Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்-சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும்.

வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும்.

வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது.

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமையானது தற்காலிகமானது, செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்.

அதேவேளை நான் ஜனாதிபதியாக பதவி வருவது குறித்து சிலர் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

நான் ஜனாதிபதியாக பதவி வருவதற்கு தகுதியில்லை என்பதற்கான காரணங்களை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை.

ஊழல் அரச அதிகாரிகள், மோசடியான வியாபாரிகள், மோசடியான குடும்ப ஆட்சியாளர்கள் நான் ஜனாதிபதியாக பதவி வருவதை விரும்பவில்லை என்பதுடன் நான் அந்த பதவிக்கு வந்தால் தமக்கு என்ன நடக்குமோ என்று அச்சப்படுகின்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/262344

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கைம் அந்தப்பக்கம் ரனிலுக்கு ஐஸ் வைக்கிறார். இவர் பொருளாதார நெருக்கடி வரும் என கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

எரிக் சொல்கைம் அந்தப்பக்கம் ரனிலுக்கு ஐஸ் வைக்கிறார். இவர் பொருளாதார நெருக்கடி வரும் என கூறுகிறார்.

சம்பிக்க சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. இருந்தாலும் இவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்பதே உண்மை.

பொதுவாக ஒருவர் ஜனாதிபதியாவது என்றால் தமிழ் , முஸ்லீம் வாக்குகள் மிகவும் அவசியம். இவர் கடந்த காலங்களில் இனவாதம் கக்கின படியால் நிச்சயமாக சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க மாடடார்கள்.

இருந்தாலும் இவர் ஒரு தடவை எரிக் சொல்ஹெய்முடன் பேச்சு வார்த்தை நடத்துவது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Cruso said:

பொதுவாக ஒருவர் ஜனாதிபதியாவது என்றால் தமிழ் , முஸ்லீம் வாக்குகள் மிகவும் அவசியம். இவர் கடந்த காலங்களில் இனவாதம் கக்கின படியால் நிச்சயமாக சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க மாடடார்கள்.

சரத் பொன்சேகாவுக்கே வாக்குப் போட்ட எம்மக்கள் 

இவருக்கு போடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

எமது மக்களுக்குத் தான் மறதி அதிகமாச்சே.

15 hours ago, ஏராளன் said:

வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும்.

வெளிநாட்டு கடன் அடைக்க தொடங்க முதல்

இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கினாலே சகல இருப்பும் வெளியே போய்விடும்.

இப்போது வழித்து துடைத்து வெருட்டி வைத்திருக்கும் பணம் ஒரு மூலைக்கு போதாது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Cruso said:

ஜனாதிபதி

தேர்தல் என்று வரும்போது

அமெரிக்கா இந்தியா மேற்கு என்று ஒன்றுபட்டு தமக்கு தோதான ஆளையே வெல்ல வைப்பார்கள்.

இதுவரை அவர்களுக்கான ஆள் ரணில் தான்.

அவரும் அதற்கேற்பவே வலையை பின்னிக் கொண்டு வாறார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

சரத் பொன்சேகாவுக்கே வாக்குப் போட்ட எம்மக்கள் 

இவருக்கு போடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

எமது மக்களுக்குத் தான் மறதி அதிகமாச்சே.

 

நீங்கள் சொல்வது உண்மைதான். இருந்தாலும் மக்களின் தெரிவு போட்டியிடுபவர்களை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் ரஜபக்சக்களைவிட பொன்சேகா நல்ல (??) கொடூரனாக  மக்களுக்கு தெரிந்தார். ராஜபக்ஸவிடத்தில் உள்ள கோபத்தை அங்கு காடட வேண்டி இருந்தது.

இப்போதும்கூட போட்டியிடுபவர்களை வைத்தே மக்கள் தீர்மானிப்பார்கள். நல்ல (?) கொலைகாரன், கொள்ளையடிப்பவன், மோசடி செய்பவன், இன வாதியை பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் மக்கள் என்ன சொகுசாக வாழ்கிறார்களா இல்லையே இப்பவும் பொருளாதார நெருக்கடி தானே

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2023 at 21:18, Cruso said:

பொதுவாக ஒருவர் ஜனாதிபதியாவது என்றால் தமிழ் , முஸ்லீம் வாக்குகள் மிகவும் அவசியம். இவர் கடந்த காலங்களில் இனவாதம் கக்கின படியால் நிச்சயமாக சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க மாடடார்கள்.

கடந்த தேர்தலில் கோட்டபாய ஜனாதிபதி ஆனதற்கு தமிழ் முஸ்லீம் வாக்குகள் துணை நின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, valavan said:

கடந்த தேர்தலில் கோட்டபாய ஜனாதிபதி ஆனதற்கு தமிழ் முஸ்லீம் வாக்குகள் துணை நின்றனவா?

நிச்சயமாக இல்லை என்று சொல்ல முடியும். இருந்தாலும் ஒரு ஐந்து தொடக்கம் ஏழு வீதமானவர்கள் ஒட்டு போட்டிருக்கலாம். இவர் சிங்கள பவுத்த வாக்குகளால் தெரிவு செய்யப்படடவர். இதை ஒரு எக்ஸ்ட்ரா ஒர்டினரி கேஸ் ஆகத்தான் பார்க்கவேண்டும்.

இலங்கையில் குண்டு வெடித்து நூற்றுக்கணக்கானோரின் மரணம், யுத்தத்தை வென்ற தலைவன், சிறந்த நிர்வாகி, இலங்கையின் லீ குவான் யூ இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருந்தது.

எனவே ஒரு சந்தர்ப்பத்தை வழங்க படித்தோர் முதல் பாமரர் வரை தீர்மானித்தார்கள். அதை செயலிலும் காட்டினார்கள்.  அதன் பயங்கரத்தை இப்போது அனுபவிக்கிறார்கள்.

யுத்தம் என்று சொல்லும்போது பொருளாதார யுத்தத்தையும் அதே கோணத்தில் பார்த்தார்கள். இப்போது பொருளாதாரமே அழிந்து விட்ட்து. எனவே கோத்தாவின் வெற்றியை மற்றைய தேர்தலுடன் ஒப்பிட முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.