Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை

By DIGITAL DESK 2

16 NOV, 2022 | 04:56 PM
image

கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது.

2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும்.

ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து வரும் பெண் ரசிகர்களுக்கு ஒரு திகிலூட்டும் செய்தி உள்ளது.பெண் ரசிகர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.கத்தாரில் உள்ள சட்டங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், அங்கு கவர்ச்சி ஆடைகள் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது.

FiFA.jpg

பிபா தனது இணையதளத்தில் ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி ஆடைகளை அணியலாம் என்று கூறினாலும், அவர்கள் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் உடல் உறுப்புகளை மறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

கத்தாரில் பயணம் செய்யும் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதற்கும், பிளவுகளை ஒளிரச் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உத்தரவாதம் உண்டு, மேலும் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக ரசிகர்கள் தங்கள் சட்டைகளை கழற்றினால், மைதானங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக கேமராக்கள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Untitled-2.jpg

உலகக் கோப்பை இணையதள ஹ்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

"பொதுவாக மக்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியலாம். அருங்காட்சியகங்கள் மற்றும் பிற அரசு கட்டிடங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது பார்வையாளர்கள் தங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டி தலைமை தொழில்நுட்ப அதிகாரி நியாஸ் அபுல்ரஹிமான் கூறியதாவது:-

"குறிப்பிட்ட இருக்கையை பெரிதாக்கவும், பார்வையாளரைத் தெளிவாகப் பார்க்கவும் எங்களிடம் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிறப்பு கேமராக்கள் உள்ளன. எனவே நிகழ்வுக்கு பிந்தைய விசாரணைக்கு இது உதவும் என கூறினார்.

https://www.virakesari.lk/article/140258

  • Replies 54
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவில் நடந்த கடந்த உலக கோப்பைக்கு  $20 பில்லியன் செலவளித்தது. இம்முறை கட்டார் $200 பில்லியன் செலவளித்து அப்படி என்ன புதுமை செய்கிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?

 

புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்காக விரைவில் கத்தார் வரவிருக்கும் ரசிகர்கள், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கட்டப்பட்ட மைதானங்களில் போட்டியை கண்டுகளிக்க உள்ளார்கள்.

இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கத்தார் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உலகக் கோப்பை திட்டத்தில் மொத்தம் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்?

இந்த உலகக்கோப்பை தொடருக்காக கத்தார் 7 மைதானங்களை கட்டியுள்ளது. அதேபோல, புதிய விமான நிலையங்கள், மெட்ரோ, தொடர் சாலைகள் மற்றும் 100 புதிய தங்கும் விடுதிகள்வரை கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.

மைதானங்களைக் கட்டுவதற்காக மட்டும் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக கத்தார் அரசு தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

 

எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணமடைந்தனர்?

உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றதிலிருந்து இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் தி கார்டியன் நாளிதழ் கூறியது.

இந்த எண்ணிக்கை கத்தாரில் உள்ள தூதரகங்கள் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தவறான புரிதலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள கத்தார் அரசாங்கம், இந்த இறப்புகள் அனைத்தும் உலகக் கோப்பை தொடர்பான திட்டங்களில் பணியாற்றியவர்களுடையது அல்ல எனத் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் பலர், பல ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்தவர்கள் என்றும், இவர்கள் முதுமை அல்லது பிற இயற்கைக் காரணங்களால் இறந்திருக்கலாம் என்றும் கத்தார் அரசு கூறியுள்ளது.

2014 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில், உலகக் கோப்பை மைதானக் கட்டுமான தளங்களில் பணியாற்றிய 37 தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், அதில் மூன்று பேர் மட்டுமே வேலை தொடர்பான விபத்தில் இறந்ததாக விபத்து தொடர்பான பதிவுகள் காட்டுவதாக அரசு கூறியுள்ளது.

எனினும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தக் எண்ணிக்கை குறைத்துக்காட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது. மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறினால் ஏற்படும் மரணங்களை வேலை தொடர்பான விபத்தாக கத்தார் அரசு கணக்கிடவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. இவை அதிக வெப்பத்தில் கடினமான வேலைகள் செய்யும் போது ஏற்படக்கூடியவை.

கத்தாரில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலகக் கோப்பை திட்டங்களில் நிகழ்ந்த விபத்து தொடர்பான சொந்த புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு தொகுத்துள்ளது.

2021ஆம் ஆண்டில் மட்டும் 50 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 37,600 பேர் லேசான மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களின் மரண எண்ணிக்கையை கத்தார் அரசு குறைவாக பதிவு செய்துள்ளதற்கான சில ஆதாரங்களை பிபிசி அரபு சேவை சேகரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?

உலகக் கோப்பை நடத்தும் உரிமையை 2010ஆம் ஆண்டு கத்தார் பெற்றது முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்தை மனித உரிமை குழுக்கள் விமர்சித்துவருகின்றன.

2016ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் மனித உரிமை அமைப்பு கத்தார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாய வேலையில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டியது.

மேலும், பல தொழிலாளர்கள் மோசமான தங்குமிடங்களில் வசிப்பதாகவும், பெரும் தொகையில் ஆட்சேர்ப்பு கட்டணங்கள் செலுத்த கட்டாயப் படுத்தப்பட்டதாகவும், ஊதியம் நிறுத்தப்பட்டதாகவும், அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.

புலம்பெயர் தொழிலாளர்களை கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் வேலை செய்வதிலிருந்து பாதுகாப்பதற்கும், வேலை நேரத்தைக் குறைக்கவும், தொழிலாளர் முகாம்களின் நிலைமைகளை மேம்படுத்தவும் கடந்த 2017ஆம் ஆண்டு சில நடவடிக்கைகளை கத்தார் அரசு அறிமுகப்படுத்தியது.

 

 

தொழிலாளர் முகாம்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

எனினும், மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் 2021ஆம் ஆண்டின் அறிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தண்டனை மற்றும் சட்டவிரோத ஊதிய பிடித்தத்தால் அவதிப்படுவதாகவும், மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலையை எதிர்கொண்டதாகவும் கூறுகிறது.

கத்தார் நிறுவனங்கள் ‘கஃபாலா’ என்ற அமைப்பு முறையில் செயல்படுகின்றன. அதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் கத்தார் வருவதற்கு நிதியுதவி அளித்து, பின்னர் அவர்கள் வேலையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றனர்.

ஐஎல்ஓ போன்ற குழுக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கத்தார் அரசு இந்த நடைமுறையை ரத்து செய்தது. ஆனால், தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதைத் தடுக்க இன்னும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

உலகக் கோப்பை பிரசாரம் தலைநகர் தோஹாவை விட்டு வெளியேறிய பிறகு தொழிலாளர் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் நிறுத்தப்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் உரிமை குறித்து கத்தார் அரசு என்ன கூறுகிறது?

ஐஎல்ஓ அமைப்புடன் இணைந்து செயல்படும் கத்தார் அரசு, பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஊதிய பாதுகாப்பு திட்டமும் இதில் அடங்கும்.

அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசுகையில், இந்த சீர்திருத்த நடவடிக்கை கத்தாரில் உள்ள பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தி வருவதாகக் கூறினார்.

சீர்திருத்தங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விதிகளை மீறும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் என்கிறார்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நாடுகள் என்ன சொல்கின்றன?

இறுதிப் போட்டியின் போது இந்த விவகாரம் கவனம் பெற வாய்ப்புகள் உள்ளன.

கால்பந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என இந்தத் தொடரில் பங்கேற்கும் 32 நாடுகளுக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் சித்தாந்த அல்லது அரசியல் விவகாரங்களுக்குள் விளையாட்டை இழுக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்குப் பதிலளித்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உட்பட பத்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள், "மனித உரிமைகள் உலகளாவியது மற்றும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்" என்று கூறியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை தவறாக நடத்தும் கத்தாரை விமர்சித்து ஆஸ்திரேலிய கால்பந்து அணி ஒரு காணொளி வெளியிட்டுள்ளது.

கத்தாரின் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக டென்மார்க் வீரர்கள் சிறப்பு ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g8ly28n4qo

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாரை தெரிவு செய்தது பிழை. இப்போ விளையாட வந்து எதிர்ப்பு காட்டி என்ன நடந்து விடப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்.

0849-B8-E5-37-D7-4041-BD4-A-7-FA92662-C8

இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்.

அதை ஏன் கடைசி நேரத்திலை சொல்லீனம்? இவ்வளவு காலமும் எங்கை போனவையள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Qatar Worldcup 2022: 25க்கும் மேற்பட்ட மரணங்கள்; பதில் சொல்லாத கத்தார் | Migrant workers | Football

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ண கால்பந்தாட்ட அரங்குகளை சூழ பியர் விற்பனைக்குத் தடை! பீபா திடீர் அறிவிப்பு

By DIGITAL DESK 3

18 NOV, 2022 | 06:09 PM
image

கத்தார் 2022 உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் அரங்குகளை சூழவுள்ள பகுதிகளில் பியர் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 2 நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை மறுதினம் 20 ஆம் திகதி முதல் டிசெம்பர் 18 ஆம் திகதிவரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது,

உலகக் கிண்ண வரவேற்பு நாடான கத்தார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீபா அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு பியர் விற்பனை செய்வதற்காக அனுசரணை நிறுவனமொன்றின் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் பியர் விற்பனை திடீர் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரங்குகளில், விஐபி பகுதிகள், தோஹாவிலுள்ள பிரதான பீபா ரசிகர் வலயம், சில தனியார் ரசிகர் வலயங்கள் மற்றம் அனுமதிப்பத்திரம் பெற்ற 35 ஹோட்டல்கள், விடுதிகளில் பியர் விற்பனை செய்யப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/140487

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண்டன் நகரப் படையில் உள்ள பொலிஸ்துறை அறிவுசார் சொத்து குற்றப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது.

வடமேற்கு பொலிஸ்துறை அறிவுசார் சொத்து பிரிவின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

லீட்ஸ், ஷெஃபீல்ட், பிரிஸ்டல் மற்றும் நார்தாம்ப்டன் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மொத்தம், நான்கு டன் இங்கிலாந்து ஜெர்சிகள் மற்றும் ஃபிஃபா உலகக் கிண்ண பேட்ஜ்கள், 12,000 பவுண்டுகள் பணத்துடன் கைப்பற்றப்பட்டன.

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை குறிவைக்கும் சோதனை நடவடிக்கையாக இது அமைந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கிட்டில் தவறான இங்கிலாந்து ஹோம் மற்றும் அவே ஷர்ட்கள் அடங்கும், அதிகாரப்பூர்வ நைக் பதிப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 60 பவுண்டுக்கு ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

ஆனால், சில ஆதரவாளர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது பணத்தைச் சேமிக்க இதுபோன்ற ரீ-சட்டுகளை கொள்வனவு செய்ய சிலர் ஆசைப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1311190

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2022 at 18:06, ஏராளன் said:

புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணமடைந்தனர்?

 

On 17/11/2022 at 22:24, ஈழப்பிரியன் said:

0849-B8-E5-37-D7-4041-BD4-A-7-FA92662-C8

இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்.

 

May be an image of text that says 'FIFAWORLD WORLD CUP Qat ar2022 SHAHID 16.11.22'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

FIFA கால்பந்து உலக கோப்பை கத்தார் 2022: போட்டிகள், மைதானங்கள் - முழு விவரம்

25 ஆகஸ்ட் 2022
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,DEFODI IMAGES

2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை.

நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்:

2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்?

இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந்த 4 ஆண்டுகளாக 210 அணிகள் முயற்சி செய்துவருகின்றன. ஆனால் போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்கும்.

ஆஸ்திரேலியா, கோஸ்டா ரிகா, வேல்ஸ் ஆகிய அணிகள் கடைசியாக இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

 

2022 FIFA உலக கோப்பைக்கு எந்தெந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன?

  • அமெரிக்கா
  • மெக்சிகோ
  • கனடா
  • கேமரூன்
  • மொராக்கோ
  • துனீஷியா
  • செனகல்
  • கானா
  • உருகுவே
  • ஈக்வடோர்
  • அர்ஜென்டீனா
  • பிரேசில்
  • போலந்து
  • போர்ச்சுகல்
  • சுவிட்சர்லாந்து
  • நெதர்லாந்து
  • இங்கிலாந்து
  • செர்பியா
  • ஸ்பெயின்
  • குரோஷியா
  • பெல்ஜியம்
  • பிரான்ஸ்
  • டென்மார்க்
  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • செளதி அரேபியா
  • தென் கொரியா
  • இரான்
  • கத்தார்
  • வேல்ஸ்
  • கோஸ்டா ரிகா
  • ஆஸ்திரேலியா
 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

FIFA உலக கோப்பை 2022 அட்டவணையில் உள்ள பிரிவுகள் என்னென்ன?

32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
  • குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ்
  • குழு 😄 அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
  • குழு 😧 பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா
  • குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்
  • குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா
  • குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
  • குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

FIFA உலக கோப்பை 2022 எங்கு நடைபெறும்?

கத்தார் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 1,75,000 ஹோட்டல் அறைகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில், கத்தார் ஒரு கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன் மூலம் மிதக்கும் ஹோட்டல்கள் தயார் செய்யப்படுகின்றன.

இந்தப் போட்டிக்காக கத்தாரில் மொத்தம் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 8-ல் 7 மைதானங்கள் முன்பே கட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஒன்றும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருமணி நேர பயணத்தில், அதிகபட்சமாக 43 மைல்கள் தொலைவில் உள்ளன.

ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் எவை?

  • லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)
  • அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)
  • ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)
  • கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)
  • எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கலீஃபா மைதானம்

FIFA உலக கோப்பை 2022 இன் இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெறும்.

FIFA உலக கோப்பை போட்டி ஏன் குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது?

FIFA உலக கோப்பை போட்டிகள் வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் ஆண்டின் இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை சுமார் 41 °C மற்றும் 50 °C ஐ எட்டும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது.

 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மைதானத்துக்குள் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது

அத்தகைய சூழ்நிலையில் 90 நிமிடங்கள் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏலத்தின் போது, கத்தார் மேம்பட்ட ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தது. இது மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் போன்ற இடங்களை 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், 2015 இல், போட்டியை குளிர்காலத்தில் நடத்த ஃபிஃபா முடிவு செய்தது. உலகக் கோப்பை போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதாவது, பல நாடுகளின் கிளப் கால்பந்து சீசனின் நடுப்பகுதியில் இது வரும். இதன் காரணமாக அவர்கள் குறுக்கீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

FIFA உலக கோப்பை - கத்தார் தொடர்பாக ஏற்பட்டசர்ச்சை என்ன?

இதுவரையிலான மிகவும் சர்ச்சைக்குரிய உலகக் கோப்பை இது என்று கூறப்படுகிறது. கத்தார் எப்படி இந்த உலக கோப்பை ஏலத்தை வென்றது, ஸ்டேடியம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், உலகக் கோப்பைக்கு இது சரியான இடமா போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. திட்டத்துடன் தொடர்புடைய 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தார் தொழிலாளர்களை வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2016 ஆம் ஆண்டு குற்றம் சாட்டியது. பல தொழிலாளர்கள் மோசமான நிலைமைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களின் வீடுகள் வாழத் தகுதியற்றவை, அவர்களிடமிருந்து பெருமளவு ஆட்சேர்ப்புக் கட்டணம் பெறப்பட்டது, தொழிலாளர்கள் நாட்டைவிட்டுச்செல்ல அனுமதிக்கப்படவிலை, அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு முதல் அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெப்பத்தில் வேலை செய்வதிலிருந்து காப்பாற்றவும், வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் முகாம்களில் வசதிகளை மேம்படுத்தவும் ஆரம்பித்தது.

ஆயினும் வெளிநாட்டு ஊழியர்கள் இன்னும் சட்டவிரோத சம்பள வெட்டுக்களை எதிர்கொள்வதாகவும், அத்துடன் ஒரு நாளைக்கு பல மணிநேரம் வேலை செய்த போதிலும் பல மாத ஊதியம் அளிக்கப்படாமல் வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2021 ஆம் ஆண்டின் அறிக்கை கூறியது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து சென்ற 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் இறந்ததாக 2021 பிப்ரவரியில் கார்டியன் செய்தித்தாள் கூறியது. கத்தார் உலகக் கோப்பைக்கான ஏலத்தில் வென்றது முதல் இறந்தவர்களில் பலர் உலகக் கோப்பை உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என்று தொழிலாளர் உரிமைக் குழுவான ஃபேர்ஸ்கொயர் கூறுகிறது.

பல ஆண்டுகளாக கத்தாரில் வாழ்ந்து, வேலை செய்து பிறகு காலமான ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களும் இதில் உள்ளதால், இந்த புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன என்று கத்தார் அரசு கூறுகிறது. இவர்களில் பலர் கட்டுமானத் துறையில் வேலை செய்யாதவர்கள் என்று அரசு தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை மைதானத்தின் கட்டுமானப் பணியில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. இதில் 34 இறப்புகள் வேலை காரணமானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

 

படக்குறிப்பு,

உலகக் கோப்பை மைதான கட்டுமானத்துடன் தொடர்புடைய 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கத்தார் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

FIFA உலக கோப்பை 2022 ஐ நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்தது எப்படி?

உலக கோப்பை 2022 ஐ கத்தார் நடத்தும் என்று 2010-இல் ஃபிஃபா அறிவித்ததிலிருந்து சர்ச்சை துவங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை ஓரங்கட்டி கத்தார் இதை எப்படி சாதித்தது என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்காக ஃபிஃபா அதிகாரிகளுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை ஃபிஃபா நடத்தியது. குற்றச்சாட்டை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் விசாரணையில் கிடைக்கவில்லை.

பிரதிநிதிகளின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுத்துள்ளது. ஆனால் பிரெஞ்சு அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணை இன்னும் தொடர்கிறது. மேலும் மூன்று FIFA அதிகாரிகள் பணம் பெற்றதாக 2020 இல் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

FIFA உலகக் கோப்பை 2018 -இல் வெற்றி பெற்ற அணி எது?

2018 ஃபிஃபா உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றது. ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் பரபரப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி உலக கோப்பையை வென்றது அது இரண்டாவது முறையாகும்.

 

FIFA உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

FIFA தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் எவை?

  • பிரேசில்
  • பெல்ஜியம்
  • பிரான்ஸ்
  • அர்ஜென்டீனா
  • இங்கிலாந்து
  • இத்தாலி
  • ஸ்பெயின்
  • போர்ச்சுகல்
  • மெக்ஸிகோ
  • நெதர்லாந்து

https://www.bbc.com/tamil/sport-62659950

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸி - ரொனால்டோ இறுதிப் போட்டியில் மோதுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கால்பந்து என்றால் இந்தியாவில் அதிகமாகத் தெரியும் சர்வதேச நட்சத்திரங்கள் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும். போர்ச்சுகலின் ரொனால்டோவும்தான்.

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் இவர்கள் இருவரும் மோதுவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுவது இயல்பு.

உண்மையில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் கத்தார் உலகக் கோப்பை போட்டியில் 4 அணிகளைக் கொண்ட 8 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும்.

அதன் பிறகு காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளைக் கடந்த இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோத வேண்டும். ஆக, இறுதிப் போட்டியை எட்டுவதற்கு முதல் ஆறு போட்டிகளைக் கடந்தாக வேண்டும்.

முதல் சுற்றில் போர்ச்சுகல் அணி எச் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. உருகுவே, கானா, தென்கொரியா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிவு இது.

மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சி பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. சௌதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகிய அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் தருணத்தில் அந்த இருவரும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வார்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

இதற்கு விவாதத்துக்கு விதைபோட்டது சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு கணிப்பு. வீடியோ கேம்களை உருவாக்கும் EA Sports நிறுவனம் வெளியிட்ட இந்தக் கணிப்பில் அர்ஜென்டினாவும் பிரேசிலும் இறுதிப் போட்டியில் மோதும் என்றும் அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்றும் கூறியிருந்தது.

அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்னும் அவரை முறையே பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகளிடம் தோல்வியடையும் என்றும் இந்தக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

2010, 2014, 2018 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது கணிப்பு சரியாக இருந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் இந்தக் கணிப்புகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோ ஏற்கவில்லை. முதல் ஆறு போட்டிகளிலும் கடுமையாகப் போராடுவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

மெஸ்ஸி பற்றிய கேள்விக்கு, “அவர் அற்புதமான ஆட்டக்காரர், அவர் ஒரு மாயாஜாலம்” என்று கூறியிருக்கிறார் ரொனால்டோ.

போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பையை வெல்லவில்லை. முதல் முறையாக அதைப் பெறுவதற்கு ரொனால்டோ முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதிருக்கும் அட்டவணைப்படி அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் நேரடியாக மோத வேண்டுமெனில் இரு அணிகளும் குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிக்காவது தகுதி பெற வேண்டும். ஏனெனில் காலிறுதி வரை சி பிரிவு அணிகளும் எச் பிரிவு அணிகளும் மோதுவதற்கு வாய்ப்பில்லை.

அர்ஜென்டினா அணி இதுவரை இரு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.

பிரேசில் அணி இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது.

2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது, குரோஷிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினா, பிரேசில், போர்சுகல் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.

 

கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தார் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் எவை?

  • லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)
  • அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)
  • ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)
  • கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)
  • எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
  • அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

 

உலக கோப்பை 2022 அட்டவணையில் உள்ள பிரிவுகள் என்னென்ன?

32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
  • குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ்
  • குழு 😄 அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
  • குழு 😧 பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா
  • குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்
  • குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா
  • குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
  • குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

FIFA உலக கோப்பை போட்டி ஏன் குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது?

FIFA உலக கோப்பை போட்டிகள் வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் ஆண்டின் இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை சுமார் 41 °C மற்றும் 50 °C ஐ எட்டும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது.

அத்தகைய சூழ்நிலையில் 90 நிமிடங்கள் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏலத்தின் போது, கத்தார் மேம்பட்ட ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தது. இது மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் போன்ற இடங்களை 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், 2015 இல், போட்டியை குளிர்காலத்தில் நடத்த ஃபிஃபா முடிவு செய்தது. உலகக் கோப்பை போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதாவது, பல நாடுகளின் கிளப் கால்பந்து சீசனின் நடுப்பகுதியில் இது வரும். இதன் காரணமாக அவர்கள் குறுக்கீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cx9eyge8nn8o

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஃபிஃபா கால்பந்து: காலிறுதியில் கலக்கப்போவது யார்?

Dec 07, 2022 07:57AM IST ஷேர் செய்ய : 
argentina-australia-live-lionel-messi-go

ஃபிஃபா உலக கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதால், காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

22-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16 அணிகள் மோதின. இதில் 8 அணிகள் தற்போது காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

fifa world cup quarter finals who will whom and where

ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற முன்னணி அணிகள் குரூப் சுற்றுகளில் வெளியேற்றப்பட்டன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2010-ஆம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி, மொரோக்கோ அணியிடம் தோல்வி அடைந்தது.

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து போன்ற ஜாம்பவான் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி போட்டியில் மோதும் 8 அணிகளில் 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்பதால் ரசிகர்களுக்கு பரபரப்பான ஆட்டம் காத்திருக்கிறது.

காலிறுதிப் போட்டி அட்டவணை:

டிசம்பர் 9-ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் குரோஷியா – பிரேசில் அணிகள் எஜுகெஷன் சிட்டி மைதானத்தில் மோத உள்ளன.

டிசம்பர் 10-ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கு அல் துமாமா மைதானத்தில் போர்ச்சுகல், மொரோக்கா அணிகள் மோதுகின்றன.

மற்றொரு போட்டியில், நள்ளிரவு 12.30 மணியளவில் லுசைல் மைதானத்தில் நெதர்லாந்து – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

டிசம்பர் 11-ஆம் தேதி, நள்ளிரவு 12.30 மணியளவில் அல் பேட் மைதானத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

fifa world cup quarter finals who will whom and where

இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதும் காலிறுதி போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது,

காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் நான்கு அணிகள் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அரையிறுதிப்போட்டிகளில் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் 18-ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
 

https://minnambalam.com/sports/fifa-world-cup-quarter-finals-who-will-whom-and-where/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினின் '1000 பெனால்ட்டி' பயிற்சியை பாய்ந்து தடுத்த மொரோக்கோவின் காப்பரண்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 டிசம்பர் 2022, 06:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
மொரோக்கோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மொரோக்கோவுக்கு வெற்றிக்கான பெனால்ட்டி கோலை அடித்த அஷ்ரப் ஹக்கிமிக்கு அவரது தாய் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்குச் செல்லும் முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெறக்கூடும்.

காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியை பெனால்ட்டி ஷுட் அவுட் மூலம் வீழ்த்தியிருக்கிறது மொரோக்கோ. ஸ்பெயின் அணி பெனால்ட்டி ஷுட் அவுட் மூலம் தோற்கும் நான்காவது உலகக் கோப்பை போட்டி இது.

ஸ்பெயின் வீரர்கள் அடித்த பெனால்ட்டிகளை கோலுக்குள் செல்ல விடாமல் தடுத்த கோல்கீப்பர் யாசின் பௌனு மொரோக்கோவின் தேசிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார். முதல் பெனால்டியை ஸ்பெயின் வீரர் பேப்லோ சரபியா கம்பத்தில் அடித்தார். அந்தப் பந்தையும்கூட, கோலுக்குள் வருமாறு அடிக்கப்பட்டிருந்தால் யாசின் தடுத்திருப்பார்.

மொரோக்கோவுக்காக வெற்றிக்கான கோலை அஷ்ரப் ஹக்கிமி அடித்தபோது அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருந்தது. ஹக்கியிமியின் தாயார் அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகப் பரவியது.

 

ஒரு பெனால்டியைகூட கோலாக்க முடியாமல் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியிருக்கிறது 12 ஆண்டுகளுக்கு முன்பு கோப்பையை வென்ற ஸ்பெயின்.

நாக் அவுட் சுற்றுக்கு வந்துவிட்டதால், தனது அணி வீரர்களுக்கு ஆயிரம் முறை பெனால்ட்டி பயிற்சியை எடுத்துக் கொள்ளுமாறு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயி என்ரிக் கூறியிருந்தார். ஆனால் அந்தப் பயிற்சியில் ஒன்றைக்கூட ஆட்டத்தில் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

யாசின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தகர்க்க முடியாத மொரோக்கோவின் காப்பரண்

லீக் போட்டிகளில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணியை நாக் அவுட் போட்டியில் வாய்ப்பே வழங்காமல் கட்டிப் போட்டது மொரோக்கோ அணி. தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் மொரோக்கோ அணியின் பாதுகாப்பு அரணைத் தடுக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் திணறினார்கள்.

25-ஆவது நிமிடத்தில் மொரோக்கோ கோல் கீப்பர் யாசின் ஒரு தவறான பாஸை அடித்ததால் அதை கோலாக்கும் வாய்ப்பு ஸ்பெயின் வீரர் கேவிக்குக் கிடைத்தது. ஆனால் அவர் அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பிவிட்டது.

முதல்பாதி ஆட்டத்தில் 67 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஸ்பெயின் அணியின் தாக்குதல் ஆட்டம் வீரியமாக இல்லை. ஒன்றிரண்டு வாய்ப்புகளை மொரோக்கோ பாதுகாப்பு அரண் தடுத்துவிட்டது.

ஆட்ட நேரம் முடியும்போது ஸ்பெயின் அணி 77 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1000-க்குமே மேற்பட்ட பாஸ்களை செய்திருந்தது. அவற்றில் 926 பாஸ்கள் துல்லியமானவை. மொரோக்கோவால் வெறும் 304 பாஸ்களை மட்டுமே துல்லியமாகச் செய்ய முடிந்தது. ஆனாலும் பாதுகாப்பில் அவர்கள் திறமையைக் காட்டினார்கள்.

அதனால் ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோதும் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலைக்கு போட்டி சென்றது.

கத்தார் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்பெயின் தாக்குதலைப் பாய்ந்து தடுத்தவர்

போட்டி முழுவதுமே மொரோக்கோ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். மொரோக்கோ தேசியக் கொடி மாத்திரமல்லாமல் பாலஸ்தீனக் கொடிகளையும் அங்கே பார்க்க முடிந்தது.

பெனால்ட்டி ஷூட் அவுட் நிலைக்குச் சென்ற பிறகு மொரோக்கோ அணிக்கு கூடுதலாக உற்சாகக் குரல்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு முறை ஸ்பெயினின் கால்கலுக்குப் பந்து செல்லும்போதெல்லாம் மொரோக்கோ ரசிகர்களின் குரல் உச்சத்தை எட்டியது.

முதல் பெனால்ட்டியை மொரோக்கோவின் சாபிரி அடித்தார். ஸ்பெயினின் கோல் கீப்பர் ஒரு பக்கமாகச் செல்ல மற்றொருபுறமாகப் பந்து சென்று கோலை அடைந்தது.

கத்தார் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்பெயின் அணிக்காக முதல் பெனால்டியை அடித்த சரபியா கோல் கீப்பரின் இடதுபுறக் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிது. ஆனாலும் பந்துக்கு மிக அருகிலேயே யாசினின் கைகள் இருந்தன.

மொரோக்கோவின் இரண்டாவது பெனால்ட்டியை ஹக்கிம் ஸியேச் அடித்து கோலாக்கினார். 

ஸ்பெயினின் இரண்டாவது பெனால்டியை கார்லோஸ் சோலெர் அடித்தார். ஆனால் பந்து வரும் திசையை மிகத் துல்லியமாகக் கணித்து பாய்ந்து தடுத்துவிட்டார் யாசின். ஸ்பெயினின் மூன்றாவது பெனால்ட்டியும் இப்படியே தடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் மொரோக்கோவின் மூன்றாவது பெனால்ட்டியும் ஸ்பெயின் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.

கத்தார் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசியாக வெற்றிக்கான பெனால்ட்டியை துல்லியமாக அடித்தார் மொரோக்கோவின் அஷ்ரப் ஹக்கிமி. கோல்கீப்பரை ஒரு புறமாக நகரவைத்துவிட்டு நடுவே பந்தை அடித்து கோலாக்கினார். 

இதன் மூலம் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கணக்கில் மொரோக்கோ வெற்றி பெற்றது. உலகக் கோப்பை பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளின் காலுறுதிக்குச் செல்லும் நான்காவது ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மொரோக்கோ. 

 

கத்தார் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன்னதாக 1990-இல் கேமரூனும், 2002-இல் செனகலும், 2010-இல் கானாவும் காலிறுதிப் போட்டி வரை சென்றிருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஆப்பிரிக்க அணியும் அரையிறுதிப் போட்டிக்குச் சென்றதில்லை. 

மொரோக்கோவின் வெற்றிக்கான கோலை அடித்த அஷ்ரப் ஹக்கிமி ஸ்பெயின் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். போட்டிக்குப் பிறகு அவரது தாய் அவரை முத்தமிட்ட காட்சி வைரலானது.

https://www.bbc.com/tamil/articles/c8v10840q14o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்சுகலுக்கு 'தேவையில்லாமல் போன' ரொனால்டோ

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 டிசம்பர் 2022, 03:34 GMT
ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11  வீரர்களில் அவர் இடம்பெறவில்லை.

அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ்.

ரொனால்டோ  இல்லாத நிலையில் போர்சுகல் அணி உலகக் கோப்பை போட்டிகளில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதால் அது அவருக்கு மேலும் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரொனால்டோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரொனால்டோவின் ஆட்டம் என்பதற்காகவே இந்தப் போட்டியைப் பார்க்க வந்தவர்களும், தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இப்படியொரு அக்கினிப் பரீட்சையை இதற்கு முன் எந்த மேலாளரும் செய்திருக்க மாட்டார்.

பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ தனது அதிருப்தியை முகத்தில் வெளிப்படுத்தியைப் பார்க்க முடிந்தது. போட்டி முடிந்து தனது அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதும் அவர் பெரிதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது.

அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை வெளியிட்டார். இந்த முறை தொடக்கத்திலே அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை.

ராமோஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் பெஞ்சில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அவர்தான் தொலைக்காட்சி கேமராக்களுக்கு நட்சத்திரமாக இருந்தார். அவரது முக பாவனைகளை அவ்வப்போது திரையில் காட்டப்பட்டன. 

5 கோல்கள் அடித்து போர்சுகல் அணி வலுவான முன்னிலையில் இருந்த போதுதான் கடைசி நேரத்தில்தான் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். அதிலும் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஒரு முறை வலைக்குள் பந்தைத் தள்ளியபோதும் அது ஆப்சைட் என அறிவிக்கப்பட்டது.

போட்டி முடிந்ததும் அரங்கில் இருந்த கூட்டத்தைப் பார்த்து கைதட்டிவிட்டு முதல் ஆளாக வெளியேறினார். போர்சுகல் வீரர்கள் தங்கள் அணி காலிறுதிக்குள் நுழைந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோதுகூட அவர் சேர்ந்து கொள்ளவில்லை.

சில காலமாகவே மேலாளர் சான்டோஸுக்கும் ரொனால்டோவுக்கும் இடையே உரசல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அது மிகத் தீவிரமாக வெளிப்பட்டிருக்கிறது.

ராமோஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரொனால்டோ இனி தேவை இல்லையா?

37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது.

தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார். 

இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார்.

மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார். 

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

“என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலிறுதிப் போட்டிகள் எப்போது?

கத்தார் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. முதல் போட்டியில் குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்றன. இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. அடுத்த போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்கும் இடையே சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கும் நடக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c726lnl51j4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோன்ஸலோ ராமோஸ்: நாக் அவுட்டில் ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் முந்தியவர்

ராமோஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 டிசம்பர் 2022, 06:31 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக களத்துக்குள் செல்லும்வரை, ராமோஸின் பெயரை கால்பந்து உலகில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக அவர் போர்ச்சுகலுக்காக சர்வதேசப் போட்டிகளில் முழுமையாக ஆடியது இல்லை.

உலகக் கோப்பை போட்டிகளிலும் அவரை போர்சுகல் அணி பெரிதாகக் களமிறக்கவில்லை. கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுடனான போட்டிகளின்போது கடைசி நேர மாற்று ஆட்டக்காரராக களமிறங்கியதுதான் அவரது சர்வதேச அனுபவம்.

ஒட்டு மொத்தமாகவே உலகக் கோப்பைக்கு முன்னும் பின்னுமாக அவரது அனுபவம் 33 நிமிடங்கள்தான்.

உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு 26-ஆம் எண் ஆடை வழங்கப்பட்டது. அணிக்காக மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்ட 26 பேரில் அது கடைசி எண்.

 

 

ராமோஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் அவர் களமிறங்குவதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் வைராலாகி விட்டார். 5 உலகக் கோப்பைகளிலும் கோல் அடித்த உலகின் முன்னணி வீரருக்குப் பதிலாக தாக்குலை முன்னின்று நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் சாதாரணமா?

ரொனால்டோவுக்கு பதிலாக ராமோஸ் வந்து கோல் எதுவும் அடிக்காமல் போயிருந்தால் அவரது கால்பந்து வாழ்க்கை மாத்திரமல்லாமல், அவரை மைதானத்துக்குள் அனுப்பிய மேலாளர் சான்டோஸின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் அபாயம் இருந்தது.

ஆனால் அவர் களமிறங்கிய பதினேழாவது நிமிடத்திலேயே தன்னைத் தேர்வு செய்ததற்கு நியாயம் கற்பித்தார். ரொனால்டோவால் செய்ய முடியாத சாதனையை அவர் படைத்தார். இந்த உலகக் கோப்பையில் யாரும் செய்யாத ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி கால்பந்து உலகை வியப்புக்குள்ளாக்கினார். 

ராமோஸுக்கு 21 வயதுதான் ஆகிறது. போர்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கியபோது ராமோஸுக்கு இரண்டு வயதுதான் இருந்திருக்கும். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ராமோஸ், ‘ரொனால்டோதான் தனக்கு ரோல் மாடல்’ என்று கூறினார்.

உலகக் கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராமோஸ். 

போர்ச்சுகல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரொனால்டோவுக்கு அது இன்னும் கனவுதான்!

ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் 8 கோல்களை அடித்திருக்கிறார் ரொனால்டோ. இவற்றில் ஒன்றுகூட நாக் அவுட் போட்டிகளில் அடித்தவை அல்ல.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக் கோப்பை போட்டியில்தான் தனது முதலாவது நாக் அவுட் கோலை அடித்தார்.

ஆனால், நாக் அவுட் போட்டிகளில் தாம் களமிறங்கிய முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலேயே 3 கோல்களை அடித்து போர்ச்சுகல் அணியின் அனைத்து வீரர்களின் சாதனைகளை தகர்த்துவிட்டார் ராமோஸ்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரான ஜெர்மனியின் மிரோஸ்லவ் குலோஸ் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். அவருக்கு அடுத்ததாக அந்தப் பெருமை ராமோஸுக்கு கிடைத்திருக்கிறது. 

சுவிட்சர்லாந்துக்கு எதிராக மூன்று கோல்களை அடித்ததுடன் ஒரு கோலுக்கு உதவியும் செய்திருக்கிறார் ராமோஸ்.  இதுவும் உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயது வீரர் என்ற வகையில் ஒரு சாதனைதான். 

போர்ச்சுகல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த போட்டியில் ரொனால்டோவுக்கு வாய்ப்பு உண்டா?

ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிடம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார் போர்ச்சுகல் மேலாளர் சான்டோஸ்.

மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார். 

“என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது.

தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார். 

இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது.

இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலிறுதிப் போட்டிகள் எப்போது?

கத்தார் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. முதல் போட்டியில் குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்றன. இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. அடுத்த போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்கும் இடையே சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கும் நடக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c0jg3n4v8j1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

44 நிமிடங்களுக்கு முன்னர்

மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி தனது பெனால்டியை நேராக கோல் போஸ்டுக்குள் அனுப்பி இந்த வெற்றியை உறுதி செய்தபோது, ஓர் அற்புதமான வரலாற்றை கால்பந்து உலகில் உருவாக்கினார்.

அதன்மூலம், ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயினை வெளியேற்றி, மொராக்கோ முதல்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது.

தனது நாட்டுக்காக ஒரு காவிய வெற்றியை வழங்கிய பிறகு, அவர் தனது தாயுடன் பகிர்ந்துகொண்ட அன்பு நிறைந்த தருணம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மொராக்கோவை வெற்றியின் பக்கம் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பிறகு, 24 வயதான அந்த வீரர் ரசிகக் கூட்டத்திற்கு நடுவே தனது தாயைத் தேடினார். தாயைக் கண்டுபிடித்து, அவரிடம் ஓடி வந்து, பார்ப்பவர் இதயத்தைத் தொடும் வகையில் வெற்றி அரவணைப்பைப் பகிர்ந்துகொண்டார்.

 

ஸ்பெயின் உடனான ஆட்டத்தில், ஹக்கிமி அடித்த அந்த வெற்றிகரமான பெனால்டி மூலம், தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.

இதில் ஸ்பெயின் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் என்னவெனில், ஹக்கிமி ஸ்பெயினின் மேட்ரிட்டில் பிறந்து வளர்ந்தவர். ஸ்பெயின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் விளையாடியவர்.

ஸ்பெயினில் பிறந்த மொராக்கோ வீரர்

“என்னுடைய அம்மா வீடுகளைச் சுத்தம் செய்தார். அப்பா தெருவோரத்தில் வியாபாரியாக இருந்தார். நாங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய ஒரு சராசரி குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

அவர்கள் எனக்காகத் தங்களைத் தியாகம் செய்தார்கள். இன்று அவர்களுக்காக நான் தினசரி போராடுகிறேன்,” என்று ஒருமுறை ஹக்கிமி ஸ்பானிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மொராக்கோ வீரர் அச்ரஃப் ஹக்கிமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஸ்பெயினை வீழ்த்திய ஆட்டத்தின் இறுதியில் மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி கூட்டத்தில் தனது தாயைத் தேடிச் சென்று அரவணைத்தார்.

ஹக்கிமி ஸ்பெயினில் பிறந்து, வளர்ந்திருந்தாலும் அவருடைய தாய்நாடான மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்தார். அவர் 2018 முதல் அட்லஸ் லயன்ஸ் என்றழைக்கப்படும் மொராக்கோ அணியில் முக்கியப் பங்கு வகித்து விளையாடி, ஸ்பெயினை வீழ்த்த உதவினார்.

அவர் ரியல் மேட்ரிட் அணியில் விளையாடினார். 2017ஆம் ஆண்டில் அவர்களுக்காக லா லிகா போட்டிகளில் அறிமுகமானார்.

அவரது வளர்ச்சி ஸ்பெயினில் உள்ள இளைஞர்களுக்கான தேசிய அணிகளின் கண்களைக் கவர்ந்தன. அவரைத் தம் பக்கம் ஈர்க்க அவர்கள் முயன்றனர். ஆனால், ஹக்கிமியின் விசுவாசம் மொராக்கோவுடன் இருந்தது.

குறிப்பாக எதுவும் இதற்குக் காரணமில்லை. என் வீட்டில் இருந்தது அரபுக் கலாசாரம், மொராக்கோ. ஆகையால் நான் இங்கே இருக்க விரும்புகிறேன்,” என்று ஹக்கிமி 2022 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்பு மார்சா என்ற ஸ்பானிய தேசிய ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராயல் மொராக்கோ சம்மேளனத்தின் கண்களில் பட்ட ஹக்கிமி

ஹக்கிமி இந்த உலகக்கோப்பையில் மொராக்கோவின் வெற்றிக்காக கோல் அடித்த பெனால்டி ஷாட், மிக நெடும் பயணப் பின்புலத்தைக் கொண்டது. அவர் சிறு வயதிலிருந்தே நட்சத்திர வீரராகக் கவனிக்கப்பட்டிருக்கிறார். ரியல் மாட்ரிட்டில் இருந்து அவர் தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

தனது 8 வயதில் ஐரோப்பாவின் வெற்றிகரமான, பிரபலமான கால்பந்து கிளப்பில் சேர்ந்தாலும், அவருடைய பாதையில் ஒவ்வொரு வெற்றியையும் போராடிப் பெற வேண்டியிருந்தது.

ஸ்பெயினில் வாழும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ புலம்பெயர்ந்தோர்களில் ஒருவர் தான் ஹக்கிமி. அவர் மாட்ரிட்டின் தொழில்துறை புறநகர்ப் பகுதியான கெட்டாஃபில் வளர்ந்தார்.

அவர் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பதின்பருவ வீரராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அது அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, ராயல் மொராக்கோ கால்பந்து சம்மேளனத்தின் கண்ணிலும் அவர் பட்டார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பா முழுவதும் மொராக்கோ புலம்பெயர்ந்தோர் மிகப் பெரிய அளவில் இருப்பதால், ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அவர்களுடைய திறமைகள் பலவும் இருக்கின்றனர்.

ஆகையால், அங்கெல்லாம் ராயல் மொராக்கோ சம்மேளனம் சென்று திறமைகளைத் தேடி, அத்தகைய திறமை வாய்ந்தவர்களைத் தங்களுக்காக ஆட வைக்க முயலும்.

அப்படி ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய கண்ணில் பட்ட ஹக்கிமி, ராயல் மொராக்கோ சம்மேளனத்துடனும் ஆடத் தொடங்கினார்.

ஹக்கிமி பல்வேறு இளம் வீரர்கள் பிரிவு போட்டிகளில் மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்டோபர் 2016இல் அவர்களுக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார்.

தனது 24வது வயதில், அவர் மொராக்கோ சீனியர் அணிக்காக 58 முறை ஆடியுள்ளார். அதில் 8 கோல்களை அடித்துள்ளார், 8 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021ஆம் ஆண்டு ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ் போட்டியில், மொராக்கோ கோல் அடிக்கப் போராடியபோது, டிஃபண்டராக ஆடிய ஹக்கிமி முன்னேறி ஈடுகொடுத்து, கடுமையாக ஓடி, இரண்டு முக்கியமான கோல்களை அடித்தார்.

அணிக்குத் தேவைப்படும்போது முன்னேறி ஆடும் அவருடைய திறமை மீது மொராக்கோ நம்பிக்கை வைப்பது வழக்கமாகத் தொடங்கியது. அதனால் தான், ஸ்பெயின் உடனான முக்கியமான பெனால்டியை அவர் எடுத்துக் கொண்டதைக் கண்டு யாரும் ஆச்சர்யப்படவில்லை.

அந்த பெனால்டியை போலவே, அவர் தனது ஆட்டத்தின் மூலம் மொராக்கோவை உலகக் கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என்று மொராக்கோ ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மொராக்கோவால் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா?

இந்த உலகக் கோப்பை பல எதிர்பார்க்காத வரலாறுகளையும் திருப்புமுனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால், பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.bbc.com/tamil/articles/cgrvn90qe8zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக் கிண்ண கால் இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்

By DIGITAL DESK 5

09 DEC, 2022 | 10:18 AM
image

(நெவில் அன்தனி)

எதிர்பாராத பல முடிவுகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய குழு நிலை முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று நொக்-அவுட் போட்டிகளைத் தொடர்ந்து கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் 8 அணிகள் மீதமுள்ள நிலையில் கால் இறுதிப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமையும் (09) நாளை சனிக்கிழமையும் (10) நடைபெறவுள்ளன.

இந்த 8 அணிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதைக் குறியாகக் கொண்டு கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிகொள்ள பிரயத்தனம் எடுக்கவுள்ளதால் இந்தப் போட்டிகள் முன்னரைவிட பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் 5 தடவைகள் உலக சம்பியனா பிரேஸிலை குரோஷியாவும் 2 தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜன்டீனைவை நெதர்லாந்தும் இன்று நடைபெறவுள்ள முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் எதிர்த்தாடவுள்ளன.

பிரேஸிலுக்கும் குரோஷியாவுக்கும் இடையிலான முதலாவது கால் இறுதிப் போட்டி அல் ரய்யான், எட்யூகேஷன் சிட்டி விளையாட்டரங்கில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குரோஷியாயாவுடன் இதுவரை விளையாடிய நான்கு சந்தர்ப்பங்களிலும் பிரேஸில் வெற்றிபெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண முதல்  சுற்றில் சந்தித்த 2 சந்தர்ப்பங்களிலும் பிரேஸில் வெற்றிபெற்றிருந்தது. (2006இல் 1 - 0, 2014இல் 3 - 1).

தென் கொரியாவிலும் ஜப்பானிலும் 2002இல் கூட்டாக நடத்தப்பட்ட உலக கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனியை 2 - 0 என வெற்றிகொண்டு தனது 5ஆவது உலக சம்பியன் பட்டத்தை வென்ற பிரேஸில் அதன் பின்னர் தொடர்ச்சயாக 4 அத்தியாங்களில் நொக் - அவுட் சுற்றில் ஐரோப்பிய நாடுகளிடம் தோல்வி அடைந்தது.

அவற்றில் 3 கால் இறுதி தோல்விகள் (பிரான்ஸ் 2006, நெதர்லாந்து 2010, பெல்ஜியம் 2018) அடங்குகின்றன.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் 6ஆவது உலகக் கிண்ணத்திற்கு குறிவைத்துள்ள பிரேஸில், அதற்கு முன்னதாக 9ஆவது தடவையாக அரை இறுதிக்கு முன்னேற முயற்சிக்கவுள்ளது. ஜேர்மனி மாத்திரமே அதிக தடவைகள் (12) அரை இறுதியில் விளையாடியுள்ளது.

brazil...jpg

முதல் சுற்றில் ஜீ குழுவில் இடம்பெற்ற பிரேஸில், மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே செர்பியா (2 - 0), சுவிட்சர்லாந்து (1 - 0) ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தது. கடைசிப் போட்டியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக கெமறூனிடம் உபாதையீடு நேரத்தில் தோல்வி (0 - 1) அடைந்தது.

எனினும் ஏற்கனவே 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த பிரேஸில், நொக்-அவுட் சுற்றில் தென் கொரியாவை 4 - 1 என மிக இலகுவாக வெற்றிகொண்டு   கால இறுதிக்கு முன்னேறியது.

நேமார், ரிச்சலிசன், வினிசியஸ் ஜூனியர், கெசேமிரோ, ரஃபின்ஹா என பிரேஸில் அணியில் மிகச் சிறந்த வீரர்களை பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். 

ஆரம்பப் போட்டியில் உபாதைக்குள்ளாகி 2 போட்டிகளை தவறவிட்ட நேமார் 2ஆம் சுற்றில் விளையாடிதுடன் உபாதையிலிருந்து மீண்டுள்ள மற்றொரு பிரதான வீரர் அலெக்ஸ் சண்ட்ரோ இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரோஷியா

ரஷ்யாவில் 2018இல் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்ற குரோஷியா, இம்முறை முதல் தடவையாக சம்பியானவதற்கு முயற்சிக்கவுள்ளது. எனினும் தென் அமெரிக்கா நாடுகளுடனான அதன் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை.

ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக 2018இல் 3 - 0 என வெற்றிபெற்ற குரோஷியா அதற்கு முன்னர் 2 தடவைகள் குழுநிலை சுற்றில் பிரேஸிலிடம் தோல்வி அடைந்திருந்தது.

உலகக் கிண்ணம், யூரோ கிண்ணம் ஆகியவற்றில் 2008இலிருந்து குரோஷியா விளையாடிய 8 நொக்-அவுட் போட்டிகளில் 7 போட்டிகள் மேலதிக நேரம் வரை நீடித்தன. 2018இல் 3 போட்டிகள் மேலதிக நேரம் வரை நீடித்ததுடன் அவற்றில் 2இல் பெனல்டி முறையில் (16 அணிகள் சுற்று, கால் இறுதி) வெற்றிபெற்ற குரோஷியா, இந்த வருடம் 16 அணிகள் சுற்றில் மீண்டும் பெனல்டி முறையில் வெற்றிபெற்றது.

1998இலும் 2018இலும் கடைசி 4 அணிகளில் இடம்பெற்ற குரோஷியா இம் முறை மூன்றாவது தடவையாக அரை இறுதிக்கு செல்ல குறிவைத்துள்ளது.

முதல் சுற்றில் எவ் குழுவில் இடம்பெற்ற குரோஷியா ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத போதிலும் அதன் பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை.

மொரோக்கோவுடனான அதன் ஆரம்பப் போட்டி 0 - 0 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. 2ஆவது போட்டியில் கனடாவை 4 - 1 என இலகுவாக வெற்றிகொண்ட குரோஷியா, கடைசிப்  போட்டியை பெல்ஜியத்துடன் (0 - 0) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

தொடர்ந்து குரோஷியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைபெற்ற 2ஆம் சுற்று ஆட்டம் மேலதிக நேர முடிவில் 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

Croatia...jpg

அதனைத் தொடர்ந்து   அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில்  3 - 1 என குரோஷியா வெற்றிபெற்றது. 

கோல்காப்பாளர் டொமினிக் லிவாகோவிச் 1ஆம், 2ஆம், 4ஆம் பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தி குரோஷியாவுக்கு வெற்றியீட்டிக்கொடுத்து ஹீரோவானார்.

தனது இரண்டாவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தொடர்ந்தும் அணித் தலைவராக விளையாடும் லூக்கா மொட்றிச், கோல் காப்பளாளர் டொமினிக் லிவாகோவிச், அண்ட்றெஜ் க்ராமாரிச், மார்க்கோ லிவாஜா, லோவ்ரோ மேஜர், ஐவன் பெரிசிக் ஆகியோர் குரோஷியா அணியில் கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய வீரர்களாவர்.

https://www.virakesari.lk/article/142596

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 ஆவது காலிறுதியில் ஆர்ஜன்டீனா - நெதர்லாந்து மோதல் 

09 DEC, 2022 | 09:30 PM
image

கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியின் 2 ஆவது கலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் மோதுகின்றன.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதைக் குறியாகக் கொண்டு கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிகொள்ள இரு அணிகளும் கடும் பிரயத்தனம் எடுக்கவுள்ளதால் 2 தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டி பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து மற்றும் ஆர்ஜென்டீனா ஆகியன உலகக் கிண்ணத்தில் 6 ஆவது முறையாக ஒன்றையொன்று சந்திக்கின்றன.

ஆர்ஜென்டீனாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 2 ஆவது கால் இறுதிப் போட்டி லுசைல் விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆர்ஜென்டீனாவுடன் நெதர்லாந்து விளையாடிய 9 போட்டிகளில் (W4 D4) ஒரு போட்டியில் மாத்திரம் நெதர்லாந்து தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வி கடந்த 1978 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நெதர்லாந்து ஆர்ஜென்டீனாவிடம் தோற்றதாகும்.

இறுதியாக இடம்பெற்ற இரு உலகக் கிண்ண போட்டிகளான 2006 குழு நிலையிலும் 2014 அரையிறுதியிலும் ஆர்ஜென்டீனா பெனால்டியில் முன்னேறியது.

கடந்த 1930 ஆம் ஆண்டு உருகுவேக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா  தோல்வியடைந்ததில் இருந்து, உலகக்கிண்ண நொக் அவுட் சுற்றுகளிலிருந்து (இறுதிப் போட்டிகள் உட்பட) ஆர்ஜென்டீனாவின் இறுதி 9 வெளியேற்றங்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன. இதில் 1998 ஆம் ஆண்டு காலிறுதியில் நெதர்லாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தையும் அடங்கும்.

இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனாவின் வெளியேற்றம் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மூலம் தொடருமா இல்லையெனில் நெதர்லாந்தை வென்று அரையிறுதிப் போட்டிக்குள்ஆர்ஜடீனா நுழையுமா ? என்பதை இன்றைய காலிறுதிப் போட்டி நிறைவடையும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/142683

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா

By SETHU

09 DEC, 2022 | 11:48 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது.: 

இன்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  4:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம்   அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. 

அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. 

மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தின்போது அணித்தலைவர் நேய்மார் கோல் புகுத்தினார்.

Neymar-Brazil---vs-Croatia.jpg

எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் புகுத்திய கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 4:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

குரோஷியா சார்பாக நிகேலா விலாசிக், லொவ்ரோ மேஜர், லூகா மெட்றிக், மிஸ்லாவ் ஓர்சிக் ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.

இப்போட்டியில் புகுத்திய கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதினார்.

பேலே 92 போட்களில் 77 கோல்களைப் புகுத்தினார். நெய்மார் 124 போட்டிகளில் 77 கோல்களை புகுத்தியுள்ளார். 

https://www.virakesari.lk/article/142685

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடனத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவு

நெய்மார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற  அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது.

குரோஷியாவின் பயிற்சி பெற்ற நட்சத்திர வீரர்கள் பெனால்டி மூலம் பிரேசிலின் ஆறாவது கோப்பை நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததனர்.  மீண்டும் ஒரு ஐரோப்பிய தேசத்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆடவர் தேசிய அணிக்கான பீலேவின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் சாதனையை சமன் செய்யும் வகையில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், குரோஷிய அணி வீரர்களின் வலுவான தடுப்பாட்டங்களை கடந்து முதல்கோலை போட்டார் நெய்மார். 

இதனால், நெய்மர் இந்த ஆட்டத்தின் ஹீரோவாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால் தவறவிடப்பட்ட  ஐந்தாவது பெனால்டியால், இதுதான் தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி போட்டி என கூறியிருந்த அவர்   கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.

 

ஆட்டம் முடிந்ததும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைடீ பணியில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டில் கோப்பா அமெரிக்கா போட்டியின் போதே நெய்மார் சர்வதேச ஓய்வு பற்றி சூசகமாக கூறினார். எனவே, 61 வயதான டைடீ  2019ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா போட்டியின் வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை.

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் பெனால்டியை நெய்மர் எடுத்திருக்க வேண்டுமா?

குரோஷியாவுடனான ஆட்டம் தொடக்கத்தில் 90 நிமிடம் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் யார் ஒருவருக்கும் சாதகமாக  முடியவில்லை, எனவே போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

தனது நாட்டிற்கு மிகவும் தேவைப்படும்போது அதனோடு தான் இருப்பதாக நெய்மர் நினைத்தார், அந்த கூடுதல் நேரத்தில் நெய்மர், மின்னல்வேகத்தில் ஒரு கோல் அடித்தார். 

106-ஆவது நிமிட த்தில் அவர் போட்ட கோல் அவரது 77வது சர்வதேச கோலாகும், ஃபிஃபா பதிவுகளின்படி, பீலேவின் சாதனையை அவர் சமன் செய்தார்.

ஆனால் அடுத்த நான்கு நிமிடங்களில் குரேஷியாவின் புருனோ பெட்கோவிச் இரு கோல் அடித்து இதனை சமப்படுத்தினார் - அது குரோஷியாவின் இலக்கை நோக்கிய ஒரே ஷாட் ஆக இருந்தது. பெனால்டி கிக்கை சரியாக கையாண்டதால் அவர்களின் முன்னேற்றத்தின்  நம்பிக்கை காப்பற்றப்பட்டது.

இம்முறை நெய்மர் களத்தில் தவிர்க்க இயலாதபடி பதைபதைப்பில் மூழ்கியதால், அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. எதிரணியான குரேஷிய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 

அவர் ஐந்தாவது பெனால்டி எடுத்தார்.  ஆனால் குரேஷியாவின் மார்கினோஸ் கோல் போஸ்ட்டில் தடுத்தாடியதால் அந்த வாய்ப்பு நழுவியது. அவர்களின் தலைவிதியை மார்கினோஸ் மாற்றி எழுதினார். 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதே சோகமான முடிவு இதற்கு முன்பும் நடந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சொந்த நாட்டில்  நடந்த உலகக் கோப்பை போட்டியில் நெய்மரின் பங்கேற்பு முதுகில் ஏற்பட்ட காயத்தால் முடிவுக்கு வந்தது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அதே கட்டத்தில் பெல்ஜியத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.

இங்கே நெய்மார் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கடைசி வீரர்களில் ஒருவராக இருந்தார். பிரேசிலின் ரசிகர்கள் அவநம்பிக்கையுடன் ஸ்டாண்டில் அமர்ந்தனர், கத்தாரில் அவர்களின் நம்பிக்கைகள் முடிவுக்கு வந்தன.

"இது போன்ற சூழல்களில் வீரர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது , எனவே, அதற்கு  மனதளவில் அதிகம் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் வீரர்கள் இந்த கடைசி பெனால்டி கிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஆனால் ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரர்  கிளின்ஸ்மேன் பிபிசி ஒன்னிடம் பேசியபோது, மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். "அவர்தான் என்னுடைய முதலாவது பெனால்டி அடிப்பவராக இருந்திருப்பார். நீங்கள் அதற்கான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்," என்றார். 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முடிவுக்கு வந்த கனவு

பிரேசிலின் உலகக் கோப்பை கனவு ஒரு ஐரோப்பிய நாட்டினால் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக முடிவுக்கு வந்தது, கடைசியாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியை பிரேசில் தோற்கடித்தது. 

இது ஐந்து உலகக் கோப்பை வெற்றிகளில் பிரேசிலின்  கடைசி வெற்றியாகும். மேலும் ஐரோப்பா அல்லாத அணி கோப்பையை கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் பிரேசிலுக்கு கடுமையான சலிப்பை உருவாக்கும்.

தென் அமெரிக்க அணி மெதுவாகவே ஆடத்தொடங்கியது. கடைசி ஏழு போட்டிகளில் ஆறில் முதல் பாதியில் அவர்கள் கோல் அடிக்கவில்லை.

வினிசியஸ் ஜூனியர் அல்லது நெய்மார் தொடக்க நேரத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால் வேறு முடிவுகள் வந்திருக்கலாம்.

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை வரலாற்றில்  கூடுதல் நேரத்தில் தொடக்க கோலை அடித்த பிறகு,  நாக் அவுட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாகியிருக்கிறது பிரேசில். 

உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த அணி அரையிறுதிக்கு கடைசியாக முன்னேறியது 1998-ஆம் ஆண்டில்தான். அதுவும் பிரேசில்தான். அதன் பிறகு முதலிடத்தில் இருக்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cn0y31xrzxlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியத்தகு போட்டியில் நெதர்லாந்தை பெனல்டிகளில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா

By DIGITAL DESK 5

10 DEC, 2022 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான கால் இறுதிப் போட்டியில் 4 - 3 என் பெனல்டி முறையில் வெற்றிபெற்ற ஆர்ஜன்டீனா நான்காவது தடவையாக பீபா உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

குழப்பத்தைப் தோற்றுவித்ததும் வியக்கவைத்ததும் சில சமயங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தியதுமான இந்த உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டி 90 நிமிட நிறைவின்போதும் மேலதிக நேர முடிவின்போதும் 2 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மத்தியஸ்தரினால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டு வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிகளவிலான எச்சரிக்கை அட்டைகள் காட்டப்பட்ட இப் போட்டியில் நெதர்லாந்து வீரர் ஒருவருக்கு 2ஆவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

அப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையுமாக 15 எச்சரிக்கை அட்டைகள் காட்டப்பட்டது. இதற்கு முன்னர் 2002இல்  கெமறூனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான போட்டியில் 14 அட்டைகள் (12 மஞ்சள், 2 சிவப்பு) காட்டப்பட்டிருந்தது.

No description available.

ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பையம் விறுவிறுப்பையும் தோற்றுவித்த அப் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் உபாதையீடு நேரத்தின் 10ஆவது (90 + 10) நிமிடத்தில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருந்தது.

ஆனால் உபாதையீடு நேரத்தில் 2 நிமிடங்கள் மீதமிருக்கையில் நெதர்லாந்து கோல் நிலையை சமப்படுத்த ஆர்ஜன்டீ வீரர்களும் இரசிகர்களும்  அதிர்ந்து போயினர். எனினும் பெனல்டிகளில் ஆர்ஜன்டீனா வென்றபோது அணி வீரர்களும் இரசிகர்களும் வானை நோக்கி கடவுளுக்கு தமது நன்றிகளை செலுத்தி ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப் போட்டி ஆரம்பித்ததும் இரண்டு அணிகளும் கோல் போடுவதைக் குறியாகக் கொண்டு விளையாடியபோதிலும் முதல் 34 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் போடாமல் இருந்தன.

ஆனால், போட்டியின் 35ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து லயனல் மெஸி பரிமாறிய பந்தை நோயல் மொலினா கோலாக்கி ஆர்ஜன்டீனாவை  1 - 0 என முன்னிலையில் இட்டார்.

No description available.

அதனைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்த ஆர்ஜன்டீனா எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. மறுபுறத்தில் நெதர்லாந்தும் அவ்வப்போது கோல் நிலையை சமப்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட்டது. இடைவெளையின்போது ஆர்ஜன்டீனா 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு தீவிரமாக ஈடுபட்டதால் ஆட்டம் சூடுபிடித்தது. ஆர்ஜன்டீன வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடி எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமிக்க நெதர்லாந்து அணியினர் அவற்றைத் தடுத்தவண்ணம் இருந்தனர். இதனிடையே அவ்வப்போது எதிர்த்தாடுவதிலும் ஈடுபட்டனர்.

No description available.

என்வாறாயினும் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் டம்ஃப்ரைஸை நெதர்லாந்து பின்கள வீரர் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அப் பெனல்டியை லயனல் மெஸி கோலாக்க 73ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா 2 - 0 என முன்னிலை அடைந்தது. இதன் மூலம் ஆர்ஜன்டீனா சார்பாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் புகுத்தியிருந்த கேப்றியல் பட்டிஸ்டுட்டாவின் 10 கோல்கள் என்ற சாதனையை மெஸி சமப்படுத்தினார்.

அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன கோல் எல்லையை நெதர்லாந்து வீரர்கள் ஆக்கிரமித்ததன் பலனான கோர்ணர் கிக் ஒன்று கிடைத்தது. அதன்போது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டதால் இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 78ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த வூட் வெக்ஹோர்ஸ்ட் நெதர்லாந்தின் ஹீரோவானார். அவர் 45ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர்கள் ஆசனத்தில் இருந்தபோது விதிகளை மீறியதால் மஞ்சள் அட்டைக்கு இலக்காகியிருந்தார்.

எனினும் மாற்றுவீராக களம் புகுந்த சொற்ப நேரத்தில் வெக்ஹோர்ஸ்ட் தலையால் முட்டி கோல் போட்டு (83 நி.) நெதர்லாந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

No description available.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் முரட்டுத்தனமாக விளையாடியதால் தொடர்ச்சியாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

உபாதையீடு நேரத்தில் மத்தியஸ்தருடன் மெஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மஞ்சுள் அட்டைக்கு (90  + 10 நி.) இலக்கானார். அடுத்த நிமிடத்தில் வூட் வெக்ஹோர்ஸ்ட் தனது இரண்டாவது கோலைப் போட்டு நெதர்லாந்து சார்பாக கோல் நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஆட்டம் 2 - 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மத்தியஸ்தரினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

30 நிமிட மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் வெற்றிகோலைப் போடத் தவறியதால் மத்தியஸ்தரினால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. இதில் 4 - 3 என ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆர்ஜன்டீனா சார்பாக லவ்டாரோ மார்ட்டினெஸ், கொன்ஸாலோ மொன்டியல், லியாண்ட்ரோ பரதேஸ், லயனல் மெஸி ஆகியோரும் நெதர்லாந்து சார்பாக லூக் டி ஜொங், வூட் வெக்ஹோர்ஸ்ட், டியன் கூப்மெய்னர்ஸ் ஆகியோரும் பெனல்டிகளை இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினர்.

என்ஸோ பெர்னாண்டஸ் (ஆர்ஜன்டீனா), ஸ்டீவன் பேர்குய்ஸ், வேர்ஜில் வன் டிஜ்க் (இருவரும் நெதர்லாந்து) ஆகியோர் பெனல்டிகளைத் தவறவிட்டனர்.

பெனல்டி முடிவில் இருவருக்கு மஞ்சுள் அட்டை காட்டப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சிவப்பு அட்டையைப் பெற்றார்.

மஞ்சள் அட்டைக்கு இலக்கானவர்கள்

 

நெதர்லாந்து: ஜுரியன் டிம்பர் (43 நி.), வூட் வெக்ஹோர்ஸ்ட்(45 10 2 நி.), மெம்ஃபிஸ் டிபே (76 நி.), ஸ்டீவன் பேர்கிஸ் (88 நி.), ஸ்டீவன் பேர்க்வின் (90 10 13 நி.), டென்ஸில் டம்ஃப்ரீஸ் (பெனல்டிகள் முடிவில் 2ஆவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டை), நொவா லங் (பெனல்டி முடிவில்)

 

ஆர்ஜன்டீனா: மார்க்கோஸ் அக்யூனா (43 நி.), கிறிஸ்டியன் ரொமீரோ (45 நி.), லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் (76 நி.), லியண்ட்ரோ பரதேஸ் (89 நி.), லயனல் மெஸி (901010 நி.), நிக்கலஸ் ஓட்டாமெண்டி (90 10 11 நி.), கொன்ஸாலோ மொன்டியல் (109 நி.), ஜேர்மான் பெஸெல்லா (112 நி.)

https://www.virakesari.lk/article/142695

தலையைத் திருப்பாமல் மெஸ்ஸி அடித்த 'அற்புத பாஸ்’

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அர்ஜென்டினா ரசிகர்கள் அரையிறுதிக்குச் சென்றுவிட்டதாக இரண்டு முறை கொண்டாடி இருப்பார்கள். 73-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்ட்டி மூலம் இரண்டாவது கோல் அடித்தபோது தங்களது அணி அரையிறுதிக்குச் சென்றுவிட்டது என நம்பியிருப்பார்கள். 

ஆனால் கடைசி நிமிடத்தில் அது இல்லை என்றாகிவிட்டது. அதன் பிறகு வெற்றிக்கான பெனால்ட்டியை மார்ட்டினஸ் வெற்றிகரமாக அடித்தபோது பெரும் நிம்மதியுடன் இரண்டாவது முறையாக அரையிறுதிக்குச் சென்றதை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள்.

நெதர்லாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை அடித்து சம நிலையில் இருந்ததால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

இதில் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் நெதர்லாந்தின் முதல் இரண்டு பெனால்ட்டிகளைத் தடுத்து அர்ஜென்டினாவுக்கு உறுதியான முன்னிலையைத் தந்தார்.

 
மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியால் இந்தப் போட்டியில் ஆட்ட நேரத்தில் கள கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பெனால்ட்டியில் ஒரு கோலும், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒன்றும்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனாலும் அவர்தான் அர்ஜென்டினா வீரர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற வீரர்.

அதற்கும் காரணம் உண்டு. போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமாக பந்தைக் கடத்தி மொலினா கோல் அடிக்க உதவினார். பந்தை முன்புறமாக கோலை நோக்கி கடத்திக் கொண்டு வந்து பின்னர் முகத்தைத் திருப்பாமலேயே வலது புறமாக சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த மொலினாவை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். 

அது நெதர்லாந்து வீரர்கள் பலரைக் கடந்து சரியாக மொலினாவைச் சென்றடைந்தது. இதனை அற்புதமான பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்.

கோல்கீப்பர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினா சறுக்கியது எங்கே?

தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினாவைவிட நெதர்லாந்தே அதிகமாகப் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 83-ஆவது நிமிடம் வரை மெஸ்ஸி நினைத்தது போலவே போட்டியின் போக்கும் இருந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது. ஆட்டம் முடிவதற்குச் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன என்பதால் போட்டியில் வெல்வது உறுதி என்றே அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் எண்ணியிருப்பார்கள்.

ஆனால் 83-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெகரோஸ்ட் தலையால் முட்டி முதலாவது கோலை அடித்தார். 90 நிமிடங்கள் முடிந்த பிறகு இழப்பீடாக 10  நிமிடங்கள் தரப்பட்டன. அதன் கடைசி நொடிகளில் ப்ரீகிக் வாய்ப்பு மூலம் மற்றொரு கோலை அவர் அடித்ததால் ஆட்டம் சமநிலைக்குச் சென்றது. 

ப்ரீகிக்கை அடிக்கும்போது பந்து கோலுக்குள் செல்லாமல் தடுப்பதற்காக அர்ஜென்டினா வீரர்கள் அமைத்திருந்த அரணை வித்தியாசமான முறையில் ஏமாற்றி கோலாக்கினர் நெதர்லாந்து வீரர்கள். இதன் பிறகு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. 

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசியாக பெனால்ட்டி ஷூட் அவுட் மூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்தின் முதல் இரண்டு பெனால்ட்டிகளையும் அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் அபாரமான முறையில் தடுத்துவிட்டார். ஆனால் அடுத்த மூன்று பெனால்ட்டிகளையும் நெதர்லாந்து வீரர்கள் கோலுக்குள் அடித்தனர்.

அதே நேரத்தில் அர்ஜென்டினாவுக்கான 4-ஆவது பெனால்ட்டியை என்ஸோ பெர்னான்டஸ் தவறவிட்டார். ஆனால் வெற்றிக்கான கடைசி பெனால்ட்டியை மார்ட்டினஸ் கோலாக்கியதால் 4-3 என்ற பெனால்ட்டி ஷூட் அவுட் புள்ளிகளின் அடிப்படையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

எளிதாகப் பெற இருந்த வெற்றி கைநழுவிப் போய் மீண்டும் கிடைத்தபோது அர்ஜென்டினா ரசிகர்கள் கூடுதலாகவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்து ஆடும் வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்திருக்கிறது.

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியின் சாதனை

நெதர்லாந்துடனான போட்டியில் பெனால்ட்டி முறையில் ஒரு கோல் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை போட்டிகளில் 10 கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மெஸ்ஸி. 

அர்ஜென்டினாவுக்காக அதிக உலகக் கோப்பை கோல்களை அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவின் சாதனையை அவர் எட்டிப் பிடித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக அர்ஜென்டினாவுக்காக அவர் ஆடிய 169 போட்டிகளில் 94 கோல்களை அடித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv27035nl8xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

By SETHU

10 DEC, 2022 | 10:56 PM
image

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது.

போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் யூசெப் என் நெசிரி கோல் புகுத்தினார்.

Youssef-En-Nesyri---of-Morocco---vs-Port

 

உபாதை ஈடு நேரத்தில் மொரோக்கோ வீரர் வலீத் செதேராவுக்கு 2 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டு அவை சிவப்பு அட்டையாக மாற்றப்பட்து. இதனால் கடைசி கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடு; நிலைக்கு மொரோக்கோ தள்ளப்பட்டது.

மொரோக்கோ அணி முதல் தடவையாக உலகக்கிண்ண அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளது

ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று உலகக் கிண்ண அரை இறுதிக்கு தகுதி பெற்றமை இதுவே முதல் தடவையாகும். 

போர்த்துகல் அணி வீரர் கிறிஸ்டியானோ தொடர்ச்சியாக 2 ஆவது போட்டியிலும் ஆரம்ப வீரர்கள் வரிசையில் இடம்பெறவில்லை. 

இன்றைய போட்டியில் அவர் 51  ஆவது நிமிடத்திலேயே களமிறக்கப்பட்டார்.  இப்போட்டியில் போர்த்துகல் தோல்வியுற்றபின் ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்

Ronaldo-vs-Moracco--AFP-Photo.jpg

Ronaldo-1.jpg

https://www.virakesari.lk/article/142764

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே போட்டியில் 18 மஞ்சள் அட்டைகள்: உ லகக் கிண்ணத்தில் புதிய சாதனை

By SETHU

11 DEC, 2022 | 12:43 PM
image

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தில், ஆர்ஜென்டீன- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால் இறுதிப் போட்டியில் மஞ்சள் அட்டைகளால் புதிய சாதனை படைக்கப்பட்டது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில் ஆர்ஜெடீன அணி பெனல்ட்டி முறையில் 4:2 விகித்தில் வென்றது.

இப்போட்டியின்போது 18 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

ஆர்ஜென்டீன குழாமில் 8 வீரர்களுக்கும் அவ்வணியின் பயிற்றுநர் லயனல் ஸ்காலோனி உதவிப் பயிற்றுநர்  ஆகியோருக்குமாக  10  மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. 

Argenina-Nehterlands---World-cup.jpg

அதேவேளை நெதர்லாந்து குழாமில் 7 பேருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. அவர்களில் டென்ஸில் டம்பிரீஸக்கு 2 மஞ்சள் அட்டை காட்டப்பட்டதையடுத்து, சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டது.

ஸ்பானிய மத்தியஸ்தர் அன்டோனியோ மெத்தேயு லாஹோஸினால் இம்மஞ்சள் அட்டைகளும் சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டன.

உலகக் கிண்ணப் போட்டியொன்றில் 18 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டமை புதிய சாதனையாகும். இதற்கு முன்னர், 2006 ஆம் ஆண்டு போர்த்துகல்,  நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது  16 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டமையே சாதனையாக இருந்தது. (அப்போட்டியில் 4 சிவப்பு அட்டைகளும் காண்பிக்கப்பட்டன.

Messi-Yelow-card.jpg

இதேவேளை, 5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில், குரோஷியா பெனல்டி முறையில் 3:2 கோல் விகிதத்தில் வென்றன.

குரோஷியாவும் ஆர்ஜென்டீனாவும் நாளை மறுதினம் (13) அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்கத்கது. 

 ஆர்ஜெடீன- நெதர்லாந்து போட்டியில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டவர்கள் :

ஆர்ஜன்டீனா: 

மார்க்கோஸ் அக்யூனா, கிறிஸ்டியன் ரொமீரோ, லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ், லியண்ட்ரோ பரதேஸ், லயனல் மெஸி, நிக்கலஸ் ஓட்டாமெண்டி, கொன்ஸாலோ மொன்டியல், ஜேர்மான் பெஸெல்லா,  பயிற்றுநர் லயனல் ஸ்காலோனி, உதவிப் பயிற்றுநர் வோல்ட்டர் சாமுவெல்.

நெதர்லாந்து: 

ஜுரியன் டிம்பர், வூட் வெக்ஹோர்ஸ்ட், மெம்ஃபிஸ் டிபே, ஸ்டீவன் பேர்கிஸ், ஸ்டீவன் பேர்க்வின், நொவா லங் , டென்ஸில் டம்ஃப்ரீஸ் (2ஆவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டை).

https://www.virakesari.lk/article/142798

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபப்பட்ட மெஸ்ஸி... வைரலான வீடியோ - பின்னணி என்ன?

மெஸ்ஸி , கால்பந்து உலகக்கோப்பை

பட மூலாதாரம்,PA MEDIA

 
படக்குறிப்பு,

மெஸ்ஸி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"என்ன பார்க்கிறாய் முட்டாளே. அங்கே போ." உலக கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை பேட்டியளித்த லியோனல் மெஸ்ஸி கூறிய இந்த வாசகம் சமீப நாட்களாக வைரலாக பரவி வருகிறது. மீம்ஸ்கள், டிக்டாக் காணொளிகள், பாடல்கள், தொப்பிகள், டி-ஷர்ட்கள், காபி கோப்பைகள் என எல்லா இடங்களிலும் அழிக்கமுடியாததாக மாறிவிட்டது இவ்வாசகம். ஆனால், தொலைக்காட்சிகளால் படம்பிடிக்கப்பட்ட அர்ஜென்டினா நட்சத்திரத்தின் இந்த அவமதிப்பு யாரை நோக்கி இருந்தது ?

மெஸ்ஸி , கால்பந்து உலகக்கோப்பை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

வூட் வெகோர்ஸ்ட்

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சூழ்ந்த பதற்றம்

இறுதி கட்டம் வரை பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நெதர்லாந்து உடனான அந்த காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

ஆட்டநேர இறுதியில் நெதர்லாந்து வீரர் வூட் வெகோர்ஸ்ட் அடித்த கோலின் மூலம் 2-2 என கோல் எண்ணிக்கை சமநிலையை எட்டியதைத் தொடர்ந்து, ஆட்டம் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையை நோக்கி நகர்ந்தது.

ஆட்டம் நெடுகிலும் இரு அணி வீரர்களுக்கிடையேயும் சிறுசிறு மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. போட்டி முடிந்த பிறகு, TyC ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கினார் மெஸ்ஸி.

 

இந்த நேர்காணலில் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன்னர் தொலைவில் நிற்கும் யாரோ ஒருவரைப் பார்த்து, "என்ன பார்க்கிறாய் முட்டாளே..? நகர்ந்து போ" என்று அவர் கூறுவதைக் கவனிக்க முடிந்தது.

ஆனால், அவர் யாரிடம் இவ்வாறு பேசுகிறார் என்பதை அந்த காணொளியில் பார்க்க முடியவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஆனால், அப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்த நெதர்லாந்து வீரர் வூட் வெகோர்ஸ்ட்டிடம் தான் மெஸ்ஸி அவ்வாறு பேசினார் என்பது, இந்த சம்பவத்தின்போது மற்றொரு பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட வேறொரு காணொளி வாயிலாகத் தெரிய வந்தது. ஆட்டம் முடிந்த பிறகு, மெஸ்ஸியுடன் கைகுலுக்கிக்கொண்டு அவரது ஜெர்ஸியை பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே வெகோர்ஸ்ட் மெஸ்ஸியை அணுகியதாகவும், ஆனால் மெஸ்ஸி அதனை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாது, அர்ஜென்டினாவைச் சேர்ந்த லௌடாரோ மார்டினெஸ் மற்றும் கத்தாரில் வர்ணனையாளராகச் செயல்படும் 'குன்' அகுரோ ஆகியோருடனும் அந்த நெதர்லாந்து வீரர் வாக்குவாதம் செய்வதைக் காணமுடிகிறது. செர்ஜியோ அகுரோவின் கூற்றுப்படி, அர்ஜென்டினா கேப்டன் பேட்டியளிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த போது, வெகோர்ஸ்ட் ஆத்திரமூட்டும் மனப்பான்மையில் அவரை தூரத்தில் இருந்து பார்த்து 'ஏய், மெஸ்ஸி, ஏய், மெஸ்ஸி' என்று கூறியுள்ளார்.

அப்போதுதான், "என்ன பார்க்கிறாய் முட்டாளே. அங்கே போ." எனக் கூறியுள்ளார் மெஸ்ஸி. இந்த சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள வெகோர்ஸ்ட், தனது பக்க விளக்கத்தையும் கூறியுள்ளார். அதன்படி, "போட்டிக்குப் பிறகு நான் அவருடன் கைகுலுக்க விரும்பினேன். ஒரு கால்பந்து வீரர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

ஆனால் அவர் எனக்கு கை கொடுக்கவில்லை. என்னுடன் பேச விரும்பவில்லை. எனக்கு ஸ்பானிஷ் அந்த அளவுக்குத் தெரியாது. ஆனால், அவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளைக் கூறினார். எனக்கு அது ஏமாற்றமளிக்கிறது, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்" என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c516z9qj9j7o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.