Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரகாஷ்ராஜின் பெரிய மனசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரகாஷ்ராஜின் பெரிய மனசு

நடிப்பில் மட்டுமின்றி நடத்தையிலும் புல்லரிக்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லனாக நான்கு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரொரு நிஜ ஹீரோ.

இப்படி சொன்னதும், ஹீரோயினை எந்த வில்லனிடமிருந்து காப்பாற்றினார் என கேட்காதீர்கள். இவர் காப்பாற்றுவது நல்ல சினிமாவை. 'தயா' தொடங்கி 'மொழி' வரை பிரகாஷ்ராஜ் தயாரித்த அனைத்துப் படங்களும் ஓரளவு நேர்மையானவை. பணத்துக்காக அவர் மேற்கொண்ட சூதாட்டமல்ல இப்படங்கள்.

தயாரித்துக்கொண்டிருக்கும் 'வெள்ளித்திரை'யும் தயாரிக்கப் போகும் 'அபியும் நானும்' படங்களும் இதே ரகம்தான்! சம்பாதிக்கிற பணத்தை நல்ல சினிமாவுக்கு செலவிடும் இவர், பணம் வாங்காமலே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இயக்குனர் ப்ரியதர்ஷன் காஞ்சிபுரம் நெசவாளர்களின் கதையை 'கஞ்சீவரம்' எனும் பெயரில் படமாக்குகிறார். கஞ்சீவரம் என்பது காஞ்சிபுரத்தின் ஆதி பெயர். ஒன்றரை மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய இப்படத்தை விருதுக்கென்றே தயாரித்து இயக்குகிறார் ப்ரியதர்ஷன்.

உலகப்பட விழாக்களை குறிவைத்து தயாராகும் இந்தப் படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி. பணம் பண்ணும் நோக்கமின்றி ப்ரியதர்ஷன் கஞ்சீவரத்தை எடுப்பதால் பைசா வாங்காமல் படத்தில் நடித்துக் கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்த வில்லனிடம் நமது ஹீரோக்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!

விடுப்பு : சிகரம்

http://www.viduppu.net

இந்த வில்லனிடம் நமது ஹீரோக்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!

எல்லா வில்லன்களும் வில்லன்கள் இல்லை எல்லா கீரொக்களும் உண்மையாக கீரோக்கள் இல்லை சீரோக்கள் என்பதை இந்த டயலக் சொல்கிறது..............எனக்கு இது மட்டும் நல்லா பிடித்து கொண்டது............ :rolleyes: :P

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரகாஷ்ராஜின் மூன்று புதிய டார்கெட்டுகள்!-டூயட் மூவிசுடன் கைகோர்த்த மோசர்பியர்.

அநேகமாக இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் தன்னுடைய கிளையை விரித்திருக்கிறது மோசர்பியர் நிறுவனம். மூன்று வருடங்களுக்கு முன் சி.டி தயாரிப்பு துறையில் இறங்கிய இந்நிறுவனம் இன்று சி.டி. தயாரிப்பில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

தற்போது வருகிற திருட்டு வி.சி.டி களில் 80 சதவீதம் மோசர்பியர் சி.டி களில்தான் காப்பி செய்யப்பட்டு வருகின்றன. திருட்டுக்கு துணை போவதைவிட தாமே சட்டப்படி டி.வி.டி களை விற்றால் என்ன?

சிந்தனைக்கு சிறகு முளைக்க, இன்று தமிழ் மாத்திரமல்ல, இந்தியாவின் அத்தனை மொழி படங்களையும் குறைந்தவிலையில் டி.வி.டி களாக வெளியிட்டு அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டது மோசர்பியர். இனி அடுத்த கட்டம்...! தாமே பட தயாரிப்பில் இறங்கினால் என்ன? ஹிந்தியில் மூன்று படங்களை எடுத்து வெற்றியும் பெற்றார்கள். இப்போது தமிழில்...

தமிழ்நாட்டில் (பிடிவாதமாக) நல்ல படங்களைதான் எடுப்பேன் என்று மல்லுக்கு நிற்கிற தயாரிப்பாளர்களை ஐந்து விரல்களுக்குள் அடக்கிவிட முடியும். அதில் சுண்டுவிரலுக்கு சொந்தக்காரர் பிரகாஷ்ராஜ். இவரின் டூயட் மூவிஸ் எடுக்கிற படங்களை பார்க்க குடும்பத்தோடு தியேட்டருக்குள் போகலாம். முதல் சில படங்கள் டூயட் மூவிசை Ôபேத்தா ஸாங்Õ பாட வைத்தது தனிக்கதை. ஆனாலும் விடாமுயற்சியோடு போராடிய பிரகாஷ்ராஜுக்கு தேவதை போல் வந்தாள் மொழி. மிகப்பெரிய வெற்றி.

பிரகாஷ்ராஜின் அர்பணிப்புக்கு பரிசாக தயாரிப்பு துறையில் டூயட் மூவிசுடன் கை கோர்த்திருக்கிறது மோசர்பியர். முதல்கட்டமாக மூன்று படங்களை துவங்கியிருக்கிறார்கள். விஜி இயக்கத்தில் வெள்ளித்திரை, ஜீவன் இயக்கத்தில் மயிலு, ராதாமோகன் இயக்கத்தில் அபியும் நானும்.

இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க, மோசர்பியர் நிறுவனத்தின் ஜி.தனஞ்ஜெயனும், பிரகாஷ்ராஜும் வந்திருந்தார்கள். பிலிம்சுருளில் இவர்கள் போட்டிருக்கும் பிள்ளையார் சுழி, நல்ல துவக்கத்தின் அடையாளம்!

விடுப்பு : சிகரம்

06 ஸெப் 2007

பிரகாஷ் ராஜின் தம்பட்டம்!

கொஞ்ச நாட்களாக வாயடக்கத்துடன் இருந்த பிரகாஷ் ராஜ் மறுபடியும் நீளமாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாக்காரர்களிடையே எரிச்சல் எழுந்துள்ளது.

கே.பாலச்சந்தரால் தமிழுக்கு அழைத்து வரப்பட்ட பிரகாஷ் ராஜ், நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர். சுயமாக தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறமையும் பெற்றவர்.

தனது நடிப்புத் திறமையால் சுறுசுறுவென முன்னேறிய பிரகாஷ் ராஜ் இன்று தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்ட ஆரம்பித்துள்ளார். அவரது டூயட் மூவிஸ் சார்பில் இப்போது அதிக அளவில் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோம் வீடியோ நிறுவனமான மோசர் பேயரும், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து படத் தயாரிப்பில் குதித்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

ஒரே நேரத்தில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெள்ளித்திரை, மயிலு, அபியும் நானும் என மூன்று படங்களை தயாரிக்கின்றன.

வெள்ளித்திரை, மலையாளத்தில் வெளியான உதயானு தாரம் படத்தின் ரீமேக். இப்படத்தை விஜி இயக்குகிறார். இவர் அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி ஆகிய படங்களில் ராதா மோகனுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

அபியும் நானும் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். தந்தைக்கும், மகளுக்குமான உறவை வெளிப்படுத்தும் கதையாம் இது. இதில் தந்தை வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மகளாக வருகிறார் திரிஷா.

அடுத்த படம் மயிலு. மதுரையை கதைக்களமாக கொண்ட கிராமத்து கதை. அக்டோபர் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜீவன் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாக்காரர்கள் குறித்து ரொம்பவே குறைபட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், தமிழ் சினிமாக்களில் இடம் பெறும் கதைகள் அனைத்துமே போலித்தனமாக உள்ளன. எதுவுமே நிஜத்தைப் பிரதிபலிக்கவில்லை.

ஆனால் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டுப் படங்களில் எல்லாம் நிஜக் கதைகளைத்தான் படமாக்குகிறார்கள். நிஜ சம்பவங்கள், நிகழ்வுகள்தான் அங்கு படமாகின்றன.

டூயட் மூவிஸ் தொடர்ந்து தமிழில் நல்ல படங்களையே தந்து கொண்டிருக்கிறது. டூயட் மூவிஸ் மட்டும்தான் நல்ல படங்களைத் தருகிறது. மற்றவர்கள் அப்படி இல்லை என்றார்.

பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தமிழ் சினிமாக்காரர்களிடையே புதிய நெருப்பை மூட்டியுள்ளது. அப்படியானால் தனது குரு கே.பாலச்சந்தரையும் சேர்த்துத்தான் தமிழ் சினிமாக்காரர்களை திட்டுகிறாரா பிரகாஷ் ராஜ் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

முன்பு தமிழ் சினிமாக்காரர்களை விமர்சித்துப் பேசி வந்தார் பிரகாஷ் ராஜ். இதையடுத்து சில மூத்த கலைஞர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து அமைதிப்படுத்தியதாக கூறப்பட்டது. தற்போது மறுபடியும் 'பேச' ஆரம்பித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

http://thatstamil.oneindia.in/

பெரிய மனசு என்று சொல்லுறாங்க பிறகு தம்மட்டம் என்று சொல்லுறாங்க எதை தானப்பா நம்புறது...... :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.