Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை

2-19-780x274.jpg

75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

அயலக தமிழர் தின நிகழ்வானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. விசேடமாக, நலிந்து, மெலிந்து இருக்கின்ற இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது.

எமக்கு ஒன்றென்றால் வெறும் முப்பது கிலோமீற்றர்கள் தொலைவிலே உள்ள தமிழகத்தில் எமது அண்ணன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையுடனும், பெருமையுடனும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் தமிழர்கள் அல்லல்பட்ட தருணங்களில் எல்லாம் தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஐயா அவர்களே குரல்கொடுத்தார்.

அதனை நாம் என்றுமே மறக்கப்போவதில்லை. அதுபோலவே, அண்மையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட் இலங்கைக்கு மூன்று கப்பல்களிலே உலருணவுப்பொதிகளை தமிழர்கள் வாரி அளித்து அனுப்பியிருந்தமையை என்றைக்கும் நாம் மறக்க மாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலின் எமக்களித்த உதவிக்கு நாம் என்றென்றும் நன்றி மறவாது இருப்போம்.

தலைநிமிர்ந்து நிற்பதற்காக நாம் ஆயுதங்களை ஏந்திக்கூடப்போராடினோம். எனினும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்வீகப்போராட்டங்கள் ஊடாக அதனை அடைவோம் என்ற உறுதியோடு இருக்கின்றோம்.

அவ்வாறான நிலையில் தமிழ்நாடு ஏற்பாடு செய்துள்ள இந்தமாநாட்டின் ஊடாக தமிழ்நாடும் ஏனைய தமிழ் சொந்தங்களும் அதற்கான ஆதரவுடன் இன்றும் இருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வாதற்கான புதிய ஜனாதிபதியுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். அந்தப்பேச்சுவார்த்தையில் தளர்வுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நான் இம்மாநாட்டிற்கு வருகை தருவதற்கு முதன்நாள் கூட நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இணங்கிய விடயங்களை செயற்படுத்துமாறு ஒருவாரகால அவகாசம் அளித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் எங்களுடைய அரசியல் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்மென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணனிடத்திலும், ஏனைய நாடுகளின் தலைவர்களிடத்திலும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=235197

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இலங்கையில் தமிழர்கள் அல்லல்பட்ட தருணங்களில் எல்லாம் தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஐயா அவர்களே குரல்கொடுத்தார்.

 

3 hours ago, கிருபன் said:

தலைநிமிர்ந்து நிற்பதற்காக நாம் ஆயுதங்களை ஏந்திக்கூடப்போராடினோம்.

எப்படி சந்தர்பத்திற்கேற்ப நாடகமாடுகிறார். அடிவிழப்போகுது என்றறிந்து முந்திக்கொள்கிறார் போலும். ஆயுதப்போராட்டத்தை நான் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை, புலிகளை சொல்லி நான் தேர்தலில் வாக்கு கேட்கவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது எனது அதிஷ்டம் என்றெல்லாம் எடுத்து விட்டவர். சரியான பச்சோந்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 

எப்படி சந்தர்பத்திற்கேற்ப நாடகமாடுகிறார். அடிவிழப்போகுது என்றறிந்து முந்திக்கொள்கிறார் போலும். ஆயுதப்போராட்டத்தை நான் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை, புலிகளை சொல்லி நான் தேர்தலில் வாக்கு கேட்கவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது எனது அதிஷ்டம் என்றெல்லாம் எடுத்து விட்டவர். சரியான பச்சோந்தி. 

எனக்கு மூக்குப் போனாலும் பிரச்சனை இல்லை, ஆனால் எதிரிக்கு சகுனம் பிளைக்க வேண்டும். 

😀

  • கருத்துக்கள உறவுகள்

எட ****** ***** முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது உங்கள் ஆட்சி கலைக்கபட்டால் கவலைப்படவேண்டம் மீண்டும் ஆட்சியமைக்க நாம் உதவுகிறோம் என அனைத்து (ஜெயலலிதா தவிர்த்து) கட்சிகளும் முன்னின்றதே அப்போது கனிமொழியையும் ஆர் ராசாவையும் காப்பாற்ற படுகொலையைக் கண்டும் காணாதும் இருந்தது மட்டுமில்லாது அதை நீர்த்துப்போகச் செய்ய கிரிகெட் போட்டியை சென்னையில் நடத்த அனுமதித்த ஒரு ******* எப்படி உயர்த்திப் ***** ****

ஒருக்கால் போய்ப்பார்க்கவும் இலங்கைத் தமிழர்களது அகதி முகாம்களையும் அங்கு கியூ பிராஞ்சின் அடாவடிகளையும். 

விடுதலைப் புலிகளது எந்தவொரு அடையாளமும் இல்லாதொழிக்கப்படல் வேண்டும் எனும் குறிக்கோளுடன் இருக்கும் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் எண்ணத்துக்கு இப்போ சுமந்திரன் எனும் ****** கூட்டமைப்பை இல்லாதொழிக்கக் காய் நகர்த்துவது தெரிகிறது.

Edited by நிழலி
அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

எட ****** ***** முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது உங்கள் ஆட்சி கலைக்கபட்டால் கவலைப்படவேண்டம் மீண்டும் ஆட்சியமைக்க நாம் உதவுகிறோம் என அனைத்து (ஜெயலலிதா தவிர்த்து) கட்சிகளும் முன்னின்றதே அப்போது கனிமொழியையும் ஆர் ராசாவையும் காப்பாற்ற படுகொலையைக் கண்டும் காணாதும் இருந்தது மட்டுமில்லாது அதை நீர்த்துப்போகச் செய்ய கிரிகெட் போட்டியை சென்னையில் நடத்த அனுமதித்த ஒரு ******* எப்படி உயர்த்திப் ***** ****

ஒருக்கால் போய்ப்பார்க்கவும் இலங்கைத் தமிழர்களது அகதி முகாம்களையும் அங்கு கியூ பிராஞ்சின் அடாவடிகளையும். 

விடுதலைப் புலிகளது எந்தவொரு அடையாளமும் இல்லாதொழிக்கப்படல் வேண்டும் எனும் குறிக்கோளுடன் இருக்கும் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் எண்ணத்துக்கு இப்போ சுமந்திரன் எனும் ****** கூட்டமைப்பை இல்லாதொழிக்கக் காய் நகர்த்துவது தெரிகிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும். 

இதுதான் யதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும். 

இதுதான் யதார்த்தம். 

நான் நினைக்கிறேன் அனைத்துத் தமிழர் தரப்பையும் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது தாறதைப் பெற்றுக்கொள்வோம் எனும் மனநிலைக்குக் கொண்டுவாறதுதான் இவர்களது திட்டம் அந்த மனநிலைக்கு அதிகமானவர்கள் வந்துவிட்டார்கள் எனவும் தெரிகிறது. 

யாழ் குடா நாடு போராட்ட மனநிலையிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது 1996 ல் குடாநாடு சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப்ப்போனபின்பு இப்போ முப்பது வருடங்களை அண்மிக்கிறது இந்தச்சூழல் அப்போது இளையோராக இருந்து போராட்ட அரசியலையும் போராட்டத்தையும் கண்கொண்டு பார்த்தவர்கள் எல்லாம் பேரன் பேத்தி கண்டு சமூகத்தில் அவர்களது சொல்லுக்கு மதிப்பில்லாததாகிவிட்டது ஆகவே அவர்கள் அந்த அரசியல் கருத்துக்களிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இதுவும் இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் அனைத்துத் தமிழர் தரப்பையும் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது தாறதைப் பெற்றுக்கொள்வோம் எனும் மனநிலைக்குக் கொண்டுவாறதுதான் இவர்களது திட்டம் அந்த மனநிலைக்கு அதிகமானவர்கள் வந்துவிட்டார்கள் எனவும் தெரிகிறது. 

யாழ் குடா நாடு போராட்ட மனநிலையிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது 1996 ல் குடாநாடு சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப்ப்போனபின்பு இப்போ முப்பது வருடங்களை அண்மிக்கிறது இந்தச்சூழல் அப்போது இளையோராக இருந்து போராட்ட அரசியலையும் போராட்டத்தையும் கண்கொண்டு பார்த்தவர்கள் எல்லாம் பேரன் பேத்தி கண்டு சமூகத்தில் அவர்களது சொல்லுக்கு மதிப்பில்லாததாகிவிட்டது ஆகவே அவர்கள் அந்த அரசியல் கருத்துக்களிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இதுவும் இவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது.

மக்கள் போராட்ட மனநிலையில் இருந்து விலகிவிட்டார்கள் என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? 

நிச்சயமாக இல்லை. 

சரியான  தலையும் வழிகாட்டலும் சூழ்நிலையும் வாய்க்கும்போது மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும். 

1996ற்குப் பின்னரும் நான் யாழில் நின்றேன். மக்களின் உணர்வும் கோபமும் எனக்கு நன்கு பரீட்சயமானவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் அனைத்துத் தமிழர் தரப்பையும் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது தாறதைப் பெற்றுக்கொள்வோம் எனும் மனநிலைக்குக் கொண்டுவாறதுதான் இவர்களது திட்டம் அந்த மனநிலைக்கு அதிகமானவர்கள் வந்துவிட்டார்கள் எனவும் தெரிகிறது. 

இப்ப இருக்கிறதை விட இனி என்ன குடுக்க இருக்கு? :]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.