Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

13 Jun, 2023 | 10:50 AM

image

இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர்  உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது.

பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை  அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர்.

1_PAY-CEN-EucadorLadies-03.jpg

இதனை தொடர்ந்து உடனடியாக உறவினர்கள் அவரை தீவிர கிசிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்,நாட்டின் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள்  இடம்பெற்ற போதிலும் அது வெற்றியளி;க்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர் உறுதி செய்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

9 மணியளவில் அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்தோம் மதியமளவில் அவர் இறந்துவிட்டார் என வைத்தியர் தெரிவித்தார் என  அந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பல மணிநேரம் உறவினர் ஒருவர் அவர் சுவாசிப்பதை காணும் வரை அவரை பிரேதப்பெட்டியில் வைத்திருந்துள்ளனர். 

அவர் பிரதேப்பெட்டியொன்றில் சுவாசித்தவாறு காணப்படுவதை காண்பிக்கும் வீடியோசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 

https://www.virakesari.lk/article/157587

 

  • கருத்துக்கள உறவுகள்

"வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவது போமின் என்றால் போகா" அன்னைக்கு இன்னும் இப்புவியில் அலுவல்கள் இருக்கு........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட மூதாட்டி ஐந்து மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

ஈக்குவடாரில் அதிர்ச்சி சம்பவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,லாரா கோட்சி & வனேசா புஷ்ளட்டர்
  • பதவி,பிபிசி உலக செய்திகள்
  • 14 ஜூன் 2023, 15:17 GMT
    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டிக்குள் அடைத்தபின்னர் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், அது அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஒரு திகில் திரைப்படத்தில் வருவதைப்போன்ற அனுபவமாகதானே இருக்கும்.

இப்படியொரு அனுபவம் தான் ஈக்குவடார் நாட்டைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேர்ந்துள்ளது. மத்திய ஈக்குவடாரில் அமைந்துள்ள பபாஹோயோ பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான பெல்லா மொன்டோயா. இந்த மூதாட்டி பக்கவாதம் காரணமாக இறந்துவிட்டதாக அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அண்மையில் அறிவித்தனர்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்த மூதாட்டி

அதையடுத்து அவர் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மொன்டோயா அங்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து மணி நேரத்திற்கு பின், அவர் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அசையத் தொடங்கியது. அதை கண்டு அங்கு கூடியிருந்த மொன்டோயாவின் உறவினர்களும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் இருந்த மொன்டோயா மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் மருத்துவமனையில் அணிந்திருந்த உடையை (Gown) தான் உடுத்தி இருந்தார்.

 

“என் அம்மா அவரின் இடது கையை மெல்ல அசைக்கத் தொடங்கினார்; வாய் மற்றும் கண்களை அவரால் திறக்க முடிந்தது; அவர் சுவாசிக்க சிரமப்பட்டார்” என்று அனைவரும் இறந்ததாக நினைத்து கொண்டிருந்த மொன்டோயா உயிருடன் இருந்ததை உணர்ந்த தருணத்தை உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் அவரது மகன் கில்பர்ட் பால்பெரான்.

இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில், திறந்த சவப்பெட்டியில் மொன்டோயா வைக்கப்பட்டிருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவை அவரின் பக்கத்து வீட்டுக்காரர் எடுத்திருந்தார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மூதாட்டி மொன்டோயா உயிருடன் இருப்பது தெரிந்த உடனே அவர் சவப்பெட்டியில் இருந்து மீட்கப்பட்டு நோயாளிகளுக்கான ஸ்டெச்சரில் ஏற்றப்பட்டு, அவர் இறந்ததாக அறிவித்த அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஈக்குவடாரில் அதிர்ச்சி சம்பவம்

பெல்லா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது மகன் ஈக்குவடார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

"எனது அம்மாவிற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் இதயத் துடிப்பு சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரது கையில் கிள்ளியபோது, அதற்கு அவர் எதிர்வினை ஆற்றினார். இது நல்ல அறிகுறி என்று என்னிடம் கூறிய மருத்துவர்கள், எனது தாயின் உடல் நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் நம்பிக்கை வார்த்தைகளை கூறினர்,” என்று பிரபல நாளிதழான EI Universo வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் மொன்டோயாவின் மகனான கில்பர்ட் பால்பெரன்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைந்துள்ளது ஈக்குவடார் நாட்டின் சுகாதார அமைச்சகம்.

"ஒரு நாள் காலை எனது அம்மாவின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவர் பபாஹோயோ நகரில் உள்ள ஓரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று அன்று நிகழ்ந்த சம்பவத்தை விவரிக்கிறார் கில்பர்ட்.

பக்கவாதத்தின் விளைவால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் கில்பர்ட் கூறினார்.

தேசிய அளவில் கவனம் பெற்ற சம்பவம்

பெல்லா மொன்டோயா விவகாரம் ஈக்குவடார் நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடல்நிலை இன்னும் பலவீனமாகவே இருப்பதால், மேற்கொண்டு அவருக்கு என்ன நேரும் என்பதை ஒட்டுமொத்த தேசமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் பத்திரிகையாளர் முனோஸ்.

"மருத்துவர்களின் கவனக் குறைவு மற்றும் தவறான முடிவால் தனது தாய்க்கு நேர்ந்த கொடுமை மற்றும் அதன் விளைவாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் கோரி கில்பர்ட் நீதிமன்றத்தை அணுகலாம்," என்றும் கூறுகிறார் முனோஸ்.

ஈக்குவடாரைச் சேர்ந்த மூதாட்டி பெல்லா மொன்டோயாவுக்கு நேர்ந்ததை போன்றதொரு துயரச் சம்பவம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்தது. அங்கு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 82 வயது மூதாட்டி, மூன்று மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் இருப்பதாக, இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் தெரிய வந்தது.

https://www.bbc.com/tamil/articles/c2qg967gpp6o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈக்குவடோரில் பிரேதப்பெட்டிக்குள் உயிருடன் சுவாசித்துக்கொண்டிருந்த பெண் - ஒரு வாரத்தின் பின்னர் மரணம்

Published By: Rajeeban

18 Jun, 2023 | 10:14 AM
image

ஈக்குவடோரில் கடந்த வாரம் பிரதேப்பெட்டியில் உயிருடன் காணப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெல்லா மொன்டொயா என்ற 76 வயது பெண் ஒருவாரகால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர கிசிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளார் என அவரது மகன் கில்பேர்ட்டோ பார்பரா மொன் டொயா தெரிவித்துள்ளார்.

ஈக்குவடோர் சுகாதார அமைச்சும் இதனை உறுதி செய்துள்ளது.

அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பபஹயோ என்ற இடத்தில்  இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பிரதேப்பெட்டிக்குள்  கண்விழித்த மொன்டொயோ பிரதேப்பெட்டியை தட்டத்தொடங்கினார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் முதல்தடவை அவரை மருத்துவமனையில் சேர்த்தவேளை அவர் சுயநினைவற்றவராக காணப்பட்டார் ஆனால்  சில மணித்தியாலங்களின் பின்னர் மருத்துவர் ஒருவர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து மரணச்சான்றிதழ் உட்பட ஏனைய ஆவணங்களை குடும்பத்தவர்களிடம் கையளித்தார் என மகன் தெரிவித்துள்ளார்.

அவரது உடலை இறுதிக்கிரியைகள் இடம்பெறும் இடத்திற்கு கொண்டுவந்த உறவினர்களிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் சத்தங்கள் கேட்டுள்ளன,நாங்கள் இருபது பேர் இருந்தோம் என தெரிவித்துள்ள பார்பரா மொன்டொயா ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் வித்தியாசமான சத்தங்கள் கேட்டன என தெரிவித்துள்ளார்.

துணியால்போர்த்தப்பட்டிருந்த எனது தாயார் பிரேதப்பெட்டியை தட்டினார் அதனை திறந்து பார்த்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை இம்முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இறுதிநிகழ்வுகளிற்காக அதேஇடத்திற்கு அவரது உடலை கொண்டுசென்றுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/157949

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

 

image

ஈக்குவடோரில் கடந்த வாரம் பிரதேப்பெட்டியில் உயிருடன் காணப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெல்லா மொன்டொயா என்ற 76 வயது பெண் ஒருவாரகால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர கிசிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளார் என அவரது மகன் கில்பேர்ட்டோ பார்பரா மொன் டொயா தெரிவித்துள்ளார்.

ஈக்குவடோர் சுகாதார அமைச்சும் இதனை உறுதி செய்துள்ளது.

அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பபஹயோ என்ற இடத்தில்  இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பிரதேப்பெட்டிக்குள்  கண்விழித்த மொன்டொயோ பிரதேப்பெட்டியை தட்டத்தொடங்கினார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் முதல்தடவை அவரை மருத்துவமனையில் சேர்த்தவேளை அவர் சுயநினைவற்றவராக காணப்பட்டார் ஆனால்  சில மணித்தியாலங்களின் பின்னர் மருத்துவர் ஒருவர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து மரணச்சான்றிதழ் உட்பட ஏனைய ஆவணங்களை குடும்பத்தவர்களிடம் கையளித்தார் என மகன் தெரிவித்துள்ளார்.

அவரது உடலை இறுதிக்கிரியைகள் இடம்பெறும் இடத்திற்கு கொண்டுவந்த உறவினர்களிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் சத்தங்கள் கேட்டுள்ளன,நாங்கள் இருபது பேர் இருந்தோம் என தெரிவித்துள்ள பார்பரா மொன்டொயா ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் வித்தியாசமான சத்தங்கள் கேட்டன என தெரிவித்துள்ளார்.

துணியால்போர்த்தப்பட்டிருந்த எனது தாயார் பிரேதப்பெட்டியை தட்டினார் அதனை திறந்து பார்த்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை இம்முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இறுதிநிகழ்வுகளிற்காக அதேஇடத்திற்கு அவரது உடலை கொண்டுசென்றுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/157949

அந்தப் பெண்ணின், இரண்டாவது செத்த வீட்டுக்கும்… முதல் செத்த வீட்டுக்கு போட்ட,
அதே…. றோஸ் கலர் சட்டையைத்தான் போட்டிருக்கிறார்கள். 😎

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

அந்தப் பெண்ணின், இரண்டாவது செத்த வீட்டுக்கும்… முதல் செத்த வீட்டுக்கு போட்ட,
அதே…. றோஸ் கலர் சட்டையைத்தான் போட்டிருக்கிறார்கள். 😎

 

அநேக நாடுகளில் வைத்தியர் இறந்த அத்தாட்சிப்பத்திரம் கொடுத்த பின்னர்தானே மரணச்சடங்கிற்கு அனுமதிப்பார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.