Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி கோசிப் 30

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வீடிற்கு பக்கத்து வீட்டில் மைக்கிலும் எலிசபத்தும் ஒன்றாக தான் இருகிறார்கள் என்று நான் நினைத்தேன் அப்ப தான் நம்ம சண்முகத்தார் சொன்னார் அவர்கள் விவாகரத்து செய்தவர்களாம்,உடனே சந்தேகம் வந்து விவாகரத்து செய்தவர்கள் என்றா எப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அது வந்து செப்ரேசன் அன்ட வன் ரூவ்(sepration under one roof).எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டிருந்தேன்.அதை புரிந்து கொண்ட சண்முகத்தார் அதாவது இந்த நாட்டில் ஒரு சட்டம் இருகிறது விவாகரத்து பெற்றாலும் ஒரே வீட்டில் இருக்கலாம் அப்படி இருப்பதால் பிரிந்தவர்களுக்கு சில வசதிகள் இருக்குதாம் அதாவது வீட்டுவாடகை மற்றும் அன்றாடசெலவுகள்,பிள்ளைகளின் எதிர்காலதிற்காக போன்ற விடயங்களிற்காக அவுஸ்ரெலியா அரசாங்கம் இந்த சட்டத்தை அமுல்படுத்தியது.

உடனே எனது நினைவில் வந்தது நம்மன்ட கனகதாரும் மனிசியும் உந்த சட்டத்தில தான் சென்ரலிங் (அவுஸ்ரெலிய அரச மானியம் வழங்கும் நிறுவனம்) காசு பெற்று கொண்டு மனிசியும் தானும் பிரிந்துபோட்டோம் என்று ஆட்களுக்கு சொல்லி கொண்டு ஒரே வீட்டில் தான் காலத்தை தள்ளீனம்,அவுஸ்ரெலிய அரசாங்கம் என்னதுக்கோ இந்த சட்டத்தை உருவாக்க நம்மன்ட சனமோ பிரிந்தும் பயன்படுத்துகிறார்கள்..

Edited by putthan

புத்து மாமா உது பகிடி இல்லை.

மேலும், இது எங்கட ஆக்களுக்கு புதுமையான விசயமும் இல்லை.

எனது மாமியும் மாமாவுடன் இப்படித்தான் வாழுறா (அவர்கள் இதை வாசிக்க மாட்டார்கள் என்ற துணிவுடன் எழுதுகின்றேன்).

அவா யூகேயில் இருக்கிறா. இருவருக்கும் ஒத்துப்போகாது. என்றபடியால் ஒருவருடன் மற்றவர் கதைப்பதில்லை. இருவரும் அந்நியர்கள் போல் ஒரே வீட்டில் வாழ்கின்றார்கள். பிள்ளைகள் உண்டு.

காரணம் என்னவென்றாவாம் (மாமி சொன்னது) மாமா அவர் எந்த நேரமும் வேலை, வேலை என்று ஒரு மார்க்கமாக அலைந்து கொண்டு இருப்பாராம். இவா பலதடவை சொல்லிப் பார்த்து இருக்கிறா. அவர் வழிக்கு வரவில்லை. எனவே இருவரும் வாய் மூலமான உரையாடலை துண்டித்துவிட்டு மெளனசாமிகளாக வாழ்கின்றார்கள்.

ஆனால், பிள்ளைகளை இருவரும் பகிர்ந்து கவனிப்பார்கள்.

மாமி தான் உண்டு, தனது வேலை உண்டு, தனது சொந்தங்கள், நண்பர்கள் என்று தனியான ஒரு வாழ்க்கை!

இதேபோல் மாமாவும் தனியான ஒரு வாழ்க்கை!

இருவரும் ஒரேவீட்டில் வாடகைவீட்டில் குடியிருப்பது போல வாழ்கின்றார்கள்..

ஒருவருடன் ஒருவர் பிடுங்குப்பட்டு, கோர்ட், கேஸ், விவாகரத்து, ஜெயில் என்று அலைந்து, சந்திக்கு வந்து சண்டைபிடித்து, நாறுப்படாமல் இப்படி தங்கள் பாட்டில் அமைதியாக ஒரே வீட்டில் பிரிந்து வாழ்வது பரவாயில்லை போல இருக்கின்றது.

அட கடவுளே இபப்டியுமா? எப்படிப்பா உபப்டி இருக்கிறது? கதைக்காமல் எல்லாம் இருக்கலாமா?

நல்ல புருசன் பொண்டாட்டிகள் தான்,.

புத்துமாமா இவங்களும் பிரிந்துவிட்டாங்களோ.......................

சூப்பராக அடித்திருகிறீங்க வாழ்த்துகள்......... :P :P :P :P :)<_<:(

ஒருவருடன் ஒருவர் பிடுங்குப்பட்டு, கோர்ட், கேஸ், விவாகரத்து, ஜெயில் என்று அலைந்து, சந்திக்கு வந்து சண்டைபிடித்து, நாறுப்படாமல் இப்படி தங்கள் பாட்டில் அமைதியாக ஒரே வீட்டில் பிரிந்து வாழ்வது பரவாயில்லை போல இருக்கின்றது.

ஜெனரல் அவர்களே பிடுங்குபடாம் போகிறது நல்ல விசயம் ஆனா நம்மவர் வந்து அரச மானியம் கிடைக்கும் என்று பிரிந்த மாதிரி வெளி தோற்றத்தை உருவாக்கிறார்கள் அதை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க............ :P

அட கடவுளே இபப்டியுமா? எப்படிப்பா உபப்டி இருக்கிறது? கதைக்காமல் எல்லாம் இருக்கலாமா?

நல்ல புருசன் பொண்டாட்டிகள் தான்,.

கதைக்காமல் இருந்தா நல்ல புருசன் பெண்டாட்டியா நிலா அக்கா :P

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை பிடித்தோ ஆளை ஆள் பிடிக்காமலோ மட்டும் இப்படி நடப்பதில்லை.வேறு பல வசதிகளை வேண்டியும் இப்படி இருக்கிறார்கள்.உள்ளுக்குள் சந்தோசமாக இருப்பார்கள்.வெளிப் பார்வையில் பிரிந்திருப்பார்கள்.

ஜெனரல், நீங்கள் நம்மட ஆக்கள் செய்கின்ற எல்லா செப்படி வித்தைகளையும் பற்றி விரிவாக அறிந்துவைத்து இருக்கிறீங்கள்! வாழ்த்துக்கள்! :)

உண்மையில் அரசமானியம் பெறுவதற்காக, மற்றும் சில சலுகைகளை பெறுவதற்காக நம்மவர்கள் இப்படியான குரங்குச்சேட்டைகள் செய்வது, மற்றவர்களுக்கு, அரசுக்கு நடிப்பது உண்டு.

ஆனால், எனது மாமி அந்தவகை இல்லை. சொன்னால் சொல்லுத்தான், வெட்டு ஒண்டு! துண்டு ரெண்டு! ;)

Edited by கலைஞன்

ஜெனரல் அவர்களே!!

நம்மன்ட ஆட்களின்ட செப்படி வித்தை எல்லாம் கற்காட்டி நம்மளிற்கே காதிலே பூ சுற்றி போடுவாங்க குருவே சிட்னியில.............நன்றி வாழ்த்துகளிற்கு குருவே...... <_< ;)

உங்களின் மாமியை நினைத்து பெருமைபடுகிறேன்...........பயமில்லா

மாமியை பற்றி எழுதுறீங்க யாரும் பார்த்து சொன்னா பிறகு உங்க பாடு.......... :)

Edited by Jamuna

இங்கிலண்ட் இலும் உப்படி சட்டம் இருக்குதாக்கும். அப்படியா?

இங்கிலண்ட் இலும் உப்படி சட்டம் இருக்குதாக்கும். அப்படியா?

ஏன் அக்கா இங்கிலண்ட் போக போறீங்களா.......... :P

ஏன் அக்கா இங்கிலண்ட் போக போறீங்களா.......... :P

இல்லை சும்மா அறிஞ்சு வைக்கிறதுதானே. :)

இல்லை சும்மா அறிஞ்சு வைக்கிறதுதானே. :)

சும்மா அறிந்து வைக்கிறீங்களோ உதை நான் நம்பமாட்டேன்........... :P <_<

ஆனால், பிள்ளைகளை இருவரும் பகிர்ந்து கவனிப்பார்கள்.

குருவே உங்கள் மாமா & மாமி இருவரும் மெளனங்களை பரிமாறி பிள்ளைகளை வளர்ப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?

சும்மா அறிந்து வைக்கிறீங்களோ உதை நான் நம்பமாட்டேன்...........

ஏன் நம்பமாட்டியள்?

தமிழரின் புத்திசாலித்தனம் இதுபோன்ற விடயங்களில் அபாரமாக வேலை செய்யும் புத்தன். ஓஸ்ரேலியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இதேதான். அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளைப் பெற எதை வேண்டுமென்றாலும் இழக்கத் தயார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இருந்தாலும் எங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரனைப்பற்றி ஒரு நிமிசம் கதைக்காவிட்டால் சாப்பிட்ட சாப்பாடு சமிக்காது பாருங்கோ :lol:

குருவே உங்கள் மாமா & மாமி இருவரும் மெளனங்களை பரிமாறி பிள்ளைகளை வளர்ப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?

ஏன் நம்பமாட்டியள்?

நிலா அக்கா பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிய கூடாது என்ற ஒரு எண்ணத்துடன் தான் இந்த சட்டமூலம் வெளிநாட்டில் கொண்டுவரபட்டது........அதாவது பெற்றோர்களுடன் அவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதல்லவா.........அத்துடன் எங்கள் சமூகத்தை எடுக்கவில்லை மற்றைய சமூகம் வெள்ளையர்கள் அவர்கள் வந்து மனைவியுடன் கதைப்பார்கள் பிரண்டா பழகுவார்கள் ஆனால் மனைவி என்ற உரிமை இருக்காது............பிள்ளைகளின் எதிர்காலம் இதனால் பிரச்சினைக்கு உள்ளாகாது ஆனால் நம்மவர்கள் பற்றி சொல்லவா வேண்டும்..........குருவின் உறவினர்கள் பற்றி அவர் தான் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் நிலா அக்கா........ :lol:

மாமியும் மாமாவும் தங்களிக்கு இடையில் கதைப்பது இல்லையாயினும் பிள்ளைகளுடன் கதைப்பார்கள். பிள்ளைகள் இருவருடனும் கதைப்பார்கள். என்றபடியால் பிரச்சனை இல்லை. பிள்ளைகள் ஆகவும் குழந்தைப் பிள்ளைகள் இல்லை. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட வளர்ந்த பிள்ளைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.