Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கி சண்டித்தனத்தையும் விமல் இனவாதத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் - டயனா கமகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.

அப்போது எவரும் முரண்பட்டுக் கொள்ளமாட்டார்கள். விக்கினேஷ்வரன் சண்டித்தனத்தையும், விமல் வீரவன்ச இனவாதத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது.

13 அல்லது 13 பிளஸ் என்ற பிரச்சினைகள் எமது நாட்டுக்கு வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்களாக வாழ வேண்டும்.

விக்னேஸ்வரன் சண்டித்தன  கதைகளை கைவிட வேண்டும். விமல் வீரவன்ச போன்றோர் இனவாதத்தை தூண்டுவதனை நிறுத்த வேண்டும்.

சண்டித்தனமான பேச்சுக்களினாலும், இனவாத செயற்பாடுகளினாலும் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது.

அதன் தாக்கமே இன்று பொருளாதார பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பொருளாதார தாக்கம் அனைத்து இன மகக்ளையும் ஆட்டிப்படைக்கிறது.

வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இலங்கையில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே வழி அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவிப்பதே.

அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது. எனவே இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கில மொழியை அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

நாடும் அனைத்து வழிகளிலும் முன்னேறும்.எவரும் மொழியுரிமை என குறிப்பிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள்.

அதேவேளை தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்பதால் அவர் அரசாங்கத்தை ஏற்கவில்லை.

நெருக்கடியான சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பவரே உண்மையான தலைவர், சந்தர்ப்பாதிகள் உண்மையான தலைவர் அல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

விக்கி சண்டித்தனத்தையும் விமல் இனவாதத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் - டயனா கமகே | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மேடம் உங்களுக்கு எதுக்கு இந்தச் சோலி. விபச்சாரத்தை வியாபாரமாக்குதல்.. கஞ்சாவை காசாக்குதல் போன்ற பெளத்த தர்மம் போதித்த தொழில்களை சட்ட ரீதியாக்க உழைக்கவே உங்களுக்கு நேரம் காணாது. இதில விக்கி விமல் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பது.. எவ்வளவு நட்டம் நாட்டுக்கு. உங்கட மகா சங்கத்தினரே விபச்சாரத்தை சட்ட ரீதியான வியாபாரமாக்கினால்.. வெளிப்படையான வாடிக்கையாளர்கள் ஆகிவிடுவார்கள். நாட்டில் டொலரும் ரூபாயும் பெருக்கெடுத்துப் பாயும். முதலில் அதனைக் கவனியுங்கள்.. டயனா மேடம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவாவுக்கு இந்த நாட்டில் குடியுரிமையே இல்லையாம், அதில இவாவுக்கு ஒரு அமைச்சு, துறை, பொறுப்பு, கருத்து. சிரிப்பாய் கிடக்கு!

5 hours ago, பிழம்பு said:

வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இதைச்சொன்ன விமலும் அதை வியாக்கியானம் செய்யும்  இவாவும் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பதை புரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

5 hours ago, பிழம்பு said:

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

அம்மாவின் அறிவே அறிவு! நமது உரிமையை, எங்களிடம் இருந்து பறித்ததை தாருங்கள் என்று கேட்டால்; அவ மொழியை கொண்டு வாறா இதுதான் பிரச்சனை என்று மொழிபெயர்க்கிறா இப்படியான முட்டாள்களை கொண்ட நாடு எப்படி உருப்படும். நாட்டில என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

5 hours ago, பிழம்பு said:

அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது.

இந்த அம்மா இங்கிலாந்து குடியுரிமை உள்ளவா! ஏன் இங்கிருந்து சிங்களத்தில் குப்பை கொட்டுறா? தாராளமாய் ஆங்கிலத்தை பேசிக்கொண்டு அங்கேயே அரசியல் செய்யலாமே? ஒருவேளை இவவின் ஆங்கிலத்தை அவர்களால் புரிய முடியாது போலுள்ளது,

5 hours ago, பிழம்பு said:

தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

அப்பாடா! ஒருவாறு நரியின்ர தலையில ஐஸ் வச்சாச்சு, இனி பதவிக்கு பங்கம் இல்லை. இவர் என்ன மஹிந்தாவே இவவோட உரசுப்பட?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.