Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

6-11.jpg

உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்துள்ள படையெடுப்பானது, இந்த மாத இறுதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில், உக்ரைனில் சமீப வாரங்களாக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக எண்ணற்ற அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது. உக்ரைன் தங்களது உறுப்பினர்களில் ஒரு நாடாக ஆவதற்கு முதலில், அந்நாடு ஊழலை ஒழிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டு உள்ளது.

இதன்படி, உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தேசிய பாதுகாப்பு படையின் துணை தளபதியான ருஸ்லான் டிஜூபா பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது. எனினும், பணி நீக்கத்திற்கான காரணங்கள் எதனையும் அந்நாடு வெளியிடவில்லை. அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசும்போது, ஊழலற்ற பாதுகாப்பு அமைச்சகம் அவசியம் என குறிப்பிட்டதுடன், அமைப்புகளை அதுபோன்ற ஊழல் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்கும் செயல் திட்டங்களை கொண்டு வரும்படி பாதுகாப்பு மற்றும் போலீசார் பிரிவுகளிடம் அவர் கேட்டு கொண்டார்.

குற்ற செயல்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமின்றி, பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயம் ஆக்கும் முயற்சிகளும் தொடரும் என ஜெலன்ஸ்கி கூட்டத்தில் பேசும்போது கூறியுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=238063

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கிருபன் said:

6-11.jpg

உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்துள்ள படையெடுப்பானது, இந்த மாத இறுதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில், உக்ரைனில் சமீப வாரங்களாக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக எண்ணற்ற அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது. உக்ரைன் தங்களது உறுப்பினர்களில் ஒரு நாடாக ஆவதற்கு முதலில், அந்நாடு ஊழலை ஒழிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டு உள்ளது.

செலென்ஸ்கியே பெரிய ஊழல்வாதி. இவர் களையெடுக்கிறாராம். :face_savoring_food:

பொதுவாக சொல்லப்போனால் உக்ரேன் இந்தியா , பிரேசிலை விட ஊழல் மிகுந்த நாடு. பல விடயங்களில் ஜேர்மனி பின்னடிப்பதற்கு முக்கிய காரணம் இதுதான். செலென்ஸ்கி ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களும் கொஞ்ச நஞ்சமல்ல. 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

செலென்ஸ்கியே பெரிய ஊழல்வாதி. இவர் களையெடுக்கிறாராம். :face_savoring_food:

பொதுவாக சொல்லப்போனால் உக்ரேன் இந்தியா , பிரேசிலை விட ஊழல் மிகுந்த நாடு. பல விடயங்களில் ஜேர்மனி பின்னடிப்பதற்கு முக்கிய காரணம் இதுதான். செலென்ஸ்கி ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களும் கொஞ்ச நஞ்சமல்ல. 😎

ஊழ‌ல் வாதி என்று தெரிந்தும் தொட‌ர்ந்து முர‌ட்டு முட்டுக் கொடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம்

அமெரிக்கா அள‌வுக்கு யாரும் உக்கிரேனுக்கு உத‌வின‌து கிடையாது..............

அமெரிக்காவின் சொல்லுக்கு இன‌ங்க‌ தான் ஜேர்ம‌னி டாங்கிக‌ளை தாருகிறோம் என்று சொன்ன‌ மாதிரி தெரியுது..................... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பையன்26 said:

ஊழ‌ல் வாதி என்று தெரிந்தும் தொட‌ர்ந்து முர‌ட்டு முட்டுக் கொடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம்

அமெரிக்கா அள‌வுக்கு யாரும் உக்கிரேனுக்கு உத‌வின‌து கிடையாது..............

அமெரிக்காவின் சொல்லுக்கு இன‌ங்க‌ தான் ஜேர்ம‌னி டாங்கிக‌ளை தாருகிறோம் என்று சொன்ன‌ மாதிரி தெரியுது..................... 

அப்பன்! ஜேர்மனி ஒரு போர் விரும்பி நாடல்ல. கட்டாயத்தின் பேரில் பல செயல்களை செய்கின்றது. ஏனெனில் ஜேர்மனிக்கு அமெரிக்க ஆதரவு அவசியம் தேவை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அல்லது அமெரிக்காவின் ஒரு மாகாணம் போலவே ஜேர்மனி இருக்கின்றது.

ஜேர்மனி ரஷ்யாவை நம்பாமலா இரண்டு எரிவாயு குழாய்களை கடலில் இறக்கி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது? வியாபார நோக்கில், அரசியல் நோக்கில் ஜேர்மனி மறுபக்கம் போய்க்கொண்டிருப்பதை அவதானித்த அமெரிக்கா தடலடியாக எரிவாயு குழாய் சமாச்சாரத்தில் கை வைத்தது எல்லாம் தன் நலனுக்காக மட்டுமே.

இந்த உக்ரேன் சண்டை அல்லது ஐரோப்பிய ஆதிகச்சண்டை பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை அமத்தி வைத்திருந்த பெருமை அன்னை அங்கெலா மேர்க்கலையே சாரும்.

நிற்க...

மனிதாபிமானம்.

ஆயுதம் கொடுப்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆயுதம் விற்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆனால் எங்கடை ஜாம்பவன்களுக்கு உக்ரேன் சண்டையில் மட்டும் எங்கிருந்துதான் மனிதபிமானம் வந்ததோ தெரியவில்லை?

அதிலும் எம் இனத்தை நாதியற்றவர்களாக்கி விட்டு அழித்தார்கள். அனால் உக்ரேனுக்கு அப்படியா? எட்டுத்திக்கிலிருந்தும் உதவி செய்கின்றார்கள் அல்லவா?

அப்படியிருந்தும் நாதியற்று அழிந்த முள்ளிவாய்க்கால் அழிவை உக்ரேன் அழிவோடு ஒப்பிட எப்படி மனம் வந்தது?

க்ர்ர்ர் தூ.....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அப்பன்! ஜேர்மனி ஒரு போர் விரும்பி நாடல்ல. கட்டாயத்தின் பேரில் பல செயல்களை செய்கின்றது. ஏனெனில் ஜேர்மனிக்கு அமெரிக்க ஆதரவு அவசியம் தேவை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அல்லது அமெரிக்காவின் ஒரு மாகாணம் போலவே ஜேர்மனி இருக்கின்றது.

ஜேர்மனி ரஷ்யாவை நம்பாமலா இரண்டு எரிவாயு குழாய்களை கடலில் இறக்கி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது? வியாபார நோக்கில், அரசியல் நோக்கில் ஜேர்மனி மறுபக்கம் போய்க்கொண்டிருப்பதை அவதானித்த அமெரிக்கா தடலடியாக எரிவாயு குழாய் சமாச்சாரத்தில் கை வைத்தது எல்லாம் தன் நலனுக்காக மட்டுமே.

இந்த உக்ரேன் சண்டை அல்லது ஐரோப்பிய ஆதிகச்சண்டை பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை அமத்தி வைத்திருந்த பெருமை அன்னை அங்கெலா மேர்க்கலையே சாரும்.

நிற்க...

மனிதாபிமானம்.

ஆயுதம் கொடுப்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆயுதம் விற்பவனுக்கும் மனிதாபிமானம் இல்லை. ஆனால் எங்கடை ஜாம்பவன்களுக்கு உக்ரேன் சண்டையில் மட்டும் எங்கிருந்துதான் மனிதபிமானம் வந்ததோ தெரியவில்லை?

அதிலும் எம் இனத்தை நாதியற்றவர்களாக்கி விட்டு அழித்தார்கள். அனால் உக்ரேனுக்கு அப்படியா? எட்டுத்திக்கிலிருந்தும் உதவி செய்கின்றார்கள் அல்லவா?

அப்படியிருந்தும் நாதியற்று அழிந்த முள்ளிவாய்க்கால் அழிவை உக்ரேன் அழிவோடு ஒப்பிட எப்படி மனம் வந்தது?

க்ர்ர்ர் தூ.....

உண்மையை ஏற்றுக்கொள்ள பலருக்கு மனமிருந்தாலும் அதீத சுயநலம் அவர்களது வாயை அடைத்துவிட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.