Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் -மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

 

அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்.

பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற  மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சிறந்தவர்கள் என்றும் எம்முடன் உள்ளார்கள்.

பிரதி அரசியல்வாதிகள் தமது அரசியல் பிரபல்யத்துக்காக எங்களை விமர்சிக்கிறார்கள். இதற்காக நாங்கள் கலக்கமடைய போவதில்லை.

உரிய நேரத்தில் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுப்போம். உழைக்கும் மக்களின் தொழில் உரிமைகளை பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

உழைக்கும் அடிமட்ட மக்கள் தான் எமக்கு என்றும் முன்னிலை ஆதரவு வழங்கியுள்ளார்கள். என்றும் ஆதரவு வழங்குவார்கள்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நான் முழுமையாக தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன்.

அதிகாரத்துக்காக நான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படவில்லை.தவறான தீர்மானங்களை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.

நாடு என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொண்ட வேளையில் தான் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றேன்.

சவால்களை கண்டு,நானும் எனது தரப்பினரும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.பல்வேறு சவால்களில் இருந்து மீள்வதற்கு மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சகல தொழிற்சங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் தொழிற்சங்கத்தினரை தவறாக வழிநடத்துகிறார்கள்.எம்மை திருடர், திருடர் என விமர்சிப்பவர்களின் பின்னணியை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

சவால்களை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தோம்.அப்போது எவரும் முன்வரவில்லை.

ஆனால் தற்போது கடுமையான எதிர்ப்புக்களை முன்வைக்கிறார்கள்.அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை தற்போது கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

நாட்டின் தேசியத்தை இல்லாதொழிக்க ஆரம்ப காலத்தில் சர்வதேச சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதற்கு பல விடயங்கள சான்று பகிர்க்கின்றன.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றவும்,மக்களுக்காக ஆட்சியை விட்டுக் கொடுக்கவும் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும்.பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்.

மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.

_DSC8566.jpg

_DSC8567.jpg

 

_DSC8587.jpg

 

மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் -மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்களே கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தனர் - ஜோன்ஸ்டன்

Published By: DIGITAL DESK 5

01 MAY, 2023 | 09:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01)இடம்பெற்ற  மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022 ஆம் ஆண்டு மே 09 சம்பவம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்தகம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தை வீழ்த்த சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடுகிறார். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை அவர் மறந்து விட்டார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் எரிபொருள்,எரிவாயு, மின்விநியோக கட்டமைப்பில் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதியாக முடியுமாக இருந்தால் தமக்கும் ஜனாதிபதியாக முடியும் என்ற எண்ணத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஹெலிகொப்டரில் ஏறினார்கள். இன்று அந்த ஹெலிகொப்டர் வானத்தில் பறக்க முடியாத அளவுக்கு உள்ளது.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.

ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/154265

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் லேட்டு புடியுங்க...புடியுங்க..வந்த காசு முடியப்போகுது..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்

ஓ அப்படியா . அப்படித்தான் இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டுத்தான் வெளிக்கிட்ட நீங்கள் என்னப்பு. ஆனால் உலகம் எல்லாம் கதை என்ன தெரியுமோ உங்கள நாட்டை விட்டே மக்கள் விரட்டி விட்டிவிட்டதாக. எப்படியோ விரைவில் உங்கள் நா(கா)ட்டில் மழைதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாதவன் எதையோ சொல்லி தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளட்டும். விரட்டியடிக்கப்பட்டதை விட்டுக்கொடுத்தோம் என்று முண்டு கொடுப்பதற்கும் திறமை வேண்டும். அடுத்த தேர்தலில் வெல்வதற்கு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை. நாட்டை இரண்டு தடவை ஜனாதிபதியாகவும் இரண்டு தடவை பிரதமராகவும் இருந்து முன்னேற்ற முடியவில்லை மாறாக பாதாளத்திற்கு இட்டுச்சென்றவர்கள். நாட்டில்  கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் என மலிந்தது இவர்கள் அரசாட்சியிலேயே.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் மனிதர்களை அறிந்து கொண்டேன் -மஹிந்த ராஜபக்ச

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டம் நேற்றைய தினம் (01) நடைபெற்றது.

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில்;

“… நண்பர்களே, சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களின் அரசியல் பிரச்சாரம். தேவைப்படும்போது சரியான முடிவுகளை எடுப்போம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நாம் பொருளாதாரத்தை திட்டமிடும்போது, உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாங்கள் செய்கிறோம்.. அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்துகொண்டு நாட்டின் நலனுக்காக எங்களை ஆட்சிக்கு கொண்டுவர தேவையான தியாகங்களை செய்திருக்கிறீர்கள்…

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உழைக்கவில்லை. அந்த நேரத்தில், தொழிலாளர் இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய சக்தியாக இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தொழிலாளர் தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தை நாட்டை அராஜகத்திற்கு வழிநடத்தியதில்லை.

நாம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறாமல், உள்ளுர் சிந்தனையின்படி வேலை செய்யப் போனதால், பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சதி செய்யப்பட்டது. எங்களின் உடைமைகளை மட்டுமல்ல, உயிரையும் சேதப்படுத்த நினைத்தனர்.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றி மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் அரசியல் அனுபவம் எமக்கும் எமது கட்சிக்கும் இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

மேலும், எந்த நேரத்திலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அமைப்பு பலத்துடன் எழ முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரசியலை எவ்வளவு விமர்சித்தாலும் சேறு அரசியலில் வீழாதீர்கள்.
கடந்த காலங்களில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மக்கள் அங்கீகரித்தார்கள். நாம் இப்போது நாட்டை பலப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குங்கள்.

https://thinakkural.lk/article/251785

  • கருத்துக்கள உறவுகள்

ஹி .... ஹி.... யார் பறித்தார்கள்? யார் விட்டுக்கொடுத்தார்கள்? இவர்கள் சுருட்டிய பணத்தை எடுக்க நேரமில்லாமல் பாதியில் படுக்கையறையில் விட்டு, சொல்லாமல் கொள்ளாமல், இடம் தெரியாமல் ஓடி ஒளிக்க. கைவிடப்பட்ட நாட்டை அவர் பொறுப்பெடுக்க, இப்போ காசை கண்டவுடன் ஆசை வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கள்வர் கூட்ட்துக்கு நாடடை பிடித்து கொள்ளையடிக்கும் நோக்கம் இன்னும் மாறவில்லை. நாடு வங்குரோத்து நிலைமைக்கு போனாலும், மக்கள் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. இவர்களுக்கு இந்த அதிகார மோகம் இன்னும் மாறவில்லை. மக்கள் திருந்தும் வரை இவர்களை திருத்த முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.