Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப்பின் குடும்பமும், கல்விப் பின்னணியும்

 

19 hours ago, colomban said:

கிழக்கு பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப் அவர்களின் தந்தை (சம்மாந்துறை) ஓர் உயர்தர கணிதப்பாட ஆசிரியர் (ISA), தாயார் (அக்கரைப்பற்று) ஓர் வைத்தியர், ஒரு சகோதரர் வைத்தியர், மற்றய சகோதரர் பொறியியலாளர். இவ்வாறான ஓர் கல்விப் பின்னணியினை கொண்ட நடுத்தர குடும்பம். 

 

20 hours ago, colomban said:

Bsc_nursing பட்டப்படிப்பிற்கு ஏதாவது "ஒழுக்க நெறிமுறைக் கோவை" உள்ளதா..? 

இந்தக்கேள்வியிலேயே இந்தக்குடும்பத்தின் கல்விப்பின்னணியின் சிறப்பு விளங்குகிறது. சிறுவயதுமுதல் பாடசாலையில் மாணவருக்குக்கான ஒழுக்கம் கற்பித்து பயிற்றுவிக்கப்பட்டு பேணப்பட்டு மாணவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மாணவர் வளரும்போது ஒழுக்கமும் வளர்ந்து உன்னதமடைந்து வளரும் சமுதாயத்தை உருவாக்க உதவுகிறது. அப்போ.... இந்தமாணவன் சிறுவயதில் மாணவனுக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது கேட்க்கும் கேள்வியில்..எந்தத் துறையாக, தொழிலாக நிறுவனமாக இருந்தாலும் அதற்கென்றொரு ஒழுக்கம், கடமை, எதிர்பார்ப்பு உண்டு. இவர்கள் எதை கற்றார்கள்,, கற்பிக்கிறார்கள்,, பணிசெய்கிறார்கள் என்று தெரியவில்லை.

20 hours ago, colomban said:

பல்லின சமூகம் வாழும் நாட்டில் தமது கலாச்சார விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்ற முடியாத போதே முரண்பாடுகள் எழுகிறது...

பல்லின சமூகம் வாழும்நாட்டில் பொது இடத்தில் தங்கள் மதத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று அடம்பிடிப்பதும் தங்கள் சுயநலத்திற்கு சௌகரியத்திற்கு மதத்தை பயன்படுத்துவதாகவே கருதப்படும். தனிப்பட்ட மத, கலாச்சாரங்களை சமய தலத்திலும் தனிப்பட்ட நிலையங்களிலும் வைக்கலாமேயொழிய பொது இடத்தில் வந்து மற்றவர்களுக்கு அவர்களது கடமையை செய்ய விடாது அசௌகரியங்களையும், அவர்களது பணிக்கு இடையூறுகளையும் ஏற்படுத்தும்போதே முரண்பாடுகள் எழுகிறது. இது படித்த உயரிய தொழில் புரிவோருக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதைக்கடைப்பிடிப்பதே படித்த, உயரிய பின்னணி கொண்ட குடும்பத்துக்கு அழகு. மற்றவரை கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணுவதை விடுத்து, மாணவனுக்கு கற்கும் நிலையத்தின் கட்டுப்பாடுகளை மதித்து பின்பற்றி  பல்கலைக்கழகத்தின்  எதிர்பார்ப்பை நிறைவேற்றி கடமையை செய்து  ஒழுங்காக படித்து முன்னேறும் வழியை கற்றுக்கொடுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

குதர்க்கமான கருத்துக்களை நிறுத்துங்கள்

அல்லாகு அக்பர் என்று கோசமிடுவார்களோ.
பயமுறுத்துகிறார்கள்.கல்வி நிலையங்களிலும் ஹபாயா தாடி ஹிஜாப் என்று மத பிரசாரம் செய்து கல்வியை குழப்புகிறார்கள். மதம் கல்வியில் தலையீடு செய்கின்றது.அந்த மாணவணுக்கு மதவாத தாடி வைத்திருக்க தான் வேண்டும் என்றால் ஒட்டு தாடி வைத்து கொண்டு வந்து  பல்கலைக் கழகம் வந்ததும் கழட்டி பொக்கற்றுக்குள் வைத்து கொள்ள வேண்டும் பின்பு வீட்டிற்கு செல்லும் போது மறுபடியும் ஒட்டி கொண்டு செல்லலாம்.மற்றும் படி பாடசாலை கல்வி நிலையங்களுக்குள் மதவாத தாடி ஹபாயாவை அனுமதிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏன் இப்பிடி? எல்லாவற்றுக்குள்ளும் மதத்தை திணித்து பிரச்சனையை உண்டுபண்ணி அந்தந்த நிர்வாகத்தின் ஒழுங்கை குழப்பியடித்து எல்லோரின் அமைதியையும் கெடுக்கிறார்கள். மதங்கள் அமைதி, சமாதானத்தை உருவாக்கவேண்டும். இங்கு வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கி மதத்தின்மேல் வெறுப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இது ம‌யிரால், ஏற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை இல்லை"

IMG_9347.jpg

 

கிழ‌க்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர் தாடி வைத்திருந்த‌மைக்காக‌ அவ‌ரை ப‌ரீட்சைக‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌தை த‌டுத்த‌ அநீதிக்கெதிரான‌  வ‌ழ‌க்கில் ஜூலை மாத‌ம் வ‌ரை ப‌ரீட்சைக‌ள் ந‌ட‌த்துவ‌த‌ற்கு நீதி ம‌ன்ற‌ம் கிழ‌க்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்துக்கு  இடைக்கால‌ த‌டை விதித்துள்ள‌மை இன‌ ஐக்கிய‌த்தை உருவாக்க‌ ந‌ல்ல‌தொரு முன்னெடுப்பாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

 

 

 

இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்திருப்ப‌தாவ‌து, 

 

கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளும் முஸ்லிம்க‌ளும் அந்நியோண்ய‌மான‌ வாழும் இன்றைய‌ சூழ‌லில் சில‌ த‌மிழ்  க‌ல்விய‌லாள‌ர்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் இன‌வாத‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும்.

 

ஒரு முஸ்லிம் மாண‌வ‌னின் முக‌த்தில் உள்ள‌ ம‌யிர்க‌ளுக்காக‌ அம்மாண‌வ‌ன் ப‌ரீட்சை எழுதுவ‌திலிருந்து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌மை மிக‌ப்பெரிய‌ அநிய‌ய‌மாகும். இது  ம‌யிரால் ஏற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை இல்லை, மாறாக‌ அந்த‌ மாண‌வ‌ன் முஸ்லிம் என்ற‌ இன‌வாத‌மே கார‌ண‌மாகும்.

 

எத்த‌னையோ ப‌ல்க‌லைக்க‌ழக‌ ம‌ருத்துவ‌ துறை மாண‌வ‌ர்க‌ள் மீசை வைத்துள்ள‌ன‌ர். த‌லைமுடி வைத்துள்ள‌ன‌ர். பெண் மாண‌விக‌ள் தாடியை விட‌ மிக‌ நீள‌மான‌ ம‌யிரை த‌லையில் வைத்துள்ள‌ன‌ர்.

 

 

நாடியில் உள்ள‌ ம‌யிருக்காக‌ ப‌ரீட்சையிலிருந்து த‌டுக்க‌ப்ப‌டுவ‌தாயின் அனைத்து மாண‌வ‌ மாண‌விக‌ளும் மொட்டைய‌டிக்க‌ வேண்டும் என்றுதான் சொல்ல‌ வேண்டும்.

 

இந்த‌ வ‌ழ‌க்கை குர‌ல்க‌ள் அமைப்பு நீதிம‌ன்ற‌த்துக்கு கொண்டு சென்ற‌தை தொட‌ர்ந்து ப‌ரீட்சை ந‌ட‌த்துவ‌த‌ற்கு நீதிம‌ன்ற‌ம் இடைக்கால‌ த‌டைவிதித்த‌மை மூல‌ம் மேற்ப‌டி அமைப்பின் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளின் முய‌ற்சி பாராட்டுக்குரிய‌து.

 

இந்த‌ விட‌ய‌த்தை சில‌ர் மிக‌ சாதார‌ண‌மாக‌ பார்ப்ப‌தும் க‌ல்விக்காக‌  தாடியை எடுத்தால் என்ன‌வாம் என‌வும் ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ளில் எழுதுவ‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும்.

 

அனைத்து  ச‌மூக‌ங்க‌ளின‌தும் ம‌த‌, க‌லாச்சார‌ அடிப்ப‌டை உரிமைக‌ளுக்கு ந‌ம‌து நாட்டின் அர‌சிய‌ல் யாப்பு அனும‌தி வ‌ழ‌ங்கியுள்ள‌து. அவ‌ற்றை ஒவ்வொரு ச‌மூக‌மும் ம‌திப்ப‌தே ப‌ல்லிண‌ ம‌க்க‌ள் வாழும் நாட்டில் இன‌ ஐக்கிய‌த்தை உருவாக்கும்.

 

சிங்க‌ள‌ பேரின‌வாத‌ நிக‌ழ்ச்சி நிர‌லுக்கெதிராக‌ நீதி ம‌ன்ற‌ம் செல்ல‌ வேண்டிய‌ த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் இன்று ச‌ண்முகா அபாயா என்றும் க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்றும் தாடி என்றும் த‌ம‌க்குள்ளேயே முர‌ண்ப‌ட்டு நீதி ம‌ன்ற‌ங்க‌ளுக்கு செல்ல‌ வேண்டி ஏற்ப‌ட்டுள்ள‌மை க‌வ‌லைக்குரிய‌தாகும். 

 

இந்த‌ வ‌ழ‌க்கின் மூல‌ம் அம்மாண‌வ‌னுக்கு நீதி கிடைக்க‌ப்பெற்று த‌மிழ‌ர்க‌ளுக்கும் முஸ்லிம்க‌ளுக்கிடையில் இனியாவ‌து விட்டுக்கொடுப்பும், புரிந்துண‌ர்வும் ஏற்ப‌ட‌ வேண்டும் என‌ எதிர்பார்க்கிறோம்.

 
  • கருத்துக்கள உறவுகள்

அடடே இந்தச்சாத்தானுக்கும் வேதம் ஓத தெரியுமா இதுக்கு மேல வியாக்கியானம் செய்ய முடியவில்லைப்போலும்.

4 hours ago, colomban said:

நாடியில் உள்ள‌ ம‌யிருக்காக‌ ப‌ரீட்சையிலிருந்து த‌டுக்க‌ப்ப‌டுவ‌தாயின்

அந்த மாணவனும் அவர் சார்ந்த மத சமூகமும் வைக்கும் குற்றச்சாட்டு இது. அவர் தடுக்கப்படாமைக்கான காரணம் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதை ஏற்காது, மறைத்து, குற்றம் சொல்லி ஒரு தகுதியற்றவருக்கு நியமனம் வழங்க முயற்சிக்கப்படுகிறது. மதத்தின் பேரால் சலுகைகளையும் முதன்மையையும் நாடுவது அந்த மதத்தை இழிவு படுத்தும் செயல். நான் உயர்தரம் படிக்கும் காலத்தில் இரண்டு முஸ்லீம் ஆசிரியர்களிடம் கல்வி கற்றிருக்கிறேன். அவர்கள் பாடசாலைக்கு வரும்போது தாடியோ, தொப்பியோ, மதத்தை முதன்மைப்படுத்தும்  எந்தவொரு அடையாளங்களையோ கொண்டுவந்து தங்களுக்கு முதன்மையும் சலுகையும் கேட்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை. அவர்கள்  கல்விகற்பதற்கான சிறந்த சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி, கடமையை சிறப்பாக ஆற்றி முன்னுதாரணமாக விளங்கினர். இது தான் உண்மையான மதத்தின் நோக்கம். இது; எதற்கெடுத்தாலும் மதத்தை முன்னிலைப்படுத்தி, போர்க்கொடி தூக்கி, சாதிப்பதென்பது மதத்தின் பெயரால் நடத்தும் பிழைப்பு. கல்வியில் மதத்தை முன்னிலைப்படுத்தாது எல்லோருக்கும் ஒரே சீருடை சட்டம் கொண்டுவரப்படவேண்டும். அதற்கு உடன்படாதவர்கள் தங்கள் சமயம் சார்ந்த பாடசாலைகளை உருவாக்கி அங்கே தாங்கள் தங்கள் மதம் சார்ந்த  கற்றல் கற்பித்தல் வேலைகளை ஆற்றலாம், மற்றவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல்.      

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவனுக்கு பரீட்சைக்கு அனுமதியளிப்பதோடு இந்தப்பிரச்சனை முடிவடையப்போவதில்லை. இவர் தொழில் புரியும் நிலையங்களிலும்  இந்தப்பிரச்சினையை  எழுப்பியே  தான் நினைத்ததை சாதிக்க முயற்சிப்பார். இவருக்கு தொழில் வழங்குவோர் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

"இது ம‌யிரால், ஏற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை இல்லை"

 

இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்திருப்ப‌தாவ‌து, 

 

கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளும் முஸ்லிம்க‌ளும் அந்நியோண்ய‌மான‌ வாழும் இன்றைய‌ சூழ‌லில் சில‌ த‌மிழ்  க‌ல்விய‌லாள‌ர்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் இன‌வாத‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும்.

 

ஒரு முஸ்லிம் மாண‌வ‌னின் முக‌த்தில் உள்ள‌ ம‌யிர்க‌ளுக்காக‌ அம்மாண‌வ‌ன் ப‌ரீட்சை எழுதுவ‌திலிருந்து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌மை மிக‌ப்பெரிய‌ அநிய‌ய‌மாகும். இது  ம‌யிரால் ஏற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை இல்லை, மாறாக‌ அந்த‌ மாண‌வ‌ன் முஸ்லிம் என்ற‌ இன‌வாத‌மே கார‌ண‌மாகும்.

 

எத்த‌னையோ ப‌ல்க‌லைக்க‌ழக‌ ம‌ருத்துவ‌ துறை மாண‌வ‌ர்க‌ள் மீசை வைத்துள்ள‌ன‌ர். த‌லைமுடி வைத்துள்ள‌ன‌ர். பெண் மாண‌விக‌ள் தாடியை விட‌ மிக‌ நீள‌மான‌ ம‌யிரை த‌லையில் வைத்துள்ள‌ன‌ர்.

நாடியில் உள்ள‌ ம‌யிருக்காக‌ ப‌ரீட்சையிலிருந்து த‌டுக்க‌ப்ப‌டுவ‌தாயின் அனைத்து மாண‌வ‌ மாண‌விக‌ளும் மொட்டைய‌டிக்க‌ வேண்டும் என்றுதான் சொல்ல‌ வேண்டும்.

 

 

 

கிழக்கு மாகாணத்தில் புட்டும் தேங்காப்பூவும் போல அன்னியோன்யமாக(??) வாழும் மக்கள். பாவம் இந்த சிவப்பு தொப்பி. கொஞ்ச காலமாக இந வாதம் கதைப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தது. மீண்டும் மயிர் கதை கதைத்துக்கொண்டு திரியிது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளும் முஸ்லிம்க‌ளும் அந்நியோண்ய‌மான‌ வாழும் இன்றைய‌ சூழ‌லில்

 

5 hours ago, colomban said:

சிங்க‌ள‌ பேரின‌வாத‌ நிக‌ழ்ச்சி நிர‌லுக்கெதிராக‌ நீதி ம‌ன்ற‌ம் செல்ல‌ வேண்டிய‌ த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் இன்று ச‌ண்முகா அபாயா என்றும் க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்றும் தாடி என்றும் த‌ம‌க்குள்ளேயே முர‌ண்ப‌ட்டு நீதி ம‌ன்ற‌ங்க‌ளுக்கு செல்ல‌ வேண்டி ஏற்ப‌ட்டுள்ள‌மை க‌வ‌லைக்குரிய‌தாகும். 

 

என்ன திடீரென்று சுருதி மாறுது. தமிழனிடம் இருந்து ஏதோ காரியம் ஆகவேண்டும்போல். சில மாதங்களுக்கு முன் தமிழ்ப்பேரினவாதிகள் என்றும் தங்களுக்கும் தமிழருக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்றும் விளித்தார், இப்போ வழியிறார். ஓ .... இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு போனதால் உண்மையான காரணம் வெளியில் வரப்போகிறது என பயப்படுகிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.