Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) பிற்பகல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.samakalam.com/ஜனாதிபதி-தமிழ்க்-கூட்டம/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.

அதிகாரப் பகிர்வு, வடமாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன. எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதில் பயனில்லை, எனவே அந்த உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என டெலோ மற்றும் புளொட் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331582

  • கருத்துக்கள உறவுகள்

சந்திப்பு நடக்க முன்போ… நடந்த பின்போ…
சுமந்திரன், பின் கதவால் போய்… ரணிலை சந்திக்காமல் இருக்க வேண்டும்.

சந்திரிகா காலத்தில் இருந்து ஒவ்வொரு சந்திப்புகளின் போதும்… 
இந்த கூத்தமைப்பினர்… பின் கதவு அரசியல் செய்வது வாடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யப்பாடத ரணில்...ஐனதிபதி ஆகி  ஆட்சி செய்ய தெரியும்.....

ஆனால்   1...மாகாண சபை தேர்தல் நடத்த தெரியவில்லை 

2....வடக்கு கிழக்கு  மாகாணங்களை இணைத்து   இது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி...அவர்கள் விரும்பியபடி அபிவிருத்தியும். ஆட்சியும். செய்யலாம்..இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கான். தீர்வு இதுவாகும். என்று ஒரு தீர்வு முன்வைக்கத்தெரியவில்லை 

3....புத்தபிக்குமாரை   அரசியல் பேசுவதை தடுக்க தெரியவில்லை 

4.....புலிகளை முற்றாக பூண்டோடு அழித்து விட்டோம்    எனவே புலிகள் உலகில் எங்குமே இல்லை    புலிகளின்  தடைகளை அகற்றுமாறு இந்தியா உட்பட உலக நாடுகளிடம். கோரிக்கை விடுக்க தெரியவில்லை 

5...விந்து தானத்தைப்  பெற்று அல்லது விலைக்கு வேண்டி. அப்பா ஆக தெரியவில்லை   

6....தமிழ் தலைவர்களுடன்  பேசிய ஒவ்வொரு முறையும்...எத்தனை வேலைவாய்ப்பு....எத்தனை வாகனங்கள்....எத்தனை வீடுகள்....கொடுத்தது என்று பகிங்கரமாக அறிக்கை விட தெரியவில்லை.....

7..... தமிழ் தலைவர்களை அடிக்கடி கூப்பிட்டு    பேச்சுவார்த்தை வைப்பது அன்பளிப்புகளை வழங்க மட்டுமே மாறாக..தமிழ் மக்களாகிய   உங்கள் பிரச்சனைகளையை. தீர்க்க இல்லை என்று சொல்ல தெரியவில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும் கிழக்கையும் பிரித்தாழ்வதில் நரி கண்ணும் கருத்துமாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரியுது...நரித்தந்திரம்..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

வடக்கையும் கிழக்கையும் பிரித்தாழ்வதில் நரி கண்ணும் கருத்துமாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரியுது...நரித்தந்திரம்..

கிழக்கை பிரிக்க…. சம்பந்தன் ஐயாவே,
அம்பாறை தொகுதியை பியசேன எனும் சிங்களவனை நிறுத்தியும்,
கிழக்கு மாகாண சபையை… முஸ்லீமுக்கு விட்டுக் கொடுத்தும்….
கோடு போட்டு காட்டிய பின், 
றோடு போடுவதில்… நரிக்கு வேலை அதிகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

வடக்கையும் கிழக்கையும் பிரித்தாழ்வதில் நரி கண்ணும் கருத்துமாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரியுது...நரித்தந்திரம்..

 

19 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது

 

19 hours ago, தமிழ் சிறி said:

அதிகாரப் பகிர்வு, வடமாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன.

விபரீதம் தெரியாமல், அரிவரி அறிவு கூட இல்லாத சிவநேசதுரை சந்திரகாந்தன் அறிக்கைவிட்டு நரிக்கு ஒத்தூது. "கிழக்கின் பிரச்சனையை நாங்கள் பாத்துக்கொள்வோம், வடக்கில் இருந்து யாரும் வந்து எங்களுக்கு அதிகாரம் செலுத்தத் தேவையில்லை." என்று. பிரிதாண்டாற்தானே கேள்வியில்லாமல், எதிர்ப்பில்லாமல் ஒவ்வொன்றாக விரைவில் அழிக்கலாம். இப்படிப்பட்ட அரைகுறைகள்தான் சிங்களத்துக்கு தேவை. அதுக்காக தெருவில இலட்சியம் இல்லாமல் திரியிறதுகளை கொண்டுவந்து இருத்திவிட்டு, இதுதான் தமிழரின் தலைமை, இதுக்குக்கீழே வாருங்கள் தீர்வு உண்டு என்கிறது. அதுகளுக்கு; அன்றாடம் எசமான் போடும் படியே தீர்வு என்பது அவர்கள் அறிவு. அதுக்காக சொந்த இனத்தை கொன்று, கொள்ளையடித்து, விற்று, எதிரிக்கு சேவகம் செய்து வயிறு வளர்ப்பது பிழைப்பு. முதுகு வளைந்து கவுரவமாய் உழைக்க தெரியாது. எத்தனை பஞ்ச தந்திரக்கதைகளை தமிழன் சிறுவயதுமுதல் படித்திருப்பான், அறிவு வளரவில்லை, எதிரிக்கு சொல்லிக்கொடுக்கிறான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப் பிரச்சினைக்கு தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.

கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் இந்த சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அந்த முடிவை ஜனாதிபதி மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ. சுமந்திரன் தவராசா கலையரசன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதாக கூறி வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தனியாக சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கவனத்திற்கு சாள்ஸ் நிர்மலநாதன் எடுத்துக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/இனப்-பிரச்சினைக்கு-தீர்-4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.