Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் வீரசேகர சூளுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் சூளுரை

9-10.jpg

“போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் “வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

தடுத்து நிறுத்தப்படவேண்டும்

அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு நினைவேந்தல்களுக்கு அனுமதி வழங்குவதால் புலிப் பயங்கரவாதிகளையும் தமிழ்த் தரப்பினர் நினைவேந்தி வருகின்றனர்.

அத்தகைய நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். போரில் இறந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்த வேண்டுமெனில் அவர்கள் தங்களது வீடுகளுக்குள் அதனைச் செய்ய முடியும்.

பேரணிகள் மூலமும் கஞ்சிகள்

அதைவிடுத்து ஊர்திப் பேரணிகள் மூலமும் கஞ்சிகள் வழங்கியும் பொது இடங்களில் விளக்கேற்றியும் வழிபடவேண்டிய அவசியமில்லை.

எதிர்காலத்தில் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=245619

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கோட்டாவின் கோட்டைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம். - Ceylonmirror.net

 

காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

 

கொழும்பு - காலிமுகத்திடலில் 9 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : ஆதரவாக  காலியிலும் வலுக்கும் போராட்டம் | Virakesari.lk

 

கொழும்பு - காலிமுகத்திடலில் 9 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : ஆதரவாக  காலியிலும் வலுக்கும் போராட்டம் | Virakesari.lk

ஐயா...   வீரசேகர, சென்ற வருடம் இதே நேரம்... கொழும்பு காலிமுகத்திடலில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலலும்,  முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காய்ச்சி வழங்கினார்களே...
அப்போ, நீங்கள் கொழும்பில் தானே இருந்தீர்கள். 
அதனை நீங்கள் தடுக்காமல்... "அரகலய"   போராட்டக் காரர்களுக்கு பயந்து...
கோழை சேகரவாக... பதுங்கி இருந்தீர்களா.

உங்களது வாய் வீரம், வெருட்டல் எல்லாம்... 
அனைத்தையும் இழந்த தமிழ் மக்கள் மீது என்றால்...  உங்களில்தான் குறைபாடு.
நீங்கள் விதைத்ததைத்தான்...  இன்று சிங்கள மக்களும் அனுபவிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கோட்டாவின் கோட்டைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம். - Ceylonmirror.net

 

காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

 

கொழும்பு - காலிமுகத்திடலில் 9 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : ஆதரவாக  காலியிலும் வலுக்கும் போராட்டம் | Virakesari.lk

 

கொழும்பு - காலிமுகத்திடலில் 9 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : ஆதரவாக  காலியிலும் வலுக்கும் போராட்டம் | Virakesari.lk

ஐயா...   வீரசேகர, சென்ற வருடம் இதே நேரம்... கொழும்பு காலிமுகத்திடலில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலலும்,  முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காய்ச்சி வழங்கினார்களே...
அப்போ, நீங்கள் கொழும்பில் தானே இருந்தீர்கள். 
அதனை நீங்கள் தடுக்காமல்... "அரகலய"   போராட்டக் காரர்களுக்கு பயந்து...
கோழை சேகரவாக... பதுங்கி இருந்தீர்களா.

உங்களது வாய் வீரம், வெருட்டல் எல்லாம்... 
அனைத்தையும் இழந்த தமிழ் மக்கள் மீது என்றால்...  உங்களில்தான் குறைபாடு.
நீங்கள் விதைத்ததைத்தான்...  இன்று சிங்கள மக்களும் அனுபவிக்கின்றார்கள்.

அவர் இனவாதம் கதைச்சு, ஐனாதிபதி தேர்தலில் போட்டி போட ஆயுத்தமாகிறார்!! 😁

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் இதே வீர வசனத்தை தான் சொல்லி இருக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

மகிந்தவும் இதே வீர வசனத்தை தான் சொல்லி இருக்கிறாராம்.

சொன்னதென்ன.... செய்தும் காட்டியவரவர். அகம்பாவம்! வெளியில், தமிழருக்கென்றொரு பிரச்சனையில்லை, சிங்களவரைப்போல அவர்களும் சுதந்திரமாக உள்ளனர் என்று பிரச்சாரம். அப்போ; ஒரு சிலரைத்தவிர மற்றைய சிங்களவரும் அடக்குமுறையை அனுபவிக்கின்றனர் என்று சொல்லலாமா?  நாம் வெற்றி விழா கொண்டாடலாம் அவர்கள் இறந்த உறவுகளை நினைவு கூரக்கூடாது, சட்டம் போட்டு தடுப்போம். புலிகளும் தமிழ்த் தாய்மார் பெற்ற பிள்ளைகளே, புலிகள் வேறு மக்கள் வேறு என்றால்; மக்களை ஏன் கொன்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்கவேண்டாம்.

இந்த மனுஷன் ஒரு ஆள் தான் இவ்வளுவு துணிவாக முள்ளிவாய்க்கால் பற்றி கத்திக்கொண்டு திரியிது. அவர் நல்லா கத்த வேணும். ஏலுமானால் ஏறியிற நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி அவரை உசுப்பிவிடுஙகோ.

இலங்கையில் பெரிய மாற்றம், சமூகம் ஒரே இரவில் மாறிவிட்டது என்ற கலக்காரர்கள், இதை பார்த்து விளங்கலாம். முள்ளிவாய்க்கால் என்ற பெயர் உலகம் முழுவதும் தொடர்ந்து ஒலிக்கவேணும். எல்லாரும் ஏன் தமிழ்ஸ் இதை செய்யினும் என்று கண்டறியட்டும் 

நல்ல கத்துக்கோ சரத் ஐயா. மற்ற சரத்தையும் சேர்த்து கத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

விமல் தூங்குகிறார் போலுள்ளது அவரையும் எழுப்பி மைக்கை கொடுத்து விடுங்கோ. காசை கொடுத்தென்றாலும் கத்த விடவேண்டும். .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

மகிந்தவும் இதே வீர வசனத்தை தான் சொல்லி இருக்கிறாராம்.

மகிந்தவும் அவரது அடியாட்களும் மிகப்பெரிய இனவாதிகளாக இருந்தாலும் இப்போதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள தயாரில்லை. ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்குமென்று எதிர்பார்பதால் அவர்களும் இவற்றை கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. இனவாதம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதை போக்குவது மிக கடினம். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Cruso said:

மகிந்தவும் அவரது அடியாட்களும் மிகப்பெரிய இனவாதிகளாக இருந்தாலும் இப்போதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள தயாரில்லை. ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்குமென்று எதிர்பார்பதால் அவர்களும் இவற்றை கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. இனவாதம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதை போக்குவது மிக கடினம். 

அவர்கள் ஏவிவிட்டு மதில்மேல் பூனையாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது, இனி வரப்போவது மற்றவர்களுக்கான சந்தர்ப்பம், பட்ட அனுபவங்களிலிருந்து படிக்காதவர்கள் முட்டாள்களே. இனவாதிகள் எல்லோரும் முட்டாள்களே! எந்த திறமை, அறிவு, அனுபவமில்லாமல் வெறும் இனவாதத்தை நம்பி அரசியல் செய்பவர்கள், நாடு பாதாளத்திற்கு போய்விட்டது, இனவாதத்தைவிட பொருளாதாரம் தலைவிரித்தாடுது, அதை புரிந்துகொள்ளகூட முடியவில்லை அவர்களால். இன்னும் மூட்ட நினைக்கிறார்கள், அது மூள மறுக்கிறது, இவர்கள் முக்குகிறார்கள் ஊதி எரித்துவிட்டு குளிர்காய. இனி எரிந்தால்; காய்வது சிங்களமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.