Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தத்திற்கு ஜே.ஆர். போட்ட முடிச்சுக்களை ரணில் அவிழ்க்க முயற்சி - விமல் வீரவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்க போட்ட முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தினர் ஆராய வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய தனியார் பிரேரணையை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை ஒன்றாக இயற்றப்பட்டதால் சட்ட சிக்கல் காணப்படுகிறது.

ஆகவே அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வெளயீட்டு சட்டமூலத்தை கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யலாம். 13 ஆவது திருத்தத்தை எக்காலமும் முழுமையாக அமுல்படுத்த இடமளிக்கப்போவதில்லை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் 

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 ஆவது திருத்தத்தின் ஏனைய அதிகாரங்கள் தற்போதும் அமுலில் உள்ளன.

35 ஆண்டுகாலமாக கிடப்பில் இருந்த 13 ஆவது திருத்தத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். தேவையில்லாத விடயங்களை செயற்படுத்த முயற்சித்தால் நாட்டில் பிரச்சினைகள் தான் தோற்றம் பெறும்.

பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி தற்போது நாட்டுக்கு எதிராக பல தீய சக்திகள் அரச ஆதரவுடன் செயற்படுகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இயல்பாகவே சமஷ்டி முறையிலான நாடாக அங்கீகரிக்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை மீது கட்டப்பட்ட கூர்மையான கத்திகளை போல் உள்ளது இந்த கத்திகள் அரசியலமைப்பு திருத்தம் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் ஊடாக ஒருசில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தடைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதி அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வேளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயல்படுத்துவார்கள்.

வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுகள் புரையோடி போயுள்ளன. 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்.

1987 ஆம் ஆண்டு முதல் மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் மக்களாணை இல்லாமல் மக்களால் வெறுக்கப்படும் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த அதிகாரம் இல்லை.

இந்தியாவின் கடும் அழுத்தத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினார்.

13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க அவர் அரசியலமைப்பின் ஊடாக ஒருசில முடிச்சுக்களை போட்டார்.

அந்த முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார்.ஆகவே இவர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தார் ஆராய வேண்டும்.

சமஷ்டியாட்சி மற்றும் சுயநிர்ணயம் ஊடாக தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் தோற்றம் பெறாது, இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

ஆகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எக்காரணிகளுக்காகவும் இடமளிக்க போவதில்லை என்பதில் எவ்வித மாற்றமுமில்லை. தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

13 ஆவது திருத்தத்திற்கு ஜே.ஆர். போட்ட முடிச்சுக்களை ரணில் அவிழ்க்க முயற்சி - விமல் வீரவன்ச | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி தற்போது நாட்டுக்கு எதிராக பல தீய சக்திகள் அரச ஆதரவுடன் செயற்படுகின்றன.

ஒன்று; நாடு இன்று இந்த நிலைக்கு வரக்காரணம் என்ன, அதை தீர்ப்பது எப்படி என்கிற வழியை சொல்லி நாட்டை பொருளாதார பாதிப்பிலிருந்தும் கடனிலிருந்தும் மீட்டு  எடுங்கள் அல்லது வாயை மூடிக்கொண்டிருங்கள் இல்லையென்றால் நாட்டின் அமைதியை குலைத்த குற்றத்திற்காக பயங்கரவாத சட்டத்தின் மூலம்    சிறையிலடைப்பேன் என்று சொல்லி ஒன்று இரண்டு பேரை இரண்டு நாளைக்கு அடைக்கிறாரா பாருங்கள்! குரைக்க விட்டு வேடிக்கை பாக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

இந்த தடைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதி அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வேளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயல்படுத்துவார்கள்.

வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுகள் புரையோடி போயுள்ளன. 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்.

நாய் குப்பையைக் கிளறி விடுகின்றது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.