Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா ? - விமல் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா ? - விமல் கேள்வி

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 02:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல்  தலைமையில் 22 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தரித்து தேசிய புலனாய்வுத் திணைக்களத்திற்குள் பிரவேசிக்கும் போது எமது புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதம் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் தேசிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச, பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்  என்பதை ஜனாதிபதி அல்லது பிரதமர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்காவின் முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா பி றொல் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 16 ஆம்  விசேட விமானம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்கள்.

 அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு  அதிகாரிகள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள் அத்துடன் அவர்கள் தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

 அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் சிறப்பு விமான சேவை அதாவது ஜனாதிபதியின் சிறப்பு விமான சேவை ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.அத்துடன் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்த விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அரச புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்கள். அதன்போது புலனாய்வு திணைக்களத்தில் இருந்த பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு ஆயுதங்கள் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபானிகளாக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதங்களுடன் புலனாய்வு திணைக்களத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள்.

இலங்கையின் புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு சேவையின் கீழ் கொண்டு வர பெண்டகன் அதிகாரிகள் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இவ்வாறான சம்பவம் 2001 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது. 2004 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது.

இலங்கையில் யுத்தம்இஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான பின்னணியில் இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள் யாரை சந்தித்தார்கள் என்பதை அறியவில்லை.

ஆகவே இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்கள் பிரதிநிகளுக்கு உண்டு. ஆகவே அமெரிக்க  பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/148840

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா ? - விமல் கேள்வி

அது போயி ரொம்ப காலமாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க உயர் மட்ட பாதுகாப்பு குழுவின் விஜயம் குறித்த தகவல்களை நான் அறியேன் - அலி சப்ரி

(எம்..ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

 

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள், எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை நான் அறியவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) தேசிய சுதந்திர  கட்சியின் தலைவர் வில் வீரசன்ச இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் உரையாற்றி,வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டின் வருகையை தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்தார்கள்.

இவர்கள் ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்கள் என்பதை ஆளும் தரப்பின் பிரதம கொறடா அறியாவிட்டாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவார்கள்.ஆகவே அவர்கள் உண்மை விடயத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து  வெளிவிவகாரததுறை அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முதலீடு சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.

இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும்.

ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவாரா,அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை அறியவில்லை என குறிப்பிட்டார்.

அமெரிக்க உயர் மட்ட பாதுகாப்பு குழுவின் விஜயம் குறித்த தகவல்களை நான் அறியேன் - அலி சப்ரி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வசீ.... ஏன் அமெரிக்கா இலங்கைக்குள் வரும் என எண்ணுகிறீர்கள்? என கேட்டெழுதியிருந்தீர்கள்! அமெரிக்கா இலங்கையை கட்டுப்படுத்தும், இலங்கைக்குள் காலூன்றி விடும்  என  இந்தியா அச்சப்படுவதற்கு அலி சப்ரியின் அறிக்கை, விமலின்  கேள்வி, அதற்கு பதிலளிக்காமல் அலி சப்ரி நழுவியமையும் காரணமாய் இருக்கலாம். நான் நினைப்பதற்கு ஒன்றுமில்லை. "அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம் பேயாம்." அப்படி அமெரிக்கா வந்தால்; சீனாவைப்போல் இலங்கைக்கு அறிக்கை விட்டோ, போர் விமானம் அனுப்பியோ, தமிழ்த் தலைமைகளை வாசலில் கட்டியோ பலனில்லை என்பது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை நடத்திமுடிப்பதற்கு, யாரின் அனுமதியோ, உதவியோ, காரணமோ தேவையில்லை என்பது அதன் கடந்தகால நடவடிக்கைகளை அவதானித்தால் புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.