Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஸ்களில் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவித்த மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்களில் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவித்த மாணவர்கள்

Published By: DIGITAL DESK 5

13 MAR, 2023 | 12:19 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம்  பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ - 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் இன்றும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

22.png

இவ்வாறான நிலையில் பரீட்சை நடைபெறும் இந்த காலப்பகுதியிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இவ்வாறு பஸ்கள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதனைவிட இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாறாக பருவகால சிட்டை பெற்றபின்னர்  ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

received_2433488586818940.jpeg

இவ்வாறான பின்னணியில் பாடசாலையில் பரீட்சை நடைபெறுகின்ற நிலையில் இன்று (13) காலை  8.12 மணிவரை மாணவர்களை எந்த பஸ்களும் ஏற்றாமல் சென்ற நிலையில் மாணவர்கள் தவித்து நின்ற நிலையில் மாங்குளம் போக்குவரத்து பொலிஸார் அழைக்கப்பட்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் நடத்துனர் கூட பொலிஸாருடன் வாக்குவாதம் பட்டே பஸ்ஸில் மாணவர்களை ஏற்றி செல்கின்ற அதேவேளை குறித்த விடயங்களை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளார்.

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இல்லையேல் ஏ_9 வீதியை மூடி மாபெரும் போராட்டம் மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/150354

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு பிரதான வீதிகளில் மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பஸ்களால் சிரமப்படும் மாணவர்கள்

யாழ்ப்பாணம் கண்டி ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான முல்லைத்தீவு பிரதான வீதிகளில் காலை வேளைகளில் பஸ்கள் எதுவும் செல்லாததால் பாடசாலை மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

4445-9-1024x580.jpg
காலை நேரத்தில் பாடசாலை மாணவர்கள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் இருந்து லங்கம பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இடைநில்லாது ஓடுவதால், சில மாணவர்கள் காலை 9 மணிக்கே பாடசாலை செல்லும் நேரமும் உண்டு என மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மழை காரணமாக இந்த நாட்களில் பாடசாலை பரீட்சைகள் நடைபெறுவதால், மாணவர்களுக்காக பேருந்துகள் நிறுத்தப்படாததால், அவர்களது பரீட்சை நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முல்லைத்தீவில் பல போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையிட்டு ஓடும் பஸ்களை நிறுத்தி பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றி விடுவதுடன் பஸ் சாரதிகளையும் எச்சரிக்க வேண்டியுள்ளது.

பல மாதங்களாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை என, பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பஸ்கள் நிற்காததால், ஏராளமான மாணவ, மாணவியர், காலையில் பல மணி நேரம் படிப்பை தவறவிட்டு, மாலையில் இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வர வேண்டியுள்ளது.

இதன்காரணமாக, இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் வீதியை மறித்து இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/245242

  • கருத்துக்கள உறவுகள்

அடியைப்போல அண்ணன் தம்பி உதவாது. சாரதிமாருக்கு நாலு சாத்துச் சாத்தினா எல்லாம் சரிவரும், பிறகு குய்யோ முறையோ என்று போராட்டத்தில குதிப்பினம். தங்கட பிள்ளையள் தெருவில நின்றா பொறுப்பினமோ இவை? இவர்களை நீக்கி விட்டு பயிற்றப்பட்ட சாரதிகளை பணிக்கமர்த்த, திமிர் தன்னால இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை பேருந்து பிரச்சனை காலம் காலமாக உள்ள பிரச்சனை. மாணவர்களுக்கும் சாரதி/நடத்துனர்களுக்குமான இழுபறிகள் முடிவு இல்லாதன. 

பொதுவாக பேருந்து ஏற்கனவே நிரம்பிவிட்டால் மேலதிகமாக மாணவர்களை ஏற்றமுடியாத நிலையில் இடைவெளி தூரத்துக்கு அப்பாலான தரிப்பிடங்களில் பேருந்து நிற்காமல் செல்வது வழமை. 

உண்மையில் இது சாரதி/நடத்துனர்களின் தவறு இல்லை. மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவேண்டியது சம்மந்தப்பட்ட பொறுப்புக்களில் உள்ளவர்களின் கடமை. 

நாங்கள் கற்ற காலத்தில் எமது வழியில் மாணவர்கள் அதிகம் என்பதால் இரண்டு பேருந்துகள் சேவையில் விடப்பட்டன.  சிறிதுகாலம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக பேருந்துகள் விடப்பட்டன. 

குறிப்பிட்ட ஊர்களில் உள்ள பெரியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிய மாணவர்களின் சார்பாக இந்த விடயத்தை சீர் செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

அடியைப்போல அண்ணன் தம்பி உதவாது. சாரதிமாருக்கு நாலு சாத்துச் சாத்தினா எல்லாம் சரிவரும், பிறகு குய்யோ முறையோ என்று போராட்டத்தில குதிப்பினம். தங்கட பிள்ளையள் தெருவில நின்றா பொறுப்பினமோ இவை? இவர்களை நீக்கி விட்டு பயிற்றப்பட்ட சாரதிகளை பணிக்கமர்த்த, திமிர் தன்னால இறங்கும்.

எந்த நாட்டில இருக்கிற நீங்கள்?  இது இலங்கை அவ்வளவுதான்  எல்லோர் கையிலும் சட்டமும்  நீதியும் இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.