Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல என்கிறார் சரத் வீரசேகர!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவு பாதுகாப்பு ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்!

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல என்கிறார் சரத் வீரசேகர!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1316465

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதெப்படி இவருக்கு தெரியும்? இவர் என்ன தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியா? தமிழ் மக்கள் சார்பாக கருத்துரைக்க இவர் யார்? யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1316465

பெரும்பான்மை மக்களும், தமிழ் மக்களும் இவர்களிடம் ரகசியமாக சொல்லி இருக்கின்றனர் போல.

தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஒரு குடியொப்பம் வைத்து, தெரிஞ்சு கொண்டால் போச்சுதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஒரு குடியொப்பம் வைத்து, தெரிஞ்சு கொண்டால் போச்சுதே.


சிறிலங்கா அரசுக்குமட்டுமல்ல, எமை அழித்தொழிக்க உதவிய இந்தப்பெரும் பெரும் சனநாயக(?) மேற்கென்று பாடமெடுத்துகொண்டிருக்கும் இவர்களுக்கு சனநாயக முதுகெலும்பிருந்தால் எங்கே ஒரு  குடியொப்பத்தைத்  தமிழரிடம் வைத்து முடிவெடுக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:


சிறிலங்கா அரசுக்குமட்டுமல்ல, எமை அழித்தொழிக்க உதவிய இந்தப்பெரும் பெரும் சனநாயக(?) மேற்கென்று பாடமெடுத்துகொண்டிருக்கும் இவர்களுக்கு சனநாயக முதுகெலும்பிருந்தால் எங்கே ஒரு  குடியொப்பத்தைத்  தமிழரிடம் வைத்து முடிவெடுக்கலாமே?

குடியொப்பம் இனி நாமாக உருவாக்க வேண்டியது தான்.

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில், வாக்குசீட்டினை செல்லுபடி இல்லாமல் செய்து, (யாருக்கும் வாக்களியாமல் அல்லது சகலருக்கும் புள்ளடி ) இது தான் எமது முடிவு என்று அறிவிக்கலாம். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.