Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்துக்குருவோ மௌலவியோ அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர் - சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,.இராஜதுரை ஹஷான்)

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள். பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளதால் அவர்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இனவாதத்தை மூலதனமாக கொள்ளும் இனவாதிகள் தற்போது 13 ஆவது திருத்தத்தை தற்போது கையில் எடுத்து இனவாத பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.

 இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ்   மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.

சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள்.இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ஜனாதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்துக்குருவோ மௌலவியோ அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர் - சாணக்கியன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பெளத்த புத்தன்கள்.. என்ன தான் அடிச்சுக் கொன்றாலும்.. ரயர் போட்டு எரிச்சாலும்.. பூசாரியும் மெளலவியும்.. அவங்களின் காலைப் பிடிச்சுக் கிடப்பாங்களே தவிர.. எதிர்த்து போராட்டம் பண்ணுறம்.. என்ற கதைக்கே இடமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தை சிங்கள போராட்டங்களின்றி கொண்டாடவும், சிங்கள மக்கள் தன்மேல்  கொண்டுள்ள எதிர்ப்பை சமாளித்து தனக்கு சாதகமாக மாற்றி சிங்கள வாக்குகளையும், அதே நேரம் தமிழரை ஏமாற்றி அவர்களின் வாக்குகளையும் அபகரித்து தன்னை ஒரு நிரந்தர அரசியல் தலைவராக்க கையாளும் தந்திரமே இவரின் பதின்மூன்றாம் அரசியலமைப்பை கையிலெடுத்ததின் கைங்கரியமென நினைக்கிறன். எதிர்ப்பவர்களை எச்சரிக்கவுமில்லை, அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையுமில்லை, பதின்மூன்றை செயற்படுத்த எந்தவொரு நடவடிக்கையெடுக்கவுமில்லை. இதன் அர்த்தமென்ன? தேர்தலில் தன்னை நிலைநாட்டும்வரை இந்தகொதிநிலை தொடரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.