Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த கனவு, ஆன்டன் பாலசிங்கம்!

Featured Replies

தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை!

மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம்.

தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம்.

‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது.

சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘அமைதிப்படை’னு விரல் விட்டு எண் ணக்கூடிய அளவுல ரொம்ப ஏழையா இருக்கேன்.

வயசானாலும் இங்கே வண்டியோட்ட லொள்ளு ஜொள்ளுனு சில அயிட்டங்கள் இருக்கு. ஆனா அதெல்லாம் நிக்குமா? ‘பெரியார்’ ஓர் ஆத்மார்த்தமான கனவு. அது நிறை வேறினதுதான் இப்ப மாதவ படை யாட்சியா என்னைக் கோவணம் கட்ட வெச்சிருக்கு!’’& மலர்ந்து சிரிக்கிறார் சத்யராஜ்.

‘‘அட கெரகம்! இங்க நெஜமான மனுசங்களைத் தரிசிக்கிறது ரொம்பக் கஷ்டம். மனிதம், புனிதம்னு மைக்ல பேசிட்டுப் போயிடலாம். எத்தனை பேர் அப்படி நிஜமா வாழ்றான்? அப்படி சத்தியமா வாழ்ந்த மனுசன் மாதவ படையாட்சி. பட்டி ஆடுக கத்துனாலே உசிரு உடைஞ்சு போற மனுசன். காத்து எப்போ வீசும், மேகம் எப்போ கறுக்கும், எந்தப் பொழுதுல மழை வரும், எப்போ பருத்தி வெடிக்கும்னு பருவம் பூராத்தையும் உள்ளங் கையில் வெச்சிருப்பாரு. உறவுகளுக்காகவே உசிரு வளர்க்கிற ஆளு. தான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா செத்தே போவாரு. நீங்களும் நானும் ஜென்மத்துக்கும் அப்படி இருக்க முடியாது. நானாச்சும் மாதவப் படையாட்சியா நடிச்சு என்னோட ஏக்கத்தைத் தீத்துக் கிறேன். நீங்க படத்தைப் பார்த்துத் தீத்துக்க வேண்டியதுதான்!’’ &எதிர்க்காற்றில் அலைபாய்கிற தோள் துண்டைச் சரிசெய்கிறார்.

‘‘தைரியமா நல்ல சினிமாவை பத்திப் பேசுற மனிதரா சத்யராஜ் மாறினது எப்போ?’’

‘‘மனுஷன்னா, நல்லதுக்கு மாற வேண்டியதுதானே! இதில் கோவணம் கட்டிக்கிட்டு நடிக்கணும்னு தங்கர் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். நான் முதல்ல ரொம்ப யோசிச்சேன். ஆனா, கதையும் தங்கர் தன் உயிரைக் கொடுத்து அதைப் பதிவு செய்யுற விதத்தையும் பார்த்த பின்னாடி, நான் கோவணம் கட்டி நடிக்கிறதுதான் நியாயம்னு பட்டது. சர்வதேசத் தரம்னு சொல்றோம் இல்லையா, அப்படி ஒரு முயற்சிதான் இந்தப் படம்.

லொள்ளு, ஜொள்ளு படங்களாப் பண்றப்போ, என்னை கமல் சார் எங்கே பார்த்தாலும், ‘‘என்ன சார்? இந்த மாதிரியெல்லாம் நடிச்சுட்டு இருக்கீங்களே, உங்களை என்ன மாதிரி இடத்தில் நினைச்சு வெச்சிருக்கேன் தெரியுமா?’’னு வருத்தமா விசாரிப்பார். கமல் சார் மனசில் இருக்கிற மனுஷனா, நடிகனா எனக்குக் கிடைச்ச படம் இது!’’

‘‘தங்கர் இயக்கத்தில் நடிப்பது எப்படி இருக்கு?’’

‘‘நமக்கு அவுட்டோர் ஷ¨ட்டிங்னா பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி, கொடைக்கானல்னு போய்த்தான் பழக்கம். இப்படியரு திசை இருக்குன்னே ரொம்பப் பேர் அறியாமல் இருக்காங்க. முந்திரியும் பலாவும் மணக்கிற இந்தப் பூமியின் சரித்திரம் முதன்முதலாகப் பதிவாகிற சந்தோஷம் தங்கருக்கு. அதுக்கு உதவுறேன்கிற பூரிப்பு எனக்கு. படம் பார்த்தால், ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த நிம்மதி உங்களுக்குக் கிடைக்கும்.’’

‘‘இந்த மாதிரி தேடல் இன்றைய இளம் நடிகர்களுக்கும் வரணுமில்லையா?’’

‘‘ஏன் அவசரப்படணும்? எனக்கே இப்போதானே புத்தி வந்திருக்கு. அடடா, சினிமாவில் காசு பார்த்தோமே தவிர, வேற என்னடா பண்ணியிருக்கோம்னு பதறிப்போய் மாறின விஷயம்தானே இதெல்லாம்!

விஜய் ‘போக்கிரி’ மாதிரி இருந்தால்தான் நல்லது. ‘பிதாமகன்’ விக்ரமுக்குதான் சரியா இருக்கும். நமக்கு ‘சிவாஜி’, ‘போக்கிரி’யும் வேணும்... ‘மொழி’, ‘பருத்தி வீரன்’களும் வேணும். நானும் அவங்க வயசில் கிளைகிளையாத் தாவிக்கிட்டேதான் இருந்தேன். இப்போதானே வானத்தைத் தேர்ந்தெடுத்திருக்கேன். பறக்கிற நேரம்தான் பறவைக்கு அழகு!’’

‘‘நீங்க சீனியர். இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் ரொம்ப நம்பிக்கையா யார் இருக்காங்க?’’

‘‘நிறையப் பேர் இருக்காங்க. ‘வரலாறு’ அஜீத், ‘பிதாமகன்’ விக்ரம், ‘கஜினி’ சூர்யா, ‘பருத்திவீரன்’ கார்த்தின்னு ஆளாளுக்குப் பிரமாதமா வெளிப்படுறாங்க. பரத்துக்கு சின்ன வயசு... ஆனாலும் ‘நேபாளி’ மாதிரி கேரக்டர் பண்றேன்னு வேஷப் பொருத்தத்தில் நிற்கிறார். ஆனால், தலைசிறந்த நடிகர்னு யாரையும் சொல்லத் தோணலை.

ஏன்னா, சிவாஜி இருந்த காலத்திலேயே எம்.ஆர்.ராதா, ரங்காராவ்னு சரிக்குச் சரியா நிறையப் பேர் இருந்தாங்க. சொல்லப்போனா, சிவாஜிக்கே பிடிச்ச நடிகர் எம்.ஆர்.ராதாதான். ஆனால், யார் சூப்பர் ஸ்டார் மாதிரி வருவாங்கன்னு கேளுங்க... சொல்றேன். சிவாஜி இருந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்.தான். இப்ப சூப்பர் ஸ்டாரா ரஜினி இருக்கிற காலத்திலும், கமர்ஷியல் சூப்பர் ஸ்டார்னா விஜய்தான்... இதுதான் சாதனை!’’

‘‘தமிழ் சினிமா இன்னும் மெருகேற உங்கள் யோசனைகள் என்ன?’’

‘‘முதலில் காதலை விட்டுத் தொலைக்கணும் சார். காதல், டூயட்னு சுத்திட்டே இருப்பதால் தான் எத்தனையோ நல்ல கதைகள் இன்னும் சினிமாவில் சொல்ல வழியில்லாமல் இருக்கு. ‘வெயில்’ல வசந்தபாலன்கூட காதலைத்தான் சொன்னார்... ஆனா, அதில் நாம் தரிசிக்காத உலகம் இருந்ததா இல்லையா?

‘மொழி’யைப் பார்த்துட்டு எல்லார் கிட்டேயும் நாம இன்னும் கொஞ்சம் அன்பா இருக்கணும்னு தோணுச்சு. ‘பருத்திவீரன்’ காட்டினது நம்ம உலகம். இன்னும் அப்படியரு வன்முறையும் மூர்க்கமும் இருந்துகிட்டேதானே இருக்கு! தங்கர் ‘அழகி’யில் கொண்டுவந்தது எவ்வளவு அழகான காதல். இப்படி நான் சொல்லும்போதே ‘சிவாஜி’யும் வேணும்னுதான் சொல்றேன். இன்னிக்கு லண்டனில் டாப்டென் வரிசையில் ‘சிவாஜி’யும் இருக்குன்னா, அது பெருமை தான்!’’

‘‘இன்னும் கனவில் இருக்கிற கேரக்டர் என்ன?’’ ‘‘

எப்பவும் இருந்த கனவு ‘பெரியார்’!

மனதில் இருக்கிறதை உடனே சொல்லிடணும். ஆறப்போட்டால் அதை வேற ஆள் தன்னோட கனவா வெளிப் படுத்துவாங்க. ‘பெரியார்’ ஷ¨ட்டிங்கில் நிழல்கள் ரவியும் சந்திரசேகரும், ‘டேய், உன் முகம் அப்படியே ஆன்டன் பாலசிங்கம் மாதிரி இருக்கு’ன்னு சொன்னாங்க. எனக்குச் சந்தோஷமா இருந்தது. மாபெரும் விடுதலை இயக்கத்தின் தூண் பாலசிங்கம். ஈழ மக்கள் அவரை மாபெரும் மனிதனராகக் கொண்டாடுகிற மாதிரி நானும் மதிக்கிறேன். பாலசிங்கத்தின் மனைவி அடேல் எழுதிய வாழ்க்கைக் கதையைப் பின் பற்றி யாராவது படம் தயாரிக்க முன் வந்தால், ஒரு பைசாகூட வாங்காமல் நடிக்கத் தயாரா இருக்கேன். என்னுடைய இந்த இரண்டாவது கனவும் நிறைவேறும்!’’

நன்றி விகடன்

ஈழ மக்கள் அவரை மாபெரும் மனிதனராகக் கொண்டாடுகிற மாதிரி நானும் மதிக்கிறேன். பாலசிங்கத்தின் மனைவி அடேல் எழுதிய வாழ்க்கைக் கதையைப் பின் பற்றி யாராவது படம் தயாரிக்க முன் வந்தால், ஒரு பைசாகூட வாங்காமல் நடிக்கத் தயாரா இருக்கேன். என்னுடைய இந்த இரண்டாவது கனவும் நிறைவேறும்!’’

இப்படி ஒருவரா பாராட்ட தான் வேண்டும்........... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொச்சைப்படுத்திவிடுவார்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கத்தின் வேடமேற்று நடிப்பதே சத்தியராஜின் கனவு

[31 - August - 2007]

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வேடத்தில் நடிக்க வேண்டுமென்பதே தனது அடுத்த கனவென தெரிவித்துள்ள `பெரியார்' சத்தியராஜ் அந்த தன்மானத் தமிழனின் வேடத்தில் நடிப்பதற்காக தனக்கு ஒரு சதம் கூட சம்பளமாகத் தேவையில்லையெனவும் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் வார சஞ்சிகைக்கு அளித்த பேட்டியொன்றிலேயே சத்தியராஜ் மேலும் கூறியதாவது;

தமிழ் சினிமாவில் முதலில் காதலை விட்டுத் தொலைக்க வேண்டும். காதல், டூயட் என்று சுற்றிக் கொண்டே இருப்பதால் தான் எத்தனையோ நல்ல கதைகள் இன்னும் சினிமாவில் சொல்ல வழியில்லாமல் உள்ளது.

சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனாக ஆரம்பித்து கதாநாயகனாக பரபரப்பாக வாழ்ந்திருக்கிறேன். இத்தனை காலத்தில் உருப்படியாக என்ன பண்ணினேன் என்று உட்கார்ந்து யோசித்தால் கணக்கு ரொம்ப இடிக்குது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு, கடலோரக் கவிதைகள், வேதம்புதிது, அமைதிப்படை என்று விரல் விட்டு எண்ணக் கூடியளவுக்கு மிகவும் ஏழையாக இருக்கிறேன்.

பெரியார் ஓர் ஆத்மார்த்தமான கனவு. அது இப்போது நிறைவேறிவிட்டது.

எனக்கு இன்னும் கனவில் இருக்கிற கதாபாத்திரமொன்று உள்ளது.

மனதில் இருப்பதை உடனே சொல்லிவிட வேண்டும். அதை ஆறப்போட்டால் வேறு ஆள் தன்னுடைய கனவென உரிமை கோரிவிடுவார்.

`பெரியார்' படப்பிடிப்பில் நிழல்கள் ரவியும் சந்திரசேகரும் டேய் உன்முகம் அப்படியே அன்டன் பாலசிங்கம் மாதிரி இருக்கிறதென்று கூறினார்கள். எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?

மாபெரும் விடுதலை இயக்கத்தின் தூண் பாலசிங்கம். ஈழமக்கள் அவரை மாபெரும் மனிதராக கொண்டாடுவதைப் போல் நானும் அவரை மதிக்கிறேன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி எழுதிய வாழ்க்கைக் கதையை பின்பற்றி யாராவது படம் தயாரிக்க முன் வந்தால் ஒரு சதம் கூட வாங்காமல் நடிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இந்த இரண்டாவது கனவும் நிறைவேறும்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியராஜிற்கு ஒரு ஓ போடுவோமா?ஓ போடுவோம்

முயற்சிகள் வெற்றி பெற மட்டுமல்லாது அதன் முலம் மேலும் தமிழினம் பற்றிய நிலைப்பாடுள் துன்பங்ள் வெற்றிகள் போன்றவற்றை திறம்பட வெளிப்படுத்திட வாழ்ததுக்கள் .

Edited by puthijavan

அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி எழுதிய வாழ்க்கைக் கதையை பின்பற்றி யாராவது படம் தயாரிக்க முன் வந்தால் ஒரு சதம் கூட வாங்காமல் நடிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இந்த இரண்டாவது கனவும் நிறைவேறும்.

மனம் திறந்த பாராட்டுகள் சத்திராஜயிற்கு..........அங்கால ஒருவர் அது தான் தாடி ராஜேந்தர் இப்படி எங்கையாவது ஒரு சொல் சொல்லி இருகிறாறா இல்லையே ஆனா இவர் நேரடியாக ஒரு சதம் இல்லாம நடிகிறேன் என்று சொல்லி இருகிறார் செய்தும் காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருகிறது.........இப்படிபட்ட ஆட்கள் தான் வேண்டும் இவர்களுக்கு தான் மரியாதை கொடுக்க வேண்டும்............ :icon_mrgreen::lol:

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.