Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 03:05 PM
image

இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலனறுவையில்  ஏழு சிவாலயங்களை நிறுவினான்.

இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் மொழியே இருந்தது. 

நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

வரலாற்றை நோக்குகின்ற போது பத்தாம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இந்தியாவில் இருந்து படையெடுத்த இராஜராஜ சோழன் இலங்கை தலைநகராக இருந்திருந்த அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்தினான்.

பின்னர் போரில் அனுராதபுரம் வீழ்ச்சியுற தெற்கே உள்ள பொலனறுவையை கைப்பற்றி தலைநகரமாக்கினான்.

SAVE_20221112_162724.jpg

1007 காலப் பகுதியில் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன்  இலங்கையை கைப்பற்றி முழு இலங்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.

அக் காலத்தில் ராஜேந்திர சோழன் அங்கு ஏழு சிவன் ஆலயங்களை உருவாக்கினான். அது மாத்திரம் அல்ல இலங்கையின் பல பாகங்களிலும் ஆலயங்களை அமைத்ததில் ராஜேந்திர சோழனுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.

1070 ஆண்டு வரை ராஜேந்திரசோழன் அதனை சிறப்பாக பராமரித்து வந்தான். இலங்கையில் 77 ஆண்டுகள் சோழர் ஆட்சி காலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

SAVE_20221112_162432.jpg

அதன் போது இலங்கையில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்த ஆலயங்களின் எச்சங்கள் பொலன்னறுவை நகரில் காணப்படுகிறது.

 கடந்த வாரம் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற பொழுது அதனை காண முடிந்தது. அதன் சில பாகங்களை இங்கு நீங்கள் காணலாம்.

சோழர்கள் ஆட்சிகாலத்தில் "ஜனநாதமங்கலம் " என பொலனறுவை அழைக்கப்பட்டது. அந்தளவிற்கு இலங்கையில் சைவசமயம் மேலோங்கி இருந்தது.

SAVE_20221112_162251.jpg

SAVE_20221112_162647.jpg

SAVE_20221112_162352.jpg

SAVE_20221112_162425.jpg

SAVE_20221112_162339.jpg

SAVE_20221112_162329.jpg

SAVE_20221112_162448.jpg

SAVE_20221112_162521.jpg

SAVE_20221112_162601.jpg

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நொச்சி.

இதை விட புராதனமான, சோழர் கருங்கல் கட்டிடகலைக்கு மாற முன்னம் கட்டிய செங்கல் சிவாலயம் ஒன்று குருநாகல மாவட்டத்தில் இருக்கிறதாம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக மேலோட்டமாக தெரிந்தாலும்,

1. சோழர்கள் இராஜராஜன், இராஜேந்திரன் காலத்தில் முதல் முதலாக இலங்கை வந்தவர்கள் இல்லையே ? கிமு 205 இலேயே எல்லாளன் பொலநறுவையில் ஜனநாதமங்களம் என்ற தலை நகரை நிருமாணித்து ஆட்சி செய்தார் என சிங்கள் நூல்களே ஏற்கிறனவே?

2. இதை கூட சோழர் படை எடுப்பு என்று பார்த்தால் - அதற்கு முன்னும் தேவநம்பிய தீசன் என்ற தமிழ் மன்னந்தானே இலங்கையில் பெளத்தத்தை ஏற்ற முதல் மன்னன்? அவர் பெளத்தத்தை தழுவிய மிகுந்தலை (மிகிந்தலே) வடமத்திய மாகாணத்தில்தானே உள்ளது?

3. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் (கிமு 367) ஆண்ட தலைநகர் அனுராதபுரம் அல்லவா?

மேலே நான் சொன்னவை எல்லாமுமே மஹாவம்சம் கூட ஏற்கும் தரவுகள்.

ஆகவே இலங்கையில் சிங்கள இனம், மொழி தோன்ற முன்பே தமிழர்களும், தமிழ் மொழியும், ஆட்சி பீடம் ஏறிவிட்டன, குறிப்பாக வடமத்திய மாகாணத்தில்.

உண்மையில் வடக்கு, கிழக்கு, புத்தளத்தை போல தமிழர் பாரம்பரிய மண்தான் வடமத்திய மாகாணமும்.

ஆனால் இப்போ நாம் அவற்றை இழந்து விட்டோம் (சேர்பியர்கள் கொசோவொவை இழந்தது போல்). 

ஆகவே சோழர்கள் தமிழ் மண்ணில்தான் கோயில் கட்டினார்கள். அதேபோல் விகாரைகளையும் போசித்தே வந்துள்ளார்கள்.

உண்மையில் இடைக்கால சோழர்கள் மிலேச்சர்களாக இருந்திருந்தால் இலங்கை தீவில் இருந்து பெளத்த மதத்தையும், சிங்கள இனத்தையும் வழித்து துடைத்திருப்பார்கள். ஆனால் அப்படி செய்யவில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, island said:

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

முன்னோர் செய்த பாவங்கள் இப்போது பலிக்கின்றதோ?????

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2022 at 06:39, island said:

சோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

 சரியாகச் சொன்னீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.