Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர்

Published By: Rajeeban

19 Apr, 2023 | 09:42 AM
image

நான் ஆரம்பித்து வைத்ததை ஜனாதிபதி தொடர்கின்றார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான ஈடுபாடுகள் ஒரு சிறப்பான வெற்றிகரமான முயற்சியாக காணப்படும்   எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.

நாடு மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டகாலத்தில் நான் நிதியமைச்சராக பணியாற்றினேன் என தெரிவித்துள்ள அலிசப்ரி நானே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன் ஜனாதிபதி அதனை தொடர்ந்து முன்னெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்

சர்வதேச நாணயநிதியத்துடனான எங்களின் ஈடுபாடு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் பொருளாதாரத்தை பொருத்தவரை நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் எங்கள் பொருளாதாரம் மீண்டும் இயங்கதொடங்கியுள்ளது உள்நாட்டு யுத்தம் கொவிட் பொருளாதார வீழ்ச்சி காரணமாக நாங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அரசாங்கம் வடக்கை சேர்ந்த 12000 இளைஞர்களிற்கு மறுவாழ்வளித்தது, இந்த இளைஞர்களை அரசாங்கம் பராமாக்கின்றது அவர்களிற்கு நிதிஉதவியை வழங்குகின்றது அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நாங்கள் இந்தியாவுடன் மேலும் ஒன்றிணைவை  ஏற்படுத்தமுயற்சிக்கின்றோம்,இதனடிப்படையில் நாங்கள் இந்தியாவுடனான விமானசேவைகளை அதிகரிக்க முயல்கின்றோம் நாங்கள் விரைவில் இந்தியா இலங்கை படகுச்சேவையை ஆரம்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனியொரு பிராந்திய கூட்டமைப்புடன் மாத்திரம் இணைந்துசெயற்படவிரும்பவில்லை நாங்கள் சீனாவுடன் மேற்குலக மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/153173

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை

 

22 minutes ago, கிருபன் said:

அரசாங்கம் வடக்கை சேர்ந்த 12000 இளைஞர்களிற்கு மறுவாழ்வளித்தது, இந்த இளைஞர்களை அரசாங்கம் பராமாக்கின்றது அவர்களிற்கு நிதிஉதவியை வழங்குகின்றது அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கை சுரண்டிக்கொண்டு சர்வதேச உதவியை இவர்களுக்கென்று வாங்கி அவர்கள் நிலத்தில் விகாரைகளை கட்டி நிரப்ப வேண்டுமாம். பக்கத்தில இருக்கிறவருக்கும் கொஞ்சம் போடுங்கோ என்று அடிக்கடி கோஷான் சொல்லுவார் இதைக்குறித்துதானோ? பிக்குகள் தான் இந்த வசனத்தை பாவிப்பதாக நான் கேள்விப்பட்டேன். குரங்குகளுக்கு அடுத்து வட கிழக்கு இளைஞர்களை குறிவைக்கிறாரோ  அமைச்சர் என்கிற பயமாய் கிடக்கு எனக்கு. ஆராய்ச்சிக்கு என்று சொல்ல வந்தேன்.

இது விமல் வீரவன்ச, சரத் வீரசேகரவுக்குத் தெரியுமோ? இல்லை, நேற்றுதான் வீரவன்ச ஏதோ இதைப்பற்றி சொல்லியிருந்தார் நிட்சயப்படுத்திக்கொள்வதற்காக கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியால்... பெரிதும் பாதிக்கப் பட்ட வடக்கு, கிழக்கிற்கு 
வெளிநாடுகளால் கொடுக்கப் பட்ட பெருந் தொகை பணத்தை எடுத்து,
சிங்களப் பகுதிகளுக்கு கொடுத்தவர்கள்...

ஜப்பானால்...யாழ். மாநகர சபைக்கு ஒரு தீயணைப்பு வாகனம் இறக்குமதி 
செய்ய சொல்லி கொடுத்த பணத்தை பாவிக்க விடாமலும், 
இறக்குமதி செய்ய விடாமலும் காலத்தை கடத்தி அந்தப் பணத்தை திரும்பவும் 
ஜப்பானுக்கே திருப்பி அனுப்பச் செய்ய வைத்த துவேசம் பிடித்த சிங்களவன்...

இப்போ... வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப் படுகிறது என்று 
அவர்களை சாட்டி பிச்சை எடுக்க தயாராகின்றார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை சாகவும் விடாது  வாழவும் விடாது சிங்களம். அவர்களது மூலதனமே தமிழன்தான். காட்டி பிச்சை எடுக்கவும், அடித்து அரசியல் செய்யவும், சுரண்டி வாழவும் தமிழன் தேவை அவர்களுக்கு. எதையெதை காட்டி, எதையெதை விற்று பிச்சை எடுக்கலாமென ஆளாளுக்கு யோசிப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

20 க்கும் மேலான நாடுகளின் ஆசீர்வாதத்துடன்தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தவர்கள்...... தொடர்ந்து அதைத்தான் செய்வார்கள்........!  😢

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் அழுகிறது. 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கிருபன் said:

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர்

இவனுகள் நோகாமல் நொங்கு குடிக்கிறடுக்கு வெளிநாட்டு காசு வேணுமெண்டால்  ஈழத்தமிழர் பிரச்சனை கட்டாயம் தேவை.:unamused_face:

பழைய பேப்பட்டங்கள் இனியும் அவியாது  கண்டியளோ..😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவனுகள் நோகாமல் நொங்கு குடிக்கிறடுக்கு வெளிநாட்டு காசு வேணுமெண்டால்  ஈழத்தமிழர் பிரச்சனை கட்டாயம் தேவை.:unamused_face:

பழைய பேப்பட்டங்கள் இனியும் அவியாது  கண்டியளோ..😎

அடிச்சு விரட்ட வேணும்! இன்றைய உலகில் பல நாடுகள் பரம எதிரிகளாக தங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டாலும் எழும்பத் துடிக்கும் சிறு இனங்களை அடித்து விழுத்தி அழிப்பதில் ஒன்றுபட்டு ஒன்றுக்கொன்று உதவுகின்றன. இது உலக நியதிபோல் தோன்றுகிறது. சமுத்திரத்தில் பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கி உயிர் வாழ்வதுபோல். எத்தனையாண்டுகள் அமைதியாகவும் ஆயுத ரீதியிலும் போராடினோம் இருந்தும் அழித்தார்கள். இன்றும் எமக்கெதிரான வன்முறைகள் நடந்து கொண்டிருக்குபோதும் சர்வதேசம் நடந்துகொள்ளும் விதம் அவற்றை கண்டும் காணாததுபோல் எங்கள் இனத்தை அழிக்க சிங்களத்தை ஊக்குவிப்பதுபோல்ற் தோன்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

20 க்கும் மேலான நாடுகளின் ஆசீர்வாதத்துடன்தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தவர்கள்...... தொடர்ந்து அதைத்தான் செய்வார்கள்........!  😢

அவர்களே ஒத்துக்கொண்டு விட்டார்கள், சுதந்திரம் பெற்றதிலிருந்து தாங்கள் உழைத்துச் சாப்பிடவில்லை, கடன்வாங்கியே சாப்பிட்டோம் என்பதை. ஆனால் அந்த இனம் வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்ததாக வரலாறு இல்லை, பிச்சை என்பதையும் அடித்து கொன்று தின்றோம் என்பதையும் குறிப்பிடவில்லை. அது அவர்களின் இனம் சார்ந்த தொழில் என்பதாலா அல்லது பின்னாளில் வருமா தெரியவில்லை. இத்தனையாண்டுகளாய் தமிழனை உறிஞ்சி வாழ்ந்தவர்கள் இப்போ தமிழனின் பொருளாதார முதுகெலும்பு  முறிக்கப்பட்டபின் அப்பட்டமாக வெளியே தெரிகிறது, மறைக்க முடியவில்லை ஒப்புக்கொள்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.