Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங்,

ஹொங்கொங் மற்றும் தாய்வான் விவகாரம், கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘ஹொங்கொங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹொங்கொங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது.

இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தாய்வான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.

தாய்வானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். இருப்பினும் தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம்.

கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சீனாவின் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சீனாவைப் பொறுத்தவரை மக்களும், அவர்களின் உயிரும் நலனும் தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது.

பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை மூலம் சீனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும்’ என கூறினார்.

இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின்ஜனாதிபதியாகத் ஸி ஜின்பிங் தொடர்ந்து 3ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1305222

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங்,

ஹொங்கொங் மற்றும் தாய்வான் விவகாரம், கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘ஹொங்கொங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹொங்கொங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது.

இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தாய்வான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.

தாய்வானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். இருப்பினும் தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம்.

கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சீனாவின் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சீனாவைப் பொறுத்தவரை மக்களும், அவர்களின் உயிரும் நலனும் தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது.

பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை மூலம் சீனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும்’ என கூறினார்.

இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின்ஜனாதிபதியாகத் ஸி ஜின்பிங் தொடர்ந்து 3ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1305222

இந்தியாவையும்  இணையுங்கள். ....அடிக்கடி எல்லைப்பகுதிகளில் அடிபடுவதை தவிர்கலாம்.   ஆனால் ஒரு பிள்ளைக்கொள்கையை வாபஸ் பெற்றுவிடவேண்டும்....  இது நமது தமிழ்நாட்டு சொந்தங்களு  பிடிக்காது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இந்தியாவையும்  இணையுங்கள். ....அடிக்கடி எல்லைப்பகுதிகளில் அடிபடுவதை தவிர்கலாம்.   ஆனால் ஒரு பிள்ளைக்கொள்கையை வாபஸ் பெற்றுவிடவேண்டும்....  இது நமது தமிழ்நாட்டு சொந்தங்களு  பிடிக்காது 🤣

இந்தியாவை.... சீனாவுடன் இணைத்தால்,
"காந்தி ஜெயந்தி" கொண்டாட, சீனா... அனுமதி தர வேண்டும்.
 animiertes-lachen-bild-0072.gif

  • கருத்துக்கள உறவுகள்
நான் உதவாக்கரை இந்தியை விட, சீன மொழி பரவாயில்லையென அதை 
கற்க ஆரம்பித்துவிட்டேன். உங்கள் ரெண்டு பேர் பெயரும் சீன மொழியில் 
பாருங்களேன்.,!  

泰米尔西里
甘迪亚 57

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:
நான் உதவாக்கரை இந்தியை விட, சீன மொழி பரவாயில்லையென அதை கற்க ஆரம்பித்துவிட்டேன்.
உங்கள் ரெண்டு பேர் பெயரும் சீன மொழியில் பாருங்களேன்..!  

泰米尔西里
甘迪亚 57

 先生……現在你正在學習很多中文課。

சார்...  இப்ப நீங்கள், சீன மொழியில் எத்தனையாம் வகுப்பு படிக்கிறீர்கள்.🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 先生……現在你正在學習很多中文課。

சார்...  இப்ப நீங்கள், சீன மொழியில் எத்தனையாம் வகுப்பு படிக்கிறீர்கள்.🤣

刚开始学习新语言

தற்பொழுதான் புதிய மொழியை கற்க ஆரம்பித்துள்ளேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சீன லொள்ளுகளை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருக்கும் வட இந்தியர் ஒருத்தர் சொல்கிறார், 'எந்த மொழியை கற்க ஆரம்பித்தாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டுமாம்'.

ஏனெனில் நாம் புது இடத்திலுள்ள மக்களுடன் பழகும்போது சின்ன வாக்குவாதம் ஏற்பட்டால், உடனே நம்மை தயார்படுத்திக்கொள்ள இயலும்.😜

70களின் இறுதியில், நான் புது தில்லி சென்றபோது ஒரு ஆட்டோவை கூப்பிட்டு, ஓட்டுநரிடம் ஆர்.கே.புரம் செல்லக் கேட்டேன்.  அவர் நான் தென்னிந்தியர் தெரிந்து கட்டணம் அதிகமாக கேட்க, நான் 'அவ்வளவு தொகை ஆகாதே..?' என தெரிவிக்க, அந்தாள் 'மதராஸ் பந்தர்' என சொல்லிவிட்டு கடுப்பில் போய்விட்டார்.

எனக்கு இந்தியும் தெரியாது மந்தியும் புரியாது, அப்புறம் தங்குமிடம் வந்து 'பந்தர்' என்றால் என்ன?' எனக் கேட்டபோது அவர் 'மந்தி' என சொன்னார்.

செம காண்டாகிப்போச்சுது..! 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.