Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை

By Rajeeban

17 Oct, 2022 | 10:51 AM
image

-

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்

-

இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன இராணுவத்தினரின் நடமாட்டம் செய்மதிகள் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு  இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து நகரங்கள் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி செய்மதிகள் ரொக்கட்கள் கண்டங்களிற்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனா கப்பலின் அம்பாந்தோட்டை  விஜயம் குறித்து எச்சரித்திருந்ததுடன்  தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்திருந்தது.

முல்லைத்தீவு அனலைதீவு மீசாலை சாவகச்சேரி உட்பட வடக்கின் பல பகுதிகளிற்கான சீன பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் மீனவர்களின் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற  கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர்என  அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்குகிழக்கு பகுதியில் இந்தியாவி;ன் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என   புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/137810

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

-----

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது

-----

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்குகிழக்கு பகுதியில் இந்தியாவி;ன் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என   புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

புலிகள் இருந்து இருந்தால்... இது எல்லாம், நடந்திருக்குமா?
நீங்கள் தானே புலிகளை அழித்து விட்டு, இப்ப... குத்துது, குடையுது என்றால் என்ன செய்ய?

போர் முடிந்து... 13 வருடமாகியும், இன்னமும் விடுதலைப் புலிகளை 
மீள உருவாக்குகிறார்கள் என்று போலியான செய்தியை பரப்பி...
ஒவ்வொரு மாதமும்... அப்பாவி இளைஞர்களை கைது செய்து, 
சிங்களவனையும், இந்தியனை குளிர்விப்பதும் நீங்கள் தான். 

உங்களது இத்துப் போன அயலுறவு கொள்கையால்... 
உங்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கின்றது.
அது சீனன்  மூலம் வெகு விரைவில் அரங்கேறும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வைத்து இந்திராகாந்தி ஜே ஆஎ அரசை அச்சுறுத்திய காலம் ஒன்று இருந்தது. இன்று சீன இராணுவத்தை வைத்து இந்தியாவை அச்சுறுத்தும் அளவுக்கு சிங்களம் வளர்ந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை

 

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல முழு இந்தியாவுக்குமே தமிழர்கள் தான் பாதுகாப்புன்னு தேசிய தலைவர் திரும்ப திரும்ப சொன்னார்.

யார் கேட்டார்கள்?

கெடுகுடி சொற்கேழாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

புலிகள் இருந்து இருந்தால்... இது எல்லாம், நடந்திருக்குமா?
நீங்கள் தானே புலிகளை அழித்து விட்டு, இப்ப... குத்துது, குடையுது என்றால் என்ன செய்ய?

போர் முடிந்து... 13 வருடமாகியும், இன்னமும் விடுதலைப் புலிகளை 
மீள உருவாக்குகிறார்கள் என்று போலியான செய்தியை பரப்பி...
ஒவ்வொரு மாதமும்... அப்பாவி இளைஞர்களை கைது செய்து, 
சிங்களவனையும், இந்தியனை குளிர்விப்பதும் நீங்கள் தான். 

உங்களது இத்துப் போன அயலுறவு கொள்கையால்... 
உங்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கின்றது.
அது சீனன்  மூலம் வெகு விரைவில் அரங்கேறும்.

புலிகளை இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் விடாது.

ஊறுகாய் மாதிரி அப்பப்ப தொட்டுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.