Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரிய ஒளி கூட படாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் - அம்மாவை 32 வருடங்களாக பார்க்கவில்லை - ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றம் விடுதலை செய்த சாந்தன் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

11 JUN, 2023 | 10:52 AM
image
 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தன் என  அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா  திருச்சி முகாமில் தனதுவாழ்க்கைகுறித்து  தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார்

சூரிய ஒளிகூட என் மேல் படுவதில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர்  சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா - 2022 நவம்பர் 11 ம் திகதி அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, எனினும் அவர் பயஸ் முருகன் ஜெயக்குமாருடன் திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

முகாமிலிருந்து அனுப்பியுள்ள கடிதத்தில் சாந்தன் சூரிய ஒளி கூட தன்மீது படாத அந்த முகாம் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார்.

உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவளிக்கவேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அதன் மூலம் தான் நாட்டிற்கு திரும்பும் நிலை உருவாகலாம்  என தெரிவித்துள்ளார்.

1686410929-Rajiv-Gandhi-assasination-sus

இந்திய பிரதமர் உள்துறை அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டு பலமுறை கடிதங்களை அனுப்பியுள்ள போதிலும் இதுவரை எந்த பதிலும்  இல்லை என தெரிவித்துள்ள அவர் தன்னை அடையாளப்படுத்துவதற்கான ஆவணங்களை புதுப்பிப்பதற்காக சென்னையில் உள்ளஇலங்கை துணைதூதரகத்திற்கு செல்வதற்கான அனுமதியையும் தான் கோரியிருந்ததாகவும் அதற்கும் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறுமாதங்களாக நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் இங்கு 120 வெளிநாட்டவர்கள் உள்ளனர் அவர்களில் 90 பேர் இலங்கையர்கள் என சாந்தன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முகாமில் உள்ள தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் மத்தியில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ள அவர் ராஜீவ் காந்தி வழக்கில் நீதிமன்றத்தினால்  விடுதலைசெய்யப்பட்ட நால்வரும் உள்ளோம் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்ட அறைகளில் நாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொபேட்டும் ஜெயக்குமாரும் ஒரு அறையில் உள்ளனர் முருகனும் நானும் ஒரு அறையில் இருக்கி;ன்றோம்,ஆனால் இந்த அறைகள் அருகில் இல்லை எங்களால் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் பேசுவதற்கு கூட எனக்கு அனுமதியில்லை குடும்ப உறவினர்கள் மாத்திரம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கசந்திக்க முடியும்  எனவும் சாந்தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

என்னை போன்ற வெளிநாட்டவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் இருப்பது எப்படி சாத்தியம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் ஒருநாளைக்கு 175 ருபாய் வழங்குகின்றது என உருக்கமான அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள சாந்தன் 32 வருடங்களாக நான் அம்மாவை பார்;க்கவில்லை தந்தையின் இறுதிகாலங்களில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை,இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் இறுதிகாலங்களில் அவருடன் இருக்கவேண்டும் என்ற எனது விருப்பம் தவறானது என்றால் யாரும்  எனக்கு உதவவேண்டியதில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157429

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிச, சர்வாதிகார நாடுகளில் உள்ள சட்டங்களுக்கும் இந்தியாவின் சட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கம்யூனிச, சர்வாதிகார நாடுகளில் உள்ள சட்டங்களுக்கும் இந்தியாவின் சட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தமது சட்டபூர்வ நிலை புரியாத இவர்களுக்கு சரியான சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

1. கொலைக்குற்றச் சாட்டில் நீதிமன்ற தண்டணை பெற்றவர்கள், அதாவது கிரிமினல் குற்றவாளிகளாக பதிவுகளைக் கொண்டவர்களை அகதியாக எந்த வெளிநாடும் ஏற்காது. ஆகவே அது பிரயோசனம் இல்லா முயல்வு. (அகதியாக வந்த கிட்டர், கருணா அம்மான் திருப்பி அனுப்பப்பட்டார்கள்)

2. இந்திய அரசு, குடிவரவு சட்டத்தின் கீழ் விசா இல்லாதவர்களாக அல்லது வழங்கப்பட முடியாதவர்களாக தடுத்து வைத்துள்ளது. ஆகவே தமிழக அரசு செய்ய எதுவும் இல்லை.

3. இவர்களுக்கு உள்ள ஓரே வழி இலங்கை திரும்புவதே. இதுக்கு மட்டுமே, UNHCR உதவக்கூடும்.

4. இவர்களது இலங்கை உறவுகள் தமது எம்பிக்கள், டக்லஸ், அங்கஜன் ஊடாக இலங்கை அரசை, ஜனாதிபதி ரணிலை அணுகி அவர்கள் நாடு திரும்ப டெல்லியில் உள்ள இலங்கைத்தூதரகம் ஊடாக கோரிக்கை வைக்கவேண்டும்.

5. எதுவுமே நடக்காவிடில், சென்னை உயர்நீதிமன்றில் தம்மை, தண்டணை காலம் முடிவுற்றதால், தாயகத்துக்கு டீபோட் பண்ண மத்திய அரசுக்கு உத்தரவிடமாறு கோரலாம்.

6. தாயகம் திரும்ப உதவுமாறு UNHCR இடம் கோரலாம்.

இதை எவ்வளவு விரைந்து செய்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.

வேறு வழி எதுவுமே சாத்தியமில்லை, மேலும் இலங்கையில் சிறை செல்லாதவாறு காக்க UNHCR உதவக்கூடும். (அங்கே தேடப்படுவோர் அல்ல என்பது முக்கியமானது)

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1334433

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.