Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலங்கார திருவிழா

Featured Replies

அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள்.

சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால் கொடியில் உடுப்பு காய போட்டு கொண்டிருந்த அவளது அம்மா

சனியனே உனக்கு இவ்வளவு

http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post_11.html

சைக்களை வேகமாக உழக்கினான் வட்டிக்கார சின்னதம்பி வீடு நோக்கி அடவிலுள்ள நகையை வித்தாவது அலங்காரத்தை கூட செய்து தங்கள் குல பெருமையை நிலை நாட்ட வேணும் என்ற வெறியுடன்

இப்படி பல பேரை பார்திருகிறேன் எப்படியாவது தங்கள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அளவிற்கு மீறி ஆசைபட்டு செய்வார்கள்,எந்த ஒரு இறைவனும் அவ்வாறு சொல்லவில்லை ஆனால் இவர்கள் இதற்காக செலவழிப்பார்கள்,ஆனால் யாரும் உதவி கேட்டா செய்யமாட்டார்கள்,சின்னகுட்ட

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் பூராகவும் ஊரில் காணாமால் போனவர்கள் திரும்பின மாதிரி கூடுவார்கள். திருவிழா காலத்தில் மட்டும் கோயில் வளாகம் இடம் இன்றி தவிக்கும்.. நாளில் எப்போவது வந்து அய்யர் பூசை செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கோயில் விக்கிரங்களும் கோபுரங்களும் தனித்து நிற்கும்

அருமையான படைப்பு....

  • தொடங்கியவர்

வணக்கம் ஜமுனா, புத்தன். வாசித்து கதையில் பிடித்த பகுதியை மேற்கோள் காட்டி உற்சாகபடுத்தும் உங்களுக்கு எனது நன்றிகள்

பாவம் சின்ன பொண்ணு ஆசைப்பட்டதி கேட்க அம்மா அடிச்சிட்டு அம்மாவும் அழுகிறா.

நெஞ்சை உருக வைச்சுட்டீங்க.

இளம் வயதில் யாராவது தனது பொருள் தான் சிறந்தது என சொல்லும் போது நமக்கும் அப்படி வேணும் என்ற ஆசை வரும்.

உங்கள் கதையிலும் அப்படியே. பாவம் சின்னப்பொண்ணு அடிவாங்கிட்டு அழுறா.

நல்லா இருக்கு கதை.

சின்ன பிள்ளையாக இருந்தப்போ திருவிழாக்கு போன நினைவுகள் வருது.

  • தொடங்கியவர்

வணக்கம் வெண்ணிலா

கதையை வாசித்து ஆட்டோகிராப் திரைபடம் மாதிரி கதைக்குள் உங்களையும் கண்டு கொள்ளுகிறீர்கள் அதுவும் என்னளவு சந்தோசமே. கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றிகள்.

யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் அருமையான சிறுகதை

சின்னக்குட்டி நீங்கள் முதல் எழுதிய சிறுகதைகளை விட இக் கதையில்

முன்னேற்றம் தெரிகிறது தொடர்ந்து நல்ல படைப்புக்கள் படைக்க

வாழ்த்துக்கள்.

எத்தனையோ கதைகள் படித்தேன் சின்னக்குட்டியாரே இந்தக்கதை என்னை மிகவும் பாதித்தது. காரணம் இதனுடன் ஒத்த பதிவுகள் உள்ளத்தில் உறங்கி கொண்டிருக்கின்றது. அவைகள் விழித்துக்கொள்கின்றது. இயல்பான உங்கள் நடையில் கடந்த கால காயங்களை அவற்றின் காரணங்களுடன் வெளிப்படுத்துகின்றீர்கள். படைப்புகள் மூலம் ஒரு காலத்தை பார்க்கின்றோம். அந்த வகையில் காலத்தை காட்டுகின்றீர்கள். தொடருங்கள்.. எங்கள் உணர்வுகள் உங்கள் படைப்புகளில் நிச்சயம் முகம் பார்த்துக்கொள்ளும்.

  • தொடங்கியவர்

யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் அருமையான சிறுகதை

சின்னக்குட்டி நீங்கள் முதல் எழுதிய சிறுகதைகளை விட இக் கதையில்

முன்னேற்றம் தெரிகிறது தொடர்ந்து நல்ல படைப்புக்கள் படைக்க

வாழ்த்துக்கள்.

வணக்கம் ரசிகை . கதையை பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள்.

ரசிகை அக்கா இப்பவாவது எனது கதையை சிறுகதை என ஒத்து கொண்டதுக்கு நன்றிகள் :rolleyes::lol:

  • தொடங்கியவர்

எத்தனையோ கதைகள் படித்தேன் சின்னக்குட்டியாரே இந்தக்கதை என்னை மிகவும் பாதித்தது. காரணம் இதனுடன் ஒத்த பதிவுகள் உள்ளத்தில் உறங்கி கொண்டிருக்கின்றது. அவைகள் விழித்துக்கொள்கின்றது. இயல்பான உங்கள் நடையில் கடந்த கால காயங்களை அவற்றின் காரணங்களுடன் வெளிப்படுத்துகின்றீர்கள். படைப்புகள் மூலம் ஒரு காலத்தை பார்க்கின்றோம். அந்த வகையில் காலத்தை காட்டுகின்றீர்கள். தொடருங்கள்.. எங்கள் உணர்வுகள் உங்கள் படைப்புகளில் நிச்சயம் முகம் பார்த்துக்கொள்ளும்.

வணக்கம் சுகன். உங்களின் இந்த பின்னூட்டம் எனது மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது மிக்க நன்றிகள்

உங்களுடைய மற்றய யாழ் கள கருத்துக்களை பார்க்கும்போது நல்ல இலக்கிய ஆளுமை உடையவர் போலத்தான் பார்க்க தெரிகிறது. உங்களுடைய இந்த பதிவை பற்றிய விமர்சனத்தின் மூலம் எனக்கு நிச்சயம் உற்சாக ஊட்டலூடனனா தன்னம்பிக்கையை எனக்கு தந்து இருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது மிக்க நன்றிகள்.

சும்மா சொல்லக்கூடாது சின்னக்குட்டி வர வர மெருகேறுது. கதை அன்றைய யதார்த்தத்தை மட்டுமில்ல... புலம்பெயர்ந்துவிட்ட எம்மவரின் இன்றைய யதார்த்தத்தையும் சொல்கிறது. பாராட்டுக்கள்.

எழுத்துப்பிழைகள் அங்கங்க இருக்கு. சிலவேளைகளில பொருள் மயக்கம் தாறதாவும் இருக்கு. வசனங்கள் சில இடங்களில் நீண்டு போகுது. வசன அமைப்புகள் அதால தெளிவில்லாமல் இருக்கு. இவற்றையும் இனிவரும் கதைகளில் கவனமெடுத்து எழுதினீர்கள் என்றால் நல்லது.எடுத்துக்காட்டாக...

அவளும் என்ன செய்வாளும். உந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்டு இருந்த உத்தியோகமும் பறி போக இந்த அஞ்சு ஆறு வருசமாக வாழ்க்கை ஓட்டுறது கஸ்ட பட அண்ணன் என வசதியாக இருந்தவை ஏன் எண்டும் இவையை திரும்பி பார்க்கவில்லை.

கவிதை எழுதுற முயற்சியை கைவிட்டுடாதீர்கள். அதையும் முயற்சி செய்யுங்கள். நகைச்சுவை நாடகங்களும் எழுத முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நிறைய இயல்பான கதை சொல்லல் தன்மை இருக்கு. அதால இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...

  • தொடங்கியவர்

வணக்கம் இளைஞன் வாங்க... இப்ப தான் எனது பதிவை கண்டு வந்திருக்கீங்க சந்தோசம்.

நீங்கள் சொன்னது போல எழுத்து பிழைகளும் வசனம் நீளம் பற்றி பலர் முன்பே சொல்லி இருக்கிறார்கள் மாததணும் நினைக்கிறது மாறுது இல்லை . இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்

கதையில் முன்னேற்றம் இருக்கு என்றியள் சந்தோசம். காலம் கடந்து தான் உருவாக்கும் படைப்பை செய்ய வந்திருக்கிறன். அதில் இயல்பகாவே எனக்கு சங்கடம் இருக்கிறது. உங்களின் விமர்சனம் மிகவும் உதவியாய் உள்ளது மிக்க நன்றிகள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.