாக், வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கும்போது, மாஸ்கோவின் லாரி குண்டுவெடிப்பு என்ற செய்தியை ஆதரிப்பது போல உள்ளது.

காணொளிக் குறிப்பு,

யுக்ரேன் - ரஷ்யா போர்: கிரைமியா குண்டுவெடிப்பால் சேதமடைந்த பாலம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவிடம் விடைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு முறையில் தொடர்ந்து வரும் சிக்கல்கள் விளைவாகவே இந்த குண்டுவெடிப்பு நேரிட்டிருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

"ஃபிஎஸ்பி (ரஷ்ய உளவு முகமை, வெக்னர் குழுமம் போன்ற ராணுவ தனியார் ஒப்பந்ததாரர்கள்) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதே போல ரஷ்ய கூட்டமைப்பின் ஊழியர்கள் ஆகியோரிடையான சிக்கல்கள்தான் என்பதற்கு இது வலுவான சாட்சியம்," என்று அவர் கூறுகிறார்.

 

Banner

காணொளிக் குறிப்பு,

யுக்ரேன் பாலத்தை தாக்கியதற்கு ரஷ்யா எதிர் தாக்குதல்

https://www.bbc.com/tamil/global-63200525

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனுடன் தனகுவானேன். அவலப்படுவானேன். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அவனுடன் தனகுவானேன். அவலப்படுவானேன். 😎

இவ்வளவிற்கும்… மாண்புமிகு புட்டின் அவர்கள் 83 ஏவுகணையை ஏவியதில்,
8 பொது மக்கள் மட்டுமே இறந்துள்ளதை பார்க்க,
மனிதாபிமான அடிப்படையில்.. பொது மக்களின் இழப்புகளை தவிர்த்துள்ளமை பாராட்டுதலுக்குரியது. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவிற்கும்… மாண்புமிகு புட்டின் அவர்கள் 83 ஏவுகணையை ஏவியதில்,
8 பொது மக்கள் மட்டுமே இறந்துள்ளதை பார்க்க,
மனிதாபிமான அடிப்படையில்.. பொது மக்களின் இழப்புகளை தவிர்த்துள்ளமை பாராட்டுதலுக்குரியது. 👍🏽

புட்டினை க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் அவ‌ரின் நோக்க‌ம் ம‌க்க‌ளை கொல்லுவ‌தில்லை

அமெரிக்காவை ந‌ம்பி போன‌  காமெடிய‌ன் காணாம‌ல் போக‌ போகிறார்

நேற்றையான் ர‌ஸ்சியாவின் அடி உக்கிரேனுக்கு  ******** * 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

புட்டினை க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் அவ‌ரின் நோக்க‌ம் ம‌க்க‌ளை கொல்லுவ‌தில்லை

அமெரிக்காவை ந‌ம்பி போன‌  காமெடிய‌ன் காணாம‌ல் போக‌ போகிறார்

நேற்றையான் ர‌ஸ்சியாவின் அடி உக்கிரேனுக்கு  ******  

அந்தப் பாலத்தை உடைத்த… உக்ரைனுக்கு, 
எட்டாயிரம் ஏவுகணையை… மாண்புமிகு புட்டின் அவர்கள் ஏவி இருக்க வேணும்.
எண்பத்தி மூன்றுடன் நிற்பாட்டியது… அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை காட்டுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்தப் பாலத்தை உடைத்த… உக்ரைனுக்கு, 
எட்டாயிரம் ஏவுகணையை… மாண்புமிகு புட்டின் அவர்கள் ஏவி இருக்க வேணும்.
எண்பத்தி மூன்றுடன் நிற்பாட்டியது… அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை காட்டுகின்றது. 

முற்றிலும் உண்மை அண்ணா

புட்டினின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு..................இனி த‌ன‌து நாட்டுக்குள் உக்கிரேன் தாக்குத‌ல் ந‌ட‌த்தினால் எதிர் பாராத‌ அழிவை ச‌ந்திக்க‌ நேரிடும் என்று புட்டின் சொல்லி சில‌ நாட்க‌ளில் பால‌ம் மீது தாக்குத‌ல்...........த‌ன் நாட்டின் மீது ப‌ற்று இருக்கிற‌வ‌னுக்கு தான் சொன்ன‌தை செய்ய‌ சொல்லி தோனும்  அதை புட்டின் செய்து காட்டி விட்டார்................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 20 ஆயிரம் தமிழ் மக்களைக் கொல்ல உதவி நின்ற அமெரிக்கா உள்ளிட்ட.. மேற்குலகம்.. ஹிந்தியா.. பாகிஸ்தான்.. சீனா.. உக்ரைனோடு ஒப்பிடும் போது பூட்டின் எவ்வளவோ மேல். 

அன்று கூடி நின்று கொன்றுவிட்டு இப்ப தங்கள் தேவைக்கு தீர்மானம் போட்டு பொழுது போக்கி உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/10/2022 at 14:21, தமிழ் சிறி said:

இவ்வளவிற்கும்… மாண்புமிகு புட்டின் அவர்கள் 83 ஏவுகணையை ஏவியதில்,
8 பொது மக்கள் மட்டுமே இறந்துள்ளதை பார்க்க,
மனிதாபிமான அடிப்படையில்.. பொது மக்களின் இழப்புகளை தவிர்த்துள்ளமை பாராட்டுதலுக்குரியது. 👍🏽

உண்மையான உள்ளூர் தகவலின் படி உக்ரேன் கலங்குது. வியாபார மேற்குலகம் உள்ளுக்கை அழுது கொண்டு வெளியிலை சிரிக்கினம்.

அமெரிக்காவுக்கு உள் குத்து எக்கச்சக்கமாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 14:50, குமாரசாமி said:

உண்மையான உள்ளூர் தகவலின் படி உக்ரேன் கலங்குது. வியாபார மேற்குலகம் உள்ளுக்கை அழுது கொண்டு வெளியிலை சிரிக்கினம்.

அமெரிக்காவுக்கு உள் குத்து எக்கச்சக்கமாம்.....

உக்கிரேனுக்கு இர‌ண்டு ப‌க்கத்தாலும் தொட‌ர்ந்து அடி விழுது வ‌ல‌ரேஸ் நாட்டில் இருந்தும் ஏவுக‌னை தாக்குத‌ல‌ ர‌ஸ்சிய‌ ப‌டை ந‌ட‌த்துகிறார்க‌ள் , இப்போது ர‌ஸ்சிய‌ அதிக‌ள‌விலான விமான‌ தாக்குத‌ல்க‌ளையும் ந‌ட‌த்தின‌ம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.