Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
download-2-2.jpg

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

ஆசிய நாடுகளில் அதிக நீரிழிவு நோயைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது, அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/250356

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் புட்டு

மத்தியானம்  சோறு

பின்னேரம் மரவள்ளிக் கிழங்கு பொரியல், மிக்ஸர் + நல்லா சீனி போட்ட பிலென் tea

இரவுக்கு நல்ல கொத்து.

 

இப்பிடியே வாழ்ந்தால் இது தானே நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளின் கழிவு உணவுகள் இலங்கையில் தானே கொட்டபடுது இங்கு கேன் சுகர் என்று கரும்பின் படம் போட்டு கிழே 6௦ வீதம் கிழங்கு சீனி என்று சின்னதாய் எழுத்தில் போட்டு நெட்டோ ஒரு சுப்பர் மார்கெட் மிக குறைந்த விலையில் சீனி விற்பனை செய்து கொண்டு இருந்தது  இப்போ அதை காணவில்லை ஆனால் அதே கொம்பனி இலங்கையில் கேன் சுகர் 9௦ வீத கிழங்கு சீனி இலங்கையில் உள்ளதாம் செமையாய் வியபாரமாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பகிடி said:

காலையில் புட்டு

மத்தியானம்  சோறு

பின்னேரம் மரவள்ளிக் கிழங்கு பொரியல், மிக்ஸர் + நல்லா சீனி போட்ட பிலென் tea

40 வருடங்களிற்கு முன்னர் இதுதானே ஈழத்தமிழர்களின் அன்றாட உணவு வாழ்க்கை?  :cool:

அப்போது இந்த நீரிழிவு அலறல்கள் இல்லையே? :thinking_face:

இல்லை....:beaming_face_with_smiling_eyes:
 
இருந்தது.....:face_with_tears_of_joy:

யாருக்கு என்றால் நாகரீக உணவு உண்பவர்களுக்கு மட்டும்.தஸ் புஸ் இங்கிலிஸ் ஜான்பவான்கள் குடும்பங்களுக்கு மட்டும். அதனால் தான் அன்றே எம்மவர்கள் நீரிழிவு,இருதய நோயையும் பணக்கார வருத்தங்கள் என பெயர் சூட்டினார்கள். :smiling_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

40 வருடங்களிற்கு முன்னர் இதுதானே ஈழத்தமிழர்களின் அன்றாட உணவு வாழ்க்கை?  :cool:

அப்போது இந்த நீரிழிவு அலறல்கள் இல்லையே? :thinking_face:

இல்லை....:beaming_face_with_smiling_eyes:
 
இருந்தது.....:face_with_tears_of_joy:

யாருக்கு என்றால் நாகரீக உணவு உண்பவர்களுக்கு மட்டும்.தஸ் புஸ் இங்கிலிஸ் ஜான்பவான்கள் குடும்பங்களுக்கு மட்டும். அதனால் தான் அன்றே எம்மவர்கள் நீரிழிவு,இருதய நோயையும் பணக்கார வருத்தங்கள் என பெயர் சூட்டினார்கள். :smiling_face_with_smiling_eyes:

அதற்க்கு ஏற்ற உடல் உழைப்பும் இருந்தது, விரதம் பிடிக்கும் பழக்கம் இருந்தது, மரபணு மாற்றப் படாத உணவு இருந்தது கொஞ்சம் வறுமையும் இருந்தது. இன்று எதுவும் இல்லை,

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பகிடி said:

அதற்க்கு ஏற்ற உடல் உழைப்பும் இருந்தது, விரதம் பிடிக்கும் பழக்கம் இருந்தது, மரபணு மாற்றப் படாத உணவு இருந்தது கொஞ்சம் வறுமையும் இருந்தது. இன்று எதுவும் இல்லை,

நீங்கள் ஒரு மருத்துவர் என நினைக்கிறேன் பகிடி, சரியா? மரபணு மாற்றப் பட்ட உணவுகள் எப்படி நீரிழிவு போன்ற நோய்களுக்குக் காரணமென விளக்குவீர்களா? ஏதாவது ஆய்வு ஆதாரங்கள் இருக்கின்றனவா?

 உங்கள் உணவுப்பட்டியல் சரியாகத் தான் இருக்கிறது. இலங்கையில் வசிக்கும் என் நண்பர்கள் சிலரின் குழுப்படங்கள் சில சமயங்களில் வட்சப்பில் பகிரப் படும் போது நிற்கும் 10 பேரில் 8 பேர் perpetual pregnancy என நான் அழைக்கும் தொப்பையோடு நிற்கிறார்கள். உடலின் வேறு பாகங்களில் படியும் கொழுப்பை விட, தொப்பையாக வெளிப்படும் வயிற்றுக் கொழுப்பு நீரிழிவு நோயுடன் அதிக தொடர்புடையது என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 

18 hours ago, குமாரசாமி said:

40 வருடங்களிற்கு முன்னர் இதுதானே ஈழத்தமிழர்களின் அன்றாட உணவு வாழ்க்கை?  :cool:

அப்போது இந்த நீரிழிவு அலறல்கள் இல்லையே? :thinking_face:

இல்லை....:beaming_face_with_smiling_eyes:
 
இருந்தது.....:face_with_tears_of_joy:

யாருக்கு என்றால் நாகரீக உணவு உண்பவர்களுக்கு மட்டும்.தஸ் புஸ் இங்கிலிஸ் ஜான்பவான்கள் குடும்பங்களுக்கு மட்டும். அதனால் தான் அன்றே எம்மவர்கள் நீரிழிவு,இருதய நோயையும் பணக்கார வருத்தங்கள் என பெயர் சூட்டினார்கள். :smiling_face_with_smiling_eyes:

 

இதே தொனியிலான கருத்துக்களை வேறு திரிகளிலும் எழுதி தகுந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

4000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டதாக வரலாறு உண்டு.

அது தவிர இவை பணக்கார நோய்கள் இல்லை. ஏழைகளின் நோய் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
https://www.un.org/en/chronicle/article/why-no-one-talks-about-non-communicable-diseases

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 07:34, Justin said:

மரபணு மாற்றப் பட்ட உணவுகள் எப்படி நீரிழிவு போன்ற நோய்களுக்குக் காரணமென விளக்குவீர்களா? ஏதாவது ஆய்வு ஆதாரங்கள் இருக்கின்றனவா?

இதற்க்கு தரவுகள் அடிப்படையில் பதில் அளிப்பது கடினம்.

அதற்க்கு  காரணம் தரவுகள் போதாமை தான்.

கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் நீங்கள் நான் மேலே சொன்னதை பிழை எனவும் இன்னொருவர் சரி எனவும் வாதாட முடியும்.

 

தரவுகள் தவிர்த்து சில காரியங்கள் நான் மேற்படி முடிவுக்கு வர காரணமாகியது.

1) வட அமெரிக்க நாடாகிய அமெரிக்கா தனது மக்கள் நலனில் அக்கறை காட்டினாலும் அதை விட அதன் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவப் பலத்தை நிலைபெறச் செய்வதில் தான் அதிகம் அக்கறைப் படுகின்றது. ஆகவே குடிமக்களின் ஆயுள் அதிகரிப்பு விடயத்தில் அதன் கவனம் ஸ்கேண்டினேவிய நாடுகளை விட சற்றுக் குறைவு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தனது மக்களை 75 வயது வரைக்கும் பசி இல்லாமல் வாழ வைக்க முடியும் என்றால் அது அமெரிக்க வல்லரசுக்கு போதுமானது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 90 தாண்டி தனது மக்களை வாழ வைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை. மக்கள் நலன் தான் முக்கியம் என்று போனால் அமெரிக்கா தனது வல்லரசு நிலையை இழக்க வேண்டி வரும். இந்த நிலைமை ஸ்கேண்டிநெவிய நாடுகளுக்கு இல்லை என்பதால் அங்கே இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு குறித்து கவனமாக இருக்க முயல்கிறார்கள்

இன்னொரு காரணம் Medicine is ever Changing என்று சொல்வார்கள் அல்லவா!! அது தான். இன்று எங்களுக்கு நிரூப்பிக்கப் படாத ஒரு விஷயம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நிரூப்பிக்கப் படலாம் அல்லவா? இப்போது இதை நிரூப்பிக்க தரவுகள் இல்லை என்று சொல்லி விட்டு அதனால் பாதிக்கப்பட அனுமதித்து விட்டு பின்னர் அழுது என்ன பிரயோசனம்?

ஆகவே இயற்க்கைக்கு மாறாக ஏதேனும் நடக்கும் பொழுது பொதுப் புத்தி சொல்வதைக் கேட்பதை விட உள்ளுணர்வு சொல்வதைக் கேட்க விரும்புகிறேன்.

அதே நேரம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு உற்பத்தி மூலம் தான் பட்டினிச் சாவில் இருந்து பல மில்லியன் மக்கள் காப்பாற்றப் பட்டனர் என்கின்ற உண்மையையும் மறுப்பதற்க்கு இல்லை 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.