Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் யுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள 84 சதவீத சிங்கள மக்கள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் யுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள 84 சதவீத சிங்கள மக்கள் ஆதரவு

[Fரிடய் ஸெப்டெம்பெர் 07 2007 01:29:28 PM GMT] [யாழ் வாணன்]

இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல 84 சதவீதமான சிங்கள மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய சமதான சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

யுத்த முன்னெடுப்புகளுக்கு 84 சதவீமான மக்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பதோடு, யுத்த நடவடிக்கைகளில் அரசாங்கம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் சிறீலங்காப் படைகளின் யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

:lol: இன்னும் இரண்டு தடவை புலிகளின் வான் படை போய் தெற்கில குண்டுகள் போட்டாலே இது தலை கீழாக மாறிடும்

இதுக்கென்ன கருத்துக்கனிப்பு . 50 வருசமா தெரிஞ்ச விசயம் தானே. இல்லாட்டி எப்படி 30 வருசம் யுத்தம் நடத்தி இருக்க முடியும்?

யுத்தத்தின் கொடுந்தன்மை இன்னமும் சிங்களவர்களினால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அதன் முடிவுதான் இந்தக் கருத்துக் கணிப்பின் வெளிப்படுத்துகை. யுத்தம் பற்றிய பயம் தெற்கில் சிங்களவர்களுக்கு ஏற்படும்போது தீர்வுகள் தானாகப் பிறக்கும். தமிழர்தரப்பிற்கு கருத்துக் கணிப்பு புரியவைத்திருக்கும் செய்தி இதுதான். யுத்தம் என்பது கொடுமையானது. ஆனாலும் முள்ளை முள்ளினால்தான் எடுக்க வேண்டும்.

சிங்களம் தாம் பெற்றதாக சொல்லும் மாயை வெற்றியை நம்பி இந்த முடிவு இதன் எதிர்மாறான முடிவினை வெகு சீக்கிரம் சிங்களவர் நொந்து கூறுவார்கள்

சிங்களர்கள் போரின் கொடுமையை உணர்ந்தாலும் திருந்துவார்களா என்பது சந்தேகம் தான்

  • 3 weeks later...

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க 84 விழுக்காடு சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக மார்க்கா மையம் மற்றும் தேசிய சமாதான சபை ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

தமிழ்மக்களைக்கொன்றொழிப்பது என்று முழுமையாக வினவியிருந்தால் 100 வீத விழுக்காடு கிடைத்திருக்குமே.. :3d_019:

*****

Edited by harikalan

அப்புறமென்ன? 16 விழுக்காட்டினரைச் சுட்டுக்கொல்வது,

84 விழுக்காட்டினரைப் போருக்கனுப்புவது.

:rolleyes::o:D:):lol:

இதை தானே சிங்களவன் தொடர்ந்து 30 வருசமா செய்கிறான் எங்கட சனங்கள் தான் அப்பாவி சிங்களவனுக்கு போருக்கு விருப்பம் இல்லை என்று சும்மா கதைத்து கொண்டு திரிவினம்

உண்மைதான் நேசன் சிலர் இருகின்றார்கள் சிங்களவன் நல்லவன் என சொல்லிகொண்டு திரியீனம்

இதற்கெல்லாம் முடிவு கட்ட வெளிக்கிடும்போது எத்தனை விழுக்காடு ஆதரவு என பார்கலாம்

இந்த செய்தி எப்படி

புலிகள் இயக்கத்திற்குள் கடும் உட்பூசல்

[29 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

கடந்த ஒன்றரை வருட காலமாக அரசபடையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் இயக்கத்தினர் படுதோல்விகளை அடைந்து தப்பியோடியும் பின்வாங்கியும் உள்ள நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களில் சுமார் 60% மான நிலப்பரப்பை புலிகள் இயக்கம் இழந்து விட்டது.

அத்துடன், தோல்விகள் காரணமாகவும் மற்றும் இயக்கத்தின் செயற்பாடுகளிலுள்ள குழப்பநிலைமை காரணமாகவும் புலிகள் இயக்கத்தில் பெரும் உட்பூசல் எழுந்துள்ளது. இதனால், புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளிடையே கருத்து மோதல்கள் பரவலாக உருவாகியுள்ளன.

இந்தத் தகவல்களை இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் சரத் பொன்சேகா திவயினவுக்குத் தெரிவித்துள்ளதுடன் இவை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு மூலம் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் ஈழம் கனவு கலைந்து கொண்டிருப்பதாகவும் வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் ஆங்காங்கே செயற்படும் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தின் பலம் இன்று அனைத்துப் பிரதேசங்களிலும் சிதைக்கப்பட்டு தற்போது முல்லைத்தீவு , கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஒன்றரை வருடகாலமாக அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் 3000 க்கும் அதிகமான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் உயிரிழந்துவிட்டதாகவும் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அங்கவீனர்களாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக இராணுவத் தளபதி மேலும் திவயினவுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு புலிகள் இயக்கம் அதன் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் 60% மான பகுதிகளை கடந்த ஒன்றரை வருடங்களில் இழந்து விட்டதும் இயக்கத்தின் ஆயுத மற்றும் யுத்த பலமும் 50% குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இதற்குக் காரணம் புலிகள் இயக்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மட்டுமன்றி தோல்விகளைத் தொடர்ந்து இயக்கத்துக்குள் எழுந்துள்ள மோதல்களும் பூசல்களுமே எனவும் இந்த நிலையில், புலிகள் இயக்கம் இன்று அரை உயிருடன் இயங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் , உபகரணங்கள் பெருந்தொகையில் இருக்கக்கூடும் என நம்பப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம் கடந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஆரம்ப காலத்திலிருந்து இறுதியாக நடந்து முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தை வரையில் புலிகள் இயக்கம் ஆயுதங்களைப் பெருந்தொகையில் கொண்டு வந்து சேர்த்துள்ளதே எனவும் இராணுவத் தளபதி பத்திரிகைக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

திவயின:26/09/2007

http://www.thinakkural.com/news/2007/9/29/...s_page37050.htm

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் ஏட்டின்படி வன்னியில் போர் வெடித்தால் தற்காப்பு நிலைக்கு வெளியே சென்று தாக்குதல் நடத்த மக்களின் பங்களிப்பு அவசியம் தேவை என்ற தொனியில் உள்ளது... எனவே சிங்கள இராணுவத்தின் முற்றுகையை எதிர்கொள்ளும் தற்காப்பு யுத்தத்திற்காகத்தான் புலிகள் வளங்களைப் பாதுகாக்கின்றார்கள்; வலிந்த தாகுதல்மூலம் இழக்கப்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றவல்ல என்ற துணிச்சலில் சிங்கள இராணுவம் உள்ளது. சிங்கள மக்களும் போரில் வெல்லலாம் என்ற மனவுறுதியில் உள்ளனர்..

வன்னியில் புலிகள் புரியப்போகும் எதிர்ச்சமர் வன்னியைக் காக்கும் தற்காப்புப் போர் என்ற நிலைக்கும் அப்பால், வன்னியிலிருந்து நிலம் மீட்கும் போராக முழுப்பரிமாணம் பெறுவதற்குமக்களின் ஒத்துழைப்பும் - பங்களிப்பும் மிக அவசியமானதாகும்.

http://www.viduthalaipulikal.com/file/docs...7/09/137-01.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...7/09/137-02.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.