Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய ரத்தினக்கல், சந்தையில் விலை மதிப்புக்குறைவானது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை ரத்தினக்கல்

பட மூலாதாரம்,MR GAMAGE

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார்.

''ரத்தினக்கல் கொத்தணி தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. எனினும், அந்த கல் விற்பனை செய்யப்படாது, மீள கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறான கொத்தணிகள் அனைத்து இடங்களிலும் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். ஏன் இவ்வாறான பொய்யை செய்தீர்கள்?" என அநுர பிரியதர்ஷன யாப்பா, ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கோப் தலைவர்
 
படக்குறிப்பு,

கோப் குழு கூட்டத்தில்

இந்த கல்லானது 510 கிலோகிராம் எடையுடையது எனவும், அதனை துண்டுகளாக பிரிக்க முடியாது எனவும் அதிகாரிகள் பதிலளித்திருந்தனர். அத்துடன், உலகிலேயே மிக பெரிய ரத்தினக்கல் கொத்தணி என்ற கின்னஸ் சாதனையையும் இந்த கல் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த ரத்தினக்கலானது, 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானது என முந்தைய சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதன் உண்மையான பெறுமதி இறுதியில் 10,700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

முதலில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் என பெறுமதியை கணிப்பிட்ட அதிகாரியே, பின்னரான காலத்தில் 10,700 அமெரிக்க டாலர் என பெறுமதியை குறைத்து கணிப்பிடு செய்து, அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.

ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, இதன்போது கருத்து வெளியிட்டார்.

''உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக்கல் கொத்தணி என கிண்ணஸ் சாதனையை பெற்றுக்கொண்டுள்ளது. இதனை கண்காட்சியில் வைத்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், விற்பனை செய்துக்கொள்ள முடியவில்லை. அதனை மீள இலங்கைக்கு கொண்டு வந்து, மீள் ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளனர்." என அவர் கூறுகின்றார்.

ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வாவிடம், கோப் குழு உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

கோப் குழு தலைவர்

''நான் அதை கேட்கவில்லை. ஒரு நபர் இரண்டு விதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒன்று 10 லட்சம் அமெரிக்க டாலர், மற்றையது 10,700 அமெரிக்க டாலர். எப்படி இவ்வாறான வித்தியாசம் ஏற்படும் என்றே நான் கேட்கின்றேன்" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, ''இரண்டாவது முறை இதன் பெறுமதியை கணிப்பீடு செய்ய நாம் குழுவொன்றை நியமித்தோம்." என கூறினார்.

இதன் உண்மையான பெறுமதி என்ன என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

''உண்மையிலேயே தொல்பொருள் பெறுமதி மாத்திரமே உள்ளது. ஏனென்றால், அதனை பட்டை தீட்ட முடியாது." என அதிகாரியொருவர் பதிலளித்தார்.

பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று கிண்ணஸ் சாதனை பெறுவதில் பயனில்லை என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார தெரிவித்தார்.

''பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று, இவர்கள் கிண்ணஸ் சாதனை பெற்றுக்கொண்டார்கள் என்பதும், தற்போது தொல்பொருள் பெறுமதி மாத்திரமே இருக்கின்றது என கூறுவதும் உங்களை போன்ற தொழில் வல்லுநர்களுக்கு பொருத்தமற்றது என நினைக்கின்றேன்".

ரத்தினக்கல் கிடைத்தமைக்கான பின்னணி

ரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பகுதியிலிருந்து இந்த ரத்தினக்கல் 2021ம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.

இவ்வாறு எடுக்கப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, துபாய்க்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும், இந்த கல்லை விற்பனை செய்ய முடியாத நிலைமை காரணமாக, குறித்த ரத்தினக்கல் கொத்தணி மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த கல், ஏற்கனவே கூறப்பட்டளவு பெறுமதி அற்றது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c4nknlydle2o

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:
இலங்கை ரத்தினக்கல்

பட மூலாதாரம்,MR GAMAGE

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார்.

''ரத்தினக்கல் கொத்தணி தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. எனினும், அந்த கல் விற்பனை செய்யப்படாது, மீள கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறான கொத்தணிகள் அனைத்து இடங்களிலும் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். ஏன் இவ்வாறான பொய்யை செய்தீர்கள்?" என அநுர பிரியதர்ஷன யாப்பா, ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கோப் தலைவர்
 
படக்குறிப்பு,

கோப் குழு கூட்டத்தில்

இந்த கல்லானது 510 கிலோகிராம் எடையுடையது எனவும், அதனை துண்டுகளாக பிரிக்க முடியாது எனவும் அதிகாரிகள் பதிலளித்திருந்தனர். அத்துடன், உலகிலேயே மிக பெரிய ரத்தினக்கல் கொத்தணி என்ற கின்னஸ் சாதனையையும் இந்த கல் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த ரத்தினக்கலானது, 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானது என முந்தைய சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதன் உண்மையான பெறுமதி இறுதியில் 10,700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

முதலில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் என பெறுமதியை கணிப்பிட்ட அதிகாரியே, பின்னரான காலத்தில் 10,700 அமெரிக்க டாலர் என பெறுமதியை குறைத்து கணிப்பிடு செய்து, அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.

ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, இதன்போது கருத்து வெளியிட்டார்.

''உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக்கல் கொத்தணி என கிண்ணஸ் சாதனையை பெற்றுக்கொண்டுள்ளது. இதனை கண்காட்சியில் வைத்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், விற்பனை செய்துக்கொள்ள முடியவில்லை. அதனை மீள இலங்கைக்கு கொண்டு வந்து, மீள் ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளனர்." என அவர் கூறுகின்றார்.

ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வாவிடம், கோப் குழு உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

 

''நான் அதை கேட்கவில்லை. ஒரு நபர் இரண்டு விதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒன்று 10 லட்சம் அமெரிக்க டாலர், மற்றையது 10,700 அமெரிக்க டாலர். எப்படி இவ்வாறான வித்தியாசம் ஏற்படும் என்றே நான் கேட்கின்றேன்" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, ''இரண்டாவது முறை இதன் பெறுமதியை கணிப்பீடு செய்ய நாம் குழுவொன்றை நியமித்தோம்." என கூறினார்.

இதன் உண்மையான பெறுமதி என்ன என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

''உண்மையிலேயே தொல்பொருள் பெறுமதி மாத்திரமே உள்ளது. ஏனென்றால், அதனை பட்டை தீட்ட முடியாது." என அதிகாரியொருவர் பதிலளித்தார்.

பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று கிண்ணஸ் சாதனை பெறுவதில் பயனில்லை என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார தெரிவித்தார்.

''பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று, இவர்கள் கிண்ணஸ் சாதனை பெற்றுக்கொண்டார்கள் என்பதும், தற்போது தொல்பொருள் பெறுமதி மாத்திரமே இருக்கின்றது என கூறுவதும் உங்களை போன்ற தொழில் வல்லுநர்களுக்கு பொருத்தமற்றது என நினைக்கின்றேன்".

 

Guinness World Records: How to Set or Break a World Record

அடேங்கப்பா... இந்தக் கல்லை காட்டி, கின்னஸ் சாதனை பட்டியலிலும் 
சிங்களவன் இடம்  பிடித்து விட்டான். 
பொய்யும், பிரட்டும்... சொல்லி, காலத்தை கழிப்பதில் இவனை அடிக்க ஆளில்லை.  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

அடேங்கப்பா... இந்தக் கல்லை காட்டி, கின்னஸ் சாதனை பட்டியலிலும் 
சிங்களவன் இடம்  பிடித்து விட்டான். 
பொய்யும், பிரட்டும்... சொல்லி, காலத்தை கழிப்பதில் இவனை அடிக்க ஆளில்லை.  

 

''உண்மையிலேயே தொல்பொருள் பெறுமதி மாத்திரமே உள்ளது. ஏனென்றால், அதனை பட்டை தீட்ட முடியாது." என அதிகாரியொருவர் பதிலளித்தார்.

பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று கிண்ணஸ் சாதனை பெறுவதில் பயனில்லை என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார தெரிவித்தார்.

அண்ணை பட்டை தீட்ட முடியாதாம் பாக்கத்தான் முடியும் போல!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

''உண்மையிலேயே தொல்பொருள் பெறுமதி மாத்திரமே உள்ளது. ஏனென்றால், அதனை பட்டை தீட்ட முடியாது." என அதிகாரியொருவர் பதிலளித்தார்.

பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று கிண்ணஸ் சாதனை பெறுவதில் பயனில்லை என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார தெரிவித்தார்.

அண்ணை பட்டை தீட்ட முடியாதாம் பாக்கத்தான் முடியும் போல!

//இந்த ரத்தினக்கலானது, 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானது என முந்தைய சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதன் உண்மையான பெறுமதி இறுதியில் 10,700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.//

முதலில் 10 மில்லியன் டொலர் பெறுமதி என்ற சிங்கள  அதிகாரிதான்...
அது வெளிநாட்டில் விற்க முடியாமல் போனது என்றவுடன்... 10 ஆயிரம் டொலர் என மதிப்பிட்டுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களின் வாடிக்கை தானே, இதைப்பற்றி அலட்டிகொள்ளத்தேவையில்லை. காசு அடிக்க இப்படி கதைகளை உருவாக்குவது, பின் பின்வாங்குவது. வன்னியில் பொதுமக்கள் குறைந்தஅளவிலேயே உள்ளனர் என்றனர், பின் பொதுமக்கள் யாருமே இறக்கவில்லை என்றனர், பின் சில குறிப்பிட்ட எண்ணிக்கையினரே இறந்தனர் என்றனர், பின் போர் என்றால் இழப்புகள் இருக்குந்தான் என்றனர். இப்ப என்ன..... நாடுகளுக்கு காவிச்சென்ற செலவை பாக்கும்போது அங்கு ஒன்றுமில்லை. மூக்குடைபட்டதுதான் மிச்சம். நான் நினைக்கிறன் இலங்கைக்கு இராகு காலம் ஆரம்பிக்குதென்று!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கேள்விகளும் , மோட்டு சிங்கள  அதிகாரிகளின் பதில்களையும் கேட்க்கும்போது சிரிப்பு சிரிப்பாய் வரும். இந்த  ஆபரணம் சம்பந்தமான விடயம் மாத்திரம் இல்லை. எல்லா திணைக்களங்களிலும் இதே நிலைமைதான். u  tube இல் இவை எல்லாவற்றையும் பார்க்கலாம். பாவம் , இலங்கை அரசாங்கமும் மக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

முதலில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் என பெறுமதியை கணிப்பிட்ட அதிகாரியே, பின்னரான காலத்தில் 10,700 அமெரிக்க டாலர் என பெறுமதியை குறைத்து கணிப்பிடு செய்து, அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.

ஹா.... ஹா ..... பத்து மில்லியனுக்கும் பத்தாயிரத்துக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர்! ஒருவேளை சைபர் கணக்கில் பிழை விட்டாரோ? இல்லை கல் பாதியாக நிறை குறைந்து விட்டதோ? ஏழை மக்களை ஏமாற்றும் விளையாட்டை, மாறி விளையாடிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஆதரவில் செல்பவர்கள் அசைலம் அடிப்பது இலங்கையின் பாரம் பரியம்..அதுபோலை இந்தக் கல்லும் சுவிசில் அசைலம் அடித்துவிட்டது..(கொண்டுபோன ஆட்கள் விற்று பணம் பண்ணிவிட்டினம்?) கணக்குக்காட்ட..ரோட்டில் கிடந்தகல்லை எடுத்து 10000 ஆயிரம் டொலர் பெறுமதியும் போட்டிருக்கினம்...பாவம் லங்கா மாதா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரத்தினக்கல்லுக்கு இவ்வளவு தான் மதிப்பா? நடந்தது என்ன? | World Largest Blue Sapphire Cluster

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கல்லு  கதை போல் டொலரின்  பெறுமதி கதையும் பாவம் இலங்கை குடி மக்கள் பழையபடி டொலரின்  பெறுமதிக்கு  நிகராக வரும் என்று ஏங்க வைக்கிறார்கள் ஆனால் அது ஒரு போதும் முடியாது வன்வே  லேன் திரும்பி போக முடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.