Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,

எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

http://maruththuvam.blogspot.com/

source:kumuthham health

நான் ஓர் வாழைப்பழ பிரியன். தாயக பறவைகள் இம்மாத இதழில் கீழ்வரும் தகவல் இருந்தது. நீங்களும் பார்க்க இங்கு இணைக்கின்றேன்.

வாழைப்பழங்களிலும் மருத்துவக்குணம்

1.செவ்வாழைப்பழம்

கல்லீரல் வீக்கம், மூத்திர :D வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்

குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்

வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்

கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை

1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வாழைப்பழம்

மலச்சிக்கலைப் போக்கும் ;)

மூலம்: http://www.thayakaparavaikal.com/nalamnadi.php நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவிலுக்கும்,திரு.கலைஞன் அவர்கட்கும் நன்றிகள்.

பூசனிகாய்,வாழைபழத்தில இவ்வளவு விசயம் இருக்கா தகவலிற்கு நன்றி..........யாருக் இரண்டையும் எனக்கு அனுப்பி வைத்தா நல்லா இருக்கும்........... :P :D

ஓசியில் பூசணிக்காய், வாழைப்பழம் இல்லையோ? இங்கிருந்து அனுப்பலாம் தான், ஆனால் அங்கு வரும் முன் அழுகிவிடும் என நினைக்கின்றேன். எவ்வளவு தொகை வேண்டும் என்று சொல்லி, காசுடன் கொமிசனும் அனுப்பினால் உடனடியாக வாங்கி அனுப்புகின்றேன்.

வாழைப்பழம் இங்கு ஊர் போல் சுவை இல்லை. பச்சைத்தண்ணியாக இருக்கும். பூசணிக்காய் கறியை கலியாணவீடுகள், கொண்டாட்டங்களிற்கு போனால் காணலாம், உண்ணலாம்.

ஓசியில் என்றா நாட்டை சொல்லுறீங்களா இல்லை ஓசியா சாப்பிடுறதை சொல்லுறீங்களா :P ஆசியில இருக்கு பூசணிகாய் மற்றும் வாழைபழம் எல்லாம் நல்லா இருக்கும் இங்கே இருகிற பூசணி மற்றும் வாழைபழம் எல்லாம் ஏன் எனின் காலநிலை ஒரு காரணம் ஆனா வாழைபழம் தற்போது ஒரளவு மலிந்து விட்டது முதல் பயங்கர விலை, ஏனெனில் வெள்ளபெருக்கு வந்து வாழை தோட்டம் எல்லாம் அழிந்தது அதனால சரியான விலையா இருந்தது தற்போது பரவாயில்லை விலை.... ;)

சீடன் வேண்டும் என்றா குருவிற்கு அனுப்புகிறேன் கமிசன் ஒன்றும் இல்லாம :P ........ஓ உங்க நாட்டு வாழைபழம் பச்சை தண்ணியாகவா இருக்கும் இங்கே அப்படி இல்லை,பூசணிகாயை கல்யாணவீட்டில் தான் சாப்பிடுவீங்களோ........இங்கே அப்படி இல்லை அன்னதானத்திலையாவது கிடைக்கும் பூசணி குருவே!! :D

:(:blink::) பூசணிக்காய் அன்னதானத்திலும் கல்யாணவீட்டிலும் தான் சாப்பிடலாமோ? வீட்டில் சமைக்கிறதில்லையா? :huh:

:lol::lol::D பூசணிக்காய் அன்னதானத்திலும் கல்யாணவீட்டிலும் தான் சாப்பிடலாமோ? வீட்டில் சமைக்கிறதில்லையா? :mellow:

வீட்டில சமைத்தாலும் அன்னதானப் பூசணிகாயின்ட ருசி தனி ருசி தான் நிலா அக்கா........அதுவும் கோயிலில் இருந்து கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்து கொண்டு சாப்பிடுறதில இருக்கிற சுகம் இருக்கே அதை சொல்ல முடியாது........... :P :P :lol:

வீட்டில சமைத்தாலும் அன்னதானப் பூசணிகாயின்ட ருசி தனி ருசி தான் நிலா அக்கா........அதுவும் கோயிலில் இருந்து கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்து கொண்டு சாப்பிடுறதில இருக்கிற சுகம் இருக்கே அதை சொல்ல முடியாது........... :P :P :mellow:

கண்ணுக்கு குளிர்ச்சி வர என்ன சாப்பிடணும்

கண்ணுக்கு குளிர்ச்சி வர என்ன சாப்பிடணும்

ஒன்றும் சாப்பிட தேவையில்லை கோயிலிற்கு போனாலே சரி.......... :P

ஒன்றும் சாப்பிட தேவையில்லை கோயிலிற்கு போனாலே சரி.......... :P

எப்படி? :wacko: :mellow:

எப்படி? :wacko: :mellow:

கோயிலிற்கு போய் முருகனை பார்த்தாலே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் என்று சொல்ல வந்தனான் நிலா அக்கா :P .........முருகனை பார்த்தா உங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க மாட்டுதா. :lol: ...........சில பேர் முருகன் தான் தன்ட லவ்வர் என்று சொல்லுவீனம் நீங்க எப்படி நிலா அக்கா........ :P .

கோயிலிற்கு போய் முருகனை பார்த்தாலே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் என்று சொல்ல வந்தனான் நிலா அக்கா :P .........முருகனை பார்த்தா உங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க மாட்டுதா. :mellow: ...........சில பேர் முருகன் தான் தன்ட லவ்வர் என்று சொல்லுவீனம் நீங்க எப்படி நிலா அக்கா........ :P .

:lol::lol: முருகன் தான் லவ்வரா? அட பாவமே அவருக்கு வள்ளி தெய்வானை என்று 2 பேர் இருக்கினமப்பு. எனக்கு யாருமே வேணாம். ஆளை விடுங்கோ.

:mellow::lol: முருகன் தான் லவ்வரா? அட பாவமே அவருக்கு வள்ளி தெய்வானை என்று 2 பேர் இருக்கினமப்பு. எனக்கு யாருமே வேணாம். ஆளை விடுங்கோ.

அட எனக்கு இல்லை சில பேருக்கு என்று சொன்னேன் எனக்கு பிரண்ட் மிஸ்டர் விநாயகர் இருக்கிறார் தானே அவர் காணும் ஏதாவது பிரச்சினை வரக்க மட்டும் தான் அவரை திங் பண்ணுவன் அவர் ஓடி வந்திடுவார் மிச்ச நேரத்தில வரை டிஸ்சர்ப் பண்ணுறதில்லை நிலா அக்கா........அப்ப நிலா அக்கா யாரை கும்பிடுறனீங்க நேற்று கூட சதுர்திக்கு விரதம் பிடித்தனீங்க என்று கேள்விபட்டேன் உண்மையோ..... :P :P :lol:

அட எனக்கு இல்லை சில பேருக்கு என்று சொன்னேன் எனக்கு பிரண்ட் மிஸ்டர் விநாயகர் இருக்கிறார் தானே அவர் காணும் ஏதாவது பிரச்சினை வரக்க மட்டும் தான் அவரை திங் பண்ணுவன் அவர் ஓடி வந்திடுவார் மிச்ச நேரத்தில வரை டிஸ்சர்ப் பண்ணுறதில்லை நிலா அக்கா........அப்ப நிலா அக்கா யாரை கும்பிடுறனீங்க நேற்று கூட சதுர்திக்கு விரதம் பிடித்தனீங்க என்று கேள்விபட்டேன் உண்மையோ..... :P :P :mellow:

பொய்த் தகவல் :P

கோயில் சென்று அம்பாளைத் தேடினேன்

நம்மாள் தான் கண்ணில் தெரிந்தார் :lol:

Edited by வெண்ணிலா

பொய்த் தகவல் :P

கோயில் சென்று அம்பாளைத் தேடினேன்

நம்மாள் தான் கண்ணில் தெரிந்தார் :mellow:

பொய் தகவலா இருக்காதே நம்ப தகுந்த வட்டாரத்தில இருந்து வந்த தகவல் மற்றது கோயிலில யாரோவோ மயக்கம் போடு விழுந்தது என்று எல்லாம் புலனாய்வு துறை ஜம்முவிற்கு அறிக்கை சமர்பித்து இருக்கீனம் உண்மையோ நிலா அக்கா......... :P :P :lol:

கோயிலில் சென்று அம்மாள் தேடிய உங்கள் கண்ணில்

அம்மாள் காட்சி தர மயக்கம் போட்டு விழுந்து விட்டீங்களோ!!! :lol:

பொய் தகவலா இருக்காதே நம்ப தகுந்த வட்டாரத்தில இருந்து வந்த தகவல் மற்றது கோயிலில யாரோவோ மயக்கம் போடு விழுந்தது என்று எல்லாம் புலனாய்வு துறை ஜம்முவிற்கு அறிக்கை சமர்பித்து இருக்கீனம் உண்மையோ நிலா அக்கா......... :P :P :D

கோயிலில் சென்று அம்மாள் தேடிய உங்கள் கண்ணில்

அம்மாள் காட்சி தர மயக்கம் போட்டு விழுந்து விட்டீங்களோ!!! :lol:

:mellow::lol::lol: என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும்? :3d_019:

:mellow::lol::lol: என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும்? :3d_019:

ஏன் என்னும் மயக்கம் போகவில்லையோ அக்காவிற்கு............அது சரி அந்த பயங்கர படத்தை போட்டு பேபியை பயப்பிட பண்ணுறீங்க நிலா அக்கா......... :P ;)

ஏன் என்னும் மயக்கம் போகவில்லையோ அக்காவிற்கு............அது சரி அந்த பயங்கர படத்தை போட்டு பேபியை பயப்பிட பண்ணுறீங்க நிலா அக்கா......... :P ;)

என்ன உளறல்?

கோயில் போனமா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து சாப்பிட்டமா என்று வராமல் எங்கேயோ பேய் அடிச்சிட்டு போல இருக்கு

தொடர்பில்லாமல் என்னை என்னமோ கேட்கிறியள். ஜம்மு எனக்கு கோவம் வந்தால் தெரியும் தானே

என்ன உளறல்?

கோயில் போனமா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து சாப்பிட்டமா என்று வராமல் எங்கேயோ பேய் அடிச்சிட்டு போல இருக்கு

தொடர்பில்லாமல் என்னை என்னமோ கேட்கிறியள். ஜம்மு எனக்கு கோவம் வந்தால் தெரியும் தானே

நான் கோயிலிற்கே போகவில்லை நிலா அக்கா.........பேயா அது என்னை அடிக்கிறதா நான் தான் பேயை அடிபேன்....அப்பாடா ஒரு மாதிரி கோபம் வர பண்ணிட்டன் அக்காவிற்கு.......... :P :P :lol:

நான் கோயிலிற்கே போகவில்லை நிலா அக்கா.........பேயா அது என்னை அடிக்கிறதா நான் தான் பேயை அடிபேன்....அப்பாடா ஒரு மாதிரி கோபம் வர பண்ணிட்டன் அக்காவிற்கு.......... :P :P :lol:

ஏன் பூசணிக்காயலல்து வாழைப்பழம் சாப்பிட்டால் கோவம் குறையுமோ?

ஏன் பூசணிக்காயலல்து வாழைப்பழம் சாப்பிட்டால் கோவம் குறையுமோ?

உடலை பேண கோபத்தை குறைக்க வேண்டும் என்று பெரிய சுவாமிகளான ஜமுனானந்த ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார் தெரியும் தானே............ :P :P :lol:

உடலை பேண கோபத்தை குறைக்க வேண்டும் என்று பெரிய சுவாமிகளான ஜமுனானந்த ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார் தெரியும் தானே............ :P :P :lol:

ம்ம்ம் தெரியும். அதுதான் கோபம் கொள்ளுவதில்லை முந்திபோல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்காவது மத்தளபூசணிக்காயை தெரியுமா?

ம்ம்ம் தெரியும். அதுதான் கோபம் கொள்ளுவதில்லை முந்திபோல

ஓ இப்ப கோபம் கொள்வதில்லையா நல்ல விசயம்........ஆனா இப்ப பேபி கோபம் கொள்ளுதோ நிலா அக்கா....... :P ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.