Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாரடைப்பால் மரணமடைந்த 41 வயது இதய மருத்துவர்! அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 JUN, 2023 | 04:42 PM
image
 

அவர் கிரிக்கெட் ஆடுவார்; தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடம் செல்வார். சுறுசுறுப்பான வாழ்க்கையையே வாழ்ந்துவந்தார். இருப்பினும் 41 வயதில் அவருக்கு எப்படி மாரடைப்பு வந்து உயிரிழந்தார் என எல்லோரும் வருத்தத்துடன் பேசுகிறார்கள்.

 

குஜராத் மாநிலத்தின் பிரபல இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் ஜாம் நகரைச் சேர்ந்த கவுரவ் காந்தி. சுமார் 12 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் செய்துவரும் இவர் 16,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தவர்.

 

கடந்த திங்கள் கிழமை வழக்கம்போல் நோயாளிகளைப் பார்த்துவிட்டு இரவு வீடு திருப்பினார் கவுரவ் காந்தி. இரவு உணவுக்குப் பின் படுத்தவருக்கு இரவு நள்ளிரவில் மார்பில் சற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் தான் பணிபுரியும் ஷாரதா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. அதில் எந்த மாறுதலும் இல்லை. எனவே அவர் தனக்கு வயிற்றில் அமிலச்சுரப்பால் ஏற்பட்ட பிரச்னை எனக் கருதி, ஒரு ஊசி எடுத்துக்கொண்டார். அங்கேயே அரை மணி நேரம் காத்திருந்து வேறு எந்தபிரச்னையும் இல்லாத நிலையில் வீடு திரும்பிவிட்டார். ஆனால் காலை ஆறு மணி அளவில் அவரது உறவினர்கள் அவரை குளியலறையில் மயக்க நிலையில் கண்டனர்.  உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்துவிட்டார்.

 

ஈசிஜி எடுத்து பிரச்னை ஒன்றும் இல்லை என்று காட்டிய நிலையில் அதை நம்பி வீடு திரும்பியவருக்கு இந்த நிலை.

இதய அறுவை சிகிச்சை மூலம் ஆயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்றிய மருத்துவரே மிக இளம் வயதில் பலியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர்.

“இறந்த சகோதரர்  தினசரி 14 மணிநேரங்கள் உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபட்டுத்திக் கொண்டு தொடர்ந்து மன அழுத்தமான வேலையைச் செய்தது அவரது இறப்புக்கு காரணமாக இருக்கக்கூடும்

அதுவன்றி வேறு தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்கள் அவருக்கு இல்லை என்று தெரிகிறது

அவரைப் போன்றே அத்தனை மணிநேரங்கள் மன அழுத்தமான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய தொழில் முனைவோர் இங்கு உண்டு.  தொடர் மன அழுத்தம்

இதயத்துக்கு ஊறு செய்யும்  என்பதை நாம் அறிந்து தெளிய வேண்டும் சொந்தங்களே.  உன் இதயத்தின் தசை தன் இசையை நிறுத்திக் கொண்டாலும் பல்லாயிரம் பேரின் இதயத்துடிப்பெனும் இசையில் நீ வாழ்வாய் சகோதரா... “ என சிவகங்கையைச் சேர்ந்த மருத்துவர் பரூக் அப்துல்லா முகநூலில், மருத்துவர் காந்தி மரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/157282

இவரது இழப்புக்கு என் அஞ்சலி.

இந்த செய்தி மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக தான் இருக்க வேண்டும். 41 வயதுக்குள் இவரால் எப்படி 16,000 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்க முடியும்?

இவர் 25 வயதில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார் என்றால் மிகுதி 16 வருடங்களில் நாள் ஒன்றுக்கு ஆக குறைந்தது மூன்று சத்திர சிகிச்சையாவது மேற்கொண்டு இருக்க வேண்டும்.. அதாவது ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது..

இதுவும் வழக்கம் போன இந்திய ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி.

Edited by நிழலி
typo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

16 வருடங்களில் நாள் ஒன்றுக்கு ஆக குறைந்தது மூன்று சத்ய சிகிச்சையாவது மேற்கொண்டு இருக்க வேண்டும்..

ஆர்வம் கோளாறில் ஒரு சைபரை கூடப் போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்தஇரங்கல்கள்.......! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த கொம்பனாக இருந்தாலும் விதி வலியது. அது தன் நேரம் வரும் போது தவறாமல் இனமத,உயர்ந்தவர் தாழ்ந்தவர் படித்தவர் படிக்காதவர் என பேதம் பார்க்காமல் தன் கடமையை செய்யும்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2023 at 22:20, நிழலி said:

இவரது இழப்புக்கு என் அஞ்சலி.

இந்த செய்தி மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக தான் இருக்க வேண்டும். 41 வயதுக்குள் இவரால் எப்படி 16,000 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்க முடியும்?

இவர் 25 வயதில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார் என்றால் மிகுதி 16 வருடங்களில் நாள் ஒன்றுக்கு ஆக குறைந்தது மூன்று சத்திர சிகிச்சையாவது மேற்கொண்டு இருக்க வேண்டும்.. அதாவது ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது..

இதுவும் வழக்கம் போன இந்திய ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி.

அண்ணை செய்தியின்படி

குஜராத் மாநிலத்தின் பிரபல இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் ஜாம் நகரைச் சேர்ந்த கவுரவ் காந்தி. சுமார் 12 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் செய்துவரும் இவர் 16,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தவர்.

இறந்த சகோதரர்  தினசரி 14 மணிநேரங்கள் உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபட்டுத்திக் கொண்டு தொடர்ந்து மன அழுத்தமான வேலையைச் செய்தது அவரது இறப்புக்கு காரணமாக இருக்கக்கூடும், அதுவன்றி வேறு தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்கள் அவருக்கு இல்லை என்று தெரிகிறது.

அவரைப் போன்றே அத்தனை மணிநேரங்கள் மன அழுத்தமான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய தொழில் முனைவோர் இங்கு உண்டு.  தொடர் மன அழுத்தம்

இதயத்துக்கு ஊறு செய்யும்  என்பதை நாம் அறிந்து தெளிய வேண்டும் சொந்தங்களே.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2023 at 18:50, நிழலி said:

இவரது இழப்புக்கு என் அஞ்சலி.

இந்த செய்தி மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக தான் இருக்க வேண்டும். 41 வயதுக்குள் இவரால் எப்படி 16,000 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்க முடியும்?

இவர் 25 வயதில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார் என்றால் மிகுதி 16 வருடங்களில் நாள் ஒன்றுக்கு ஆக குறைந்தது மூன்று சத்திர சிகிச்சையாவது மேற்கொண்டு இருக்க வேண்டும்.. அதாவது ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது..

இதுவும் வழக்கம் போன இந்திய ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி.

இருக்கலாம் நிழலி

வைத்தியர்கள் வெட்டி தைத்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு பல சத்திர சிகிச்சைகளை செய்ய முடியும் செய்வார்கள். இறுதி யுத்த காலப்பகுதியில் எனது பெறாமகன் வவுனியா வைத்தியசாலையில் பல நூறு ஆட்களுக்கு செய்ததாக சொன்னார்கள். அது யுத்தகாலப்பகுதி என்றாலும் செய்யமுடியும் என்பதற்காக சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2023 at 23:59, குமாரசாமி said:

எந்த கொம்பனாக இருந்தாலும் விதி வலியது. அது தன் நேரம் வரும் போது தவறாமல் இனமத,உயர்ந்தவர் தாழ்ந்தவர் படித்தவர் படிக்காதவர் என பேதம் பார்க்காமல் தன் கடமையை செய்யும்.
 

அப்புறம் ஏன் அண்ணா நாங்க வைத்தியரை பார்க்க போகிறோம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

அப்புறம் ஏன் அண்ணா நாங்க வைத்தியரை பார்க்க போகிறோம்???

மருந்தே இல்லாத நோய்களுக்கு வைத்தியரும் மேலேதான் அண்ணார்ந்து பார்க்கின்றார். வைத்தியரால் எல்லாம் முடியும் என்றால் ஏன் இவ்வளவு சொல்லணா துயரச்சாவுகள்?

வைத்தியர் என்பவர் நாம் மழைக்கு பிடிக்கும் குடை மாதிரி அவ்வளவுதான்.

11 hours ago, ஏராளன் said:

அண்ணை செய்தியின்படி

குஜராத் மாநிலத்தின் பிரபல இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் ஜாம் நகரைச் சேர்ந்த கவுரவ் காந்தி. சுமார் 12 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் செய்துவரும் இவர் 16,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தவர்.

 

 

தம்பி, இதுக்கு வேறு என்ன அர்த்தம் கொள்வது?

12 வருடங்களில் 16000 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றார் எனில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஆகக் குறைந்தது ஒரு அறுவை சிகிச்சையாவது செய்துள்ளார் என்றே அர்த்தம். 

பிபிசி செய்தி சேவை, இந்திய பிரதான ஊடகங்களில் வந்த செய்தியை ஒட்டி எழுதி உள்ளது. Times of India வில் இருந்து இந்து வரைக்கும் இப்படி த்தான் மிகைப்படுத்தி எழுதி இருந்தனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.