Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது !

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 02:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தரப்பினருடனான சுதந்திர மக்கள் சபை ஆகியோர் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அடிப்படையில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

கூட்டணி அமைப்பது தொடர்பில இத்தரப்பினருகளுக்கிடையில் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. ஒரு அரசியல் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்காமல் தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்க இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்பத்தி தலைமைத்துவ சபை ஒன்றை ஸ்தாகிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்தாபிக்கப்படும் நிறைவேற்று சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 40 சதவீத அங்கிகாரத்தையும், சுதந்திர மக்கள் சபைக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும், மேலவை இலங்கை கூட்டணிக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்று பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்படும் அரசியல் கூட்டணிக்கு 'சுதந்திர மக்கள் கூட்டணி'என பெயரிட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டதும் இந்த பரந்துபட்ட அரசியல் கூட்டணியை    ஸ்தாபிக்க   உள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிரேஷ்ட தலைவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/144748

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது !

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 02:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தரப்பினருடனான சுதந்திர மக்கள் சபை ஆகியோர் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அடிப்படையில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

கூட்டணி அமைப்பது தொடர்பில இத்தரப்பினருகளுக்கிடையில் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. ஒரு அரசியல் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்காமல் தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்க இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்பத்தி தலைமைத்துவ சபை ஒன்றை ஸ்தாகிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்தாபிக்கப்படும் நிறைவேற்று சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 40 சதவீத அங்கிகாரத்தையும், சுதந்திர மக்கள் சபைக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும், மேலவை இலங்கை கூட்டணிக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்று பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்படும் அரசியல் கூட்டணிக்கு 'சுதந்திர மக்கள் கூட்டணி'என பெயரிட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டதும் இந்த பரந்துபட்ட அரசியல் கூட்டணியை    ஸ்தாபிக்க   உள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிரேஷ்ட தலைவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/144748


இவங்கள் தங்கடை கூட்டணியிலை, விமலை ஏன் சேர்த்தவங்கள்? 😂
விமல் வந்து… எங்கடை சுமந்திரன் மாதிரி, குறுக்காலை பாய்ஞ்சு கொண்டு நிற்கும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பரந்துப்பட்ட கூட்டணி : இவ்வாண்டில் புதிய ஆட்சிக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் - தயாசிறி

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 03:02 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் 27 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவ்வாண்டு புதிய ஆட்சி அமைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சு.க. அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன. 02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டிலுள்ள முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து கூட்டணியமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். மக்களின் உண்மையான நிலைப்பாடுகளுக்கமைய ஆட்சியமைக்கப்பட வேண்டும். அதற்கு இவ்வருடத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் கிளர்ச்சிகள் ஏற்பட்டதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் செலவுகள் ஏற்படும் என்று தேர்தல் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது.

அந்த நிதி இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி இல்லை என்பதை அரசாங்கம் காரணமாகக் கூற முடியாது.

சுதந்திர கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தில் இணைந்தவர்கள் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சுதந்திர கட்சியின் கொள்கையைப் பின்பற்றாதவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். இவர்கள் தமது அமைச்சுப்பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் இவர்கள் தமது அமைச்சுப்பதவிகளை துறந்து , மீண்டும் எம்முடன் இணைய விரும்பினால் அதனை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம். முற்போக்கான கூட்டணியொன்றை அமைப்பதற்காக இதுவரையில் 27 அரசியல் கட்சிகள் , அமைப்புக்கள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்தலில் சிறந்த வெற்றிகளை பதிவு செய்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/144761

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:


இவங்கள் தங்கடை கூட்டணியிலை, விமலை ஏன் சேர்த்தவங்கள்? 😂
விமல் வந்து… எங்கடை சுமந்திரன் மாதிரி, குறுக்காலை பாய்ஞ்சு கொண்டு நிற்கும். 🤣

இவர்கள் பலமிழக்கும், மொட்டுக் கட்சியில் இருந்து எம்பிகளை கிளம்பி ஆட்சி அமைக்க முணைவதே நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இவர்கள் பலமிழக்கும், மொட்டுக் கட்சியில் இருந்து எம்பிகளை கிளம்பி ஆட்சி அமைக்க முணைவதே நோக்கம்.

இருக்கலாம். மொட்டுக் கட்சி, தாங்கள் பலமானவர்கள் போல் 
சவுண்டு விட்டுக் கொண்டிருந்தாலும், கள நிலைமை படு மோசம். என  நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் பலத்தை அறிந்து விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.