Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன.

தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டார்.

உயிரிழந்தவர்களின் முதல் நான்கு பேர் உள்ளூர் நேரப்படி 14:22 மணியளவில் காளான் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டனர், மற்ற மூன்று பேர் பின்னர் அருகிலுள்ள டிரக்கிங் வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், துப்பாக்கிதாரி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சான் மேடியோ கவுண்டி ஷெரிஃப் கிறிஸ்டினா கார்பஸ் கூறினார்.

முன்னதாக, சந்திர புத்தாண்டன்று லொஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கு விளிம்பில் பெரும்பான்மையான ஆசிய அமெரிக்க நகரமான மான்டேரி பூங்காவில் உள்ள கார்வே அவென்யூவில் உள்ள பால்ரூம் நடன கிளப்பில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் 11பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
 

https://athavannews.com/2023/1321497

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி! சந்தேக நபர் கைது

By SETHU

24 JAN, 2023 | 09:28 AM
image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் திங்கட்கிழமை நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹாப் மூன் பே நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் காவல்துறையினரிடம் சரணடைந்த நிலையில் செய்யப்பட்டுள்ளார்.  அவர் உள்ளூரில் வசிக்கும் 67 வயதான ஸாவோ சுன்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கலிபோர்னியா மாநிலத்தின் மொன்டெரே பார்க் நகரில் கடந்த சனிக்கிழமை நபரொருவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டு 2 நாட்களின் பின் இச்சம்பவம் இடம்பெற்றது. 

ஏற்கெனவே,   மொன்டெரே பே நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, ஜனவரி 26 ஆம் திகதிவரை அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகள் பெரும் பிரச்சினையாக உள்ளன. கடந்த வருடம் அமெரிக்காவில் 44,000 பேர் துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/146538

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி மக்களிடம் இருக்கும்  வரை மேற்படி சம்பவங்கள்  தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

துப்பாக்கி மக்களிடம் இருக்கும்  வரை மேற்படி சம்பவங்கள்  தொடரும்.

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் தீவிர‌வாத‌ம் ப‌க்க‌ வாத‌ம் என்று புல‌ம்பும் நாட்ட‌வ‌ர்க‌ளின் நாட்டில் இப்ப‌டி ந‌ட‌ப்ப‌து ப‌க்க‌வாத‌ம்

இந்த‌ விடைய‌த்தில் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா வெற்ற‌ர் என்று தான் சொல்ல‌னும்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பையன்26 said:

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் தீவிர‌வாத‌ம் ப‌க்க‌ வாத‌ம் என்று புல‌ம்பும் நாட்ட‌வ‌ர்க‌ளின் நாட்டில் இப்ப‌டி ந‌ட‌ப்ப‌து ப‌க்க‌வாத‌ம்

இந்த‌ விடைய‌த்தில் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா வெற்ற‌ர் என்று தான் சொல்ல‌னும்.................

சனநாயகத்தின்ரை உச்ச  நாட்டிலை பால்குடி பாலன்களும் துவக்கு தோட்டாக்களோடை திரியோணும்.....அதுதான் சனநாயகம்.எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்காம்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

By SETHU

25 JAN, 2023 | 11:13 AM
image

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிந்துள்ளனர். 

யகீமா நகரில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடையொன்யின் உள்ளேயும் வெளியேயும் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.

தாக்குதலாளி பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் 21 வயதான ஜெரீட் ஹெட்டொக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.  

அதே மாநிலத்தில் திங்கட்கிழமை 67 வயதான நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.